இடைப்பட்ட பொழுதுகள்

இப்படியெல்லாம் ஈமெயில் வந்தா நம்பாதீங்க

fromK Shivakumar
toshiva_1969ttk@yahoo.co.in
dateMon, Mar 29, 2010 at 4:17 PM
subjectHi
signed-byyahoo.co.in
hide details 4:17 PM (11 minutes ago)

Hope you get this on time ? Sorry I didn't inform you about my trip to the UK for a program, am having some difficulties here because i misplaced my wallet on my way to the hotel where my money and other valuable things were. Presently my passport and my things are been held down by the hotel management pending when i make payment.
I will like you to assist me with a loan of $2,200 to pay my hotel bills and to get myself back home. I will appreciate whatever you can afford to assist me with, I'll Refund the money back to you as soon as i return, let me know if you can be of any help? ASAP.
I don't have a phone where i can be reached,please let me know immediately

Thanks
K.Shivakumar
 

சென்னை வலைப்பதிவர் குழுமம் குறித்து

சனிக்கிழமை அன்று குழுமம் அமைப்பது குறித்த பதிவர் சந்திப்பு பலருக்கும் ஏமாற்றம் தந்திருக்கலாம். ஆனால், இது நிச்சயம் ஒரு மிகப் பெரிய ஆற்றலாகும் குழுமத்திற்கான துவக்கம் என்றே நான் கருதுகிறேன். இதை initiate செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள் - நன்றியும்.

பின்னாளில் திரும்பிப் பார்க்க எழுத்தின் மூலம் உபயோகமாய் செய்யவும், பதியவும் வேண்டும் என்ற ஒத்த சிந்தனையுள்ளவர்களும், என்னதான் சொல்றாங்கன்னு பார்க்கலாம் என்றும் அங்கே வந்து அமர்ந்திருந்த பலரையும் அடையாளம் காண முடிந்தது. ஏற்கனவே தீர்மானித்த ஒரு முடிவுக்கு தலையாட்டி விட்டு வரலாம் என்றும் நினைந்த்திருக்கலாம் சிலர். போதாக் குறைக்கு ஞாநி வேறு யூனியன், கவர்மண்டோடு பேச ஒரு மீடியம் என்றெல்லாம் பிரம்மாண்டம் காட்டி மிரட்டி விட்டதால், ஆயாசம். இன்னும் இந்தக் குழுமம் போகும் பாதையை கலந்தாலோசிக்க வேண்டியே அமைந்தது இக்கூட்டம் என்றாலும், அதை பலரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது, திட்டமிடல் சரியாக அமையாமல் குழப்பம் மிஞ்சியது நிஜம்தான். இப்போதுதானே துவங்கி இருக்கிறது.

சென்ற முறை நிகழ்ந்த (முதல்) சொற்கப்பல் விமர்சனக் கூட்டம் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக அமையக் கூடும். எதைப் பற்றி, என்ன பேசப் போகிறோம் என்பது பற்றிய திட்டமிடல் அருமையாக அமைந்திருந்தது. முக்கியமாக அஜயன் பாலாவின் உரை. சொல்ல வந்தது அனைத்தும் முழுமையாகவும் சரளமாகவும் இருந்தது. என்னால் அன்று கூட்டம் முடியும் வரை இருந்து முழுதும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. சரி போகட்டும்?

