வனங்கள்

வேண்டும் வாழ்க்கை மீதான நம்பிக்கை

நாம் இன்னும் ஒரு வருடத்தைக் கடந்து விட்டோம். வெஸ்டேர்ன் ப்ளாக் ரைனோசரஸ்,  போலார் ஐஸ் காப்  (the worst i consider that happened during 2009), போன்ற இயற்கை பேரழிவும்,  லேமன் ப்ரதர்ஸ், வூல்வோர்த்ஸ், சத்யம் ராஜு, போன்றவையால் பொருளாதாரம் காணாமற் போனதுமாக அதிகபட்ச இழப்புக்களையும் 2009 கொடுத்துச் சென்றது. அழகு இலங்கைத் தமிழின் நம்பிக்கை நட்சத்திரம் மறைந்து போனது.

முதலீடுகள் மீதான இலாபங்கள் நெகடிவ்வில் வேகமாக போய்கொண்டிருக்க, குறைந்தது வருமானமாவது மிஞ்சியதே என்ற ஆறுதல் கூட பெற முடியாத வேலை இழப்பு என்ற பேரிடியும், எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற தலை மேல் கத்தியும், நம் இளைய சமுதாயத்தை பிரட்டிப் போட்ட வருடம். இதை எழுதும் போதே வேலை இழப்பால் தற்கொலை செய்து கொண்டவர்களையும், குடும்பத்தையே கொன்று தானும் மரித்துப் போன நிகழ்வுகள் என் கண்களைக் கலங்கச் செய்கிறது. சீட்டுக் கட்டுகள்ஒன்றன் பின் ஒன்றாக சரிவது போல சட சட வென்று பிப்ரவரி 09 முதல் வரிசையாய் அடி மேல் அடி வாங்கிய உலகப் பொருளாதாரம், வேலை இழப்பு எத்தனை பேரை பிணமாக்கியதோ? எத்தனை பேரை உயிருடன் பிணமாக மன நோயாளியாக்கிப் பார்த்ததோ? அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

இவை எல்லாவற்றையும் விட 2009-இல் நாம் இழந்தது அரும்பெரும் சொத்தான "வாழ்க்கை மீதான நம்பிக்கை". எங்கே போனது?

எப்படிப் பட்ட பயங்கர இரவுகளையும், விடியாத பகல் பொழுதுகளையும்  காட்டிச் சென்ற நாட்களைக் கொண்ட வருடம் 2009. ஒருவாறு இதோ முடிகிறது.

இனி வரும் நாட்கள் நம் இளைஞர்களுக்கும், தன் வாழ்நாள் முழுதும் ஈட்டிய பொருளை எல்லாம் முதலீடாக்கி வைத்திருக்கும் மூத்தவர்களுக்கும், வேலை இழந்த மகன்களை/மகள்களை  கொண்ட பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வருடமாகவும், அனைவரும் குறைந்த பட்ச மகிழ்ச்சியாவது கொண்டு, புன்னகை பூக்கும் வருடமாக அமைய வேண்டும் என்றே நாளை முழுதும் பிரார்த்தனை செய்வோம்.

முடிந்தால் இப்பதிவைப் படிக்கும் நீங்கள் அனைவரும் எங்கிருந்தாலும் ஒரு நிமிடம் இந்தப் பிரார்த்தனையைச் செய்யுங்கள். உங்களுக்கு இறைவன் மீதான நம்பிக்கை இல்லாவிட்டாலும், வாழ்க்கை மீதான நம்பிக்கையை நம் சக மனிதர்கள் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் இப்புத்தாண்டு புன்னகையாய் மலரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


.

And you dare to call me coloured

"When I'm born I'm Black,
when I grow up I'm Black,
when I'm in the cold I'm Black,
when I'm in the sun I'm Black,
when I'm sick I'm Black,
when I die I'm Black.

And you...
When you're born you're Pink,
when you grow up you're White,
when you're in the cold you're Blue,
when you're in the sun Red,
when you're sick you're Green,
when you die you're Purple.
And you dare to call ME a coloured....".

