எங்கே செல்லும் - தொடர்கதை - கடைசி பாகம்

டிஸ்னியின் பௌகுகொண்டாஸ்-ஸும் ஜேம்ஸ் காமேரூனின் அவதாரும்

என்னவோ போடா மாதவா..
Pocahontas = Avatar
original post




..

குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்

குழந்தைகளுக்கான (0 முதல் ஏழு வயது வரை மட்டும்) தமிழ் easy reading வகை புத்தகங்கள் அதிகம் வருவதில்லையே என்று ரொம்ப நாளாகவே யோசித்தது உண்டு.  என் அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளுக்கான வலைப்பூ நாற்றங்கால் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அவரின் அறிவுரைப்படி ஏழு பக்கங்கள் கொண்ட மின்னூலாக, வரும் மார்ச்-2010 முதல், நாற்றங்கால்-லில் வாயிலாகவே வாராவாரம், இலவசமாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

இதில்: 
1. படமும் பாடலும் - Tamil Nursery Rhyme
2. எளிமையான நன்னெறிக் கதைகள் - Moral Stories based on various folk stories (இதைக்  குழந்தைகளுக்குச் சொல்லும் மொழி நடையிலேயே எழுத வேண்டும் என்று ஆசை)
3. எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)
4. குழந்தைகளுக்கான புதிர்கள்
5. பட்டாம்பூச்சி பக்கம் (coloring page)
6. குழந்தைகளுக்கான தொன்மையான விளையாட்டுக்கள் பற்றிய அறிமுகங்கள்
7. சின்னச் சின்ன அறிவியல் செயல் முறைகள்

உங்கள் மேலான ஆலோசனைகளும் வேண்டுகிறேன். இந்த முயற்சியில் இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

நன்றி.

= =வித்யா

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் - ஆதி சங்கராச்சாரியார் அருளியது

