மொக்கையென்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் - கவிதை

ஜிகிடி

உங்கள்ள யாரு அந்த அதிர்ஷ்டசாலி

கவி காளிதாஸ் போல செருமிக்கவும்

நோக்கிலரை நோவது எவண்

இந்தக் கவிதை விற்பனைக்கல்ல

உமா - நிறைவுப் பகுதி

உமா - பாகம் 1

ஆஸ்துமாவும் பெண் விடுதலையும்

ஏக் தித்லி அனேக் தித்லியான்

போடுங்கைய்யா-ம்மா வோட்டு

மொசாத் உளவாளிகள்

Will not be around for sometime

மரமும் செடியும் -- தி. ஜானகிராமன்

குஜாரிஷ்

அக்பர் சாஸ்திரி - தி. ஜானகிராமன்

ப்ளூடூத்தில் வந்த பற்குழி

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம் - ராஜா சந்திரசேகர் கவிதைகள்

பெயரற்றவள் பேரைச் சொல்லும் பள்ளத்தாக்கு

யாருங்க அங்க ஓடப்பாக்குறது

சென்னைக்கு ஒரு கூவம் போதும்

பெண்களுக்கு ட்ரைவர் வேலை ஒத்து வராது

ஸ்ரீ அருணாச்சல மகாத்மியம் - பூர்வ பாகம் - அத்தியாயம் 3.2 (தொடர்)

நாடோடிகள் ஆகும் பட்டுப்பூச்சிகள்

தீபத் திருநாள் திருக்கார்த்திகை

இழை கோலம்

ஸ்ரீ அருணாச்சல மகாத்மியம் - பூர்வ பாகம் - அத்தியாயம் 3.1 (தொடர்)

ஸ்ரீ அருணாச்சல மகாத்மியம் - பூர்வ பாகம் - அத்தியாயம் 2 (தொடர்)

ஸ்ரீ அருணாச்சல மகாத்மியம் - பூர்வ பாகம் - அத்தியாயம் 1 (தொடர்)

அர்மேனியக் குகை - மொழிபெயர்ப்புக் கதை - பாகம் 2

அம்பி, ராஜு, சேஷு மற்றும் சாப்பாட்டு ராமன்கள் - வி.கங்காதர்

அர்மேனியக் குகை - மொழிபெயர்ப்புக் கதை - பாகம் 1

ரயில் போன கதை

பரிசலின் சவால் போட்டியில் வெற்றி பெற ஒரே வழி

போஸ்ட் இட் வரிகள்

வலைச்சரத்தில் இருந்து விடைபெறுகிறேன் நன்றி.

ஆறாம் நாள் வலைச்சரத்தில்

வடை புராணம்

இடது மூளைக்கு - வலைச்சரத்தில் நான்காம் நாள்

வித்வான் யமாஹாவும் சில கேள்விகளும்

யமராஜனுக்கே டஃப் கொடுத்தவர்கள்

யமராஜன் பராக்

டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் (சவால் சிறுகதை)


(அறி)முகமற்றது

சென்னையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி பற்றிய தகவல்

விபூதி வாசனை - சவால் சிறுகதை

இந்தா பிடிச்சுக்கோ கவுஜைகள்

பிறவிப்பயனுக்கு வேணும் கல்கோனா

ஊஞ்சல் from Buzz

விநாயக சதுர்த்தி

சையனைடு கவிதைகள்

முழிப்பேர்ப்புக் கவுஜைகள்

என் பதில் கடிதம் மரியாதை நிமித்தமானது

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

அன்புள்ள அப்பாவுக்கு

எழுத்துப் புரட்சியும் பன்னீர் புர்ச்சியும்

இசௌ-வின் கிருஷ்ண தந்திரம் & எச்சல முழுங்குடா

ஊழிக் கூத்து

(என்னை) அடக்குவார் இல்லாமல் போய்விட்டதே

ஆயிஷா

வேப்பம்பூ உதிரும் வாசல்கள்

கதையென்று சொல்லி ஏதாவது எழுதுவது எப்படி

புயல் ஓய்ந்த கடல்

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் - தொடர் பதிவு

ட்ரூமேன் ஷோ (1998) - சினிமா விமர்சனம்

இதன் பெயர் தனிமை

பிறந்த நாள் வாழ்த்து

In need of a career?

சப்தபதி (முழு உரை)

சம்ஷயிக்கணும் கேட்டேளா


வாய்ச்சொல்லில் வீரரடி - பாரதியார் பாடல்

மை நேம் இஸ் கெளஹர் ஜான்

கொட்டாய் பல்லிக்குட்டி

ஸ்ம்ருதி

யமராஜனின் காதல் கடிதம்

மௌனம் உடைக்கும் சம்பாஷணைகள்

எப்டிடா என்னைக் கண்டுபிடிச்ச

நட்பெனும் ஸ்வரோஸ்கி வைரம்


பொழுது போகலையா

காலச் சக்கரம்

பெரியவங்களுக்கு ... ஒரு ஊர்ல கதை

I kept adrifting

பரிமாணங்கள்

மெளனம்

இனிமே இப்டி செய்வியா

கூடு மாறுதல்

மூன்று பேருமாய் வெறுந்தரையில் படுத்து உறங்குகிறார்கள்

முப்பத்து மூணு வருஷம் முன்னே வீடு பாக்க வந்தப்போ காயாத வராண்டாவில் இளையவன் ஒரு வயசுல வச்சது என்று சின்ன கால் பதிந்த அச்சிருக்கும் சிமெண்ட் தரையை தடவிப் பார்க்கிறார் அத்தை.

என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இங்கதான் எங்கப்பா படுத்திருப்பார்
என்று சுவற்றில் சாய்ந்து கொள்கிறார் மாமா.

கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்று தடவிப் பார்த்து இது வழியாத்தான் நாங்க ரெண்டு பேரும் மணல் மீது குதிப்போம் என்று மலர்ந்து கொள்ளும் நினைவில் கணவரும் மலர்கிறார்.

என் கவிதை நோட்டு கிடைச்சுதா வித்யா என்று குரல் வழியே பொங்கும் ஆவலில் கொழுந்தன். வேறோரு நாள் வீடியோ சாட்டிங்கில் அவன் எழுதிய காதல் கவிதைகளால் கிண்டல் செய்கிறோம் அனைவரும். நானும் அங்கேயே இருந்திருக்கலாம் பொங்குகிறான்.

பெரிய வீடா, அப்போ இந்த தீபாவளிக்கு வரோம் என்று குதூகலிக்கிறாள் ஓரகத்தி.

அந்த வீட்டில் ஜூலா கட்டலாம், ஜாலியா சைக்கிள் ஓட்டலாம், மாடில ஓடலாம், செடி வளக்கலாம் என்று மகிழும் குட்டி மகள்.

இது முதன் முதலா வாங்கின ஃ பிளாஸ்க் - அது இருக்கட்டும்
எங்கப்பா பென்ஷன் பணத்தில் வாங்கின மெத்தை - இருந்துட்டு போகட்டுமே
இது ரிடையர் ஆன போது என் கலீக்ஸ் கொடுத்தது - ஷோ கேசில் வச்சுடலாமே
இந்தப் பேனாவால்தான் பத்தாவது எழுதினேன் டீச்சர் வேலைக்கு கையெழுத்து போட்டேன் இருக்கட்டும்
இது அவனோட பென்சில் பாக்ஸ் இருக்கட்டுமேடி விடேன்
"என்னோட மிட்டு.. கால்தானே உடைஞ்சிருக்கு.. ஒட்ட வச்சுக்கலாம்." என்று ஆறாவது கார்டன் நிறைக்கும் பொம்மைகள்

முக்கியமான நினைவுகளாய் ஒவ்வொன்றும் பெட்டிகள் நிறைக்கிறது

வீடு மாறுதலில் எல்லோருக்கும் ஒவ்வொன்று இருக்கிறது நினைவு கூற!

போயிட்டு வரேன். அந்தப் புஸ்தகத்தை எல்லாம் கடையில போட்டுராதீங்கோ...

இவர் அவர் அவள் - கடைசி பாகம்

இவர் அவர் அவள் - பாகம் 2

பிஜ்லி கி ராணியும் ஹவா ஹவாயியும்

இவர் அவர் அவள் - பாகம் 1

போஸ்ட் இட் வரிகள்

மாதுரி தீக்ஷித் - People I adore

மாதுரி தீக்ஷித்-துக்கு அறிமுகம் தேவையா என்ன? தேவதாஸ், கஜ காமினி மற்றும் ஆஜா நச்லே என்ற படங்கள், பெரியதாக கதையொன்றும் இல்லையென்றாலும், மாதுரியின் நடனத்துக்காகவே சேமித்து வைத்துள்ளேன்.

தேவதாஸ் (2002-ஹிந்தி) ஹிந்துஸ்தானி இசை மீதான ஈர்ப்புதான் என்றாலும், மாதுரி தீக்ஷித்தின் அற்புதமான முகபாவங்களாலும் பிடித்துப் போன பாடல் இது. பொறுமையாய் கேட்டு ரசியுங்கள். கொஞ்சமும் பிசிறாமல், ரொம்ப அழகான முகபாவங்களோடு சிரமமே இல்லாமல், எத்தனை இலகுவாக நடனமாடுகிறார் பாருங்கள்.




அப்புறம் இந்தப் பாடல். 1:00 to 1:18 வரை சற்றே நிதானித்து கவனியுங்கள். தேவதாஸ் வரமாட்டான் என்று Kalibabu (மிலிந்த் குணாஜி) சொன்னதும் சந்த்ரமுகி (மாதுரி) அவன் அப்படி வந்து விட்டால் போகும் போது இந்த சலங்கையை (gungru) நீ அணிந்து செல்ல வேண்டும் என்கிறாள். தேவதாஸும் வந்து விடுகிறான். Stunning expressions:)



மாதுரி என்ற அருமையான artist.. just beyond comparison.

ஒரு தற்கொலைக் குறிப்பு

All fled--all done, so lift me on the pyre;
The feast is over, and the lamps expire.

~~ Robert E. Howard, writer, d. June 11, 1936 (Suicide note)

சும்மாதான். இப்போ படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்த, ரொம்ப தாக்கம் கொடுத்த, இன்னும் மனசை விட்டு போகாத ஒரு சின்னக் குறிப்பு :-)

அம்மா


பல்லாங்குழி


(Photo @ Dakshina Chitra, ECR, Chennai by Vidhoosh)

நன்றி: விபர ஆதாரம் புத்தகங்கள், விக்கிமீடியா, மரத்தடி, திண்ணை, கூகிள் குரூப் மற்றும் இன்னும் சில இணையங்கள். 2001 முதல் பல பத்திரிகைகள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து சேகரித்தத் துணுக்குச் செய்திகளின் தொகுப்பே இக்கட்டுரை.

பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடு்ம்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும். இது மிக அரிதாகவே ஆடப்படுகிறது. பொதுவாக மரம் அல்லது உலோகத்தால் ஆனது. சில கோவில்களின் மேல் தளத்தில் (மாடி) கருங்கல்லில் குட்டி குட்டி குழிகளாக செதுக்கி இருக்கும். அவ்ளோ வெய்யில்ல அதும் கருங்கல்லுல உக்காந்து எப்படி விளையாடி இருப்பாங்க??

பல்லாங்குழியில் இரு வரிசைகளில் எதிரெதிரே ஏழு ஏழு குழிகள் இருக்கும். புளியங்கொட்டை, முத்துமணி, கழற்சிக்காய், குந்துமணி (குன்றின்மணி?), சிறு கூழாங்கல், அல்லது சோழி வைத்து பல்லாங்குழி ஆட்டம் ஆடப்படுகிறது. ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு காய்கள் என்று நிரப்பி ஆடப் படும்.

இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப்படும். இதில் பதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று பிரித்துக் கொண்டு எதிரெதிரே அமர்ந்து விளையாட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் எட்டு எட்டாக காய்கள் இட்டு நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக் கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின் அடுத்தவர் ஆடத் தொடங்குவார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடிக் கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிட்டால் ஆட்டம் முடிவுற்றதாகக் கருதப்படும். அனுபவமும் சிந்திக்கும் திறனும் எண்களின் கணிப்பும் இவ்விளையாட்டில் வெற்றியைத் தேடித் தரும்.

பெண்கள் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை ஆடினார்கள். கல்யாண சீரில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெற்று வந்தது. காலப் போக்கில் விளையாட என்று ஒரு பொழுதே இல்லாமல் போனதால், இந்த விளையாட்டும் மறைந்தே போனது. தற்பொழுது (ஆப்பிரிக்க பழங்குடி விளையாட்டு) Mancala Game என்றும் branding செய்யப்பட்டும், gaming sites-களில் flash games ஆகவும் இருக்கிறது. Bao, Soro (Choro or Solo), Mangola, Gabata, Mulabalaba, Ayo and Sadeqa, என்றெல்லாம் பல் வேறு இடங்களில் பல்வேறு variationகளில் விளையாடப் படும். தென்னமெரிக்காவில் ஒலிம்பியாட் விளையாட்டுக்களில் mind games பிரிவில் இவ்விளையாட்டு இருக்கிறது என்பது கூடுதல் செய்தி. அமெரிக்காக்காரன் கொண்டாடினத்தானே "மதர்ஸ் டே". என்னவோ போடா மாதவா [ இப்போ சந்தோஷமா பலாபட்டறை ஷங்கர்:)) ஆனா பாருங்க ஒரு ஸ்லோகம் மட்டும் மிஸ்ஸிங் :)) ]

பல்லாங்குழி இலங்கையில் ஏதோ ஒரு பெயரில் இவ்விளையாட்டை விளையாடுவதாக ஒரு முறை என் இலங்கைத் தோழி ஒருவள் சொல்லி இருக்கிறாள். அவளது தொடர்பு துண்டித்துப் போனது. அவள் இப்போ கனடாவில் இருக்கலாம் :( இருக்க வேண்டும்! அவளோடு இந்த விளையாட்டின் பெயரும் என் குறிப்பிலிருந்து தொலைந்தே போனது. யாருக்கு தெரிந்தால் பகிரவும்.

Significance:

ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழு குழிகள். அவை:

1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்

இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது.
நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில்
சுட்டிக்காட்டபட்டுள்ளன. சகஸ்ராரம் துவங்கி விசுக்திவரை - ஆகாயம் அல்லது மேலோகம் அல்லது சொர்க்கம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம் வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம்
தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும்
ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால்
கண்கூடாக அனுபவிக்கலாம்.

குழிக்கு எட்டு காய்கள் என்பன, மனிதனின் எட்டு வகையான குணா நலன்களைக் குறிக்கிறது.

1. சுய கட்டுப்பாடு
2. பொறுமை
3. தியாகம்
4. தானம்
5. தூய்மை (அகம் மற்றும் புறம்)
6. தவம்
7. பிரம்ம ஞானம் (அதாவது பிற உயிர்கள் மீதான மரியாதை)
8. திருப்தி

ஆடும் முறை:

ஆட்டத்தில் குழிக்கு எட்டு காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத்தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.

சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழியினைத் துடைத்து அடுத்து இருக்கு குழியில் உள்ள கைகளையும் அதற்கு நேர் எதிரே இருக்கும் குழியில் உள்ள காய்களும் அள்ள வேண்டும். அப்போது முதலில் இட்ட எட்டு காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் கிடைக்கின்றன. (இதற்கும் ஒரு பெயர் சொல்லி எடுப்போம், மறந்து விட்டது)

ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார். இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த எட்டு காய்கள் மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.

காய்களை இழந்தவர் (காட்டாக 16 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.

ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.

தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.

விளையாடும் முறை 2:

ஒவ்வொரு குழியிலும் முதலில் 5 முத்துக்களை இட வேண்டும். பின்னர் ஒருவர் ஏதாவது ஒரு குழியில் இருந்து ஆரம்பித்து 5 முத்துக்களை குழிக்கு ஒன்றாகப் போட வேண்டும். கையில் இருக்கும் முத்து தீர்ந்த்தும் அடுத்த குழியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அடுத்த குழி காலியாக இருந்து, அதற்கு அடுத்த குழியில் முத்துக்கள் இருந்தால் அவை அனைத்தையும் வென்றதாக பொருள். ஆனால் அடுத்தடுத்து காலியான குழிகள் வந்தால் முதலில் ஆடியவர்க்கு ஒன்றும் இல்லை.

இதனிடையே காலியான குழிகளில் புதிதாய் முத்துக்கள் சேரும். 4 முத்து சேர்ந்ததும் அவரவர் பக்கத்தில் உள்ளதை அவரவரே எடுத்துக் கொள்ளலாம். இதை "பசு" என்று சொல்வோம். எல்லா குழிகளும் காலியானப்பின் மீண்டும் எல்லா குழிகளையும் 5 முத்துகளாக நிரப்ப வேண்டும். ஒருவரிடம் அதிக முத்து இருக்கலாம். மற்றொருவர் குறைவாக வைத்து இருக்கலாம். அதிக முத்து உள்ளவர்கள் தனது பக்கம் உள்ள எல்லா குழிகளையும் நிரப்ப வேண்டும். குறைவான முத்துக்கள் உள்ளோர் எத்தனை குழிகள் நிரப்ப முத்துக்கள் இருக்கிறதோ அத்தனை குழிகளை நிரப்ப வேண்டும். யார் வென்றாரோ அவரிடம் இருந்தே மீண்டும் விளையாட்டு தொடரும்.

விளையாட்டினூடே பாடப்படும் நாட்டுப்புறப் பாட்டு ஒன்று: (நன்றி: என் அம்மா வழிப் பாட்டியார் திருமதி.மீனாக்ஷி கோபாலன்) இப்பாடலின் ஊடாக வயற்காடும்., பூப்படைந்த பெண்மையையும், கருவுற்ற பெண்மணியும் பாதுகாப்பது குறித்த மறைபொருளாக மறைந்திருக்கும் செய்தியைக் கவனியுங்கள். அள்ள அள்ள குறையாத பாரம்பரியம். நம் வாரிசுகளுக்கும் அள்ளித் தருவோம்.


காடு வெட்டிக் கல் பொறுக்கிக் கம்பு சோளம் தினை விதைத்துக்
காலை-மாலை காட்டக் காக்கத் தங்கரத்தினமே
கண் விழித்து கிடந்தாளாம் பொன்னுரத்தினமே.

அள்ளி அள்ளி விதைச்சு வைச்ச அழகுத்தினை சாகாதடி
மொள்ள மொள்ள விதை விதைச்சதங்கரத்தினமே
மொந்தத் தினை சாகாதடி பொன்னுரத்தினமே

கறுப்பானை ஓடிவரக் கள்ளரெல்லாம் தினை விதைக்க
வெள்ளானை ஓடிவரத் தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் பொன்னுரத்தினமே

சின்னச்சின்ன வெற்றிலையாம் சேட்டுக்கடை மிட்டாயாம்
மாமன் வைச்ச மல்லிகைப்பூ தங்கரத்தினமே
கொண்டையிலே மணக்குதடி பொன்னுரத்தினமே

சாலையிலே ரெண்டுமரம் சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் பொன்னுரத்தினமே

எல்லோரும் கட்டும்வேட்டி ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி பொன்னுரத்தினமே

ஒத்தத்தலை நாகன்வந்து ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் பொன்னுரத்தினமே

தேவானையைக் காவல் வச்சா தீஞ்சிடுமே தினைப்பயிரு
வள்ளியைக் காவல்வைத்தால் தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை பொன்னுரத்தினமே

மூத்தண்ணன் பொண்சாதியை மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் பொன்னுரத்தினமே

சாய்ந்திருந்து கிளிவிரட்டச் சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே பொன்னுரத்தினமே

பார்வையற்றவர்களுக்கு படித்துக் காட்ட வாங்க 21-4-2010 மற்றும் 22-4-2010

Friends,

Few of our visually challenged friends who attend the exams on 21st & 22nd April need our help as "scribes".

Here are the details. Those who would like to volunteer can just click on the "i volunteer" link for the respective day below (or) can also contact us @ 99410 14591.

For more scribe requirements, pls check out  http://disha.byethost13.com/minnal/scribes


Scribes needed:

Date: 21st Apr (Wednesday)

All the Exams are to be written in

Tamil



Student name
Start time
duration
School/college
Enroll as a scribe
Shakthivel, M.A., Tamil
 09.30
3 hrs
Pachayappas College, Chetpet, Chennai
Mariyammal, B.A.Tamil
 13.00
3 hrs
Queen mary's college,Triplicane
Saravanan, BA., Tamil
 09.30
4 hrs
New College, Royapettah,Chennai

Date: 22nd Apr (Thursday)

All the Exams are to be written in

Tamil


Student name
Start time
duration
School/college

Parveen Sha, B.A.Tamil
 09.30
3 hrs
Queen mary's college,Triplicane
Raja, B.A.Tamil
 10:00
3 hrs
Madras univ., chennai,Triplicane
Gopinath, B.A.Tamil
 10:00
3 hrs
Madras univ., chennai,Triplicane
Ramesh, B.A.Tamil
 10:00
3 hrs
Madras univ., chennai,Triplicane
Murali, BA., Tamil
 09:30
3 hrs
New College, Royapettah,Chennai
Rajendran, M.A., Tamil
 10:00
3 hrs
Pachayappas College, Chetpet, Chennai
Dharani, M.A., Tamil
 10:00
3 hrs
Pachayappas College, Chetpet, Chennai
Veda Manikkam, M.A., Tamil
 10:00
3 hrs
Pachayappas College, Chetpet, Chennai
Shankar, M.A., Tamil
 10:00
3 hrs
Pachayappas College, Chetpet, Chennai
Shekar, M.A., Tamil
 10:00
3 hrs
Pachayappas College, Chetpet, Chennai
Mariya Selvam, BA., Tamil
 09:30
3 hrs
Queen mary's college,Triplicane


ட்வீட்டிய வரிகள்

யார் சுதந்திரத்துக்கு ரெட் அலெர்ட்



பி.ஜே.பியில் இணைந்திருக்கும் புது உறுப்பினர் பசுபதிநாத் முதல் திருப்பதி வரை நக்சல்கள் பரவி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். அப்படியொண்ணும் குறைச்சு சொல்லிவிடவில்லை. நிகழ்வுகளை பார்த்தால் விஷம் போல தென் மாநிலங்களில் நக்சல்வாதம் பரவி வருகிறது என்றே நம்பத் தோன்றுகிறது. நாம் எதற்ககெல்லாம் கவலைப் படுவது? புல்லாங்குழல் வாசிக்கிறதா, பச்சை விறகு வச்சு மூட்டிய அடுப்பை ஊதுரதான்னு நம்ம அரசியல் தலைவர்கள் எல்லோரும் கையை பிசைந்து கொண்டு, முடிவாக புல்லாங்குழல் ஊதினால் வரும் இன்னிசை மனசுக்கு இதமாய் இருக்கு என்றே முடிவு கட்டி விட்டார்கள். இதில் அண்ணன் தம்பி பிரச்சினை வேறு? குடும்பத் தலைவர்களாக வேறு இருந்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது. இந்தப் பாடுபடுவதற்கு செல்வியாகவே இருந்திருக்கலாம் போலருக்கு.

ஜவான்களுக்கே மரணக்குழி வெட்டிய பிறகு, முழித்துக் கொண்டு, வேட்டிய மடிச்சு கட்டி வெட்டியான் வேலை செய்ய தலைவர்கள் எதற்கு? ஆளுமை ஆள்வதற்கா ஆள்வதைக்கா?

தவறென்று ஒப்புக் கொண்டார்களாம்... வேறென்ன செய்வீர்கள் அண்ணே!!! சரீன்னு நிரூபிக்க முடிந்திருந்தால் அதையும்தான் செய்திருப்பீர்கள்.

ஆளுமைக்கான ஆள் பலம் கொண்டதால் ஆளும் கட்சியும், கொஞ்சம் குறைந்ததால் பலம் இருப்பதாகக் கருதப் படும் எதிர்கட்சியும் statement கொடுத்து கடமையைத் தீர்த்தாகி விட்டது. எத்தனை நஷ்டம், திறமையான ஜவான்களின் மரணங்கள், அவர்களது training மீதான செலவினங்கள், குடும்பத்துக்கான நஷ்ட ஈடுகள், என்று மக்கள் வரிதானே போகப் போகிறது என்ற அலட்சியமா? கட்சிகாரர்கள் எல்லோரும் வேண்டிய அளவு வாங்கிக் கொண்டுதானே அவர்களுக்கு வாகான போஸ்டிங் பண்ணிக் கொடுத்திருப்பீர்கள்? வெறும் statement என்ன செய்து விடப்போகிறது, வெண்ணைவெட்டி statement?

மேற்கு வங்காளம், ஒரிசா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், ஆந்திரா போன்ற இடங்களில் மட்டுமே நக்சல்கள் ஊடுருவி இருந்தனர், இப்போது மெல்ல உத்திரகண்டம், புது தில்லி, பஞ்சாப் போன்ற இடங்களிலும் இவர்களது காலடிகளின் நாராச ஓசை கேட்க ஆரம்பித்திருக்கிறது. சென்ற நவம்பர் 2006-ல் புது தில்லியில் நடந்த நக்சல் சம்மேளனம், அதை தொடர்ந்து விநியோகிக்கப் பட்ட கை நோட்டீசுகள், போஸ்டர்கள் போன்றவை நம் அரசாங்கத்தின் குறட்டையொலியின் உச்சம்.

காமெடி பீஸ் ஆகிப் போன எதிர்க்கட்சிக்கு இப்போதுதான் நக்சல்கள் தென்னிந்தியாவில் சிகப்பு கம்பளம் விரித்து வைத்திருப்பது தெரிகிறது. அடடா... இப்போ என்ன செய்வது? லட்சுமண ரேகையாச்சே...

மார்ச் 2007-குள்ளேயே நக்சல்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஊடுருவியாகி விட்டது. சாதாரண மக்களுக்கே இத்தனை செய்திகளும் அதிர்ச்சி தரும்போது, இத்தனை செய்திகள் அரசாங்கத்துக்கு ஏற்கனவே கிடைத்திருந்தும் சிவராஜ் பாட்டில் அவர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த அபரிமித நம்பிக்கையோடு statements கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நக்சல்வாதிகளின் கூடாரமாய் இருக்கும் பஸ்தர், தன்தேவாட், பிஜப்பூர், நாராயண்பூர், கான்கேர், ராஜ்னாந்தகான்வ், என்ற வகையில் சட்டிஸ்கரில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நக்சல்களின் ஆளுமையில் இருக்கிறது. ஜனநாயகத்தின் உச்சமாக, ஏதும் குற்றங்கள் நிகழ்ந்தாலும் கூட மாலை ஐந்து மணிக்கு மேல் காவல்நிலையத்திற்கு மக்கள் போகக் கூடாது என்று நக்சல்கள் தடை விதித்துள்ளனர். காவலர்களும் இவர்களுக்கு பயந்து சிவில் உடைகளில்தான் வேலை செய்கிறார்கள். மேற்கு வங்காளத்தின் நிலை இன்னும் கேட்கவே வேண்டாம். வளர்த்த கடா மாரில் பாய்ந்த கதையானது.

தாய்நாடாச்சே!!! இன்னும் "டாய்"ன்னு பயமுறுத்தினால் உச்சா போய்விடும் கைக்குழந்தையாகவே இருக்கும் ஜனநாயகத்தை அரசியல் ஆயாக்கள் பேணுகிறார்கள் போலும், யார் என்ன செய்தால் என்ன? மின்சாரம் வேறு இல்லையடா, கும்பகர்ணா இன்னும் விசிறு!!!

யாருப்பா அங்க.... பாராட்டு விழாவுக்கு பந்தல் கட்டுங்க..

ஞான மரம்

ஹல்திராம் ரசகுல்லாவும் கொஞ்சம் காராசேவும்

பதிவுலகில் எளிமையான வார்த்தைகளுடன் கவிதைகள் காணக் கிடைக்கச் செய்யும் யாத்ரா, பா.ராஜாராம் வரிசையில் நான் மிகவும் விரும்பிப் படிக்கும் கவிதை சிற்பி கவிஞர் ராஜா சந்திரசேகர்.

நாம் எளிதில் கடந்து சென்று விடும் தருணங்களை படம்பிடித்துக் காட்டி, இதோ பார், இப்படி இருக்கு அப்படி இருக்கு என்று ஒரு குழந்தையின் மகிழ்வோடு, அவரிடம் பேசும்போதே விழியோரச் சுருக்கங்களில் காணக் கிடைக்கும் மகிழ்வின் ஒளியும், ஒரு perfect கலைஞனாக, கவிதைகளின் நூல் பிடிபடும் போதெல்லாம் குதூகலித்து மகிழ்ந்து, கண்ணாடிவளைச் சில்லு கொண்டு சின்ன வயதில் செய்து மகிழ்ந்த கலீடாஸ்கோப் ஜாலங்கள் தெரியும் இவர் கவிதைகளில். பென்சில் நதி நெகிழ்ந்து வழிந்து போகும் இடமெல்லாம் பசுமை, வளமை, வாழ்வின் நிர்வாணம்.

ராஜா சந்திரசேகர் கவிதைகள் என்றொரு தளத்தில் நிறைய பிரமிக்க வைக்கும் வார்த்தைக் கோர்ப்புக்கள், எண்ணச் சிதறல்கள் என்று இறைந்து கிடக்கின்றன.

இவரது அனுபவ சித்தனின் குறிப்புக்கள் அடர்த்தியானவை. ஒவ்வொரு கவிதையும் ஒரு கட்டுரையாகும் வளமையும், நாவலாகும் உணர்வுகளும், கதையாகும் வாழ்க்கையும் செறிந்தவை.