Source & Author:

Source No.1 say,
Unknown, though claimed as "nominated the best poem of year ....." every year by email forwarders. :))

Source No 2 says,
Found in The children's book of poems, prayers and meditations ed. Liz Attenborough (Element Books, 1989)

Source No 3 says
After further Googling. Its from Malcom X


Lessons Learnt: Nasareyan: don't forward your poems (LOL .. Just kidding)



.

தனி

தமிழ்மண விருதுகள் முதல் கட்டப் பிரசாரம்

:)) தமிழ்மண விருதுகள் - நானும் இருக்கேன் இதில்.

டாடா சூமோ கருப்பு பூனைகள்,  போன்ற எதுவும் இல்லாமையே, போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில், புதுமுக அறிமுகமாக இருக்கும் எனக்கும் வோட்டளித்து மகிழுங்கள். ஏதோ ஒன்னு ரெண்டு வோட்டாவது அளிக்கப்பட்டால் கூட மகிழும் இப்பேதை நெஞ்சம்.

சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்ற பிரிவில் ஆகவே, இனியும் கங்கையை அசுத்தப்படுத்த வேண்டாம் 

விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்  என்ற பிரிவில் பஞ்ச் ரங் அசார் (ஐந்து வண்ண ஊறுகாய்)


வோட்டுப் போட இங்கே கிளிக் செய்யுங்கள்.

நன்றி சகாஸ்.

..

What is it that Indians have and we dont

Sharing an article Written by a Pakistani journalist about India

Capital suggestion
By Dr Farrukh Saleem

 
Here's what happening in India:

The two Ambani brothers can buy 100 percent of every company listed on the Karachi Stock Exchange (KSE) and would still be left with $30 billion to spare. The four richest Indians can buy up all goods and services produced over a year by 169 million Pakistanis and still be left with $60 billion to spare. The four richest Indians are now richer than the forty richest Chinese.

In November, Bombay Stock Exchange's benchmark Sensex flirted with 20,000 points. As a consequence, Mukesh Ambani's Reliance Industries became a $100 billion company (the entire KSE is capitalized at $65 billion). Mukesh owns 48 percent of Reliance.

In November, comes Neeta's birthday. Neeta turned forty-four three weeks ago. Look what she got from her husband as her birthday present: A sixty-million dollar jet with a custom fitted master bedroom, bathroom with mood lighting, a sky bar, entertainment cabins, satellite television, wireless communication and a separate cabin with game consoles. Neeta is Mukesh Ambani's wife, and Mukesh is not India 's richest but the second richest.

Mukesh is now building his new home, Residence Antillia (after a mythical, phantom island somewhere in the Atlantic Ocean ). At a cost of $1 billion this would be the most expensive home on the face of the planet. At 173 meters tall Mukesh's new family residence, for a family of six, will be the equivalent of a 60-storeyed building. The first six floors are reserved for parking. The seventh floor is for car servicing and maintenance. The eighth floor houses a mini-theatre. Then there's a health club, a gym and a swimming pool. Two floors are reserved for Ambani family's guests. Four floors above the guest floors are family floors all with a superb view of the Arabian Sea . On top of everything are three helipads. A staff of 600 is expected to care for the family and their family home.

In 2004, India became the 3rd most attractive foreign direct investment destination. Pakistan wasn't even in the top 25 countries. 


In 2004, the United Nations, the representative body of 192 sovereign member states, had requested the Election Commission of India to assist the UN in the holding elections in Al Jumhuriyah al Iraqiyah and Dowlat-e Eslami-ye Afghanestan. Why the Election Commission of India and not the Election Commission of Pakistan? After all, Islamabad is closer to Kabul than is Delhi .

Imagine, 12 percent of all American scientists are of Indian origin; 38 percent of doctors in America are Indian; 36 percent of NASA scientists are Indians; 34 percent of Microsoft employees are Indians; and 28 percent of IBM employees are Indians.

For the record: Sabeer Bhatia created and founded Hotmail. Sun Microsystems was founded by Vinod Khosla. The Intel Pentium processor, that runs 90 percent of all computers, was fathered by Vinod Dham.
Rajiv Gupta co-invented Hewlett Packard's E-speak project. Four out often Silicon Valley start-ups are run by Indians. Bollywood produces 800 movies per year and six Indian ladies have won Miss Universe/Miss World titles over the past 10 years.

