See What was India at 1835 - LORD MACAULAY`S ADDRESS

The quote is usually referenced as Lord Macaulay, British Parliament, 1835. In that year, Macaulay was actually in India, though other oft-quoted speeches by him on the same subject had indeed been delivered in Parliament, but in 1833.

LORD MACAULAY`S ADDRESS TO THE BRITISH PARLIAMENT, 2 FEBRUARY, 1835

I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country (India), unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation.

ஸ்லம் டாக் மில்லினர் (Slumdog Millionaire)

டாட்டா ஸ்கையில் ஸ்லம் டாக் மில்லினர் பார்த்தேன். This Movie won 8 Oscars. Another 62 wins & 29 nominations. No wonder.

அந்தப் பையன் ஜமாலின் பிளாஷ் பாக் கௌன் பனேகா கரோட்பதியின் கேள்விகளோடு ஒத்திருப்பது ஹைலைட். applause to the creator. இனிமேலும் இப்படி ஒரு படத்தை யோசிக்க முடியுமா என்பது கேள்விதான்.

விகாஸ் ஸ்வரூப் எழுதிய Q&A நாவலை தழுவி இங்கிலாந்து இயக்குனர் டேனி பாய்ல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் எட்டு பிரிவுகளில் ஆஸ்காருக்கு ப‌ரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து சினிமாவின் உய‌ரிய விருதான பாஃப்டா விருதையும் இப்படம் தனதாக்கியுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்பட மொத்தம் ஏழு பிரிவுகளில் இப்படம் விருது பெற்றிருக்கிறது.

முதலில் கோல்டன் குளோப், பிறகு பாஃப்டா, கண்டிப்பாக பாருங்கள் ...லீகலி ... எல்லாவற்றிற்கும் மேலாக .ஆர். ரகுமான்அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

துவக்கத்திலிருந்தே விமர்சனங்களை சந்தித்து வந்த இப்படத்தின் பெயரில் டாக் என்ற வார்த்தை இருக்கிறது. இது சேரியில் வசிக்கும் இந்தியர்களை அவமதிப்பதாக கூறப்பட்டது. பின்னர் இப்படம் இந்தியாவின் நிலைமையை சர்வதேச அளவில் குறைக்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்படத்தில் எந்தப் பகுதியில் உண்மை இல்லை ....?

மிகவும் பாதுகாப்பான வாழ்க்கை வாழும் எனக்கு இந்த படம் ஒரு அதிர்ச்சிதான். it's very difficult to see the other side of the society in India. ஒருவேளை நான்தான் ஒருவட்டத்தில் வாழ்ந்து விட்டேனோ. அதை விடுவோம்.

எனக்கு பிடித்த சில காட்சிகள்.

1. அமிதாப் பச்சனை பார்க்க அச்சிறுவன் எடுக்கும் முடிவு... உச்ச கட்ட அதிர்ச்சி...

2. தர்ஷன் தோ கண ஷ்யாம் நாத் ... என்ற
எனக்கு பிடித்த சூர்தாஸ் பாடல் . ஆனால் இனிமேல் அந்த பாட்டை கேட்டாலே ...

3. அனில் கபூரின் வில்லத்தனம் ... ஒரு சேரிவாசி தன் ஷோவில் ஜெயிப்பதாஎன்ற உணர்வு... அற்புதமான நடிப்பு.

4. தேவ் படேல் ... சூப்பர் .... தன் வெற்றிக்கு மகிழ்ச்சி அடைகிறானா இல்லை அந்தகேள்விக்கு தொடர்புள்ள தன்
பிளாஷ் பாக் அனுபவத்திற்காக வருத்தப்படுகிறானா என்று இரண்டு உணர்வுகளிலும் துடிக்கும் அவன் கண்கள்

5. ஒரே தாய்க்குப் பிறந்து ஒரே சூழலில் வளர்ந்து வரும் இரண்டு சிறுவர்கள் தன் attitude மூலம் வாழ்வில் எந்த நிலையை அடைகிறார்கள் ... attitude.... லே மென் பிரதர்ஸ், சத்யம், இன்னும் பல அனுபவங்கள் கொடுத்த பாடம் .... ATTITUDE CREATES AND DESTROYS....