நாம் ஒரு குழுமமாக அமைய என்ன செய்யலாம் என்று பேச நினைத்தவை இவை. வந்து அமர்ந்து அங்கு நடந்து கொண்டிருந்த கருத்து அமளிகள் மற்றும் நேரமாகிக் கொண்டிருந்த கஷ்டம் போன்றவைகளால் என்னால் அங்கேயே பகிர முடியாது போனது.
  • குழுமம் அமைக்கப் படவேண்டியது நிச்சயம் தேவை. ஒபாமா ஜெயித்ததற்கு வலை பதிவர்கள் மிக முக்கியமான கருவியாக அமைந்திருந்தது இங்கு குறிக்கத்தக்கது. தெளிவான சிந்தனையோடு இன்னது எங்கள் நோக்கம் என்ற முடிவோடு அமையப் பெற வேண்டியது முக்கியம்.
  • இணையதளம் மூலம் எழுதுவதனால், எண்ணிலடங்கா வாசகர்களை சென்றடைந்து, தமிழ் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கான தளமாகவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் இலக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கி, தமிழுக்கு தனி மரியாதையை உலக அளவில் உருவாக்கித்தரும் ஆற்றல் blogging மூலம் பெற முடியும்.
  • தமிழ் பதிவர்களை திரட்டி professional blogger-களாக ஆகவும், blogging மூலம் பொருள் ஈட்டவும் வழிவகைகள் செய்தல். பெரும்பான்மையான தமிழ் பதிவர்கள் பகுதி நேர பதிவர்களாகவே இருக்கிறோம். supportive income என்ற வகையில் பொருளீட்டும் வழிமுறைகளை தொழில்நுட்ப ரீதியாக பகிர்வதன் மூலம், இன்னும் பயனுள்ள வகையில் எழுதுவதை ஊக்கப் படுத்தலாம்.
  • blogging ethics முறைகளை தெளிவு படுத்துவது.
  • தமிழ் blogger-களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்குவது. பத்திரிக்கையாளர்கள் சட்டம் இதற்கும் பொருந்துமா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. அப்படி இல்லையென்றால், அதற்கு என்ன வழி என்பதையும் பொறுத்து, அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற மாதிரி இந்த குழுமம் பதிவு செய்யப் படவேண்டும்.
  • கருத்து சுதந்திரம் மற்றும் எப்படிப்பட்டக் கருத்தும் உடனடியாக அனைவருக்கும் படிக்கக் கிடைக்கும் ஆபத்தும் இணைந்தே இருப்பது என்பதால், தனிநபர் (பதிவர்) பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் தருவது.
  • தலைவர் வேண்டாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் பகிர / சொல்லப் படும் கருத்துக்கள், சிதறவும், அள்ளமுடியாமலும் போகக் கூடும். தலைமை என்பது நிச்சயம் தேவை. அந்தந்தக் கூட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில் சுழற்சி முறை தலைமையாக அமையலாம். இது பேசும் பொருளுக்கான agenda மற்றும் direction மற்றும் control -லுக்கு உதவும்.
  • வரும் நாட்களில் முறையாக பதிவு (registration) செய்த பின், freelancer மற்றும் வலைப் பதிவுகள் மூலம் எழுதியும் பொருள் ஈட்டியும் வரும் நபர்களுக்கு, குழுவாக / forum ஆக அமைந்திருந்தால் medical insurance (உதாரணத்திற்கு) போன்றவை கிடைக்க வழிவகை செய்யும் சட்ட பாதுகாப்புக்கள் கிடைக்கும் வழிகள் இருக்கின்றன. a group shall definitely take us a long way in positive sense.
  • குழுவாக அமையும் போது, எழுதும் கருத்துக்கள் மீதான பொறுப்பு அதிகரிக்கும். பல எழுத்தாளர்களை அடையாளம் கண்டும், புத்தகங்கள் வாசிக்க பகிரும் ஒரு அரங்காகவும் அமையலாம். முடிந்தால் அனைவரும் இணைந்து ஒரு நூலகம் கூட அமைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்.
  • தொழில்நுட்பம் மற்றும் தொழில்/இலக்கியம் சார்ந்த விஷயங்களைப் பகிர்தல். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லை. அப்படி அறிய விரும்பும் விஷயங்களை பொதுவில் கேட்கலாம் / தெரிந்தவர்கள் பகிர்ந்து, ஆரோக்கியமாக விவாதித்துக் கொள்ளலாம்.
    • lighter side: சிரிக்க மட்டும்: எனக்கு தெரிந்து இலக்கிய விவாதங்கள் செய்தே ஒரு தம்பதி விவாகரத்து பெற்றிருக்கின்றனர். வீட்டில் கணவனோ மனைவியோ ஒருவர் மட்டும் எழுதுதல் நம்ம உடம்புக்கும் மனசுக்கும் குடும்பத்துக்கும் நல்லது என்று முன்னெச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன். சாமர்த்தியமாக உங்கள் spouse-களை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வைப்பது உங்கள் சமர்த்து.
எனக்கு இப்போதைக்கு தெரியும் சில சிக்கல்கள்:

  • யார் யாரை உறுப்பினர்களாக அங்கீகரிப்பது?
  • பூசல்காரர்களை என்ன செய்வது?
  • கூட்டம் நடத்துவதற்கான பொருட்செலவை எப்படி நிர்வகிப்பது?