நிறைய கவிதைகளில் குழந்தையின் பார்வையில் விரியும் உலகமாகவும் சொற்கள் கொஞ்சி மகிழ முடிகிறது. நிறைய கவிதைகளுக்குள் கவிஞன் எட்டி நின்று இரண்டு மனசுக்குள் கூடு பாய்ந்து இரண்டு மனசுகளையும், சிலமுறை அதையும் தாண்டிய எண்ணிக்கையில் பாய்ச்சிய ஒளி வெள்ளமாய் தெறிக்கும் பல வண்ணங்களைப் பீய்ச்சிய பிரமிடை படித்து விட்ட கருவமும் ஓங்குகிறது.

அதுவரை ராஜாசந்திரசேகர் கவிதைகள் மட்டுமே படித்து வந்த நான், சில நாட்கள் முன், நான் இவர் தளத்தை கூகிளில் சிங்கமும் எலியும் என்ற குழந்தைக் கதையை தேடும் போது பென்சில் நதியைச் சென்றடைந்தேன். சிங்கமும் சுண்டெலியும். பிரமித்து நிற்கிறேன்.
சிங்கம் தூங்காது
சுண்டெலிதான் தூங்கும்
நீ சிங்கமா சுண்டெலியா
மகனிடம் கேட்டேன்
உடனே சொன்னான்
நிறைய சிங்கம்
கொஞ்சம் சுண்டெலி

அவரது ஒரு சில கவிதைகளை எடுத்துத் தருகிறேன். மிகுதிய பென்சில் நதியில் பருகிக் கொள்ளுங்கள்.
===========================

அம்மாவுக்கு பெரிய மீசை
குழந்தை கிறுக்கிய
புகைப்படத்தில்

===========================

ஒரு கவிதையில்
வைத்துப் பார்க்க வேண்டும்
பேருந்தில் தரிசித்த
குழந்தையின் புன்னகையை

===========================

கட்டியிருந்த ஆடு
திரும்பி வந்தபோது
தொங்கிக் கொண்டிருந்தது

என்ற இவரது கவிதையைப் படித்ததும், இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுகள் எனக்கு.
ownership, திருட்டு,
சொத்து, உணவு,
இழப்பு, கொலை,
நேயம், குரூரம்
என்று பல மனித முகங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் ஆட்டுக்கு பின்னால். கிடாகளுக்கு குழந்தைகளை காக்க வேண்டிய கடமை இருக்கிறதோ என்னவோ, ஆடுகளுக்கு குட்டிகள் இருந்தால் யார் அவைகளுக்கு பாலூட்டுவார்கள்?

எத்தனை வாழ்க்கை இக்கவிதை வரிகளுக்குள்? உங்களுக்கு எத்தனை பேர் தெரிகிறார்கள் என்று கண்டிபிடியுங்கள் பார்க்கலாம்?

===========================

எனக்குள்
மீதி கவிதை
கவிதையில்
முடியாத நான்

என்று கூறும் இவர் எழுதிய மனிதர்களையும், சில வாழ்க்கைத் தருணங்களையும் படித்துக்கொண்டே, ருசிக்கத்தான் வேண்டும் ஹல்திராம் ரசகுல்லாவும் கொஞ்சம் காராசேவும், வித்தியாசமே தெரியாது, கொஞ்சம் தேநீரும் இருந்தால்.

ஊஞ்சல் 7-4-2010

ஊஞ்சல்:
இரண்டு நாட்களாய் இணையப்பக்கம் வரமுடியவில்லை. மீண்டும் ஒரு நண்பர் எங்கள் திருக்காட்டுப்"பள்ளி"யில் இருந்து. சென்ற வாரத்தின் பரபரப்பு இவருக்கு என்னை அடையாளம் காட்டி இருக்கலாம். எங்கள் பள்ளியின் 91-ஆம் வருஷத்து "கணித மேதை ராமானுஜம்" இவர். எங்கள் பள்ளி கணித ஆசிரியர் திரு.ஜி.நாராயணன் அவர்களின் செல்ல மாணவர்களில் ஒருவர்.

பக்கோடா:
போன ஞாயிறு வீட்டில் பக்கோடா செய்தேன். கொஞ்சம் தண்ணீர் ஜாஸ்தியாகி, மசாலா வடையாக செய்து பெயர் மாற்றி பரிமாறியாகிவிட்டது. புதினா சட்டினியும் மிளகாய் சாஸும் என்று அதையும் தின்று, இஞ்சி-எலுமிச்சை ஜூஸ் குடித்து ஜெரித்தோம். தர்ஷிணி மட்டும்தான் இன்னும் அதை "பக்கவடை" என்றே சொல்லிக்கொண்டிருக்கிறாள். :))

தேநீர்:
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் HR&CE அலுவலகத்தின் அனுமதியுடன், மாலை 5 மணி முதல் 6 மணி வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலான புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், கதைகள் போன்றவற்றில் ஒன்றும், குழந்தைகளுக்கான படைப்புகளில் இருந்து ஒரு நன்னெறிக் கதையொன்றும் என என்னிடம் இருக்கும் புஸ்தகங்களை வாசித்து காட்டப் போகிறேன். நான் இல்லாவிட்டாலும் என் நண்பர்களில் வேறு ஒருவர் இப்படி வாசிப்பார். கதை வாசித்துக் கேட்க விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். (வில்லுப் பாட்டு, கதாகலாட்சேப ஜால்ராப் BGM இசைகளை எதிர்ப்பார்த்து வந்து ஏமாந்தால் பக்கோடா கும்பெனி பொறுப்பாகாது)

மழை:
இட்லி வடை வலைப்பக்கத்தை வாரம் ஒருதரம் மொத்தமாய் படிக்கிறதுண்டு. அப்படி பார்க்கையில் பதிவர் முத்துராமனின் சிறுநீரக சிகிச்சைக்கு நான்கு லட்சம் வரை செலவாகிறது என்றும் உதவி கேட்டிருந்தனர். சிறு துளி பெருவெள்ளம், உங்களால் இயன்றவரை உதவலாம்.

சிறுநீரக சிகிச்சையை இலவசமாகவே TANKER Foundation அமைப்பு நடத்துகிறது. முடிந்தால் அவர்களிடமும் உதவி கோரலாம், அங்கிருந்து யாரேனும் மருத்துவர்கள் தனக்கான fees இல்லாமல் இவருக்கு சிகிச்சையளிக்க முன்வந்தால் இன்னும் சிறப்பு. திரு.முத்துராமன் இறைவன் அருளுடன் விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுகிறேன்.

விதுர நீதி 1

விதுர நீதியைத் தமிழில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பகுதி பகுதியாகத் தருகிறேன்.
====================
சஞ்சயன் வெறுங்கையோடு திரும்பி, திருதராஷ்டிரனைப் பார்த்து "மகாராஜா! ராயபாரம் தோல்வியுற்றது. யுத்தம் தவிர்க்க முடியாததாகிப் (அனிவார்யம்) போனது" என்றார். திருதராஷ்டிரன் பெருஞ்சஞ்சலத்தில் ஆழ்ந்தார். நம்பிக்கைக் கொடுக்கும் நல்ல வார்த்தைகள் கேட்க விழைந்து விதுரனை அழைக்கிறார்.

விதுரன், யமதர்மராஜனின் அவதாரமாகக் கருதப் படுகிறார். அவர் நிரஹங்காரி (அஹங்காரம் அற்றவர்), நிஷ்ச்சலமனஸ (சலனமற்ற மனமுடையவர்) என்றும் அறியப்படுபவர்.

திருதராஷ்டிரனைக் காண விதுரன் வந்து, அவரை நமஸ்கரிக்கிறார். விதுரனை அமரச் செய்து, திருதராஷ்டிரன் "நல்லவற்றைக் கேட்டு நாளாகிப் போனது. எனக்கு சில ஹிதவாக்கியங்களை (இனிமையான வாக்கியங்கள்) கூறுவாயாக" என்று கேட்கிறார்.

விதுரன் "மகாராஜா. உங்கள் விழிகளில் சிவப்பு நரம்புகள் தெறிக்கிறது. உங்களுக்கு உறக்கமின்றிப் போனது. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஏனென்றால், பலவந்தர்கள் (பலம் பெற்ற சான்றோர்கள்) மீது விரோதம் கொள்ளும் துர்பலர்கள் (பலத்தை துஷ்ப்ரயோகம் செய்பவர்), மாற்றான் சொத்துக்களை அபகரிப்பவர்கள், காமாந்தகர்கள், திருடர்கள் போன்றவர்கள் மட்டுமே உறக்கமின்றித் தவிப்பார்கள் என்று அனுபவ சாஸ்திரங்கள் உரைகின்றன. நானறிந்த வரையில், தாங்கள் அப்படிப்பட்ட பாதங்கள் புரியவில்லையே! பின்பு தங்களுக்கு ஏன் உறக்கம் வரவில்லை?" என்று வினவுகிறான்.

விதுரனின் எதிர்கேள்விக்கு பதிலுரைக்கமுடியாது திகைத்த திருதராஷ்டிரன் "விதுரா. உன் வாயால் தர்ம பிரவசனம் (தர்மம் குறித்த உரை - lecture) கேட்கவும் ஆவலோடிருக்கிறேன்." என்கிறார்.

விதுரன் தொடர்ந்து: "மகாராஜா! யுதிஷ்டிரன் உத்தமன். உன்னதமான ஆசைகள் கொண்டவன். தர்மத்தை பின்பற்றுபவன். உதாத தர்மவானாகிய (பிரதிபலன் பாராதவன்) அவனே அரசனாகும் தகுதிகள் பெற்றிருக்கிறான். அவனிடம் அரசனாகும் அதிகாரமும் பலமும் இருந்தாலும், உங்களைத் தந்தையாகக் கருதி, அவன் உங்கள் ஆணையை மீறி நடந்ததேயில்லை. அப்படியிருந்தும், அவனை வானப்ரஸ்தம் செய்வித்தீர்கள். இன்று உங்கள் சத்தியத்திற்கு புறம்பாகவும், வாக்கை காப்பற்றமுடியாமலுமான சூழ்நிலையில், ராஜ்ஜியத்தை அவர்களுக்கு அளிக்க முடியாமல் இருக்கிறீர்கள். துரியோதனுக்கு சாம்ராஜ்யபாரத்தை அளித்து, துச்சாதனன், சகுனி, போன்ற காமாதி அயோக்கியர்களுக்கு இடம் கொடுத்து விட்டீர்கள். இப்போது அமைதியை வேண்டுவது நியாயமில்லை? உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறதா? சாத்வீக ஸ்வபாவம் (அமைதியானவன்), உத்யோகயத்னம் (தன் வேலையைச் செவ்வனே செய்பவன்), கிலேஷ சஹனம் (விருப்பு வெறுப்பற்றவன்), தர்மவான் (நியாயமாய் நடப்பவன்), எவனோ அவனுக்கு இன்னல்கள் நேர்ந்தாலும், அவன் குறிக்கோள்களில் அவன் என்றும் தோற்ப்பதில்லை. அப்படிப் பட்ட சுஜனர்கள் (தெளிந்த குறிக்கோளுடையவர்) துர்ஜனர்களிடமிருந்து (குறிக்கோளற்றவர்கள்) விலகி இருப்பார்கள்.

மஹாராஜா! வித்வான் (அறிவிற்சிறந்தவன்) என்பவன் யார்? தர்மார்த்தங்களை பின்பற்றுபவன், லோக விவாகரங்களை நன்கறிந்தவன், குறிப்பால் உணர்பவன்
போக சிந்தனையற்றவன் ஆனால் புருஷார்த்தங்களைப் பின்பற்றுபவன் (குடும்ப வாழ்விலும் ஈடுபடுபவன்), எந்த நிலையிலும் மற்றவன் மீது அவதூறுகள் பேசாதிருப்பவன், நியாயமற்ற இலாபங்களை விரும்பாதிருப்பவன், நிரந்தரமாக இழந்துவிட்ட பொருட்களைக் குறித்த துக்கம் கொள்ளாதிருப்பவன், கஷ்டங்களை எதிர்கொள்ளும் மனஉறுதியும் தைரியமும் பெற்றவன், இடையில் விட்டுவிடாது எச்செயலையும் முழுதாக முடிப்பவன், சோம்பேறித்தனம் இல்லாதவன், இந்த்ரீய நிக்ரஹம் செய்பவன் (உணர்வுகளை அடக்கும் ஆற்றல் பெற்றவன்), போன்ற குணங்களைப் பெற்றவனின் இதயம் பவித்திரமான கங்கையின் ஊற்று நீர் போல சுத்தமாயிருக்கும். கற்றகல்வி எப்போதும் அவர்களுக்கு நல்வழி காட்டும்.

மூர்க்கர்கள் யார்? மூர்க்கர்களுக்கோ கல்வியின் பயன் கிடைக்காது, விவேகம் அழிந்து கர்வம் பெருகும். இப்படிப்பட்ட தாரித்திரியம் (காம-கோப-மூர்க்க-கர்வ குணங்கள்), கொண்டவர்களுக்கு ராஜாங்கச்செல்வங்களை பாதுகாக்கும் கனவு எதற்கு? ஸ்வ-தர்மம் (தனக்கே தன் மீதான மரியாதை) விடுத்தவர்கள், பரதர்மம் (ஸ்வ-தர்மத்தை விடுத்து அடுத்தவனின் நம்பிக்கைகளை பின்பற்றுபவன்), தன் நண்பர்களை அவமதிப்பவன், பலவந்தர்களுடன் விரோதிப்பவன், நண்பர்களே இல்லாதவன், அதிகப் பிரசங்கி (அவசியமில்லாமல் அளவு மீறி பேசுபவன்), க்ருதஞ்ஞம் (நன்றியுணர்வு) இல்லாதவன், மற்றவன் குற்றத்தை மட்டுமே நினைவில் கொள்பவன், காரணமேதுமின்றி அற்ப விஷயங்களுக்குக் கூட ஆவேசப் படுபவன், அனர்த்தர்களுக்கு உபதேசம் செய்பவன் போன்றவர்கள் மூர்க்கர்கள்.

பிரபு! பெருஞ்செல்வமான கல்வி, கேள்வி, வேள்விகளின் அதிருஷ்டம் இருந்தாலும், தானங்கள் செய்த புண்ணியவானாக இருப்பினும், கர்வம் இருந்தால், அவன் வித்துவான் ஆக முடியாது.