இந்திய கதை, இந்திய நடிகர்கள், இந்திய இசை என இந்தியாவை சார்ந்துள்ள இந்த படம் உலக ரசிகர்களை பெற்றிருப்பதுடன், உலக அளவில் சிறப்பான விருதுகளையும் பெறப்போகிறது என்பது பெருமையான விஷயம்தானே!

பரீட்சை ஜுரம்

தற்போதைய மாணவர்களின் அவலநிலையை இந்த சுட்டியில் காணுங்கள். இதற்கு பொறுப்பு அவர்களது பெற்றோரே. அவ்வப்போது அவர்களின் படிப்பை கவனிக்காமல் பரிட்சையில் பாஸ் செய்வதும் அவர்களது மதிப்பெண், கல்லூரி சேர்கை இத்யாதி மட்டும் பார்க்கின்றனர். விளைவு எதிர் காலத்திற்காக நிகழ் காலத்தை தொலைக்கும் வேதனையான போக்கு நம்மிடையே இருக்கிறது. உண்மையை எதிர்கொள்ளும் மனபக்குவம் கூட இல்லை. விளைவு, படிப்பை நம்பாமல், தன்னை நம்பாமல், நினைவாற்றல் மாத்திரைகளை தேடி செல்கின்றனர்.

Remembering Chellammal Bharati

S. Vijaya Bharati (The writer is a granddaughter of Bharati and Chellammal.)

Sunday, Sep 21, 2003 - The Hindu

What kind of life fell to the lot of Chellamma as the wife of Mahakavi C. Subramania Bharati. She married him at the age of seven when he was 15 and still in school. Chellamma came from a south Indian middleclass Brahmin family, their financial status bordering on the affluent, and the social status certainly in the upper rungs of society in Kadayam. As a young girl, she enjoyed life as a passing spectacle of religious and social festivals, entertainment of musical and theatrical events, and the numerous celebrations in a large joint family, of birthdays of children, `upanayanams', weddings and more weddings, and even the passing of the old, a cause for sadness, nevertheless full of ritual-bound celebration. Chellamma's life with the poet-husband seems to have started innocuously enough — Bharati was young and handsome, in good health, well-educated and employable with a decent reputation as a poet and writer and as a person who had opted for an intellectual life. Wives of course did not participate in the intellectual lives of their husbands in the Tamil Nadu of the early 1900s, although this was not to be Chellamma's destiny as she grew up as the poet's spouse. Bharati went through a succession of jobs as the Ettayapuram Zamindar's companion, as Tamil teacher in the Madurai Setupati High School and as writer and sub-editor on the staff of the Swadesamithran, until he settled to his life's work as poet, editor and political activist. Bharati had steady employment, and Chellamma and her household were well-provided for.

Chellamma's financial comfort and security were destroyed when Bharati left British India for the French territory of Pondicherry in order to continue his struggle for an Independent India. Thus began a life of privation and severe financial hardship. How Bharati related to this situation has been widely written about, and a lot of it is speculation! It is reasonable to agree — because we really do not understand what makes a poet poet — that Bharati's mind was continuously in a stream of ecstasy, and took little notice of the demands of a household of a wife and two daughters. It became Chellamma's sole responsibility to manage the household, to feed and clothe the family, the start of a struggle that did not end till her death in Kadayam in 1955.

Joyce biographers talk about the "great poverty" in which James Joyce lived towards the end of his life.

What is "great poverty" for the author of Ulysses in 20th century Britain is hard to estimate from this distance in time. Although I lived with my grandmother till I turned 16, I have very little comprehension of what it was to be a "have-not". How does one reconcile the life of great poverty and material deprivation with the privilege of living the life of the mind and the spirit?