॥ शारदाभुजङ्गप्रयाताष्टकम् ॥
|| śāradābhujaṅgaprayātāṣṭakam ||
written by śrī ādi śaṅkarācārya
சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம்
Eulogy on Sarasvati
Saradha Bhujangam
============================================================================
सुवक्षोजकुम्भां सुधापूर्णकुंभां
प्रसादावलम्बां प्रपुण्यावलम्बाम् ।
सदास्येन्दुबिम्बां सदानोष्ठबिम्बां
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ १ ॥
suvakṣojakumbhāṁ sudhāpūrṇakuṁbhāṁ
prasādāvalambāṁ prapuṇyāvalambām |
sadāsyendubimbāṁ sadānoṣṭhabimbāṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 1 ||
ஸுவக்ஷோஜகும்பாம் ஸுதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதா வலம்பாம் ப்ரபுண்யா வலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதாநோஷ்ட பிம்பாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who holds two beautiful pots which are filled with ambrosia-like nectar, Who is the support of benevolence, Who is the support of blissful deeds, Whose face is adorned by a servant-like moon, Who has red lips which are full of giving-quality, Who is perpetual, and is my Mother.||1||
கும்பமுடையவளும், அம்ருதம் நிரம்பிய கும்பத்தை கையில் உடையவளும், அருளாகிய பிடிப்பு உடையவளும், புண்யம் வாய்த்தவராலே மட்டுமே அறிய முடிந்தவளும், கொடுக்கிறேனே என்ற சொல்லுடன் கூடிய கோவைப்பழமொத்த உதடு உடையவளுமான எனதன்னை ஸ்ரீசாரதாம்பாளை சேவிக்கிறேன்.
============================================================================
कटाक्षे दयार्द्रो करे ज्ञानमुद्रां
कलाभिर्विनिद्रां कलापैः सुभद्राम् ।
पुरस्त्रीं विनिद्रां पुरस्तुङ्गभद्रां
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ २ ॥
kaṭākṣe dayārdro kare jñānamudrāṁ
kalābhirvinidrāṁ kalāpaiḥ subhadrām |
purastrīṁ vinidrāṁ purastuṅgabhadrāṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 2 ||
கடாக்ஷே தயார்த்ராம் கரே ஜ்யானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபை:ஸுபத்ராம்
புரஸ்த்ரீம் விநித்ராம் புரஸ்துங்கபத்ராம்
பஜேசாரதாம்பாமஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who has merciful sympathy in Her glance, Who possesses knowledge in Her hands, Who is awakened with respect to art-forms, Who is adorned by a beautiful bell-garland at the waist, Who is the first (woman), Who is sleepless, Who is the leading beautiful, Who is perpetual, and is my Mother.||2||
கடைக்கண்ணில் கனிவுகொண்டவள், கையில் ஞான முத்திரையும், கலைகளின் ஞானம் அருள்பவளும், செயல்பாடுகளில் நல்லவற்றையும் கொண்ட கண்காணிப்புள்ள பதிவ்ரதையாயும், உயரிய நல்லவற்றையே தன் முன்னே காண்பவளாயும் இருக்கிற என தன்னை ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.
============================================================================
ललामाङ्कफालां लसद्गानलोलां
स्वभक्तैकपालां यशःश्रीकपोलाम् ।
करे त्वक्षमालां कनत्प्रत्नलोलां
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ३ ॥
lalāmāṅkaphālāṁ lasadgānalolāṁ
svabhaktaikapālāṁ yaśaḥśrīkapolām |
kare tvakṣamālāṁ kanatpratnalolāṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 3 ||
லலாமாங்கபாலாம் லஸத்கானலோலாம்
ஸ்வபக்தைகபாலாம் யச:ஸ்ரீகபோலாம்
கரேத்வக்ஷமாலாம் தநத்ப்ரத்னலோலாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who has beautiful curved sides (from hips to breasts) like a plough-head, Who has a tongue resounding with songs, Who is the unique (polymorphic supreme deity) nourisher of Her devotee, Who has cheeks resplendent with glory and surreal wealth, Who possesses energy-garlands in Her hands, Who has tongue resounding with traditional verses, Who is perpetual, and is my Mother.||3||
நெற்றியில் சிறந்த திலகம் கொண்டவள், நல்ல கீதத்தில் ஈடுபாடுள்ளவள், தனது அடியார்களைப் காப்பவள், புகழ் அழகுடன் ளிரும் கன்னங்கள் உள்ளவள். கையில் ஜபமாலை, தெளிவான பழமையில் நேசமும் கொண்டவள், அத்தகைய எனதன்னை ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.
============================================================================
सुसीमन्तवेणीं दृशा निर्जितैणीं
रमत्कीरवाणीं नमद्वज्रपाणीम् ।
सुधामन्थरास्यां मुदा चिन्त्यवेणीं
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ४ ॥
susīmantaveṇīṁ dṛśā nirjitaiṇīṁ
ramatkīravāṇīṁ namadvajrapāṇīm |
sudhāmantharāsyāṁ mudā cintyaveṇīṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 4 ||
ஸுஸீமந்த வேணீம் த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத்வஜ்ரபாணீம்
ஸுதாமந்தராஸ்யாம் முதா சிந்த்ய வேணீம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who is adorned by a beautiful parting of the hair-braid, Who has an eyes which lure an antelope (deer-like-eyes), Who has an enticing voice like a parrot, Who is reverred by Indra (holder of Vajra (thunderbolt) in hand)¹, Who has a hair-braid which can be meditated upon with happiness, Who is perpetual, and is my Mother.||4||
நல்ல வகிடும், பின்னலும் கொண்டவள், கண்பார்வை காரணமாக மான்களை விஞ்சியவள், அழகிய கிளிப்பேச்சுள்ளவள். இந்திரன் வணங்க, அம்ருத பாணத்தால் தெளிவு கொள்ளாத முகபாவமுடையவள், கரைபுரண்டோடும் மகிழ்ச்சி கொண்டவள். அத்தகைய ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.
============================================================================
सुशान्तां सुदेहां दृगन्ते कचान्तां
लसत्सल्लताङ्गीमनन्तामचिन्त्याम् ।
स्मरेत्तापसैः सङ्गपूर्वस्थितां तां
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ५ ॥
suśāntāṁ sudehāṁ dṛgante kacāntāṁ
lasatsallatāṅgīmanantāmacintyām |
smarettāpasaiḥ saṅgapūrvasthitāṁ tāṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 5 ||
ஸுசாந்தாம் ஸுதேஹாம் த்ருகந்தே கசாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனந்தா மசிந்த்யாம்
ஸ்ம்ருதாம் தயஸை:ஸர்க பூர்வதிதாம் தாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who is serene, Who is with a beautiful body, Whose tress-locks fall at the end of the eyes, Who has flashing creepers like organs (curvy), Who is immeasurable and unthinkable, Who is remembered by sages with devotion according to traditions, Who is perpetual, and is my Mother.||5||
நல்ல அமைதியும், உடல்வாகும் கொண்டவள், கண் முடிகின்ற இடத்தில் கேசம் முடிவதும், கொடி போன்ற அங்கம் அமைந்தும் இருப்பவள். இவ்வளவு என்றோ, இப்படி என்றோ சொல்ல முடியாதவள். முனிவர்கள் தியானம் செய்யப்படுபவள், பிரம்மன் படைப்புக்கு முன்னமே இருப்பவள். அத்தகைய அன்னை சாரதாம்பாளை சேவிக்கிறேன்.
============================================================================
कुरङ्गे तुरंगे मृगेन्द्रे खगेन्द्रे
मराले मदेभे महोक्षेऽधिरूढाम् ।
महत्यां नवम्यां सदा सामरूपां
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ६ ॥
kuraṅge turaṁge mṛgendre khagendre
marāle madebhe mahokṣe'dhirūḍhām |
mahatyāṁ navamyāṁ sadā sāmarūpāṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 6 ||
குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே மஹோக்ஷேsதிரூடாம்
மஹத்யாம் நவம்யாம் ஸதாஸாமரூபாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