பரம மூர்க்கன் என்பவன் யார்? தன்னுடன் ஒரே கூரைக்குள் இருப்பவர்களுக்குக் கொடுக்காமல் உணவு உண்பவனும், உணவுக்காக இறைஞ்சுபவனும் பரம மூர்க்கர்கள்"


------------->இன்னும் வரும்<-------------

பெரியம்மை பாட்டி - திரு.வி கங்காதர்

இடைப்பட்ட பொழுதுகள்

இப்படியெல்லாம் ஈமெயில் வந்தா நம்பாதீங்க

fromK Shivakumar
toshiva_1969ttk@yahoo.co.in
dateMon, Mar 29, 2010 at 4:17 PM
subjectHi
signed-byyahoo.co.in
hide details 4:17 PM (11 minutes ago)

Hope you get this on time ? Sorry I didn't inform you about my trip to the UK for a program, am having some difficulties here because i misplaced my wallet on my way to the hotel where my money and other valuable things were. Presently my passport and my things are been held down by the hotel management pending when i make payment.
I will like you to assist me with a loan of $2,200 to pay my hotel bills and to get myself back home. I will appreciate whatever you can afford to assist me with, I'll Refund the money back to you as soon as i return, let me know if you can be of any help? ASAP.
I don't have a phone where i can be reached,please let me know immediately

Thanks
K.Shivakumar
 

சென்னை வலைப்பதிவர் குழுமம் குறித்து

சனிக்கிழமை அன்று குழுமம் அமைப்பது குறித்த பதிவர் சந்திப்பு பலருக்கும் ஏமாற்றம் தந்திருக்கலாம். ஆனால், இது நிச்சயம் ஒரு மிகப் பெரிய ஆற்றலாகும் குழுமத்திற்கான துவக்கம் என்றே நான் கருதுகிறேன். இதை initiate செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள் - நன்றியும்.

பின்னாளில் திரும்பிப் பார்க்க எழுத்தின் மூலம் உபயோகமாய் செய்யவும், பதியவும் வேண்டும் என்ற ஒத்த சிந்தனையுள்ளவர்களும், என்னதான் சொல்றாங்கன்னு பார்க்கலாம் என்றும் அங்கே வந்து அமர்ந்திருந்த பலரையும் அடையாளம் காண முடிந்தது. ஏற்கனவே தீர்மானித்த ஒரு முடிவுக்கு தலையாட்டி விட்டு வரலாம் என்றும் நினைந்த்திருக்கலாம் சிலர். போதாக் குறைக்கு ஞாநி வேறு யூனியன், கவர்மண்டோடு பேச ஒரு மீடியம் என்றெல்லாம் பிரம்மாண்டம் காட்டி மிரட்டி விட்டதால், ஆயாசம். இன்னும் இந்தக் குழுமம் போகும் பாதையை கலந்தாலோசிக்க வேண்டியே அமைந்தது இக்கூட்டம் என்றாலும், அதை பலரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது, திட்டமிடல் சரியாக அமையாமல் குழப்பம் மிஞ்சியது நிஜம்தான். இப்போதுதானே துவங்கி இருக்கிறது.

சென்ற முறை நிகழ்ந்த (முதல்) சொற்கப்பல் விமர்சனக் கூட்டம் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக அமையக் கூடும். எதைப் பற்றி, என்ன பேசப் போகிறோம் என்பது பற்றிய திட்டமிடல் அருமையாக அமைந்திருந்தது. முக்கியமாக அஜயன் பாலாவின் உரை. சொல்ல வந்தது அனைத்தும் முழுமையாகவும் சரளமாகவும் இருந்தது. என்னால் அன்று கூட்டம் முடியும் வரை இருந்து முழுதும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. சரி போகட்டும்?

நாம் ஒரு குழுமமாக அமைய என்ன செய்யலாம் என்று பேச நினைத்தவை இவை. வந்து அமர்ந்து அங்கு நடந்து கொண்டிருந்த கருத்து அமளிகள் மற்றும் நேரமாகிக் கொண்டிருந்த கஷ்டம் போன்றவைகளால் என்னால் அங்கேயே பகிர முடியாது போனது.
  • குழுமம் அமைக்கப் படவேண்டியது நிச்சயம் தேவை. ஒபாமா ஜெயித்ததற்கு வலை பதிவர்கள் மிக முக்கியமான கருவியாக அமைந்திருந்தது இங்கு குறிக்கத்தக்கது. தெளிவான சிந்தனையோடு இன்னது எங்கள் நோக்கம் என்ற முடிவோடு அமையப் பெற வேண்டியது முக்கியம்.
  • இணையதளம் மூலம் எழுதுவதனால், எண்ணிலடங்கா வாசகர்களை சென்றடைந்து, தமிழ் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கான தளமாகவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் இலக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கி, தமிழுக்கு தனி மரியாதையை உலக அளவில் உருவாக்கித்தரும் ஆற்றல் blogging மூலம் பெற முடியும்.
  • தமிழ் பதிவர்களை திரட்டி professional blogger-களாக ஆகவும், blogging மூலம் பொருள் ஈட்டவும் வழிவகைகள் செய்தல். பெரும்பான்மையான தமிழ் பதிவர்கள் பகுதி நேர பதிவர்களாகவே இருக்கிறோம். supportive income என்ற வகையில் பொருளீட்டும் வழிமுறைகளை தொழில்நுட்ப ரீதியாக பகிர்வதன் மூலம், இன்னும் பயனுள்ள வகையில் எழுதுவதை ஊக்கப் படுத்தலாம்.
  • blogging ethics முறைகளை தெளிவு படுத்துவது.
  • தமிழ் blogger-களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்குவது. பத்திரிக்கையாளர்கள் சட்டம் இதற்கும் பொருந்துமா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. அப்படி இல்லையென்றால், அதற்கு என்ன வழி என்பதையும் பொறுத்து, அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற மாதிரி இந்த குழுமம் பதிவு செய்யப் படவேண்டும்.
  • கருத்து சுதந்திரம் மற்றும் எப்படிப்பட்டக் கருத்தும் உடனடியாக அனைவருக்கும் படிக்கக் கிடைக்கும் ஆபத்தும் இணைந்தே இருப்பது என்பதால், தனிநபர் (பதிவர்) பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் தருவது.
  • தலைவர் வேண்டாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் பகிர / சொல்லப் படும் கருத்துக்கள், சிதறவும், அள்ளமுடியாமலும் போகக் கூடும். தலைமை என்பது நிச்சயம் தேவை. அந்தந்தக் கூட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில் சுழற்சி முறை தலைமையாக அமையலாம். இது பேசும் பொருளுக்கான agenda மற்றும் direction மற்றும் control -லுக்கு உதவும்.
  • வரும் நாட்களில் முறையாக பதிவு (registration) செய்த பின், freelancer மற்றும் வலைப் பதிவுகள் மூலம் எழுதியும் பொருள் ஈட்டியும் வரும் நபர்களுக்கு, குழுவாக / forum ஆக அமைந்திருந்தால் medical insurance (உதாரணத்திற்கு) போன்றவை கிடைக்க வழிவகை செய்யும் சட்ட பாதுகாப்புக்கள் கிடைக்கும் வழிகள் இருக்கின்றன. a group shall definitely take us a long way in positive sense.
  • குழுவாக அமையும் போது, எழுதும் கருத்துக்கள் மீதான பொறுப்பு அதிகரிக்கும். பல எழுத்தாளர்களை அடையாளம் கண்டும், புத்தகங்கள் வாசிக்க பகிரும் ஒரு அரங்காகவும் அமையலாம். முடிந்தால் அனைவரும் இணைந்து ஒரு நூலகம் கூட அமைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்.
  • தொழில்நுட்பம் மற்றும் தொழில்/இலக்கியம் சார்ந்த விஷயங்களைப் பகிர்தல். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லை. அப்படி அறிய விரும்பும் விஷயங்களை பொதுவில் கேட்கலாம் / தெரிந்தவர்கள் பகிர்ந்து, ஆரோக்கியமாக விவாதித்துக் கொள்ளலாம்.
    • lighter side: சிரிக்க மட்டும்: எனக்கு தெரிந்து இலக்கிய விவாதங்கள் செய்தே ஒரு தம்பதி விவாகரத்து பெற்றிருக்கின்றனர். வீட்டில் கணவனோ மனைவியோ ஒருவர் மட்டும் எழுதுதல் நம்ம உடம்புக்கும் மனசுக்கும் குடும்பத்துக்கும் நல்லது என்று முன்னெச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன். சாமர்த்தியமாக உங்கள் spouse-களை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வைப்பது உங்கள் சமர்த்து.
எனக்கு இப்போதைக்கு தெரியும் சில சிக்கல்கள்:

  • யார் யாரை உறுப்பினர்களாக அங்கீகரிப்பது?
  • பூசல்காரர்களை என்ன செய்வது?
  • கூட்டம் நடத்துவதற்கான பொருட்செலவை எப்படி நிர்வகிப்பது?

என்பவை மட்டுமே. சமாளிக்கக் கூடியவைதான் இவைகளும். மற்ற பிரச்சினைகள் பற்றியும் தெரிந்தவர்கள் பகிரலாம். ஆரோக்கியமான விவாதங்கள், மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறேன். கூட்டாக இணைந்து குழுவாக இருப்பதால் நிச்சயம் நற்பலன்கள் அதிகம். பிரச்சினைகள் இருக்கும். எங்குதான் இல்லை?

ஒரு முக்கியமான அனுபவக் குறிப்பு:
உதாரணம்: நம் அலுவலகங்களில் நடக்கும் weekly review meeting-குகள். :-))
அடிக்கடி சந்திப்பதனால் பேசும் கருத்தும், பேச்சும் பிசுபிசுத்துப் போகும் என்பதால், முடிந்த வரை மூன்று / ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்துப் பேசுவதே குழுமத்தின் நீண்ட ஆயுளுக்கு நல்லது. அதுவே பயனுள்ள கருத்துக்களைத் தரும் நிகழ்வாக அமையும்.

தண்ணீர் என்ற அம்ருதம் பிரம்மா

வேதங்களைப் பற்றிய (அல்லது) அதை சுற்றிய சிந்தனைகள் மட்டும் தான் இப்போது. அதனாலேயே என்னவோ இந்த தண்ணீர் தண்ணீர் பத்திகளைப் படித்ததும் இதையும் என் சேகரிப்பில் இணைக்கத் தோன்றியது. உங்களுக்கும் பயன்படலாம். படித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் (பொறுமையும்) இருந்தால் மகிழ்ச்சி.

யாகங்கள் / ஹோமங்களின் பொது பெரும்பாலும் "மந்த்ர புஷ்பம்" என்ற "யோபாம் புஷ்பாம் வேத" என்ற மந்திரத்தை புரோஹிதர்கள் கூட்டாக உச்சாடனை செய்ய கேட்டிருக்கலாம். அதன் பொருள் என்ன? தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும்.

சப்தங்களின் அதிர்வை தண்ணீர் உணருமா? எப்படி உணர்கிறது? அதன் பலன் என்னென்ன? அறிந்து கொள்ள Dr. Masaru Emoto, என்ற ஜப்பானிய விஞ்ஞானியின் தளத்தை பாருங்கள். ஆராய்ச்சிகளின் மூலம் அறியத் தந்தவற்றை இந்த வீடியோவில் பாருங்கள் .



==========================================================

இன்ன பிரச்சினைக்கு இன்ன rate என்ற விகிதத்தில், பணத்தைக் கொடுத்தால் சுகபோகங்கள், வியாதி தீருதல், கணவன் மனைவி பிரியாத வாழ்வுக்காக மந்திரங்கள் ஜபிக்கப் படும் என்பதையெல்லாம் நம்பும் அவசரத் தீர்வுகளைத் தேடும் வேகவிரும்பிகளாக ஆகி விட்ட நாம், சற்று நிதானிக்க வேண்டிய தருணம் - என்று world water day மூலம் UNCED 94-ஆம் வருடம் முதல் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆமாங்க!!! இவங்க நார்த் அமெரிக்கா-காரங்கதான் ... இனிமேயாவது கொஞ்சம் கேட்டுப்போம்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதையாக, நம்மிடமே இயற்கையை பாதுகாக்கும் எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும், அவற்றை கரையானுக்கு போட்டுவிட்டு, யாருக்கும் ஈமெயில் ஒரு pdf அல்லது pps கோப்புக்களை forward to all என்று ஒரு send button-னை click செய்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட முடிகிறது. தற்போதைய / வருங்கால தலைமுறைகளுக்கு நம்மிடம் கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் சிலவற்றையேனும் எடுத்துக் கொடுக்கவும், அவற்றை பின்பற்றி இருப்பதை பாதுகாத்துக் கொடுக்கவும் எவ்ளவோ விஷயங்கள் hymn-களாகவும் சுலோகங்களாகவும் ஒளிந்து கிடக்கின்றன. இப்போது யாரும் படிப்பதில்லை, யாருக்கும் புரியவதுமில்லை, ஆனாலும், long-term perspectives-களோடு எழுதப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கங்களாக மட்டுமே வேதங்களை என்னால் பார்க்க முடிகிறது.

=======================================
வேதங்களில் இயற்கையையும் இயற்கையை சார்ந்தவற்றையும் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் பாடல்படுத்தப்பட்டிருக்கிறது. நமக்கெல்லாம் யார் சொன்னா என்ன, யாராவது ஒரு வியாபாரி தன் லோகோ-வோடு "Save Water, Save Environment, Save Energy" என்று அதை இங்கிலிஷில் சொன்னால் மட்டுமே கேட்போம். அப்போத்தானே நமக்கும் பெருமை. என்னவோ போடா மாதவா.