The latter, I think, provided Chellamma, by now "Chellammal Bharati"; of the 1950s India, her immortality.At her death, the Tamil population felt as though it had lost a family member. And commiserating at the death of this woman were celebrated names in the annals of Tamil Nadu and India. No less a person than C. Rajagopalachari ("Rajaji"), wrote to my mother: "At a time when the whole nation is celebrating Bharati's birthday, your letter conveying the sad news arrived. She fed me on day in Puducheri - me and R.V. Krishnayyar. When the meal was done, Bharati danced and danced and dancing, sang a song too for us. Look: what a very fortunate woman she was! How many women in this country have such a celebrated husband? There is no grief in reaching the feet of Narayana."

I think that the "great poverty" in which Chellammal Bharati lived and died becomes irrelevant; the hardship is a small price to pay for immortality!

என் கணவர் - திருமதி. செல்லம்மாள் பாரதி

“I wished to live a life and achieve fame reaching the sky limit. And, frankly speaking, it has become true to some extent. The fame of my husband has reached the sky limits. I have earned the glory as the wife of the great poet. But, I had also been ridiculed as the wife of a lunatic” These words were from Mrs. Chellammal Bharathi, the wife of the great poet (translated. AIR Tiruchirappalli 1951).

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"
என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

Teaching the Stock Market to your Kid

  1. Sit down with your child and the business section of the local paper.
  2. Go to the listings for the Stock Exchange.
  3. Find a stock your child is familiar with, such as Disney or McDonald's.
  4. Explain that stock represents a share of ownership in the company.
  5. Tell what each number for the stock you have selected means.
  6. Ask if your child has any questions.Keep a list of all questions and double-check if you had answered all the queries.
  7. Suggest your child tracks the price of the stock over the next week.
  8. Have your child prepare a sheet of paper or poster for that purpose.
  9. Point out the stock tickers on Television.
  10. At the end of the week, review the price changes and see what other questions your child may have.

இப்படிக்கு பேராண்டி... குறும்படம்

எங்கோ படித்தேன்....பார்த்தேன்.

‘பூங்கா’ என்ற குறுந்திரைப் படத்தின் மூலமாக பணக்காரப் பெற்றோரின் பாசப்பரிவுக்கும் கவனிப்புக்கும் ஏங்கித் தவித்து ஏமாறுகிற சிறுமியின் ஏக்கம், தனது பாசத்தையும் பரிவையும் எதன் மீதெல்லாம் படர விட்டது என்பதை நெஞ்சைத் தொடும் விதமாக வடிமைத்துப் அளித்த தாண்டவக்கோன், தாத்தா-பாட்டிக்கு ஏங்குகிற பேரன் களின் மன உலகத் தவிப்புகளையும், புறஉலகச் செயல் பாடுகளையும் நுட்பமான கவிதையாகப் படைத்தளித் திருக்கிறார், இப்படிக்கு பேராண்டி என்ற 45 நிமிடக் குறுந்திரைப் படத்தின் மூலமாக.

முந்தைய படைப்பைவிட இதில் தொழில்நுட்ப நேர்த்தி கைகூடி வந்திருக்கிறது. அழுத்த மான கதையை எடுத்துக் கொண்டு, அதை அற்புதமான திரைக்கதை யாக சம்பவ அடுக்குகள் பின்னி, தனித்துவக்குணம் படைத்த பாத்திரங்களையும் செதுக்கி... அதற்கான உயிர்ப்பையும் வழங்கியிருக்கிறார். குறுந்திரைப்படம் பார்க்கிற மனசுகள் ஈரவிழிகiளால் கணத்துப் போகின் றன.

காலடிக் கல்லை எத்திக் கொண்டே போகும் சிறுவன், மதிய உணவைக் கொட்டிவிட... அப்பாவின் சீற்றமும், அம்மாவின் கொதிப்பும் நினைவில் வந்து குலைநடுங்க வைக்க... புதிய கன்று ஊன்றுகிற தோட்டக்காரத் தாத்தா ஓடிவந்து ஆறுதல் சொல்கிறார். ‘செய்த தப்புக்கு அழாதே. பாடம் படிச்சுக்கோ’ என்கிறார். ‘தாத்தாக்கள் பிள்ளைகளின் மன உலக நுட்பங்களை உணர்ந்தவர் கள். இங்கிதமானவர்கள். இதம் தருகிறவர்கள்’ என்பதை உணர்த்திவிடுகிற காட்சி.