I sing praise of Mother Sharada, Who sits on a deer, a horse, a lion, a Garuda, a swan, an elephant and a bull (in various forms), Who is great, Who is in nine-forms², Who is always dispassionate (or views everyone equally), Who is perpetual, and is my Mother.||6||
மான் மீதும், குதிரை மீதும், சிங்கத்தின் மீதும், கருடன் மீதும், அன்னத்தின் மீதும், யானை மீதும், விருஷபத்தின் மீதும் ஏறப் பயணிப்பவளும் மஹாநவயன்றும் எப்பொழுதும் ஸாம் வேத ஸ்வரூபிணியாக இருப்பவளுமான அன்னை சாரதாம்பாளை சேவிக்கிறேன்.
============================================================================
ज्वलत्कान्तिवह्निं जगन्मोहनाङ्गीं
भजे मानसाम्भोजसुभ्रान्तभृङ्गीम् ।
निजस्तोत्रसंगीतनृत्यप्रभाङ्गीं
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ७ ॥
jvalatkāntivahniṁ jaganmohanāṅgīṁ
bhaje mānasāmbhojasubhrāntabhṛṅgīm |
nijastotrasaṁgītanṛtyaprabhāṅgīṁ
bhaje śāradāmbāmajasraṁ madambām || 7 ||
ஜ்வலத்காந்திவஹ்னீம் ஜகன்மோஹனாங்கீம்
பஜே மானசாம்போஜாசுப்ராந்தப்ருங்கீம்
நிஜஸ்தோத்ரசங்கீதந்ருத்யப்ரபாங்கீம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்
I sing praise of Mother Sharada, Who is resplendent like a burning fire, Who is adorned by the universe, Who is like a beautiful wandering bumble-bee for the lotus like heart of ours, Who is resplendent with the dance and the music of Her own eulogies, Who is perpetual, and is my Mother.||7||
ஒளிரும் ஜ்வாலைக்கு ஒப்பான ஜோதியுடையவளும்,
============================================================================
भवान्म्भोजनेत्राजसंपूज्यमानां
लसन्मन्दहासप्रभावक्त्रचिह्नाम् ।
चलच्चञ्चलाचारूताटङ्ककर्णो
भजे शारदाम्बामजस्रं मदम्बाम् ॥ ८ ॥
bhavānmbhojanetrājasaṁpūjyamānāṁ
lasanmandahāsaprabhāvaktracihnām |
calaccañcalācārūtāṭaṅkakarṇo
bhaje śāradāmbāmajasraṁ madambām || 8 ||
பவாம்போஜநேத்ராஜ ஸம்பூஜ்ய மாநாம்
லஸன்மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சின்ஹாம்
சலச்சஞ்சலா சாருதாட ங்ககர்ணாம்
பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்

பிரஹ்ம விஷ்ணு மகேச்வரர்களால் பூஜிக்கப்பட்டவள், அழகிய புன்முறுவலையே முகத்தின் அடையாளமாக உடையவள். அசையும் மின்னலெனத் தோன்றும் காதணி கொண்டவள். அத்தகைய சாரதாம்பாளை எனதன்னையை சேவிக்கிறேன்.
============================================================================
॥ इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य
श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य
श्रीमच्छङ्करभगवतः कृतौ
शारदाभुजङ्गप्रयाताष्टकं संपूर्णम् ॥
|| iti śrīmatparamahaṁsaparivrājakācāryasya
śrīgovindabhagavatpūjyapādaśiṣyasya
śrīmacchaṅkarabhagavataḥ kṛtau
śāradābhujaṅgaprayātāṣṭakaṁ saṁpūrṇam ||
இதி ஸ்ரீமத்பரமஹம்சபரிவ்ராஜாகாசார்யாஸ்ய
ஸ்ரீகோவிந்தபகவத்பூஜ்யபாதசிஷ்யஸ்ய
ஸ்ரீமச்சங்கரபகவத: க்ருதௌ
ஸாரதாபுஜங்கப்ரயாதாஷ்டகம் சம்பூர்ணம்
சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் முற்றிற்று.
============================================================================

கூத்தாய் போன கூத்து

சொந்த அனுபவம்தான், வேறென்ன. சும்மா சிரிக்கத்தான்.


நம்ம துளசி (கோபால்) மேடம் போடும் படமெல்லாம் பாத்துப் பாத்து எனக்கும் கொசுவத்தி புகை மூட்டமாகி, கண்ணெல்லாம் இருட்டி, தொண்டை எரிந்து, இருமி, தும்மி, கண்ணீர் வழிந்து ......... நாங்கல்லாம் "சின்னப்ள---யா"  "கூத்து கட்டிய" காலங்கள் நினைவுக்கு வந்தது(நானும் ரவ்டீதான்).


துளசி மேடம்! நீங்க கோபால் சாரை கன்னடத்து பைங்கிளி மாதிரித்தானே கூப்பிடுவீங்க!! எங்க! நானும் கேட்கட்டும்..
=========================================
எங்க நண்பர்கள் குழுவில் மொத்தம் பிரபா(கர்), (பால)மணி(கண்டன்), கன்னி(கா-பரமேஸ்வரி), கவி(தா), சம்ஸு(தீன்), (இவர்கள் எல்லாம் பாடகர்கள்) அலோ(சியஸ்) - கிடார் வாசிப்பான், பரத்(தன்) - ட்ரம்மர், மற்றும் நான் (வயலின்) என்று மொத்தம் எட்டு பேர்.