அதில் ஒரு சில உதாரணங்கள் இங்கே. எப்போதோ இதை படித்து நம் முன்னோர்கள் "ஆமா இதைப் போயி" என்று சிரித்திருக்கலாம். அதன் பலனைத்தான் நாம் இன்று "Save... Save" என்று கூவிக் கொண்டிருக்கிறோம்.
=======================================
ரிக் வேதம் (6:48:17) மரங்களை வெட்டக்கூடாது, அவை காற்றை தூய்மை படுத்துகின்றன
யஜுர் வேதம் (5:43) வானத்தை கிழிக்காதீர்கள், ஆகாசத்தை மாசுபடுத்தாதீர்கள்
சரக சம்ஹிதம் -- ஒரு காடு அழிந்தால் ஒரு நாடு அழிகிறது, மீண்டும் ஒரு காட்டை உருவாக்குவதை விட எளிதாக ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதால், காடுகளை காக்க வேண்டும். காடுகளின் உள்ள மிருகங்கள் காட்டின் வளர்ச்சிக்கு தேவையாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பது நம் சடங்கு எனக் கருத வேண்டும்.
=======================================
"அம்ருதம் பிரம்மா பூர் புவஸுவரோம்"

அம்ருதம்: தண்ணீர்
பிரம்ம: உயிர் (அ) வளர்ச்சி (அ) அசைவு உடைய அனைத்தும்
பூர்: ஐம் பூதங்களைக் கொண்ட உலகம்
ஸுவ: தெய்வீகத்தன்மை கொண்ட (அ) உடையதாகக் கருதப் படும் எதுவும்
ஓம்: Universal Sound

தண்ணீர் உயிர்களின் அமிருதம், அதுவே அசைவுடைய உயிர்களைக் கொண்ட இந்த உலகத்தின் அசைவுக்கும், சுவர்க்கத்தின் இயக்கத்திற்கும், ஓம் என்ற நாதம் தோன்றவும் ஆதாரமாக அமைகிறது.
=======================================
காகூ தீர்; காகூ நீர்; காகூ பேத் பிசார் || நானகா பகத் ப்ரியா ஹோ ||3||2||155||
(சீக்கிய "ஷபத்" -- குரு அர்ஜன் தேவ் ஜி [ராக் கௌரீ-- பன்னா 213]
காகூ -> சிலர்
தீர் ->நதிக்கரை / நீர்நிலைக்கு அருகிருக்கும் மணற்பரப்பு
நீர்-> தண்ணீர்
பேத பிசார் -> வேதங்கள்
நானக் - குறு நானக்ஜி
பகத் - பகவான் / கடவுள்

சிலர் கரைகளில் வாழ்கிறார்கள்; சிலர் தண்ணீரிலேயே வாழ்கிறார்கள்; சிலர் வேதங்கள் படிக்கிறார்கள்; நானக்கிற்கு இறைவன் மீது அன்பும் (பக்தி) என்கிறார்.
=======================================
அப்ஸ்வன்தர்ம்ரித்மப்யு பேஷஜம் || [4/4 அதர்வவேதம்]

அப்ஸ்வன்தம் -->தண்ணீரில்
அம்ருதம் --> அமிருதம் இருக்கிறது
அப்யு --> அதுவே மேன்மையான
பேஷஜம் --> மருந்தாக இருக்கிறது

=======================================
ருக் வேதத்தின் ஜலஸுக்தம் என்ற புத்தகத்தில்:

யா ஆபோ திவ்ய உத(tha) யா சவன்தி, ரவநித்ரிமா உதத் வா யா ஸ்வயஞ்சா:
சமுத்ரார்தா யா: ஷுசைய: பா(p)வகாரத; ஆபோ தேவீரிஹ மாமவன்து||

தண்ணீரானது சுவர்க்கத்திற்கு நிகரான மலைமுகடுகளில் இருந்து பூமிக்கு வருகிறது. நதி ரூபமாகி வேகம் கொண்டு பாய்கிறது. ஓடையாகித் தவழ்கிறது. பூமியைத் தோண்டுவதன் மூலம் ஊற்றாகி குட்டைகள் மற்றும் கிணறுகளில் பெருகுகிறது. இவ்வாறும் பயணித்து சமுத்திரத்தில் சேர்க்கிறது. என்னை புனிதமாக்கி என்னை வாழச்செய்யும் தண்ணீரே! என்னைக் காப்பாய்.

என்று நீர்நிலைகளை வணங்கச் சொல்கிறது.

=======================================
லதுமய ஸ்மிருதியில்
"வித்தோபேக்ஷம் பவேதஷ்டிம் தடாகம் பூர்தமுச்யதே
ஆராமஷ்ச்ச விஷேஷேன தேவத்ரோணச்ததைவ ச||" என்று சொல்லப் பட்டிருக்கிறது.
அதாவது, தடாகம் என்பது விசேஷமாக அமைக்கப் பட்டத் தோட்டமும் நீர்நிலையும் கூடிய இடமாக இருக்கிறது. அழிந்துவிட்ட தடாகங்கள், கிணறுகள், மற்றும் குளங்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய உதவுபவன் உலகில் உள்ள ஜீவராசிகளை காப்பதின் புண்ணியத்தைப் பெறுகிறான்.
=======================================

தண்ணீரை எப்படி பாதுகாக்கலாம் என்று வேதங்கள் கூறுகின்றன? இதையேதான் நாமும் இன்றும் சொல்லி (மட்டும்) கொண்டிருக்கிறோம்.

நீர்நிலைகளில் கிணற்றில் எச்சில் துப்புவதோ, குப்பைகளைப் போடுவதோ கூடாது.
நீர்நிலைகளுக்கு அருகில் மலஜலம் கழிப்பது பாவச் செயல். (சென்னையின் முகமாக கூவம் இருக்கும் கதியை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்)

வீடுகளுக்கான உபயோகத்திற்கு என்று இந்த நீர் நிலைகளில் இருந்து தினமும் தேவையான அளவுக்கு நீர் சேகரிக்க வேண்டும். அன்றைய தேவைக்கு போக மிகுந்ததை மறுநாள் காலை மீண்டும் நீர் நிலையிலேயே விட வேண்டும். (கொசு உற்பத்தி தவிர்க்கப்படுகிறது)

ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒருமுறை மக நட்சத்திரம் கூடிய நாளில் நீர்நிலைகளை தூர் வார வேண்டும் (மகாமகம் உற்சவமாகிப் போனது)

நீரில் மண் / சகதி முதலியவற்றை வீசக் கூடாது.

நலமறிய ஆவல் - அகநாழிகைக்கு நன்றி

காலம்னிஸ்ட் வி.கங்காதர்


ஒரு சமயத்தில் வி.கங்காதர்-ரின் பத்திகள் (column) படிக்கவே ஹிந்து படிக்க ஆரம்பித்தேன். நாளடைவில், ஹிந்துவில் உள்ள ரசனையான ஆங்கில எழுத்து நடை என்னை ஹிந்து பத்திரிகை அடிக்ட் ஆக்கி விட்டது.

அப்படி என்னையும் தினசரி பத்திரிகை வாசிப்பவளாக ஆக்கிய வி. கங்காதர் அவர்களுக்கு இந்த போஸ்ட் சமர்ப்பணம்.

அவருடைய பத்திகளில் சில இங்கே படிக்கக் கிடைக்கும்.
rediff.com: V Gangadhar's home page

V. Gangadhar – Slice of Life Archive : Hindu Sutra

A question of age:The best way to delay ageing is to accept it, says V Gangadhar
திரு.வி.கங்காதர் ஹிந்துவில் slice of life என்ற தலைப்பில், இயல்பான பேச்சு நடையிலேயே வரும்.

ஒவ்வொன்றும் நமக்கு மென்மையான கிண்டல் உணர்வும், அப்படியே இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து பின்னால் சாய்ந்து கொண்டு விட்டத்தை பார்த்து ஒரு மெல்லிய புன்னகை வரவழைக்கும் nostalgic அனுபவங்களையும் பற்றி எழுதி இருப்பதில், எனக்கு மிகவும் பிடித்த சில பத்திகள், தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, முறுக்கு, மாங்காய் சாப்பிடுதல் போன்றவை பற்றி எழுதி இருப்பன.

இவரைப் பற்றி இன்னும் எழுத வேண்டும் என்றுதான் ஆசை. கைகடிக்கும் கடிகார முட்கள். என் சேகரிப்பில் இருக்கட்டும் இப்போதைக்கு என்று சிலவரிகளைக் குறித்துள்ளேன். இன்னும் விரிவாக இவரது பத்திகளை, தகுந்த அனுமதி பெற்று, மொழிபெயர்த்து பகிர்கிறேன்.

களைத்த நாயின் குரல்

மதோசா மாவு

இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்

"A free race cannot be born of slave mothers."

by MARGARET SANGER

ஏய் நீ கேளேன்...

முந்தாநேத்து பிரேமானந்தா, நேத்து கல்கியானந்தா, இன்று நித்தியானந்தா, நாளை ஒரு சதியனந்தாவோ... சத்தியானந்தாவோ

வெயில் நாலு டிகிரி உயர்ந்து விட்டதையும், இனிமேல் வெயில்தான்- இனி எந்த சாக்கு போக்கும் இல்லாமல் சாலை இல்லாத கிராமங்களுக்கு, சாலைப் பணிகள் ஆரம்பிக்கலாம் என்பதையும் மறந்து, தீடீரென்று முளைத்து விட்ட "குடிசை இல்லா தமிழ்நாடு" பற்றிய கேள்விகள் எதுவும் கேட்கத் தோன்றாமல்,  தமிழ்நாட்டில் ஆளும்கட்சியின் குளறுபடிகளையும், பட்ஜெட்டில் பொருளாதாரம் சறுக்கி அதல பாதாளத்தில் விழுந்ததையும், பெட்ரோல் விலை உயர்வையும், எக்சைஸ் டூட்டியையும்,  தங்கத்தில் கொசுறை குரைத்து வெள்ளியில் மலைபோல வரியை ஏற்றியதையும், coal போன்ற மூலப் பொருட்களின் மீதான செஸ் உயர்வு வரும் நாட்களில் தொடர் சங்கிலியாக விலையேற்றத்திற்கு வழி வகுத்திருப்பதையும் யோசித்துக் கூட பார்க்க முடியாத படி, உணவு பற்றாக்குறையையும், உணவுப் பொருட்களின் மீதான பாதுகாப்பு, விவசாயிகள் வாழ்க்கைத் தர உயர்வோ, வேலையின்மை மீதான எந்தவொரு குறிப்போ, பொறுப்போ இல்லாத பட்ஜெட் பற்றிய விவாதங்கள் ஏதும் நிகழாமல், "யார் அவ" என்றறிவதிலேயே நம் வேலைகளை விட்டு கவனிக்க ஆரம்பிக்கிறோம்.  குறைந்த பட்சம் தமிழ் பதிவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த "விண்ணைத்தாண்டிவருவாயா" படத்துக்கு இப்படி ஒரு நீலப் படம் போட்டியாக வரும் என்று கனவிலும் கூட நினைத்திருப்பாரா கௌதம்மேனன்.

அடுத்தவன் படுக்கையறையை எட்டிப் பார்ப்பதில் அவ்ளோ ஆர்வம். குழந்தைகளும் மருமகள்களும் வீட்டில் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து நாம் நடுக்கூடத்து எல்சீடீயில் லீலைகளை பார்த்து "அடப்பாவி" என்று சொல்லிக் கொண்டே சன் டிவியை மாற்றாமல் முக்கியமான காட்சிகளை மனப்பாடம் ஆகும் வரை ஒளிபரப்பாகும் போதெல்லாம் பார்த்துக் கொள்கிறோம். "மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு" என்று சின்னதாய் ஒரு ரன்னர் ஓடாத குறையைத் தவிர வேறேதும் இல்லை...

 கடந்த எட்டு வருடத்தில் இந்தியப் பொருளாதாரம் கன்னாபின்னாவென்று முன்னேறிவிட்டதாம்.... புள்ளைக்கு படிப்பு சொல்லித்தந்து, இதோ சாதமும் ஊட்டி, தூங்க வைத்து  விட்டு தான் நான் இந்தப் பதிவு எழுதுகிறேன் என்பதையும் சொல்லிக்கிறேன். : ) )

என்னவோ போடா மாதவா...

விட்டாச்சு லீவு

எல்லோருக்கும் ஹோலி நல்வாழ்த்துக்கள்

விக்னேஸ்வரி ரொம்ப அருமையான நாளை கொண்டாடப் போறாங்க. குலாலில் கொஞ்சம் என்னையும் நினைத்துக்கோங்க :)

வரைமுறை இல்லாம வாரக் கணக்கில் லீவு விட்டுருக்கேன். விரைவில் திரும்புவேன். அது வரை எல்லோரும் நிம்மதியா இருங்க. முடிந்த போதெல்லாம் வந்து உங்கள் எல்லாருடைய எல்லாப் பதிவுகளையும் கண்டிப்பாப் படிப்பேன்..:)

நம்மையேனேவுகிரீரென்று இந்திரன் யமனிடம் கேட்டார்


ஊஞ்சல் - 23.2.2010

ஊஞ்சல்:
கேரளாவின் கோவில் யானைகளுக்குச் சொக்கத் தங்கத்தால் பட்டை அணிவித்து கொண்டாடினாலும், சுதந்திரமாக இருக்க வேண்டிய மிருகத்தை இப்படி அங்குசத்தால் குத்தி குத்தி, இரும்புத்தடியால் அடியில் தட்டி, துன்புறுத்தி தெய்வத்தைச் சுமக்க வைக்க வேண்டியதன் அவசியம் என்ன? ரொம்பவே அருகில் சென்று தெய்வ தரிசனம் செய்யும் வாய்ப்பில், யானைக்கான வன்முறைகளையும் கண்டு நெஞ்சு பதைத்தது. இதில் அந்த யானை மூன்று வலம் வந்து முடித்தது இயற்கை உபாதையால் மலஜலம் கழித்து விட்டது. கூட்டத்தில் யாரோ, "கேசவன் இப்படியெல்லாம் பண்ணாது தெரியுமா" என்று கூறிக் கொண்டிருந்தார். யானைக்கு toilet training சரியாக் கொடுக்காத பாகனை என்ன செய்யலாம்?


ஏம்பா இப்படி?


அப்புறம் பின்னாடி ஒருநாள் இன்னும் நூறுதான் மிஞ்சியிருக்குன்னு மட்டும் சொல்லி, எப்படிக் காப்பது என்பதையோ, அதற்கான தீர்வையோச் சொல்லாமலேயே, ஒரு நிறுவனம் தன் Logo-வுடன் "அக்கறை" காட்டும். நம்ம பதிவர்/நண்பர் வால்பையன் போன்ற சமூக நல சிந்தனைவாதிகளும், இவரும் அதற்கான தீர்வைச் சொல்லாமலேயே,   "இவன் ஏன் இதுக்கு மேலே உக்காந்திருக்கான்" அப்டீன்னு பதிவு போட்டு, இந்திரனை கிழி கிழி எனக் கிழித்துக் கும்மிகளை கிளப்பச் சௌகரியமாக இருக்கலாம். விளம்பரம் ஒன்றுதானே நோக்கம் வியாபாரத்தில். நடக்கட்டும் கச்சேரிகள். ஆனால் தில்லானாவில், எப்படி புலிகளைக் காப்பது என்ற குறிப்பும், தாள லயத்தோடு, ரசிக்கும் படியாக இருந்தால் எங்களைப் போன்ற பொதுபுத்தி உடையவர்களுக்கும் உதவியாக இருக்கும். வீட்டுக்கு ஒரு புலி வளர்க்கலாம் என்றாலும் இடம் பத்தாதே..


தேநீர்:


அப்படியே அருணா சாயிராமின் "காளிங்க நர்த்தன தில்லானாவில்" ஐந்து தலை நாகம் ஆன காளிங்கன் "கர மந்தஸ்ஸ்ஸ்ஸ்" என்று பெருமூச்சோடு சரிவதையும் கேட்டு, இந்தப் பாட்டுக்கு மொத்த பார்வையாளர்களும் நர்த்தனமாடும் அழகையும், கைகட்டி வாயடைத்து, சிலையாகி இசையில் மூழ்கி விட்ட ஒரு ரசிகரையும் கண்டு ரசியுங்கள். காளிங்கன் போன்ற ஐந்து தலை நாகங்கள் இப்போது இல்லாமல் போனதற்கு கிருஷ்ணன் காரணமில்லை என்பதை மட்டும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.




பக்கோடா:
துளசி அம்மா மாதிரி பயணக் கட்டுரையெல்லாம் எழுத முடியுமான்னு தெரியலை. செண்ட கொட்டு என்றழக்கப்படும் இசை சேவை காலையில் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் ஏறத்தாழ மூன்று மணிநேரம் பறையடித்தல் நிகழ்ந்தது. ரொம்பவே சிலிர்ப்பான அனுபவம். எத்தனையோ முறை சென்னையில் ஐயப்பன் பூஜையில் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும், இந்த முறை ரொம்பவே வித்யாசமாக இருந்தது. சுவாமி பக்தி-ஸ்ரத்தைக்கு கேரளா தாங்க.