ஓரு பள்ளியின் வகுப்பு. பொது அறிவுப்பாடம். தாத்தா பாட்டியின் குணம்பற்றி டீச்சர் கேட்க, எல்லாக் குழந்தைகளும் ஆசை ஆசையாக தமது அனுபவங் களைச் சொல்ல.... ‘யார் யார் வீட்டில் தாத்தா பாட்டி இருக்கிறார்கள்?’ என்ற கேள்விக்கு மொத்த வகுப்பே மௌனமாகிறது. ஒரு சமுதாய விமர்சனமே இந்த மௌனத்தில் கூச்சலிடுகிறது.

அவசர யுகத்தில் குடும்பங்களுக்குள் தாத்தா பாட்டி களுக்கான இடம் இல்லாமல் போய்விடுகிறது. பாசம், தார்மீகம், மனிதநேயம் என்ற எந்த உணர்வுக்கும் இடமில்லாமல், தாத்தா-பாட்டிகள் அனாதைகளாக்கப் படுகின்றனர். பேராண்டிகளிடமிருந்து கத்தரித்து, தனித் தொதுக்கப்படுகின்றனர். பிள்ளைகளுக்கு பாட்டிகளின் பாசம், தாத்தாவின் பரிவு கிட்டாமலேயே போய் விடுகிறது.

தாத்தா -பாட்டிக்காக ஏங்குகிற இரு பேராண்டிகள் .அப்பாவிடம் சொல்லப் போனால் ‘பாடத்தைப் படி’ என்று துரத்துகிறார். அம்மாவிடம் சொல்லப் போனால்... செத்துப் போவதாக மிரட்டுகிறாள். பாவம், பேராண்டிகளுக்கு ஏக்கம். ஆசை. ஆவல். போன் பண்ணலாம். புதிய நம்பர் இல்லை. அந்த அளவுக்கு உறவு பழையதாகி விட்டது. பிள்ளைகளாகக் கடிதம் எழுதுகின்றனர். தாத்தா - பாட்டி சம்பந்தப்பட்ட படங்கள் பரணில் கிடக்கிறதாக தகவல். அதைஎடுக்கிற முயற்சியில் பிள்ளைகளுக்கு விபத்து. மருத்துவமனை! மருத்துவமனைக்கு வருகிற ரெங்கசாமி மூலம் தாத்தா -பாட்டிக்குத் தகவல் தெரிகிறது ‘பேரன்கள் மருத்துவமனையில்’.

திரும்பிவந்த கடிதம் தந்தை தாமோதரனுக்கு பிள்ளைகளின் மன உலகத் தவிப்பைச் சொல்கிறது.

கதை கேட்ட பிள்ளைகளுக்கு, கதைப் புத்தகம் வாங்கித் தந்ததற்காக குற்ற உணர்ச்சி கொள்கிற தாமோதரன்.

கதைகேட்ட பிள்ளைகள்.. கதையா கேட்கிறது? தகப் பனின் கதகதப்பான வருடலையும், பரிவையும் கொஞ்சிக் கொஞ்சிச் சொல்கிற கதைகளையுமல்லவா கேட்கிறது?

‘இனிய சொற்களையே பேசு’ என்று ட்யூஷன் வகுப்பு நடந்துகிற டீச்சர், காமிக்ஸ் படிக்க ஆசைப்படுகிற மகளிடம் டான்ஸ் கற்றுக் கொள்ள வற்புறுத்த... கடின சொற்களால் மிரட்ட.....

‘காமிக்ஸ் படித்தால் ஓவியப் பழக்கம் வரும்’ என்று தந்தை சொல்ல... விருப்பமில்லாத விஷயத்தை பிள்ளை களிடம் கட்டாயமாக திணிக்கிற படாடோபம் கூர்மை யாக விமர்சிக்கப்படுகிறது.