என்பவை மட்டுமே. சமாளிக்கக் கூடியவைதான் இவைகளும். மற்ற பிரச்சினைகள் பற்றியும் தெரிந்தவர்கள் பகிரலாம். ஆரோக்கியமான விவாதங்கள், மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறேன். கூட்டாக இணைந்து குழுவாக இருப்பதால் நிச்சயம் நற்பலன்கள் அதிகம். பிரச்சினைகள் இருக்கும். எங்குதான் இல்லை?

ஒரு முக்கியமான அனுபவக் குறிப்பு:
உதாரணம்: நம் அலுவலகங்களில் நடக்கும் weekly review meeting-குகள். :-))
அடிக்கடி சந்திப்பதனால் பேசும் கருத்தும், பேச்சும் பிசுபிசுத்துப் போகும் என்பதால், முடிந்த வரை மூன்று / ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்துப் பேசுவதே குழுமத்தின் நீண்ட ஆயுளுக்கு நல்லது. அதுவே பயனுள்ள கருத்துக்களைத் தரும் நிகழ்வாக அமையும்.

தண்ணீர் என்ற அம்ருதம் பிரம்மா

வேதங்களைப் பற்றிய (அல்லது) அதை சுற்றிய சிந்தனைகள் மட்டும் தான் இப்போது. அதனாலேயே என்னவோ இந்த தண்ணீர் தண்ணீர் பத்திகளைப் படித்ததும் இதையும் என் சேகரிப்பில் இணைக்கத் தோன்றியது. உங்களுக்கும் பயன்படலாம். படித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் (பொறுமையும்) இருந்தால் மகிழ்ச்சி.

யாகங்கள் / ஹோமங்களின் பொது பெரும்பாலும் "மந்த்ர புஷ்பம்" என்ற "யோபாம் புஷ்பாம் வேத" என்ற மந்திரத்தை புரோஹிதர்கள் கூட்டாக உச்சாடனை செய்ய கேட்டிருக்கலாம். அதன் பொருள் என்ன? தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும்.

சப்தங்களின் அதிர்வை தண்ணீர் உணருமா? எப்படி உணர்கிறது? அதன் பலன் என்னென்ன? அறிந்து கொள்ள Dr. Masaru Emoto, என்ற ஜப்பானிய விஞ்ஞானியின் தளத்தை பாருங்கள். ஆராய்ச்சிகளின் மூலம் அறியத் தந்தவற்றை இந்த வீடியோவில் பாருங்கள் .



==========================================================

இன்ன பிரச்சினைக்கு இன்ன rate என்ற விகிதத்தில், பணத்தைக் கொடுத்தால் சுகபோகங்கள், வியாதி தீருதல், கணவன் மனைவி பிரியாத வாழ்வுக்காக மந்திரங்கள் ஜபிக்கப் படும் என்பதையெல்லாம் நம்பும் அவசரத் தீர்வுகளைத் தேடும் வேகவிரும்பிகளாக ஆகி விட்ட நாம், சற்று நிதானிக்க வேண்டிய தருணம் - என்று world water day மூலம் UNCED 94-ஆம் வருடம் முதல் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆமாங்க!!! இவங்க நார்த் அமெரிக்கா-காரங்கதான் ... இனிமேயாவது கொஞ்சம் கேட்டுப்போம்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதையாக, நம்மிடமே இயற்கையை பாதுகாக்கும் எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும், அவற்றை கரையானுக்கு போட்டுவிட்டு, யாருக்கும் ஈமெயில் ஒரு pdf அல்லது pps கோப்புக்களை forward to all என்று ஒரு send button-னை click செய்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட முடிகிறது. தற்போதைய / வருங்கால தலைமுறைகளுக்கு நம்மிடம் கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் சிலவற்றையேனும் எடுத்துக் கொடுக்கவும், அவற்றை பின்பற்றி இருப்பதை பாதுகாத்துக் கொடுக்கவும் எவ்ளவோ விஷயங்கள் hymn-களாகவும் சுலோகங்களாகவும் ஒளிந்து கிடக்கின்றன. இப்போது யாரும் படிப்பதில்லை, யாருக்கும் புரியவதுமில்லை, ஆனாலும், long-term perspectives-களோடு எழுதப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கங்களாக மட்டுமே வேதங்களை என்னால் பார்க்க முடிகிறது.