வழக்கமா ஸ்கூல் பங்க்ஷன்ல மட்டும் "வோகல் குரூப் - "பறவைகள்" ஆக பாடிட்டு 'சிவனே'ன்னு இருந்துவிட்டு போன எங்களுக்கு திடீர்னு நாடகம் போடணும்னு ஆசை வந்தது. நாடகம்னா மேடை வேணும், அலங்காரம் பண்ணத் தேவையான பூஷண ஆபரண ஆடை இத்யாதிகள் எல்லாம் வேணுமேன்னு யோசித்து கொண்டே இருக்கும் போது, எங்கள் நண்பர்கள் குழுவிலேயே "சிகப்பழகன்" ஹீரோ சம்சுதீன் "முதல்ல நாடகம் எழுத வேண்டாமா??? எதுக்கு இந்த வெட்டி வேலை. பரீட்சைக்கு படிக்கலாம் வாங்க"ன்னு குண்டை தூக்கிப் போட்டான்.


அப்புறம் யாருக்கும் என் பேச்சு எடுபடலை. கால்பரீட்சைக்கு ரொம்ப நாள் கழித்து, டிசம்பர் கடைசியில் நடக்கும் கல்சுரல் விழா மற்றும் "கலை" போட்டி அறிவிப்பு வந்தது.

திடீர்னு சம்சுவே 'ஹே.. விதூ நல்ல ஐடியா கொடுத்தாடா. நாமெல்லாம் ராமாயணம் ட்ராமா போடலாம்" அப்டீனான்.


"நான்தான் தசரதன்" என்றான் அலோ..

"ஐ ஆசையைப் பாரு.. அது நான்தான்" என்றான் பரத்.

"சிம்மாசனம்லாம் வேண்டாமா.. ரொம்ப செலவாகுமே" இது கன்னி.

எருமைமாடு(கள்) மேல மழை பெஞ்சா மாதிரியே உட்காந்திருந்தோம் நானும் கவியும்.

"விச்வாமித்திரரோட கமண்டலம், மகுடம், ஜடை முடி எல்லாம்... கன்னி இன்னும் அடுக்கிக் கொண்டே இருந்தாள்.

"வழக்கம் போல மைக் மோகன் பாட்டு எதாச்சும் பாடிட்டு போயிர்லாம்டா." என்றான் பிரபாவும் மணியும்.

ராமாயணத்துக்கு ரொம்ப செலவாகும் போல இருந்ததால் கைவிடப்பட்டது. ஆனாலும் கூத்துகட்டும் ஆசை மட்டும் விடவே இல்லை. தினமும் லைப்ரரியிலேயே "பட்ஜெட் நாடகம்" எதுவென்று தேடுதல் வேட்டை நடந்து கொண்டே இருந்தது. எங்க பட்ஜெட்டுக்கு  தகுந்த மாதிரி ஒத்த பைசா செலவே இல்லாம நடத்தும்படியான நாடகம் மட்டும் கிடைக்கவே இல்லை. பாரதிதாசன் யுனிவெர்சிட்டி நூலகத்தில் தேடச் சொன்னார் தமிழாசிரியை "பன்னீர்" செல்வி (பெயர் காரணம் அறிய இங்கே பார்க்கவும்) தன்னுடைய அடையாள அட்டையையும் கொடுத்து உதவினார்.



நூலகரிடம் "சார்.. கொஞ்சம் புஸ்தகம் வேணும். ஹெல்ப் பண்றீங்களா" என்று கேட்டேன் நான்.

அவர் பார்த்த பார்வையில் எள்ளல் தெரித்தது. "புக் பேரு தெரியுமா... இனிமேதான் வைக்கப் போறீங்களா" என்றார்.

"ஷேக்ஸ்பியர்" என்றேன்...

"அவர் புத்தகம் எழுதறவருமா.. ஷேக்ஸ்பியர் ஆட்டோபயகிராபி ஏதும் இல்லையே" என்றார் சிரித்தபடி...

அவமானம் தாங்காமல் என் கருப்பான முகம் சற்றே சிவந்தது (இதைத்தான் ஆங்கிலத்தில் ப்லஷிங் என்பார்களோ!) "சார். நாங்க "ச்சூள்ள" ஒரு டிராமா போடலாம்னு இருக்கோம். கம்மி பட்ஜெட்ல, அதாவது பட்ஜெட்டே இல்லாம ஒரு ட்ராமா ஐடியா கொடுங்க சார் ப்ளீஸ்" என்றேன்.


அவரும் இன்று போய் நாளை வான்னு அனுப்பிட்டார். வேலை முடிந்தது என்பது போன்றான நம்பிக்கை எங்களுக்குள் வந்தது.
இரண்டு வாரம் ஓடிப்போச்சு. அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் நாங்களே படையெடுத்தோம். லீவில் அவர் புறமுதுகிட்டு ஊரை விட்டே ஓடிப் போனாதாக சொல்லப் பட்டது. வீராவேசமாக பேரு வேற கொடுத்தாச்சேன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலை.