பிள்ளைகள் தாத்தா - பாட்டிகளைப் பார்க்க தவிப் பதை அறிகிற அம்மாவும் நெகிழ்கிறாள்.

நெஞ்சுவலி வந்த தாத்தா, டாக்டரைப் பார்க்கிறார்.

தாத்தா - பாட்டியைப் பார்க்க குடும்பத்துடன் காரில் போகிற போது, தாத்தா செத்து விடுவதாகவும், புதைக் கப்பட்டதாகவும் வருகிற காட்சி நம்மை பதைக்க வைக்கிறது.

நல்ல வேளை, கனவு. ஆனால், ‘காலைக் கனவு பலிக்குமோ’ என்ற நம்பிக்கை. பதற்றம்.

கதவு தட்டப்படுகிற சத்தம்.

திறந்தால்-

பேராண்டிகளைப் பார்க்க வீடு தேடி வந்து விட்ட தாத்தா - பாட்டி.

அழுத்தமான கதையை உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளாக்கி... நெகிழ்ச்சிமயமாக படமாக்கியிருக் கிறார் தாண்டவக்கோன். டாக்டராக ஒரு காட்சியில் வருகிறார்.

பேராண்டிகளாக வருவது அவரது மகன்கள். பேராண்டிகளின் அம்மாவாக அவரது மனைவி.

தாத்தா- பாட்டிகளாக தமுஎச மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஈஸ்வரனும், அவரது துணைவி யாரும். நன்றாக நடித்துள்ளனர்.

காதல்-வன்முறை-ஆபாசம்-அடித்தடி-ஆஸ்திரே லியா என்று சீரழிந்து வருகிற தமிழ்ச் சினிமாக்களுக்கு அசலான மாற்றுச் சினிமா என்பது இம்மாதிரியான குறுந் திரைப்படங்கள்தான்.

தாண்டவக்கோன் நெகிழ்ச்சிமயமான காட்சிகளின் மூலமாக மனித உறவுகளின் சிதைவுகளையும், குடும்பம் என்கிற அமைப்பின் உள்பலவீனங்களையும் ஒரு சமூகக் கோபத்துடன் அழகாக முன்வைத்திருக்கிற ‘இப்படிக்கு பேராண்டி’ மாற்றுச் சினிமாவுக்கான போற்றுதலுக்குரிய முயற்சியாகும்.

தாத்தா பாட்டி

தாத்தா மற்றும் பாட்டி கவனிப்பில் வளரும் குழந்தைகள் தான், அதிக மகிழ்ச்சியாக வளர்வதாக லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் மக்களின் வாழ்க்கை ந்திரமயமாகிவரும் நிலையில், தங்களது குழந்தைகளுடன் அமர்ந்து, மனதை பகிர்ந்து கொள்வதில் பெற்றோர்களுக்கு நேரமில்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல், ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள், தவறான வழியில் சென்று, பெரிய சமூகப் பிரச்னையை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில், லண்டன் பல்லைகக்கழகம் ஒன்று இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நேரத்தை பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும், தாத்தா-பாட்டியின் கவனிப்பில், குழந்தை நல்லமுறையில் வளர்வதற்கு உறுதுணையாக இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தாத்தா-பாட்டியுடன் வளரும் குழந்தைகளுக்கு, தாய்-தந்தையுடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளாதது ஒரு குறையாகத் தெரியவில்லை என்றும், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக வளர்வதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தங்களது பேரக்குழந்தைகளுடன் நிதானமாக அமர்ந்து, அவர்களது இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தவறு செய்யும் குழந்தைகளை திருத்துவதில், தாத்தா-பாட்டி, மென்மையான போக்கை கடைபிடிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முதுமையான பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்துவதும், அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆய்வு மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் மகிழ்ச்சி தான்.

லோரோ ஜோங்க்ராங், போரோபுடூர்

இது கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி அவர்கள் எழுதிய பதிவு.