For the record: Azim Premji, the richest Muslim entrepreneur on the face of the planet, was born in Bombay and now lives in Bangalore.India now has more than three dozen billionaires; Pakistan has none (not a single dollar billionaire) .

The other amazing aspect is the rapid pace at which India is creating wealth. In 2002, Dhirubhai Ambani, Mukesh and Anil Ambani's father, left his two sons a fortune worth $2.8 billion. In 2007, their combined wealth stood at $94 billion. On 29 October 2007, as a result of the stock market rally and the appreciation of the Indian rupee, Mukesh became the richest person in the world, with net worth climbing to US$63.2 billion (Bill Gates, the richest American, stands at around $56 billion). Indians and Pakistanis have the same Y-chromosome haplogroup. We have the same genetic sequence and the same genetic marker (namely: M124).


We have the same DNA molecule, the same DNA sequence. Our culture, our traditions and our cuisine are all the same. We watch the same movies and sing the same songs.



What is it that Indians have and we don't?  

ஊஞ்சல் 22.12.09

ஊஞ்சல்
இந்த முறை நிறையா போட்டோ...

எங்க கிராமத்து வீடு - முன்னால் எம்பொண்ணு.


கண் கூசும் காவேரி மணல் வெளி


கோவிலில் கிடைத்த பழைய போட்டோ. 1985-யில் கடைசியாக நடந்த கோவில் கும்பாபிஷேகத்தின் போது எடுத்தது. இந்த போட்டோவில் நான் இல்லை.


திரௌபதி கோவில் முகப்பில் ரஜினி:

குழந்தைத்தனம் தொலையாத வெள்ளந்தியானக் குழந்தைகள்.



தாயம்மா சரோஜா (பல் செட்டு மற்றும் தன் பேரனுடன்)

 

பக்கோடா

தர்ஷிணியின் கிருஷ்ணர் மறு அவதாரம் எடுத்தே விட்டார். வர்ணம் பூசும் வேலை முடிந்திருந்தாலும், கேமராவிலிருந்து கம்ப்யூட்டர்-ருக்கு போட்டோக்கள் மாற்ற நேரம் இல்லாமல் கிடந்தது.

உடையும் முன்




உடைந்த பின்: கழுத்தில் எம்சீலால் ஒட்டி,  வெள்ளை பெயின்ட் அடித்து கண் மட்டும் திறந்திருந்தேன்.



 இப்போது: வர்ணம் எல்லாம் எழுதிய பின். "கிருஷ்ணன் நீலமாத்தான்" இருப்பார் என்று தர்ஷிணி தீர்மானித்ததால்.





 
"நீ என்ன யசோதாவா"
"ஏன் கேக்கற"

 "இவ்வளோ அழகா டிரஸ் பண்ணிருக்கியே கிருஷ்ணனுக்கு.... "
"உனக்கும் தான் அழகா டிரஸ் பண்ணுவேன்..."

"அப்போ இந்த மாதிரி நகை கிரீடம் எல்லாம் எங்க..  எனக்குத்தான  அம்மா நீ.. "
 : (

மழை

ஆல்காட் பள்ளி பொருளாதார ரீதியில் ஏழ்மையான மாணவர்களுக்கு முற்றிலும் இலவசக் கல்வி அளித்து வருகிறது. எல்லாப் பாடங்களும் இப்பள்ளியில் தமிழிலேயே கற்றுத் தரப் படுகிறது. உங்களுக்குத் தெரிந்த 'பண முடை' காரணங்களுக்காக படிப்பை நிறுத்தி இருக்கும் மாணவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிக்கலாம். மாசம் நூறு ரூபாய் என்ற கணக்கில், நமக்கும் வலிக்காமல், வருஷத்துக்கு ஒரு முறை இது போன்ற பள்ளிகளுக்கும் நன்கொடை அளிக்கலாமே. யோசிங்க சகாஸ்.


.