கடைசியில் உலகமே கைவிட்டுவிட, 'சுப்பாண்டியின் சாகசங்கள்' வருமே, அதையே தொகுத்து ஒரு பத்து நிமிஷ டிராமாவா மாத்தினோம். மொத்தம் மூன்று பேர்தான் நடிக்க. 

மணி சுப்பாண்டியாகவும், கன்னி வீட்டுத் தலைவியாகவும், நம்ம ஹீரோ சம்சு தாத்தாவாகவும் நடிப்பதென முடிவானது. பின்னணி இசை நானும் (வயலின்) ட்ரம்மர் பரத்து கிட்டாரிஸ்ட் அலோ....  எல்லோரும் அவங்கவங்க வேலையை மனப்பாடம் செய்து கொண்டு தயாரானோம். 


அந்த நாளும் வந்தது. சுப்பாண்டி பப்ளிக் பார்க்கில் செய்யும் அட்டகாசங்கள் பற்றிய டிராமா.. திரை விலக, புடவையில் கன்னிகா செட்டில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து இருப்பது போல முதல் சீன். 

மைக்கில் டீச்சர் அறிவிச்சாங்க... வழக்கமா பாட்டு பாடி கலக்கும் "பறவைகள்" டீம் இன்று ட்ராமா ஒன்றை தானே எழுதி அரங்கேற்றப் போறாங்க. என்றதும், பயங்கர கைத்தட்டல். "இப்போது "அசோகவனத்தில் சீதை" என்ற நாடகத்தை பார்க்கப் போறீங்க என்றார் பாருங்கள்....


வேற வழி பத்து நிமிஷ டிராமா முழுதும் கன்னி மட்டும் உட்கார்ந்து தனியாவே சீதை வசனமெல்லாம் எதுவும் நினைவுக்கு வராமல் அழுது கொண்டே "ஜானகி தேவி ராமனைத் தேடி ... " என்று விசு படத்தில் வரும் பாட்டை "கமலா காமேஷ்" குரலிலேயே பாட, அது கூட "ராமன் வந்தான் மயங்கி விட்டாள்" என்ற வரிக்கு பிறகு மறந்து போய் திரும்பத் திரும்ப அதே வரியையே பாடிக் கொண்டிருந்தாள். மீதிப் பாட்டு ராகம் கூட தெரியாமல் நான் பின்னணியில் "விவித்பாரதி"யில் தலைவர்கள் செத்தால் அஞ்சலி செலுத்தும் போது வாசிக்கும் சோக இசையை தனியாவர்த்தனமாக வயலினில் வாசிக்க, கல்சுரல்லில் தோத்துட்டோம் என்று மேடைக்கு நடுவில் வந்து நின்று கொண்டு மணி அறிவிக்க, பயங்கர கடுப்பில் சம்சு முதுகில் "வாசிக்க" ட்ரம்மர் பரத் காத்துக் கொண்டே இருந்தான்...





...

சாலையோரம் - தொடர் இடுகை

தட்டிலேயே மிஞ்சிய சோற்றுப்பருக்கைகள்

வனங்கள் - 3

மணற்துகளின் முனை உடைந்திருக்கிறது

மாமியும் தமிழ் சைன் போர்டும்


ரிக் வேதத்தில் பொங்கல் திருநாள்

போகிப் பண்டிகை - ஜனவரி 13-2010, புதன்கிழமை, மார்கழி 29, விரோதி ஆண்டு
பொங்கல் மற்றும் தை அமாவாசை - ஜனவரி 14, 2010, தை 1, விரோதி ஆண்டு, வியாழக்கிழமை
மாட்டுப் பொங்கல் - ஜனவரி 15, 2010, தை 2, விரோதி ஆண்டு வெள்ளிக் கிழமை
=================================
ரிக் வேதத்தில் சொல்லப் பட்டுள்ள மஹா விரதம்

ஒரு வருடம் முழுதையும் குறிக்கும் கவ மாயன சாத்திரம் (கவ = பூமி, மாயனம் = சூரிய மண்டல சுழற்சியில் மாற்றம் ஏற்படுவது) என்ற நாளுக்கு முதல் நாளே மஹா விரதம். விஷுவத் (விஷு) என்று சொல்லப்படும் நாள் பனிக்காலம் முடிந்து சூரியனின் முழு வெப்பமும் பூமிக்கு கிடைக்கும் நாளாக கொண்டாடப் படுகிறது. இன்று செய்யப்படும் கொண்டாட்டங்கள் மூலம் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றும், பின்பனி விரைவில் விலகி தாவரங்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்பப் படுகிறது.