ஜாவாவின் மன்னர்கள் மிகவும் புராதனமான க்ஷத்திர மரபைச் சேர்ந்தவர்கள். சைவ சமயம், பௌத்த சமயம் ஆகியவை இரண்டும் செல்வாக்குடன் இருந்தன. சைவ சமயம் என்பது நாம் இன்று வைத்திருக்கும் சொங்கி சைவம் இல்லை. ஆகமம், தாந்திரீகம் ஆகியவை கலந்த சைவம். அது ஒரு ஒருமாதிரியான துவைத சைவம். சிவனே சர்வேஸ்வரன்; பரமேஸ்வரன். அவனே அருளாளன். அவனே படைத்தல், காத்தல் முதலியவற்¨றைச் செய்பவன். ருத்ரனாக இருந்து அழிப்பவனும் அவனே. ஒரு வித்தியாசம். ருத்ரனாக இருந்து காப்பவனும் அவனே. இந்த சைவத்தில் வைஷ்ணவமும் இணைந்திருந்தது. ராமனுடைய கதையாகிய ராமாயணமும் அவர்களிடம் இருந்தது. கிருஷ்ணனுடைய அவதார மகிமைகளைக் கூறும் கிருஷ்ணாயணமும் இருந்தது. 'க்ரிஸ்ணாயாணா' என்ற பெயரில் அந்த இதிகாசம் விளங்கியது. சக்தி வழிபாட்டின் பல கூறுகள் அங்கு விளங்கின. கொடி கட்டிப் பறந்தது சண்டி வழிபாடு என்றழைக்கப்பட்ட துர்க்கை வழிபாடு. ஒரே இடத்தில் ஆயிரம் கோயில்களைக் கொண்ட இடம் ஜாவா. ப்ராம்பானான் என்று அழைக்கப்படும் கோயில்கூட்டம் அங்கு உள்ளது. அதை லோரோ ஜோங்க்ராங் என்னும் பெயராலும் குறிப்பிடுவார்கள். ப்ராம்பானான் கோயில் கூட்டத்துடன் ஜாவாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதாவது அழிக்கப்பட்டவை போக மிச்சம் இருப்பவை. அவர்களின் பௌத்தமும் தாந்த்ராயணா பௌத்தம் என்னும் வகையைச் சேர்ந்தது.


வஜ்ரபோதி என்னும்
தமிழரைத் தலைமை பிக்குவாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜாவானிய மன்னர் ஒருவர் போரோபுடூர் என்னும் பிரம்மாண்டமாக மேரு விஹாரத்தை நிர்மாணித்தார். மனிதன் என்பவன் தெய்வீக ஆற்றல்கள் பெற்றவனாக விளங்கவேண்டும் என்ற கொள்கையினர். க்ஷத்திரியர்களாக விளங்கியவர்கள் அந்த மாதிரி ஆற்றல்களைப் பெரிதும் வளர்த்துக்கொண்டார்கள்.

லோரோ ஜோங்ராங்க் கோயில் இருக்குமிடம் மத்திய ஜாவாவிலுள்ளது. அதன் அருகில்தான் போரோபுடூர் என்ப்படும் பௌத்தஸ்தூபியும் இருக்கிறது.

மிக மிகச் சுருக்கமாகவும் எளிமையாகவும் சொல்லவேண்டுமென்றால், 'யந்த்ர' என்பது ஒரு தெய்வத்தின் அல்லது தெய்வ சக்தியின் வரைபடம். அதற்கு இரண்டு பரிமாணம் உண்டு. அதையே முப்பரிமாணமாகவும் ஆக்கலாம். ஸ்ரீசக்ரம் என்பது தேவிவழிபாட்டுக்குரிய யந்திரம். அதுதான் தேவிவழிபாட்டின் உச்சகட்டத்து யந்திரம். யந்திரங்களுக்கெல்லாம் தலைமையானது. ஆகையினால் அதை 'சக்ரராஜம்' என்று சொல்வார்கள். அது ராஜராஜேஸ்வரியின் தேராகவும் விளங்கும். ஸ்ரீசக்ரராஜத்தின்மீது அமைந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவள்.