=======================================
வேதங்களில் இயற்கையையும் இயற்கையை சார்ந்தவற்றையும் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் பாடல்படுத்தப்பட்டிருக்கிறது. நமக்கெல்லாம் யார் சொன்னா என்ன, யாராவது ஒரு வியாபாரி தன் லோகோ-வோடு "Save Water, Save Environment, Save Energy" என்று அதை இங்கிலிஷில் சொன்னால் மட்டுமே கேட்போம். அப்போத்தானே நமக்கும் பெருமை. என்னவோ போடா மாதவா.

அதில் ஒரு சில உதாரணங்கள் இங்கே. எப்போதோ இதை படித்து நம் முன்னோர்கள் "ஆமா இதைப் போயி" என்று சிரித்திருக்கலாம். அதன் பலனைத்தான் நாம் இன்று "Save... Save" என்று கூவிக் கொண்டிருக்கிறோம்.
=======================================
ரிக் வேதம் (6:48:17) மரங்களை வெட்டக்கூடாது, அவை காற்றை தூய்மை படுத்துகின்றன
யஜுர் வேதம் (5:43) வானத்தை கிழிக்காதீர்கள், ஆகாசத்தை மாசுபடுத்தாதீர்கள்
சரக சம்ஹிதம் -- ஒரு காடு அழிந்தால் ஒரு நாடு அழிகிறது, மீண்டும் ஒரு காட்டை உருவாக்குவதை விட எளிதாக ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதால், காடுகளை காக்க வேண்டும். காடுகளின் உள்ள மிருகங்கள் காட்டின் வளர்ச்சிக்கு தேவையாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பது நம் சடங்கு எனக் கருத வேண்டும்.
=======================================
"அம்ருதம் பிரம்மா பூர் புவஸுவரோம்"

அம்ருதம்: தண்ணீர்
பிரம்ம: உயிர் (அ) வளர்ச்சி (அ) அசைவு உடைய அனைத்தும்
பூர்: ஐம் பூதங்களைக் கொண்ட உலகம்
ஸுவ: தெய்வீகத்தன்மை கொண்ட (அ) உடையதாகக் கருதப் படும் எதுவும்
ஓம்: Universal Sound

தண்ணீர் உயிர்களின் அமிருதம், அதுவே அசைவுடைய உயிர்களைக் கொண்ட இந்த உலகத்தின் அசைவுக்கும், சுவர்க்கத்தின் இயக்கத்திற்கும், ஓம் என்ற நாதம் தோன்றவும் ஆதாரமாக அமைகிறது.
=======================================
காகூ தீர்; காகூ நீர்; காகூ பேத் பிசார் || நானகா பகத் ப்ரியா ஹோ ||3||2||155||
(சீக்கிய "ஷபத்" -- குரு அர்ஜன் தேவ் ஜி [ராக் கௌரீ-- பன்னா 213]
காகூ -> சிலர்
தீர் ->நதிக்கரை / நீர்நிலைக்கு அருகிருக்கும் மணற்பரப்பு
நீர்-> தண்ணீர்
பேத பிசார் -> வேதங்கள்
நானக் - குறு நானக்ஜி
பகத் - பகவான் / கடவுள்

சிலர் கரைகளில் வாழ்கிறார்கள்; சிலர் தண்ணீரிலேயே வாழ்கிறார்கள்; சிலர் வேதங்கள் படிக்கிறார்கள்; நானக்கிற்கு இறைவன் மீது அன்பும் (பக்தி) என்கிறார்.
=======================================
அப்ஸ்வன்தர்ம்ரித்மப்யு பேஷஜம் || [4/4 அதர்வவேதம்]

அப்ஸ்வன்தம் -->தண்ணீரில்
அம்ருதம் --> அமிருதம் இருக்கிறது
அப்யு --> அதுவே மேன்மையான
பேஷஜம் --> மருந்தாக இருக்கிறது

=======================================
ருக் வேதத்தின் ஜலஸுக்தம் என்ற புத்தகத்தில்:

யா ஆபோ திவ்ய உத(tha) யா சவன்தி, ரவநித்ரிமா உதத் வா யா ஸ்வயஞ்சா:
சமுத்ரார்தா யா: ஷுசைய: பா(p)வகாரத; ஆபோ தேவீரிஹ மாமவன்து||

தண்ணீரானது சுவர்க்கத்திற்கு நிகரான மலைமுகடுகளில் இருந்து பூமிக்கு வருகிறது. நதி ரூபமாகி வேகம் கொண்டு பாய்கிறது. ஓடையாகித் தவழ்கிறது. பூமியைத் தோண்டுவதன் மூலம் ஊற்றாகி குட்டைகள் மற்றும் கிணறுகளில் பெருகுகிறது. இவ்வாறும் பயணித்து சமுத்திரத்தில் சேர்க்கிறது. என்னை புனிதமாக்கி என்னை வாழச்செய்யும் தண்ணீரே! என்னைக் காப்பாய்.