தொன்மை நாட்களில், போர் வீரர்கள் இறந்த பசுவிலிருந்து எடுக்கப் பட்ட மாட்டுத் தோல் மீது தம் அம்புகளைத் தீட்டுவார்கள். பின் அந்தத் தோல் கொண்டு முடையும் பறையில் ஒலி எழுப்பி ஒலிக்கேர்ப்ப நடனம் புரிந்தும், பிராமணர்கள், ஆரியர்கள் மற்றும் சூத்திரர்களுக்கு இடையே மல்யுத்தம், வாட்போர், விற்போர், வேதங்கள் உரைத்தல், பேச்சு, கல்வி, கவிதை புனைதல், பாடல், நடனம், மந்திர ஜாலங்கள் செய்தல் போன்ற போட்டிக்களை நடத்தியும் கொண்டாடப் பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தாம் தற்போது புரியும் தொழிலை விட்டு அதை விட ஒரு உயர்ந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று குறிக்கப் பட்டுள்ளது. தொழில் அடிப்படையில் க்ஷத்திரிய ஆரிய சூத்திரர்கள் அதாவது பிராமணன் வென்றால் க்ஷதிரியத் தொழிலையும், ஆரியன் வெற்றி பெற்றால் பிராமணத் தொழிலையும், சூத்திரன் வென்றால் ஆரியத் தொழிலையும் செய்ய வேண்டும் என்று பணித்தார்கள். தோற்றவர்களுக்கு depromotion கொடுத்து அந்ததந்ததொழிலை மேற்கொள்ள வேண்டும்.

மஹா விரதம் என்ற இந்தத் திருநாளை கலாச்சார மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்குமான நாளாகவும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்து, திறமைகளை கண்டறியும் நாளாகவும் கொண்டாடப் பட்டு வந்தன. இந்தியா முழுவது, பைசாக்கி, விஷு, ரோஹ்ரி, போகலி பிஹு, போகிப் பொங்கல், என்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஒரு பெரிய மாற்றம் தரும் நாளாகவே இருக்கின்றது. அதைத்தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றும் சொன்னார்களோ என்னவோ?

ஐத்திரேயம், ஆரண்யகம் என்பது ரிக் வேதத்தில் முக்கியமான பகுதிகள் ஆகும். ஆரண்யகத்திற்கு மூன்று புத்தகங்கள்.

முதல் புத்தகத்தில் "கவ மாயன" மஹா விரத நாளைக் கொண்டாடப்பட வேண்டிய வழி முறைகளையும், அன்றைய தினம் விடியற்காலை, மதியம் மற்றும் மாலையில் செய்ய வேண்டிய செயல்களை சாத்திரமாகவும் ரிக் வேதத்தில் பதியப் பட்டுள்ளது.

இரண்டாம் புத்தகத்தில் அன்றைய தினம் நடக்கும் (உக்தம்) கூத்து முறைகள் (பூதங்கள்/மிருகங்கள் வேஷம் கட்டி நன்னெறி நாடகங்கள் நடத்துதல்), புராணக் கதைகள் சொல்லுதல், வில்லுப் பாட்டு, போன்றவைகளை "நிஷ்கேவல்ய சாஸ்திர உபநிஷத்" என்று சொல்லப் பட்டுள்ளது.

மூன்றாம் புத்தகத்தில் பூடகமான ஞானம், ஆன்மிகம், மறைபொருள் சாஸ்திரம், ஆகியவற்றின் நேரடி அர்த்தங்கள் நிர்பூஜம், பிரார்த்தனா, உபயமந்திரேனா என்று சம்ஹிதப்பதம் மற்றும் க்ரமப்பத சம்ஹிதைகளாக கொடுக்கப் பட்டுள்ளன. இதில் உள்ள vowel, semi vowel, consonant இலக்கண முறைகளைக் கண்டறியும் போது விவரிக்கவே முடியாத அற்புத உணர்வு ஏற்படும். நாம் கற்றது கை மண்ணாவது ஒன்றாவது, சுண்டு விரலில் துளியூண்டு ஒட்டிக் கொண்டு இருக்குமே அந்த அளவு கூட இல்லையென்றும் உணர்வோம்.

ஆரண்யகம் என்ற புத்தகம் காடு, வனங்கள் (ஆரண்யம்) போன்ற தனிமையான இடங்களில் வாழ நேர்ந்தால் தனி மனிதன் தன்னம்பிக்கையோடும், வாழ்க்கை மீதான நம்பிக்கை இழக்காமலும், தனிமையை வென்றும் வாழும் முறைகளை பற்றியது. சௌனக மகரிஷி கி.மு. 500-இல் எழுதியதாக நம்பப்படும் இப்புத்தகம் நூறு வருடங்கள் கழித்து பாணினியால் மீட்கப் பட்டதாக நம்பப் படுகிறது. (சான்று A.B.Keith, 1909, Aitareya Aranyaka, Oxford, Clarendon Press)

மஹா ன் பவதி அனேன வ்ரதேன
ஓர் மாஹதோ தேவஸ்ய வ்ரதாம்
ஓர் மாஹக் ச தத் வ்ரதாம்
(சயன மகரிஷி உரைத்தது. ஐத்திரேய ஆரண்யகம் அத்தியாயம்-1, பாடல் வரி-1)

இதன் பொருள் "மஹா விரதத்தின் வழி முறைகள் இங்கே துவங்குகின்றன. இந்திரன் போர் வீரர்களுக்கான விரதங்களைக் கடை பிடித்து செல்வாக்குப் பெற்று அதிகாரியானான். அவன் அதிகாரத்தின் கீழ் இந்த மஹா விரதம் கடை பிடிக்கப் படுகின்றது.