பத்த வச்சிட்டே பரட்டை - பத்து புது வருடத் தீர்மானங்கள்

குடுமி புராணம்


கேள்வி மேல் கேள்வி கேட்டால்


நீதானா அந்தக் குயில்

சரியாக ஒன்றிரண்டு மாதம் முன்னால் புழுதி கவிதையும், திருக்காட்டுப்பள்ளியும் பற்றிய பதிவுகள் இணையத்தில் வெளியிடும் போது இதெல்லாம் நிகழும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நித்யாவின் facebook கிடைக்கவும் மெசேஜ் அனுப்பினேன். "sorry i don't remember you" என்று பதில் வந்தது. :( விடுமா விக்ரமாதித்தன் வேதாளம். மீண்டும் ஒரு மெயில் அனுப்பி "குடும்பப் பாட்டு" ஒன்றையும் பாடிக் காட்டினேன். கண்களில் தண்ணீர் தளும்ப, செவாலியே சிவாஜி ரேஞ்சுக்கு நாத்தழுதழுக்க "வித்யா-நித்யா" அலம்பல் ஜோடி மீண்டும் இணையத்தால் இணைந்தது. பிறகென்ன..... கேக்கணுமா??

சென்ற 27.11.09 அன்று காரில் திருச்சி போய் கொண்டிருக்கும் போது கார்த்தியின் போன் வந்தது "என்ன, எப்படி இருக்க, என்ன செய்யுற" என்றெல்லாம் கேட்டுக் கொண்டே போனேன். நான் இப்போ எம் எல் முடிச்சுட்டேன். "அப்ப வக்கீலாயி"ட்டீங்களா"??? என்று சுருதி கொஞ்சம் இறங்கியது. "இல்ல. எம்எல்ஏவா ஆயிட்டேன்".... தொண்டையில் இருந்து வார்த்தைகள் நீளவில்லை. செருமிக் கொண்டு, "அப்படீங்களா சார்" என்றேன். அருகிருந்த என்னவர் "என்ன திடீர்னு பம்மற...யாரு போன்ல" நாம் பம்முவது பற்றிய உள்ளூர மகிழ்ச்சியோடு கேட்டார். "என் பழைய நண்பர்.. என்று கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கொண்டேன்.

அப்போதும் நினைக்கவில்லை, வில்சனின் ஈமெயில் வரும் என்று. திடீர்னு ஒருநாள் நாமெல்லாம் டிசம்பர் 12 அன்று சந்திக்கப் போறோம் என்று வில்சனின் மெயில் வந்தது. :)

=====================================



கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன்


கல்லணை




=======================================================================
11.12.2009 அன்று மாலை ஆறு மணி வாக்கில் புத்தக விழாவுக்குக் கிளம்ப முடியாமல் அலுவலகத்திலேயே இருந்தேன். "Still in office. convey my best wishes to vasu. to you too" என்று sms ஒன்றை நர்சிம்முக்கு அனுப்பினேன். "no chance. come" என்று பதில் வந்தது. என்ன சொல்வது இவருகிட்ட என்று யோசிக்கும் போதே, வீட்டிலிருந்து அம்மா-அம்மா டென்ஷன் ஆகி போன் பண்ணி திட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக good night boss சொல்லி அலுவலகத் தலை(வலி)யை வீட்டுக் அனுப்பிவிட்டு பார்த்தால் ஏழு மணி.

முடிந்த வரை வேகமாப் போய் டிஸ்கவரி புக் ஹவுசில் தலையைக் காட்டி புறப்பட்டு விடலாம் என்று ஆக்டிவாவை திருப்பினால், ஐ.டி. காரிடார் முடியும் மத்திய கைலாசத்திலிருந்து கிண்டி வரை ஊர்ந்து ஊர்ந்து போனால், அம்மாவின் போன் "சைதாப்பேட்டையில் ஏதோ திறப்பு விழாவாம்.. நங்கநல்லூரெல்லாம் வந்துண்ட்ருக்காத. நாங்க கிளம்பியாச்சு. நீ நேர கோயம்பேடு வந்துரு" என்று தாயின் ஆணை. வேறன்ன செய்ய. அட ஆபீசுலேந்து நேர வர ஒரு பொண்ணுக்கு வேற எந்த உபாதையோ, பசியோ இருக்காதான்னு யோசனையே கிடையாது இந்தம்மாக்கு என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே ஊர்ந்தேன்.