என்று நீர்நிலைகளை வணங்கச் சொல்கிறது.

=======================================
லதுமய ஸ்மிருதியில்
"வித்தோபேக்ஷம் பவேதஷ்டிம் தடாகம் பூர்தமுச்யதே
ஆராமஷ்ச்ச விஷேஷேன தேவத்ரோணச்ததைவ ச||" என்று சொல்லப் பட்டிருக்கிறது.
அதாவது, தடாகம் என்பது விசேஷமாக அமைக்கப் பட்டத் தோட்டமும் நீர்நிலையும் கூடிய இடமாக இருக்கிறது. அழிந்துவிட்ட தடாகங்கள், கிணறுகள், மற்றும் குளங்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய உதவுபவன் உலகில் உள்ள ஜீவராசிகளை காப்பதின் புண்ணியத்தைப் பெறுகிறான்.
=======================================

தண்ணீரை எப்படி பாதுகாக்கலாம் என்று வேதங்கள் கூறுகின்றன? இதையேதான் நாமும் இன்றும் சொல்லி (மட்டும்) கொண்டிருக்கிறோம்.

நீர்நிலைகளில் கிணற்றில் எச்சில் துப்புவதோ, குப்பைகளைப் போடுவதோ கூடாது.
நீர்நிலைகளுக்கு அருகில் மலஜலம் கழிப்பது பாவச் செயல். (சென்னையின் முகமாக கூவம் இருக்கும் கதியை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்)

வீடுகளுக்கான உபயோகத்திற்கு என்று இந்த நீர் நிலைகளில் இருந்து தினமும் தேவையான அளவுக்கு நீர் சேகரிக்க வேண்டும். அன்றைய தேவைக்கு போக மிகுந்ததை மறுநாள் காலை மீண்டும் நீர் நிலையிலேயே விட வேண்டும். (கொசு உற்பத்தி தவிர்க்கப்படுகிறது)

ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒருமுறை மக நட்சத்திரம் கூடிய நாளில் நீர்நிலைகளை தூர் வார வேண்டும் (மகாமகம் உற்சவமாகிப் போனது)

நீரில் மண் / சகதி முதலியவற்றை வீசக் கூடாது.

நலமறிய ஆவல் - அகநாழிகைக்கு நன்றி

காலம்னிஸ்ட் வி.கங்காதர்


ஒரு சமயத்தில் வி.கங்காதர்-ரின் பத்திகள் (column) படிக்கவே ஹிந்து படிக்க ஆரம்பித்தேன். நாளடைவில், ஹிந்துவில் உள்ள ரசனையான ஆங்கில எழுத்து நடை என்னை ஹிந்து பத்திரிகை அடிக்ட் ஆக்கி விட்டது.

அப்படி என்னையும் தினசரி பத்திரிகை வாசிப்பவளாக ஆக்கிய வி. கங்காதர் அவர்களுக்கு இந்த போஸ்ட் சமர்ப்பணம்.

அவருடைய பத்திகளில் சில இங்கே படிக்கக் கிடைக்கும்.
rediff.com: V Gangadhar's home page

V. Gangadhar – Slice of Life Archive : Hindu Sutra

A question of age:The best way to delay ageing is to accept it, says V Gangadhar
திரு.வி.கங்காதர் ஹிந்துவில் slice of life என்ற தலைப்பில், இயல்பான பேச்சு நடையிலேயே வரும்.

ஒவ்வொன்றும் நமக்கு மென்மையான கிண்டல் உணர்வும், அப்படியே இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து பின்னால் சாய்ந்து கொண்டு விட்டத்தை பார்த்து ஒரு மெல்லிய புன்னகை வரவழைக்கும் nostalgic அனுபவங்களையும் பற்றி எழுதி இருப்பதில், எனக்கு மிகவும் பிடித்த சில பத்திகள், தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, முறுக்கு, மாங்காய் சாப்பிடுதல் போன்றவை பற்றி எழுதி இருப்பன.