ஐந்தாம் அத்தியாத்தில் இருபத்தைந்து வரிகளில் நெருப்பு ஏற்றப் படவேண்டிய முறைகளும், அக்னியைக் கொண்டாடும் முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. காலையில் (மாலை வரை) அக்னிஸ்தோமன் (சூரியன்) என்றும் மாலையில் சோமன் (நிலவு) என்றும் அக்னிஹோத்திரம் செய்யவேண்டிய முறைகளையும் பேசுகிறது. மஹா விரதம் பற்றி வேதங்களில் ஐத்திரேய ஆரண்யகம் மற்றும் சனகாயன ஆரண்யகம் இரண்டில் மட்டும்தான் குறிக்கப் பட்டுள்ளது. மஹா விரத்தன்று நடக்கும் செயல் முறைகளையும், வெற்றி பெற்றவர் / தோல்வி அடைந்தவரின் தொழில் மாற்றங்கள் குறித்த செயல்பாடுகளையும், அவர்களது அடையாளங்களையும் பரம இரகசியமாக வைக்கப் பட்டதாகவும் குறித்துள்ளனர்.

====================================================================

மகர சங்கராந்தி என்ற நாள் சூரியனின் பாதை northern hemisphere (மகர ராசி) நோக்கி இருப்பதைக் குறிக்கிறது. இதுவே உத்திராயன புண்ணியகாலத்தின் ஆரம்பமாகக் கருதுகின்றனர். இந்நாள் திருவிழாக்களின் துவக்கமாகவும் இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் சக்கரை மிட்டாய்கள், எள்ளுருண்டைகள், தானியங்கள் போன்றவற்றை இந்நாளில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர்.

குஜராத்தில் வீட்டுக்குத் தேவையான புதியன வாங்கியும், பட்டங்கள் விட்டும் கொண்டாடுகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் பகுதிகளில் லொஹ்ரி என்றும் கொண்டாடுகின்றனர்.

கர்நாடகாவில், கரும்பு, எள், வெல்லம், கொப்பரைத் தேங்காய், கடலை போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறார்கள்.

அஸ்ஸாமில் அக்னியை வணங்கும் தினமாகவும், பெங்காலில் "பித்தா" மிட்டாய்கள் செய்து, கங்கா ஸாகர் மேளாவைக் கொண்டாடியும் மகிழ்கின்றனர். ஆந்திராவில் போகியன்று கொலு வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தைப் பொங்கலும், ஜல்லிக்கட்டும், என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

ரத சப்தமி: சூரியனின் பாதையை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப் படும் இன்னொரு பண்டிகை ரத சப்தமி. சூரியன் தோன்றிய நாள் என்றும் நம்பப் படுகிறது. இன்றைய தினம் சூரிய பகவான் தன் ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் அமர்ந்து புதிய பயணத்தைத் துவக்குவதாகக் கருதுகின்றனர். சூரியனின் பன்னிரண்டு பெயர்களான மித்ரா, ரவி, சூர்யா, அஹானு, கங், புஷன், ஹிரண்யகர்ப்ப, மரீசி, ஆதித்யா, சவிதா, அற்கா மற்றும் பாஸ்கரா போன்ற பெயர்களை உச்சரித்தும், எருக்கம் இலையைத் தலையில் வைத்து நீர்நிலைகளில் மூழ்கியும் கொண்டாடுகின்றனர். இதன் தத்துவம் என்னவென்று தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன்.

விஷு / யுகாதி / சித்திரைத் திருநாள்

சித்ரா விஷு சூரியனை வணங்கும் இன்னொரு பண்டிகை. மேஷ ராசிக்கு சூரியன் வரும் நாள் என்று நம்புகின்றனர். இதை மிகவும் புனிதமாகவும் கருதுகின்றனர். இன்றைய தினத்தில்தான் பூமி உருவானது என்று நம்பப் படுகிறது. அதனால் இத்தினத்தை யுகாதி என்றும் கொண்டாடுகின்றனர். இன்றைய தினத்தில் பகவான் ஸ்ரீ ராமபிரான் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்றும் நம்புகின்றனர். வாழ்க்கையின் இனிமையையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் குறிக்கும் வண்ணம் வெல்லம், மாங்காய், வேப்பம் பூ கொண்டு பச்சடி செய்வது விசேஷம்.

பைசாக்கி

வடக்கில் பைசாக்கி. விளைச்சலுக்கும் புது தானியங்களுக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் நாள். இன்றைய தினம்தான் சீக்கிய குருமாரான மரியாதைக்குரிய குரு கோபிந்த் சிங் அவர்கள் பஞ்ச் பியரா என்ற அன்புக்குரியவர்களுக்கான ஜோதியை ஏற்படுத்தினார்.

=================
எந்தப் பெயரில் கொண்டாடினாலும், மனிதன் இயற்கையை மதித்து வணங்கவும், சமூகத்தில் எல்லோருக்கும் வாய்பளித்து சமநிலை விளங்கவும், சோர்வான குளிர் நாட்கள் முடிந்து பசுமையைக் கொடுக்கும் வெயில் காலம் ஆரம்பிக்கும் நாட்களைக் கொண்டாடி மகிழ்வதையே இப்பண்டிகை குறிக்கிறது.