இந்த வீடியோ you tube-பில் இருந்து எடுத்தேன். என்னால் ஒரு பத்து நிமிஷம் தான் வீடியோ எடுக்க முடிந்தது. அதற்குள் தர்ஷிணி பொறுமை இழந்து விட்டாள். விரைவில் upload செய்து பகிர்கிறேன். life time அனுபவம்.


மழை:
தமிழ்நாடு ஸ்டேட் போர்ட் பாடப்புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே பாருங்கள்.  
NCERT - Online Textbooks for Classes I to XII





ஒரு வாளி நிறையா வாழ்க்கை - பதின்மம் - தொடர் பதிவு

நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்

 

குட் பிளாக்ஸ்



நன்றி விகடன்


யமா..இஃதோ வுந் தருமம்

Buzz's So Noisy, isn't it

social networking - buzz தானாவே என் மெயில் பாக்ஸ்சில் இருந்ததை பார்த்து இது என்ன புதுசா என்று யோசிக்கும் முன்னேயே, என்னோட பதிவுகள், google reader-ரில் நான் ஷேர் செய்பவை, picasa photos, என்று வரிசையாய் சகலமும் சில்லறை சிதறினது போல ஆயிற்று. இது என்னடா கூத்து என்று யோசித்து கொண்டே, கொஞ்சம் buzz செய்தும் பார்த்தேன்.

மிக முக்கியமாக, உங்கள் அனுமதியோ இஷ்டமோ இல்லாமல் உங்கள் contact list-டில் உள்ளவர்கள் எல்லோரும் visible ஆவார்கள். இதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை. இதனால் hackers மற்றும் spam mailersகளுக்கு நிச்சயம் கொண்டாட்டமாகவே இருக்கும்.  ஒரு etiquette நிமித்தத்தில் எல்லோரையும் follow செய்து, மதியம் லஞ்ச் போது பாத்தால் mail box-சில் ஏகப்பட்ட மெசேஜுகள். : ( 

ஏகப்பட்ட மெயில் ஐடிகள் வைத்திருக்கும் பழக்கம் இல்லாததால்,  டமால் டமால் என்று வரிசையாய் மெயில் வந்து குமிஞ்சிருந்த மெயில்களையும் buzz-சையும் தனியாகப் பிரிக்கத் தெரியாமல் சுர்ர்-னு BP ஏறியது.

நேத்தே பட்டர்பிளை சூர்யா இதை பண்ணிட்டார், எனக்குத்தான் எப்படி வெளியேறுவது என்ற வழி தெரியாமல் இருந்தேன்.  இன்று காலை நான் செய்த முதல் காரியம், (என் நண்பர் "Techi" Nag-குக்கு நன்றிகள் பல) unfollow செய்ததும், buzz-சை turn off செய்ததும்தான்.
இங்க போயி ஒருத்தரோட அனுபவத்தை படிச்சுப் பாருங்க.

பஸ்ஸு ரொம்ப கூட்டமாவும் இரைச்சல் ஜாஸ்தியாவும் இருக்குங்க... மிக முக்கியமாக நிமிஷம் நிமிஷமாக ஆகும் நம்ம நேர விரயம் ... ஈடு செய்ய முடியுமா???? :(


என் நண்பர் எனக்கு சொன்னதை அப்படியே பகிர்கிறேன். How to stop buzz-ing?
////click on your followers and block those you dont want in your group.
click on the list you follow and 'unfollow' those whose messages you dont want to see.

Just be aware that anything you do linked to this id could potentially be visible to all that are connected to the id or even to hackers.

guess google will improve this to provide more options to filter out the noise v receive in future. you may want to block all and ignore Buzz until it gets better to the level u are comfortable with.
  /////

எறும்பு ராஜகோபால் அப்பாவாயிட்டார்



பதிவர் நண்பர் எறும்பு ராஜகோபால் ஒரு அழகான பெண் குழந்தைக்கு அப்பாவாயிட்டார். அப்பா அம்மாவுக்கு அன்பான வாழ்த்துக்கள். குழந்தை பேரு "ஷிவாஞ்சலி". எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம்.

"திண்ணவேலி" போனா இருட்டுக் கடை அல்வா தருவாதாகவும் செய்தி அனுப்பியுள்ளார். வண்டியக் கட்டுகங்கப்பா....

எல்லா தமிழ் பதிவர்கள் சார்பாகவும் -- பாஸ்கர், தர்ஷிணி மற்றும் நான்.

கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்

"ஹேய்.. இந்த வாலேண்டைனுக்கு என்ன பண்ணலாம்?" அப்டீன்னு கேட்டேன்.

அதல்லாம் காதலன் காதலி கொண்டாடரதுன்னா... என்று இழுத்தார்

"நீங்க இன்றும் என் காதலன்தான்"

"ஆனா... நீ... என் காதுல எலி"


"கிர்ர்ர்"


(bulb fiction-னில் சண்டைக் காட்சிகள் வெளியிடப் படமாட்டாது.)

புலப்படாத நூலிழைகளால் பின்னிய அடிவானம்

மகா ராஜ ஸ்ரீ யமராஜன் ரிடர்ன்ஸ்

கத்தரிக்காயும் கலியுக முடிவும்

எல் மகினோட்ரோமோ

இந்த வீடியோவை நான் சென்றவருடம்தான் பார்த்தேன். இப்போது திடீரென்று நினைவுக்கு வந்து தேடி எடுத்தேன். எனக்கு என்னதான் acrophobia இருந்தாலும், இந்த இடத்துக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். :) 

Caminito del Rey (Wiki)

 





இதையும் பாருங்களேன்.

கத்தரிக்கா யாபாரமா


எங்கே செல்லும் - தொடர்கதை - கடைசி பாகம்

டிஸ்னியின் பௌகுகொண்டாஸ்-ஸும் ஜேம்ஸ் காமேரூனின் அவதாரும்

என்னவோ போடா மாதவா..
Pocahontas = Avatar
original post




..

குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்

குழந்தைகளுக்கான (0 முதல் ஏழு வயது வரை மட்டும்) தமிழ் easy reading வகை புத்தகங்கள் அதிகம் வருவதில்லையே என்று ரொம்ப நாளாகவே யோசித்தது உண்டு.  என் அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளுக்கான வலைப்பூ நாற்றங்கால் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அவரின் அறிவுரைப்படி ஏழு பக்கங்கள் கொண்ட மின்னூலாக, வரும் மார்ச்-2010 முதல், நாற்றங்கால்-லில் வாயிலாகவே வாராவாரம், இலவசமாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

இதில்: 
1. படமும் பாடலும் - Tamil Nursery Rhyme
2. எளிமையான நன்னெறிக் கதைகள் - Moral Stories based on various folk stories (இதைக்  குழந்தைகளுக்குச் சொல்லும் மொழி நடையிலேயே எழுத வேண்டும் என்று ஆசை)
3. எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)
4. குழந்தைகளுக்கான புதிர்கள்
5. பட்டாம்பூச்சி பக்கம் (coloring page)
6. குழந்தைகளுக்கான தொன்மையான விளையாட்டுக்கள் பற்றிய அறிமுகங்கள்
7. சின்னச் சின்ன அறிவியல் செயல் முறைகள்

உங்கள் மேலான ஆலோசனைகளும் வேண்டுகிறேன். இந்த முயற்சியில் இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

நன்றி.

= =வித்யா

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் - ஆதி சங்கராச்சாரியார் அருளியது

॥ शारदाभुजङ्गप्रयाताष्टकम् ॥
|| śāradābhujaṅgaprayātāṣṭakam ||
written by śrī ādi śaṅkarācārya
சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம்
Eulogy on Sarasvati
Saradha Bhujangam
============================================================================
सुवक्षोजकुम्भां सुधापूर्णकुंभां
प्रसादावलम्बां प्रपुण्यावलम्बाम् ।
सदास्येन्दुबिम्बां सदानोष्ठबिम्बां
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ १ ॥
suvakṣojakumbhāṁ sudhāpūrṇakuṁbhāṁ
prasādāvalambāṁ prapuṇyāvalambām |
sadāsyendubimbāṁ sadānoṣṭhabimbāṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 1 ||
ஸுவக்ஷோஜகும்பாம் ஸுதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதா வலம்பாம் ப்ரபுண்யா வலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதாநோஷ்ட பிம்பாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who holds two beautiful pots which are filled with ambrosia-like nectar, Who is the support of benevolence, Who is the support of blissful deeds, Whose face is adorned by a servant-like moon, Who has red lips which are full of giving-quality, Who is perpetual, and is my Mother.||1||
கும்பமுடையவளும், அம்ருதம் நிரம்பிய கும்பத்தை கையில் உடையவளும், அருளாகிய பிடிப்பு உடையவளும், புண்யம் வாய்த்தவராலே மட்டுமே அறிய முடிந்தவளும், கொடுக்கிறேனே என்ற சொல்லுடன் கூடிய கோவைப்பழமொத்த உதடு உடையவளுமான எனதன்னை ஸ்ரீசாரதாம்பாளை சேவிக்கிறேன்.
============================================================================
कटाक्षे दयार्द्रो करे ज्ञानमुद्रां
कलाभिर्विनिद्रां कलापैः सुभद्राम् ।
पुरस्त्रीं विनिद्रां पुरस्तुङ्गभद्रां
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ २ ॥
kaṭākṣe dayārdro kare jñānamudrāṁ
kalābhirvinidrāṁ kalāpaiḥ subhadrām |
purastrīṁ vinidrāṁ purastuṅgabhadrāṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 2 ||
கடாக்ஷே தயார்த்ராம் கரே ஜ்யானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபை:ஸுபத்ராம்
புரஸ்த்ரீம் விநித்ராம் புரஸ்துங்கபத்ராம்
பஜேசாரதாம்பாமஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who has merciful sympathy in Her glance, Who possesses knowledge in Her hands, Who is awakened with respect to art-forms, Who is adorned by a beautiful bell-garland at the waist, Who is the first (woman), Who is sleepless, Who is the leading beautiful, Who is perpetual, and is my Mother.||2||
கடைக்கண்ணில் கனிவுகொண்டவள், கையில் ஞான முத்திரையும், கலைகளின் ஞானம் அருள்பவளும், செயல்பாடுகளில் நல்லவற்றையும் கொண்ட கண்காணிப்புள்ள பதிவ்ரதையாயும், உயரிய நல்லவற்றையே தன் முன்னே காண்பவளாயும் இருக்கிற என தன்னை ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.
============================================================================
ललामाङ्कफालां लसद्गानलोलां
स्वभक्तैकपालां यशःश्रीकपोलाम् ।
करे त्वक्षमालां कनत्प्रत्नलोलां
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ३ ॥
lalāmāṅkaphālāṁ lasadgānalolāṁ
svabhaktaikapālāṁ yaśaḥśrīkapolām |
kare tvakṣamālāṁ kanatpratnalolāṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 3 ||
லலாமாங்கபாலாம் லஸத்கானலோலாம்
ஸ்வபக்தைகபாலாம் யச:ஸ்ரீகபோலாம்
கரேத்வக்ஷமாலாம் தநத்ப்ரத்னலோலாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who has beautiful curved sides (from hips to breasts) like a plough-head, Who has a tongue resounding with songs, Who is the unique (polymorphic supreme deity) nourisher of Her devotee, Who has cheeks resplendent with glory and surreal wealth, Who possesses energy-garlands in Her hands, Who has tongue resounding with traditional verses, Who is perpetual, and is my Mother.||3||
நெற்றியில் சிறந்த திலகம் கொண்டவள், நல்ல கீதத்தில் ஈடுபாடுள்ளவள், தனது அடியார்களைப் காப்பவள், புகழ் அழகுடன் ளிரும் கன்னங்கள் உள்ளவள். கையில் ஜபமாலை, தெளிவான பழமையில் நேசமும் கொண்டவள், அத்தகைய எனதன்னை ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.
============================================================================
सुसीमन्तवेणीं दृशा निर्जितैणीं
रमत्कीरवाणीं नमद्वज्रपाणीम् ।
सुधामन्थरास्यां मुदा चिन्त्यवेणीं
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ४ ॥
susīmantaveṇīṁ dṛśā nirjitaiṇīṁ
ramatkīravāṇīṁ namadvajrapāṇīm |
sudhāmantharāsyāṁ mudā cintyaveṇīṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 4 ||
ஸுஸீமந்த வேணீம் த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத்வஜ்ரபாணீம்
ஸுதாமந்தராஸ்யாம் முதா சிந்த்ய வேணீம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who is adorned by a beautiful parting of the hair-braid, Who has an eyes which lure an antelope (deer-like-eyes), Who has an enticing voice like a parrot, Who is reverred by Indra (holder of Vajra (thunderbolt) in hand)¹, Who has a hair-braid which can be meditated upon with happiness, Who is perpetual, and is my Mother.||4||
நல்ல வகிடும், பின்னலும் கொண்டவள், கண்பார்வை காரணமாக மான்களை விஞ்சியவள், அழகிய கிளிப்பேச்சுள்ளவள். இந்திரன் வணங்க, அம்ருத பாணத்தால் தெளிவு கொள்ளாத முகபாவமுடையவள், கரைபுரண்டோடும் மகிழ்ச்சி கொண்டவள். அத்தகைய ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.
============================================================================
सुशान्तां सुदेहां दृगन्ते कचान्तां
लसत्सल्लताङ्गीमनन्तामचिन्त्याम् ।
स्मरेत्तापसैः सङ्गपूर्वस्थितां तां
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ५ ॥
suśāntāṁ sudehāṁ dṛgante kacāntāṁ
lasatsallatāṅgīmanantāmacintyām |
smarettāpasaiḥ saṅgapūrvasthitāṁ tāṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 5 ||
ஸுசாந்தாம் ஸுதேஹாம் த்ருகந்தே கசாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனந்தா மசிந்த்யாம்
ஸ்ம்ருதாம் தயஸை:ஸர்க பூர்வதிதாம் தாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who is serene, Who is with a beautiful body, Whose tress-locks fall at the end of the eyes, Who has flashing creepers like organs (curvy), Who is immeasurable and unthinkable, Who is remembered by sages with devotion according to traditions, Who is perpetual, and is my Mother.||5||
நல்ல அமைதியும், உடல்வாகும் கொண்டவள், கண் முடிகின்ற இடத்தில் கேசம் முடிவதும், கொடி போன்ற அங்கம் அமைந்தும் இருப்பவள். இவ்வளவு என்றோ, இப்படி என்றோ சொல்ல முடியாதவள். முனிவர்கள் தியானம் செய்யப்படுபவள், பிரம்மன் படைப்புக்கு முன்னமே இருப்பவள். அத்தகைய அன்னை சாரதாம்பாளை சேவிக்கிறேன்.
============================================================================
कुरङ्गे तुरंगे मृगेन्द्रे खगेन्द्रे
मराले मदेभे महोक्षेऽधिरूढाम् ।
महत्यां नवम्यां सदा सामरूपां
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ६ ॥
kuraṅge turaṁge mṛgendre khagendre
marāle madebhe mahokṣe'dhirūḍhām |
mahatyāṁ navamyāṁ sadā sāmarūpāṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 6 ||
குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே மஹோக்ஷேsதிரூடாம்
மஹத்யாம் நவம்யாம் ஸதாஸாமரூபாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who sits on a deer, a horse, a lion, a Garuda, a swan, an elephant and a bull (in various forms), Who is great, Who is in nine-forms², Who is always dispassionate (or views everyone equally), Who is perpetual, and is my Mother.||6||
மான் மீதும், குதிரை மீதும், சிங்கத்தின் மீதும், கருடன் மீதும், அன்னத்தின் மீதும், யானை மீதும், விருஷபத்தின் மீதும் ஏறப் பயணிப்பவளும் மஹாநவயன்றும் எப்பொழுதும் ஸாம் வேத ஸ்வரூபிணியாக இருப்பவளுமான அன்னை சாரதாம்பாளை சேவிக்கிறேன்.
============================================================================
ज्वलत्कान्तिवह्निं जगन्मोहनाङ्गीं
भजे मानसाम्भोजसुभ्रान्तभृङ्गीम् ।
निजस्तोत्रसंगीतनृत्यप्रभाङ्गीं
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ७ ॥
jvalatkāntivahniṁ jaganmohanāṅgīṁ
bhaje mānasāmbhojasubhrāntabhṛṅgīm |
nijastotrasaṁgītanṛtyaprabhāṅgīṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 7 ||
ஜ்வலத்காந்திவஹ்னீம் ஜகன்மோஹனாங்கீம்
பஜே மானசாம்போஜாசுப்ராந்தப்ருங்கீம்
நிஜஸ்தோத்ரசங்கீதந்ருத்யப்ரபாங்கீம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்
I sing praise of Mother Sharada, Who is resplendent like a burning fire, Who is adorned by the universe, Who is like a beautiful wandering bumble-bee for the lotus like heart of ours, Who is resplendent with the dance and the music of Her own eulogies, Who is perpetual, and is my Mother.||7||
ஒளிரும் ஜ்வாலைக்கு ஒப்பான ஜோதியுடையவளும்,
============================================================================
भवान्म्भोजनेत्राजसंपूज्यमानां
लसन्मन्दहासप्रभावक्त्रचिह्नाम् ।
चलच्चञ्चलाचारूताटङ्ककर्णो
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ८ ॥
bhavānmbhojanetrājasaṁpūjyamānāṁ
lasanmandahāsaprabhāvaktracihnām |
calaccañcalācārūtāṭaṅkakarṇo
bhaje śāradāmbāmajasraṁ madambām || 8 ||
பவாம்போஜநேத்ராஜ ஸம்பூஜ்ய மாநாம்
லஸன்மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சின்ஹாம்
சலச்சஞ்சலா சாருதாட ங்ககர்ணாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