இவரைப் பற்றி இன்னும் எழுத வேண்டும் என்றுதான் ஆசை. கைகடிக்கும் கடிகார முட்கள். என் சேகரிப்பில் இருக்கட்டும் இப்போதைக்கு என்று சிலவரிகளைக் குறித்துள்ளேன். இன்னும் விரிவாக இவரது பத்திகளை, தகுந்த அனுமதி பெற்று, மொழிபெயர்த்து பகிர்கிறேன்.

களைத்த நாயின் குரல்

மதோசா மாவு

இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்

"A free race cannot be born of slave mothers."

by MARGARET SANGER

ஏய் நீ கேளேன்...

முந்தாநேத்து பிரேமானந்தா, நேத்து கல்கியானந்தா, இன்று நித்தியானந்தா, நாளை ஒரு சதியனந்தாவோ... சத்தியானந்தாவோ

வெயில் நாலு டிகிரி உயர்ந்து விட்டதையும், இனிமேல் வெயில்தான்- இனி எந்த சாக்கு போக்கும் இல்லாமல் சாலை இல்லாத கிராமங்களுக்கு, சாலைப் பணிகள் ஆரம்பிக்கலாம் என்பதையும் மறந்து, தீடீரென்று முளைத்து விட்ட "குடிசை இல்லா தமிழ்நாடு" பற்றிய கேள்விகள் எதுவும் கேட்கத் தோன்றாமல்,  தமிழ்நாட்டில் ஆளும்கட்சியின் குளறுபடிகளையும், பட்ஜெட்டில் பொருளாதாரம் சறுக்கி அதல பாதாளத்தில் விழுந்ததையும், பெட்ரோல் விலை உயர்வையும், எக்சைஸ் டூட்டியையும்,  தங்கத்தில் கொசுறை குரைத்து வெள்ளியில் மலைபோல வரியை ஏற்றியதையும், coal போன்ற மூலப் பொருட்களின் மீதான செஸ் உயர்வு வரும் நாட்களில் தொடர் சங்கிலியாக விலையேற்றத்திற்கு வழி வகுத்திருப்பதையும் யோசித்துக் கூட பார்க்க முடியாத படி, உணவு பற்றாக்குறையையும், உணவுப் பொருட்களின் மீதான பாதுகாப்பு, விவசாயிகள் வாழ்க்கைத் தர உயர்வோ, வேலையின்மை மீதான எந்தவொரு குறிப்போ, பொறுப்போ இல்லாத பட்ஜெட் பற்றிய விவாதங்கள் ஏதும் நிகழாமல், "யார் அவ" என்றறிவதிலேயே நம் வேலைகளை விட்டு கவனிக்க ஆரம்பிக்கிறோம்.  குறைந்த பட்சம் தமிழ் பதிவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த "விண்ணைத்தாண்டிவருவாயா" படத்துக்கு இப்படி ஒரு நீலப் படம் போட்டியாக வரும் என்று கனவிலும் கூட நினைத்திருப்பாரா கௌதம்மேனன்.

அடுத்தவன் படுக்கையறையை எட்டிப் பார்ப்பதில் அவ்ளோ ஆர்வம். குழந்தைகளும் மருமகள்களும் வீட்டில் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து நாம் நடுக்கூடத்து எல்சீடீயில் லீலைகளை பார்த்து "அடப்பாவி" என்று சொல்லிக் கொண்டே சன் டிவியை மாற்றாமல் முக்கியமான காட்சிகளை மனப்பாடம் ஆகும் வரை ஒளிபரப்பாகும் போதெல்லாம் பார்த்துக் கொள்கிறோம். "மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு" என்று சின்னதாய் ஒரு ரன்னர் ஓடாத குறையைத் தவிர வேறேதும் இல்லை...

 கடந்த எட்டு வருடத்தில் இந்தியப் பொருளாதாரம் கன்னாபின்னாவென்று முன்னேறிவிட்டதாம்.... புள்ளைக்கு படிப்பு சொல்லித்தந்து, இதோ சாதமும் ஊட்டி, தூங்க வைத்து  விட்டு தான் நான் இந்தப் பதிவு எழுதுகிறேன் என்பதையும் சொல்லிக்கிறேன். : ) )

என்னவோ போடா மாதவா...