டெக்னாலஜியை வைத்து இன்று நாம் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்ற நிலையிலேயே இருக்கிறோம். ஆனால் இயற்கையை??
====

நடப்பில் உள்ள பொங்கல் பண்டிகை

====

அமோக விளைச்சலைத் தந்து புதுத் தானியங்கள் கரும்பு என்று , பழையன கழிதலும், புதியன புகுதலும் நடைபெறும். வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டில் உள்ள பழைய பொருட்களை வீட்டின் முன் தீயிட்டுக் கொளுத்தி, அல்லவை அகன்று நல்லவை பெருக, வரும் ஆண்டு முழுவதும் மழை நன்றாகப் பெய்து உழவுக்கும், மக்களின் வாழ்வுக்கும் வளம் கிடைக்க வேண்டி இந்திரனை வணங்குவர். இதற்குப் பின்னணியில் ஒரு கதையும் உண்டு. போகிப் பண்டிகையன்று கண்ணனும், இடையர் குல மாந்தரும் கோவர்த்தன மலையை வணங்கி வழிபட்டனர். இதனால் இந்திரன் கோபமுற்றான். தன்னை வணங்காமல் கோவர்த்தன கிரியை வணங்குவதா? என்று சினம் கொண்ட இந்திரன், ஏழு மேகங்களை அனுப்பி மின்னல், இடி மற்றும் கன மழையை உருவாக்கினான். இதனால் இடையர்களும், நண்பர்களும் பீதியடைந்தனர். கண்ணன், கோவர்த்தன் மலையை அப்படியேத் தூக்கி குடையாக மாற்றி அதன் கீழ் அனைவரையும் வரச் செய்து, மழை, இடி, மின்னலிலிருந்து நண்பர்களையும், இடையர்களையும் காத்தார் கிருஷ்ணன். இதைக் கண்டு பயந்துபோன இந்திரன், கிருஷ்ணரிடம் வந்து தன்னை மன்னிக்க வேண்டினான். அதனை ஏற்ற கிருஷ்ணர், இந்திரனை மன்னித்ததோடு போகியன்று இந்திரனை மக்கள் வணங்கலாம் என்று ஆசிர்வதித்தார்.

அழகான வண்ணக்கோலங்கள் இட்டு, கலர்பொடிகள் கொண்டு அலங்கரித்து, நடுவில் சாணி உருண்டையில் பூசணிப் பூ சொருகி வாசல்கள் களை கட்டும் நாள்.

இரண்டாம் நாள் பொங்கல். சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தல். புது அரிசி கொண்டு பொங்கப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு நிவேதனம் செய்து எல்லாம் புதிதாகவேத் துவங்கப் படும் தை முதல் நாள்.

இன்றைய தினம் தான் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கல் யானைக்கு உயிர் கொடுத்து கரும்பு தின்றதாக கல்வெட்டு பேசுகிறது.

மாட்டுப் பொங்கல் அன்று மாடு, காளைகளுக்கு நன்றி சொல்லும் தினம். மஞ்சு விரட்டு ஜல்லிக் கட்டு என்று இளைய சமுதாயம் கொண்டாடும் ஆர்பாட்டமான நாள்.

இதே நாளில் காணும் பொங்கல், கனுப் பொங்கல் என்று வித விதமான வண்ணங்களில் (சர்க்கரைப் பொங்கல் (அரக்கு), வெண்பொங்கல் (வெளிர் மஞ்சள்), மோர் சாதம் (வெள்ளை), எலுமிச்சை சாதம் (மஞ்சள்), கருவேப்பிலை சாதம் (பச்சை), எள்ளு சாதம் (கருப்பு), சாத உருண்டைகள் பிடித்து மஞ்சள்செடி இலையில் காகங்களுக்கு படைக்கும் தினம். "காக்காப் பிடி, கண்ணு பிடி, காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்" என்று சொல்லி பெண்கள் தன் சகோதரனுக்காக வேண்டிக் கொண்டு, ஏழு குட்டி குட்டி உருண்டைகளைப் பிடித்து மாடியில் காலை ஆறு மணிக்குள் வைத்து வரவேண்டும். பின் கனுபீடை நீங்க உடனே எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

=====

இப்போதெல்லாம் இது கூட குறைந்து ஒரு லீவு நாளாகவும், "உலக தொலைக்காட்சியில்" காட்டப் படும் மொக்கை பட்டிமன்றகளும், முதன் முறையாக டீ.வீ. யிலேயே ரிலீஸ் ஆகும் சினிமாக்களைப் பார்க்கவும் சரியாக போய்விடுகிறது இல்லையா?

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.






.

வனங்கள் - 2

முறிந்த காதல்-களு-க்கு ஆறுதல்

பெண்ணே நீயும் பெண்ணா - 5

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

பெண்ணே நீயும் பெண்ணா - 4

பெண்ணே நீயும் பெண்ணா - 3

பெண்ணே நீயும் பெண்ணா - 2

பெண்ணே நீயும் பெண்ணா