பிரஹ்ம விஷ்ணு மகேச்வரர்களால் பூஜிக்கப்பட்டவள், அழகிய புன்முறுவலையே முகத்தின் அடையாளமாக உடையவள். அசையும் மின்னலெனத் தோன்றும் காதணி கொண்டவள். அத்தகைய சாரதாம்பாளை எனதன்னையை சேவிக்கிறேன்.
============================================================================
॥ इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य
श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य
श्रीमच्छङ्करभगवतः कृतौ
शारदाभुजङ्गप्रयाताष्टकं संपूर्णम् ॥
|| iti śrīmatparamahaṁsaparivrājakācāryasya
śrīgovindabhagavatpūjyapādaśiṣyasya
śrīmacchaṅkarabhagavataḥ kṛtau
śāradābhujaṅgaprayātāṣṭakaṁ saṁpūrṇam ||
இதி ஸ்ரீமத்பரமஹம்சபரிவ்ராஜாகாசார்யாஸ்ய
ஸ்ரீகோவிந்தபகவத்பூஜ்யபாதசிஷ்யஸ்ய
ஸ்ரீமச்சங்கரபகவத: க்ருதௌ
ஸாரதாபுஜங்கப்ரயாதாஷ்டகம் சம்பூர்ணம்
சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் முற்றிற்று.
============================================================================

கூத்தாய் போன கூத்து

சொந்த அனுபவம்தான், வேறென்ன. சும்மா சிரிக்கத்தான்.


நம்ம துளசி (கோபால்) மேடம் போடும் படமெல்லாம் பாத்துப் பாத்து எனக்கும் கொசுவத்தி புகை மூட்டமாகி, கண்ணெல்லாம் இருட்டி, தொண்டை எரிந்து, இருமி, தும்மி, கண்ணீர் வழிந்து ......... நாங்கல்லாம் "சின்னப்ள---யா"  "கூத்து கட்டிய" காலங்கள் நினைவுக்கு வந்தது(நானும் ரவ்டீதான்).


துளசி மேடம்! நீங்க கோபால் சாரை கன்னடத்து பைங்கிளி மாதிரித்தானே கூப்பிடுவீங்க!! எங்க! நானும் கேட்கட்டும்..
=========================================
எங்க நண்பர்கள் குழுவில் மொத்தம் பிரபா(கர்), (பால)மணி(கண்டன்), கன்னி(கா-பரமேஸ்வரி), கவி(தா), சம்ஸு(தீன்), (இவர்கள் எல்லாம் பாடகர்கள்) அலோ(சியஸ்) - கிடார் வாசிப்பான், பரத்(தன்) - ட்ரம்மர், மற்றும் நான் (வயலின்) என்று மொத்தம் எட்டு பேர்.


வழக்கமா ஸ்கூல் பங்க்ஷன்ல மட்டும் "வோகல் குரூப் - "பறவைகள்" ஆக பாடிட்டு 'சிவனே'ன்னு இருந்துவிட்டு போன எங்களுக்கு திடீர்னு நாடகம் போடணும்னு ஆசை வந்தது. நாடகம்னா மேடை வேணும், அலங்காரம் பண்ணத் தேவையான பூஷண ஆபரண ஆடை இத்யாதிகள் எல்லாம் வேணுமேன்னு யோசித்து கொண்டே இருக்கும் போது, எங்கள் நண்பர்கள் குழுவிலேயே "சிகப்பழகன்" ஹீரோ சம்சுதீன் "முதல்ல நாடகம் எழுத வேண்டாமா??? எதுக்கு இந்த வெட்டி வேலை. பரீட்சைக்கு படிக்கலாம் வாங்க"ன்னு குண்டை தூக்கிப் போட்டான்.


அப்புறம் யாருக்கும் என் பேச்சு எடுபடலை. கால்பரீட்சைக்கு ரொம்ப நாள் கழித்து, டிசம்பர் கடைசியில் நடக்கும் கல்சுரல் விழா மற்றும் "கலை" போட்டி அறிவிப்பு வந்தது.

திடீர்னு சம்சுவே 'ஹே.. விதூ நல்ல ஐடியா கொடுத்தாடா. நாமெல்லாம் ராமாயணம் ட்ராமா போடலாம்" அப்டீனான்.


"நான்தான் தசரதன்" என்றான் அலோ..

"ஐ ஆசையைப் பாரு.. அது நான்தான்" என்றான் பரத்.

"சிம்மாசனம்லாம் வேண்டாமா.. ரொம்ப செலவாகுமே" இது கன்னி.

எருமைமாடு(கள்) மேல மழை பெஞ்சா மாதிரியே உட்காந்திருந்தோம் நானும் கவியும்.

"விச்வாமித்திரரோட கமண்டலம், மகுடம், ஜடை முடி எல்லாம்... கன்னி இன்னும் அடுக்கிக் கொண்டே இருந்தாள்.

"வழக்கம் போல மைக் மோகன் பாட்டு எதாச்சும் பாடிட்டு போயிர்லாம்டா." என்றான் பிரபாவும் மணியும்.

ராமாயணத்துக்கு ரொம்ப செலவாகும் போல இருந்ததால் கைவிடப்பட்டது. ஆனாலும் கூத்துகட்டும் ஆசை மட்டும் விடவே இல்லை. தினமும் லைப்ரரியிலேயே "பட்ஜெட் நாடகம்" எதுவென்று தேடுதல் வேட்டை நடந்து கொண்டே இருந்தது. எங்க பட்ஜெட்டுக்கு  தகுந்த மாதிரி ஒத்த பைசா செலவே இல்லாம நடத்தும்படியான நாடகம் மட்டும் கிடைக்கவே இல்லை. பாரதிதாசன் யுனிவெர்சிட்டி நூலகத்தில் தேடச் சொன்னார் தமிழாசிரியை "பன்னீர்" செல்வி (பெயர் காரணம் அறிய இங்கே பார்க்கவும்) தன்னுடைய அடையாள அட்டையையும் கொடுத்து உதவினார்.



நூலகரிடம் "சார்.. கொஞ்சம் புஸ்தகம் வேணும். ஹெல்ப் பண்றீங்களா" என்று கேட்டேன் நான்.

அவர் பார்த்த பார்வையில் எள்ளல் தெரித்தது. "புக் பேரு தெரியுமா... இனிமேதான் வைக்கப் போறீங்களா" என்றார்.

"ஷேக்ஸ்பியர்" என்றேன்...

"அவர் புத்தகம் எழுதறவருமா.. ஷேக்ஸ்பியர் ஆட்டோபயகிராபி ஏதும் இல்லையே" என்றார் சிரித்தபடி...

அவமானம் தாங்காமல் என் கருப்பான முகம் சற்றே சிவந்தது (இதைத்தான் ஆங்கிலத்தில் ப்லஷிங் என்பார்களோ!) "சார். நாங்க "ச்சூள்ள" ஒரு டிராமா போடலாம்னு இருக்கோம். கம்மி பட்ஜெட்ல, அதாவது பட்ஜெட்டே இல்லாம ஒரு ட்ராமா ஐடியா கொடுங்க சார் ப்ளீஸ்" என்றேன்.


அவரும் இன்று போய் நாளை வான்னு அனுப்பிட்டார். வேலை முடிந்தது என்பது போன்றான நம்பிக்கை எங்களுக்குள் வந்தது.
இரண்டு வாரம் ஓடிப்போச்சு. அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் நாங்களே படையெடுத்தோம். லீவில் அவர் புறமுதுகிட்டு ஊரை விட்டே ஓடிப் போனாதாக சொல்லப் பட்டது. வீராவேசமாக பேரு வேற கொடுத்தாச்சேன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலை.

கடைசியில் உலகமே கைவிட்டுவிட, 'சுப்பாண்டியின் சாகசங்கள்' வருமே, அதையே தொகுத்து ஒரு பத்து நிமிஷ டிராமாவா மாத்தினோம். மொத்தம் மூன்று பேர்தான் நடிக்க. 

மணி சுப்பாண்டியாகவும், கன்னி வீட்டுத் தலைவியாகவும், நம்ம ஹீரோ சம்சு தாத்தாவாகவும் நடிப்பதென முடிவானது. பின்னணி இசை நானும் (வயலின்) ட்ரம்மர் பரத்து கிட்டாரிஸ்ட் அலோ....  எல்லோரும் அவங்கவங்க வேலையை மனப்பாடம் செய்து கொண்டு தயாரானோம். 


அந்த நாளும் வந்தது. சுப்பாண்டி பப்ளிக் பார்க்கில் செய்யும் அட்டகாசங்கள் பற்றிய டிராமா.. திரை விலக, புடவையில் கன்னிகா செட்டில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து இருப்பது போல முதல் சீன். 

மைக்கில் டீச்சர் அறிவிச்சாங்க... வழக்கமா பாட்டு பாடி கலக்கும் "பறவைகள்" டீம் இன்று ட்ராமா ஒன்றை தானே எழுதி அரங்கேற்றப் போறாங்க. என்றதும், பயங்கர கைத்தட்டல். "இப்போது "அசோகவனத்தில் சீதை" என்ற நாடகத்தை பார்க்கப் போறீங்க என்றார் பாருங்கள்....


வேற வழி பத்து நிமிஷ டிராமா முழுதும் கன்னி மட்டும் உட்கார்ந்து தனியாவே சீதை வசனமெல்லாம் எதுவும் நினைவுக்கு வராமல் அழுது கொண்டே "ஜானகி தேவி ராமனைத் தேடி ... " என்று விசு படத்தில் வரும் பாட்டை "கமலா காமேஷ்" குரலிலேயே பாட, அது கூட "ராமன் வந்தான் மயங்கி விட்டாள்" என்ற வரிக்கு பிறகு மறந்து போய் திரும்பத் திரும்ப அதே வரியையே பாடிக் கொண்டிருந்தாள். மீதிப் பாட்டு ராகம் கூட தெரியாமல் நான் பின்னணியில் "விவித்பாரதி"யில் தலைவர்கள் செத்தால் அஞ்சலி செலுத்தும் போது வாசிக்கும் சோக இசையை தனியாவர்த்தனமாக வயலினில் வாசிக்க, கல்சுரல்லில் தோத்துட்டோம் என்று மேடைக்கு நடுவில் வந்து நின்று கொண்டு மணி அறிவிக்க, பயங்கர கடுப்பில் சம்சு முதுகில் "வாசிக்க" ட்ரம்மர் பரத் காத்துக் கொண்டே இருந்தான்...





...

சாலையோரம் - தொடர் இடுகை

தட்டிலேயே மிஞ்சிய சோற்றுப்பருக்கைகள்

வனங்கள் - 3

மணற்துகளின் முனை உடைந்திருக்கிறது

மாமியும் தமிழ் சைன் போர்டும்


ரிக் வேதத்தில் பொங்கல் திருநாள்

போகிப் பண்டிகை - ஜனவரி 13-2010, புதன்கிழமை, மார்கழி 29, விரோதி ஆண்டு
பொங்கல் மற்றும் தை அமாவாசை - ஜனவரி 14, 2010, தை 1, விரோதி ஆண்டு, வியாழக்கிழமை
மாட்டுப் பொங்கல் - ஜனவரி 15, 2010, தை 2, விரோதி ஆண்டு வெள்ளிக் கிழமை
=================================
ரிக் வேதத்தில் சொல்லப் பட்டுள்ள மஹா விரதம்

ஒரு வருடம் முழுதையும் குறிக்கும் கவ மாயன சாத்திரம் (கவ = பூமி, மாயனம் = சூரிய மண்டல சுழற்சியில் மாற்றம் ஏற்படுவது) என்ற நாளுக்கு முதல் நாளே மஹா விரதம். விஷுவத் (விஷு) என்று சொல்லப்படும் நாள் பனிக்காலம் முடிந்து சூரியனின் முழு வெப்பமும் பூமிக்கு கிடைக்கும் நாளாக கொண்டாடப் படுகிறது. இன்று செய்யப்படும் கொண்டாட்டங்கள் மூலம் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றும், பின்பனி விரைவில் விலகி தாவரங்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்பப் படுகிறது.