'ஸ்ரீசக்ரராஜசிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே .புவனேஸ்வரி' என்ற பாட்டை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.

அதன் முப்பரிமாண வடிவமும் உண்டு. அதனை 'ஸ்ரீசக்ர மேரு' என்று குறிப்பிடுவார்கள்.
யந்த்ரங்களை மண்டலங்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. போரோபுடூர் என்பது என்ன என்பது ஒரு பெரிய மர்மம். கோயிலா, ஸ்தூபியா, மண்டலமா?

அதன் உயரம் 42 மீட்டர். 123 மீட்டருக்கு 123 மீட்டர் தன்னச்சதுரம். 10 அடுக்குகளைக் கொண்டு படிப்படியாக உயர்ந்து செல்லும். அடுக்குகளை யந்திர சாத்திரத்தில் 'ஆவரணம்' என்று கூறுவோம். அடியில் உள்ள ஆறு ஆவரணங்கள் சதுரமானவை. அதற்கு மேலுள்ளவை வட்டவடிவம் கொண்டவை. ஸ்ரீசக்ரமேருவில் ஒன்பது ஆவரணங்கள் உண்டு. அடியில் உள்ள ஓர் ஆவரணம் சதுரமானது. அதற்குமேலுள்ள இரண்டும் வட்டவடிவமானவை. அதற்கு மேலுள்ள ஐந்தும் முக்கோணங்களால் ஆனவை. ஆக மேலுள்ளது பிந்து எனப்படும். பிந்து என்றால் 'புள்ளி' எனப்பொருள்படும். புள்ளி என்றால் பெரிதாகவும் இருக்கலாம்; அல்லது சிறியதாகவும் இருக்கலாம். அதைத்தான் நாம் அறிவோம். ஆனால் ஸ்ரீசக்ர மேருவிலோ ஸ்ரீசக்ரத்திலோ உள்ள 'பிந்து' என்பது மனதில் சிந்தனைகளை ஓடவிட்டுக்கொண்டிராமல் கூட்டிக்கழித்துப் பார்க்காமல் ஜியாமெட்ரியெல்லாம் போட்டுக்கொண்டிராமல் மோனமாக இருந்து இலக்கின்றி பாருங்கள். 'அக'ப்படும்.

எகிப்திய பிரமிட், மாயான் பிரமிட், இந்திய ஸ்தூபி, சுமேரிய ஸிகுராட் (Ziggurat) முதலியவற்றின் தன்மைகளும் அமைப்பும் கலந்து காணப்படுகின்றன.

போரோபுடூரைக் கண்டுபிடித்து அதனைச் செப்பனிட ஆரம்பித்து இருநூற்றாண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரைக்கும் அதன் மர்மம் யாருக்கும் பிடிபடவேயில்லை।


ஸ்ரீசக்ரம், ஸ்ரீசக்ரமேரு, போரோபுடூர் ஆகியவற்றை ஒரு Comparative Study-க்காக இந்த யூஆரெல்லில் போட்டிருக்கிறார். பார்த்துக்கொள்க.

ஸ்ரீசக்ரம்

ஸ்ரீசக்ரம்

நான் படித்து அறிந்த விஷயங்களிலேயே எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் தந்தது ஸ்ரீசக்ரம்.

ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு:

ஸ்ரீசக்ரத்திற்கு 43 முக்கோணம். அவை முறையே 3-சிவகோணம், 5-சக்திகோணம், அஷ்டதளம், ஷோடச தளம், மூன்று வலயங்கள், 4-சக்ரங்கள், பிந்துநாதம் கலை இவைகளுமாகச் சேர்ந்து அமைவதாகும். இந்த ஸ்ரீசக்ரத்திலே யோக சாஸ்திரங்களில் விளக்கி உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களும் அடங்கியுள்ளன.