தொன்மை நாட்களில், போர் வீரர்கள் இறந்த பசுவிலிருந்து எடுக்கப் பட்ட மாட்டுத் தோல் மீது தம் அம்புகளைத் தீட்டுவார்கள். பின் அந்தத் தோல் கொண்டு முடையும் பறையில் ஒலி எழுப்பி ஒலிக்கேர்ப்ப நடனம் புரிந்தும், பிராமணர்கள், ஆரியர்கள் மற்றும் சூத்திரர்களுக்கு இடையே மல்யுத்தம், வாட்போர், விற்போர், வேதங்கள் உரைத்தல், பேச்சு, கல்வி, கவிதை புனைதல், பாடல், நடனம், மந்திர ஜாலங்கள் செய்தல் போன்ற போட்டிக்களை நடத்தியும் கொண்டாடப் பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தாம் தற்போது புரியும் தொழிலை விட்டு அதை விட ஒரு உயர்ந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று குறிக்கப் பட்டுள்ளது. தொழில் அடிப்படையில் க்ஷத்திரிய ஆரிய சூத்திரர்கள் அதாவது பிராமணன் வென்றால் க்ஷதிரியத் தொழிலையும், ஆரியன் வெற்றி பெற்றால் பிராமணத் தொழிலையும், சூத்திரன் வென்றால் ஆரியத் தொழிலையும் செய்ய வேண்டும் என்று பணித்தார்கள். தோற்றவர்களுக்கு depromotion கொடுத்து அந்ததந்ததொழிலை மேற்கொள்ள வேண்டும்.

மஹா விரதம் என்ற இந்தத் திருநாளை கலாச்சார மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்குமான நாளாகவும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்து, திறமைகளை கண்டறியும் நாளாகவும் கொண்டாடப் பட்டு வந்தன. இந்தியா முழுவது, பைசாக்கி, விஷு, ரோஹ்ரி, போகலி பிஹு, போகிப் பொங்கல், என்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஒரு பெரிய மாற்றம் தரும் நாளாகவே இருக்கின்றது. அதைத்தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றும் சொன்னார்களோ என்னவோ?

ஐத்திரேயம், ஆரண்யகம் என்பது ரிக் வேதத்தில் முக்கியமான பகுதிகள் ஆகும். ஆரண்யகத்திற்கு மூன்று புத்தகங்கள்.

முதல் புத்தகத்தில் "கவ மாயன" மஹா விரத நாளைக் கொண்டாடப்பட வேண்டிய வழி முறைகளையும், அன்றைய தினம் விடியற்காலை, மதியம் மற்றும் மாலையில் செய்ய வேண்டிய செயல்களை சாத்திரமாகவும் ரிக் வேதத்தில் பதியப் பட்டுள்ளது.

இரண்டாம் புத்தகத்தில் அன்றைய தினம் நடக்கும் (உக்தம்) கூத்து முறைகள் (பூதங்கள்/மிருகங்கள் வேஷம் கட்டி நன்னெறி நாடகங்கள் நடத்துதல்), புராணக் கதைகள் சொல்லுதல், வில்லுப் பாட்டு, போன்றவைகளை "நிஷ்கேவல்ய சாஸ்திர உபநிஷத்" என்று சொல்லப் பட்டுள்ளது.

மூன்றாம் புத்தகத்தில் பூடகமான ஞானம், ஆன்மிகம், மறைபொருள் சாஸ்திரம், ஆகியவற்றின் நேரடி அர்த்தங்கள் நிர்பூஜம், பிரார்த்தனா, உபயமந்திரேனா என்று சம்ஹிதப்பதம் மற்றும் க்ரமப்பத சம்ஹிதைகளாக கொடுக்கப் பட்டுள்ளன. இதில் உள்ள vowel, semi vowel, consonant இலக்கண முறைகளைக் கண்டறியும் போது விவரிக்கவே முடியாத அற்புத உணர்வு ஏற்படும். நாம் கற்றது கை மண்ணாவது ஒன்றாவது, சுண்டு விரலில் துளியூண்டு ஒட்டிக் கொண்டு இருக்குமே அந்த அளவு கூட இல்லையென்றும் உணர்வோம்.

ஆரண்யகம் என்ற புத்தகம் காடு, வனங்கள் (ஆரண்யம்) போன்ற தனிமையான இடங்களில் வாழ நேர்ந்தால் தனி மனிதன் தன்னம்பிக்கையோடும், வாழ்க்கை மீதான நம்பிக்கை இழக்காமலும், தனிமையை வென்றும் வாழும் முறைகளை பற்றியது. சௌனக மகரிஷி கி.மு. 500-இல் எழுதியதாக நம்பப்படும் இப்புத்தகம் நூறு வருடங்கள் கழித்து பாணினியால் மீட்கப் பட்டதாக நம்பப் படுகிறது. (சான்று A.B.Keith, 1909, Aitareya Aranyaka, Oxford, Clarendon Press)

மஹா ன் பவதி அனேன வ்ரதேன
ஓர் மாஹதோ தேவஸ்ய வ்ரதாம்
ஓர் மாஹக் ச தத் வ்ரதாம்
(சயன மகரிஷி உரைத்தது. ஐத்திரேய ஆரண்யகம் அத்தியாயம்-1, பாடல் வரி-1)

இதன் பொருள் "மஹா விரதத்தின் வழி முறைகள் இங்கே துவங்குகின்றன. இந்திரன் போர் வீரர்களுக்கான விரதங்களைக் கடை பிடித்து செல்வாக்குப் பெற்று அதிகாரியானான். அவன் அதிகாரத்தின் கீழ் இந்த மஹா விரதம் கடை பிடிக்கப் படுகின்றது.

ஐந்தாம் அத்தியாத்தில் இருபத்தைந்து வரிகளில் நெருப்பு ஏற்றப் படவேண்டிய முறைகளும், அக்னியைக் கொண்டாடும் முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. காலையில் (மாலை வரை) அக்னிஸ்தோமன் (சூரியன்) என்றும் மாலையில் சோமன் (நிலவு) என்றும் அக்னிஹோத்திரம் செய்யவேண்டிய முறைகளையும் பேசுகிறது. மஹா விரதம் பற்றி வேதங்களில் ஐத்திரேய ஆரண்யகம் மற்றும் சனகாயன ஆரண்யகம் இரண்டில் மட்டும்தான் குறிக்கப் பட்டுள்ளது. மஹா விரத்தன்று நடக்கும் செயல் முறைகளையும், வெற்றி பெற்றவர் / தோல்வி அடைந்தவரின் தொழில் மாற்றங்கள் குறித்த செயல்பாடுகளையும், அவர்களது அடையாளங்களையும் பரம இரகசியமாக வைக்கப் பட்டதாகவும் குறித்துள்ளனர்.

====================================================================

மகர சங்கராந்தி என்ற நாள் சூரியனின் பாதை northern hemisphere (மகர ராசி) நோக்கி இருப்பதைக் குறிக்கிறது. இதுவே உத்திராயன புண்ணியகாலத்தின் ஆரம்பமாகக் கருதுகின்றனர். இந்நாள் திருவிழாக்களின் துவக்கமாகவும் இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் சக்கரை மிட்டாய்கள், எள்ளுருண்டைகள், தானியங்கள் போன்றவற்றை இந்நாளில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர்.

குஜராத்தில் வீட்டுக்குத் தேவையான புதியன வாங்கியும், பட்டங்கள் விட்டும் கொண்டாடுகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் பகுதிகளில் லொஹ்ரி என்றும் கொண்டாடுகின்றனர்.

கர்நாடகாவில், கரும்பு, எள், வெல்லம், கொப்பரைத் தேங்காய், கடலை போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறார்கள்.

அஸ்ஸாமில் அக்னியை வணங்கும் தினமாகவும், பெங்காலில் "பித்தா" மிட்டாய்கள் செய்து, கங்கா ஸாகர் மேளாவைக் கொண்டாடியும் மகிழ்கின்றனர். ஆந்திராவில் போகியன்று கொலு வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தைப் பொங்கலும், ஜல்லிக்கட்டும், என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

ரத சப்தமி: சூரியனின் பாதையை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப் படும் இன்னொரு பண்டிகை ரத சப்தமி. சூரியன் தோன்றிய நாள் என்றும் நம்பப் படுகிறது. இன்றைய தினம் சூரிய பகவான் தன் ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் அமர்ந்து புதிய பயணத்தைத் துவக்குவதாகக் கருதுகின்றனர். சூரியனின் பன்னிரண்டு பெயர்களான மித்ரா, ரவி, சூர்யா, அஹானு, கங், புஷன், ஹிரண்யகர்ப்ப, மரீசி, ஆதித்யா, சவிதா, அற்கா மற்றும் பாஸ்கரா போன்ற பெயர்களை உச்சரித்தும், எருக்கம் இலையைத் தலையில் வைத்து நீர்நிலைகளில் மூழ்கியும் கொண்டாடுகின்றனர். இதன் தத்துவம் என்னவென்று தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன்.

விஷு / யுகாதி / சித்திரைத் திருநாள்

சித்ரா விஷு சூரியனை வணங்கும் இன்னொரு பண்டிகை. மேஷ ராசிக்கு சூரியன் வரும் நாள் என்று நம்புகின்றனர். இதை மிகவும் புனிதமாகவும் கருதுகின்றனர். இன்றைய தினத்தில்தான் பூமி உருவானது என்று நம்பப் படுகிறது. அதனால் இத்தினத்தை யுகாதி என்றும் கொண்டாடுகின்றனர். இன்றைய தினத்தில் பகவான் ஸ்ரீ ராமபிரான் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்றும் நம்புகின்றனர். வாழ்க்கையின் இனிமையையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் குறிக்கும் வண்ணம் வெல்லம், மாங்காய், வேப்பம் பூ கொண்டு பச்சடி செய்வது விசேஷம்.

பைசாக்கி

வடக்கில் பைசாக்கி. விளைச்சலுக்கும் புது தானியங்களுக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் நாள். இன்றைய தினம்தான் சீக்கிய குருமாரான மரியாதைக்குரிய குரு கோபிந்த் சிங் அவர்கள் பஞ்ச் பியரா என்ற அன்புக்குரியவர்களுக்கான ஜோதியை ஏற்படுத்தினார்.

=================
எந்தப் பெயரில் கொண்டாடினாலும், மனிதன் இயற்கையை மதித்து வணங்கவும், சமூகத்தில் எல்லோருக்கும் வாய்பளித்து சமநிலை விளங்கவும், சோர்வான குளிர் நாட்கள் முடிந்து பசுமையைக் கொடுக்கும் வெயில் காலம் ஆரம்பிக்கும் நாட்களைக் கொண்டாடி மகிழ்வதையே இப்பண்டிகை குறிக்கிறது.

டெக்னாலஜியை வைத்து இன்று நாம் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்ற நிலையிலேயே இருக்கிறோம். ஆனால் இயற்கையை??
====

நடப்பில் உள்ள பொங்கல் பண்டிகை

====

அமோக விளைச்சலைத் தந்து புதுத் தானியங்கள் கரும்பு என்று , பழையன கழிதலும், புதியன புகுதலும் நடைபெறும். வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டில் உள்ள பழைய பொருட்களை வீட்டின் முன் தீயிட்டுக் கொளுத்தி, அல்லவை அகன்று நல்லவை பெருக, வரும் ஆண்டு முழுவதும் மழை நன்றாகப் பெய்து உழவுக்கும், மக்களின் வாழ்வுக்கும் வளம் கிடைக்க வேண்டி இந்திரனை வணங்குவர். இதற்குப் பின்னணியில் ஒரு கதையும் உண்டு. போகிப் பண்டிகையன்று கண்ணனும், இடையர் குல மாந்தரும் கோவர்த்தன மலையை வணங்கி வழிபட்டனர். இதனால் இந்திரன் கோபமுற்றான். தன்னை வணங்காமல் கோவர்த்தன கிரியை வணங்குவதா? என்று சினம் கொண்ட இந்திரன், ஏழு மேகங்களை அனுப்பி மின்னல், இடி மற்றும் கன மழையை உருவாக்கினான். இதனால் இடையர்களும், நண்பர்களும் பீதியடைந்தனர். கண்ணன், கோவர்த்தன் மலையை அப்படியேத் தூக்கி குடையாக மாற்றி அதன் கீழ் அனைவரையும் வரச் செய்து, மழை, இடி, மின்னலிலிருந்து நண்பர்களையும், இடையர்களையும் காத்தார் கிருஷ்ணன். இதைக் கண்டு பயந்துபோன இந்திரன், கிருஷ்ணரிடம் வந்து தன்னை மன்னிக்க வேண்டினான். அதனை ஏற்ற கிருஷ்ணர், இந்திரனை மன்னித்ததோடு போகியன்று இந்திரனை மக்கள் வணங்கலாம் என்று ஆசிர்வதித்தார்.

அழகான வண்ணக்கோலங்கள் இட்டு, கலர்பொடிகள் கொண்டு அலங்கரித்து, நடுவில் சாணி உருண்டையில் பூசணிப் பூ சொருகி வாசல்கள் களை கட்டும் நாள்.

இரண்டாம் நாள் பொங்கல். சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தல். புது அரிசி கொண்டு பொங்கப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு நிவேதனம் செய்து எல்லாம் புதிதாகவேத் துவங்கப் படும் தை முதல் நாள்.

இன்றைய தினம் தான் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கல் யானைக்கு உயிர் கொடுத்து கரும்பு தின்றதாக கல்வெட்டு பேசுகிறது.

மாட்டுப் பொங்கல் அன்று மாடு, காளைகளுக்கு நன்றி சொல்லும் தினம். மஞ்சு விரட்டு ஜல்லிக் கட்டு என்று இளைய சமுதாயம் கொண்டாடும் ஆர்பாட்டமான நாள்.

இதே நாளில் காணும் பொங்கல், கனுப் பொங்கல் என்று வித விதமான வண்ணங்களில் (சர்க்கரைப் பொங்கல் (அரக்கு), வெண்பொங்கல் (வெளிர் மஞ்சள்), மோர் சாதம் (வெள்ளை), எலுமிச்சை சாதம் (மஞ்சள்), கருவேப்பிலை சாதம் (பச்சை), எள்ளு சாதம் (கருப்பு), சாத உருண்டைகள் பிடித்து மஞ்சள்செடி இலையில் காகங்களுக்கு படைக்கும் தினம். "காக்காப் பிடி, கண்ணு பிடி, காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்" என்று சொல்லி பெண்கள் தன் சகோதரனுக்காக வேண்டிக் கொண்டு, ஏழு குட்டி குட்டி உருண்டைகளைப் பிடித்து மாடியில் காலை ஆறு மணிக்குள் வைத்து வரவேண்டும். பின் கனுபீடை நீங்க உடனே எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

=====

இப்போதெல்லாம் இது கூட குறைந்து ஒரு லீவு நாளாகவும், "உலக தொலைக்காட்சியில்" காட்டப் படும் மொக்கை பட்டிமன்றகளும், முதன் முறையாக டீ.வீ. யிலேயே ரிலீஸ் ஆகும் சினிமாக்களைப் பார்க்கவும் சரியாக போய்விடுகிறது இல்லையா?

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.






.