அதாவது முக்கோணம் மூலதாரமாகவும், அஷ்டாரம் சுவாதிஷ்டானமாகவும், தசாரம் மணிபூரகமாகவும், பஹிர் தசாரம் அனாஹதமாகவும், மன்வச்ரம் விசுத்தியாகவும், பிந்து ஆக்ஞையாகவும் கூறப்பட்டிருக்கின்றது. (அண்டத்திலே சுவாதிஷ்டான க்ஷேத்ரமாக திருஆனைக்கா விளங்குகின்றது.)

சரீரத்திலே மூலாதாரத்திற்கு மேலே இரண்டு அங்குலத்தில் ரத்னம் நான்கு தளங்களைக் கொண்டு சுவாதிஷ்டானம் என்னும் சக்ரமானது விளங்குகிறது. ஆறு இதழ்களோடு ஆறு அக்ஷரங்களோடு செந்நிறப் பொலிவுடன் விளங்கும் அத்தாமரையை அறிஞர்கள் சுவாதிஷ்டானம் என அழைப்பார்கள். அவ்விடத்தில் பாலன் என்ற சித்தனும், ராகினி என்ற தேவியும் வசிக்கின்றனர்.

ஆறு இதழ்களிலும் பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, யசஸ்வினி, ரமாசம்பேஷ்டி என ஆறு தேவிகளும் வசிக்கின்றனர். இந்த ஆதாரமானது தனக்கு மேலான அக்னி தத்துவத்துடன் இணைந்து விளங்குகிறது. இவ்விடத்திலேதான் குண்டலினி தானே அதிஷ்டானமாகி கிரந்திகளைச் செய்து கொண்டிருக்கும் என சாத்திரங்கள் கூறுவதால், அந்த ஆதாரத்திற்குச் சுவாதிஷ்டானம் எனப் பெயர்.

சித்தாந்த சாத்திரமானது சரஸ்வதியோடு கூடிய பிரம்மாவை, அபயம், வரதம், கமண்டலு, அக்ஷமாலை இவைகளை நான்கு கைகளிலும் தரித்துக் கொண்டு அக்ஷரங்களோடு கற்பனை செய்யப்பெற்ற பத்மத்திலே காந்தியுடன் சிந்தனை செய்யவேண்டும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. சக்தி உபாசகர்கள் மேதஸ் என்ற தாதுவைத் தனது இருப்பிடமாகக் கொண்ட காசினி என்ற தேவதையைத் தியானம் செய்கின்றார்கள். இதே போன்று மற்ற ஆதாரங்களும் கூறப்பட்டிருக்கின்றன.

ஸ்ரீசக்ரத்தைப் பூஜிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் குருவினுடைய பரம்பரை வழிவந்த உபதேசம் பெற்று ஒவ்வொன்றையும் நன்கு கவனித்துச் செய்யவேண்டும். குருவினுடைய முன்னிலையில் பூஜைகள் செய்து, அவருடைய அனுமதியைப் பெற்றுத் தனிமையில் பூஜையைச் செய்யவேண்டும் என்பதும் நமது முன்னோர்களுடைய மரபாகும்.

மகாபாரதம் - அனுசாசனபர்வம்

எங்கே பெண் கௌரவிக்கப்படுகிறாளோ அங்கே கடவுள்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்கே பெண் கௌரவிக்கப்படவில்லையோ அங்கே எந்தப் புனிதமான சடங்கினாலும் எந்த பயனுமில்லை.

First Blog

When nothing was to be done, I blogged.

This day, Year 2000, Rajeswari / Vaishnavi / Vaishu, My eldest sister Gayathri's daughter was born. I wish her a happy birthday and a peaceful long life. Vaishu brought many changes in my life, of which, she made me realize what real affection is. She is the first child with whom I spent most of my time. She loves me a lot and sends gifts on mother's day to me too.

She is also the most adored akka and friend of my daughter Darshini. Vaishu and Darshini mean a lot to me, as they made me realize the purpose of my life. They made me explore more, knowledge, that I can answer their questions. They made me smile and laugh without any reason. I have many things to say to them, I start this blog as a channel to share my thoughts and some moments, on this day to show my gratitude to Vaishu. Thanks Vaishu. I love you a lot.

.