வடபழனிக்கருகில் வரும்போது மணி இரவு எட்டரை. இனிமே பூமி தாங்காது என்று இருக்கும் சந்தில் எல்லாம் புகுந்து, டிராபிக் ஜாமிலிருந்து தப்பித்து வளசரவாக்கம் தெருக்கள் வழியாக கோயம்பேடு சாலையை அடைந்தேன்.

மீண்டும் ஊர்ந்து ஊர்ந்து "ஒன்று" வாசனை மூக்கைத் துளைக்கவும் "ஆகா வந்துட்டோம்டா" என்று என்னையே பாராட்டிக் கொண்டு, டூ-வீலர் பார்கிங்கில் இரண்டு நாளுக்கு பார்க்கிங் டிக்கட்டு வாங்கி மூன்று முறை சைடு லாக் பண்னோமானு பாத்து, நாலஞ்சு முறை சென்டர் ஸ்டாண்டு போட்டாமானு செக் பண்ணி, ஆறாவது நிமிஷம், ஏழு எட்டு வைத்து ஒம்பதாம் பிளாட்பாரம் சென்றால் பத்து மணி பஸ்ஸு கண்டேக்கடரூ என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். "இவங்கல்லாம் வரலைன்னு யாரு ...." என்று முடிக்கும் முன்னேயே நல்ல வேளை முன்னால் சென்று நின்றேன்.

ரயிலில் டிக்கட்டு கிடைக்காமல் லொட லொடவென்று அரசு பேருந்தில் இரவு பதினொன்றை வரைக்கும் சிங்கிள் ஆம்ப்ளிபையரில் அலறிக்கொண்டிருந்த "சுர்ருங்குது" பாட்டை "பூம் டீவி" வீடியோவில் பார்த்துக் கேட்டுக் கடுப்பாகி, "உங்கள் குறைகளை 044 25366351 என்ற எண்ணுக்குத் தெரிவியுங்கள்" என்ற அறிவிப்பைப் பார்த்து, போன் பண்ணினேன். "ஏங்க.. நான் உங்க பஸ்சுல காசு கொடுத்து போயிட்டுருக்கேங்க. இந்த பாட்டை எப்போ நிறுத்துவீங்க" அப்படீன்னு கேட்டேன்.

"இன்னுமா நிறுத்தல கண்டேக்க்று கிட்ட கொண்டுங்க" என்கவும் ஒரு நம்பிக்கையோடு என்னதான் பஸ்ஸு ஊர்ந்து கொண்டிருந்தாலும், பாலன்ஸ் பண்ணும் சமத்து பத்தாமல் நான் தள்ளாடிக் கொண்டு, கிட்டத் தட்ட கண்டேக்க்று மேலே விழுந்து விடும் தொலைவில் ஒரு கம்பியில் தொத்திக் கொண்டு "இந்தாங்க" என்று மொபைலைக் கொடுத்தேன். பேசினார் கண்டக்டர். என்னை முறைத்துக்கொண்டே இருந்தார். ஒரு நிமிஷம் போனது, "ஆமாண்டா. அண்ணி நல்லாருக்கு. சின்னப் பொண்ணை இனிமேத்தான் இஸ்கோலுல சேக்கோணும்" என்று ஒரு பத்து நிமிஷம் சொந்தக் கதை எல்லாம் பேசி முடித்து பின் "இதுங்க வரணும்னு பஸ்ஸை போட்டு வைச்சேன். இதுங்க கம்ப்ளைண்டு கொடுக்குதுங்க." என்று வரிசையாய் அக்றிணையாகி நொந்தேன். அப்படியும் பாட்டு நிறுத்தப்படலை. ஒரு வழியாக ஒரு மணிக்கு பாட்டு நிறுத்தப் பட்டது. நானும் மழையின் ஜதிக்கேற்ப தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி தூங்கிப் போனேன்.

காலையில் திருச்சியில் மீண்டும் ஒன்று மணம்தான் எழுப்பியது. பின்னாடியே அம்மா அப்பா தம்பி எம்பொண்ணு எல்லோரும் வரிசையாய்... என் பெற்றோர் குலதெய்வம் கோவிலுக்குப் போகவும், நான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பள்ளிக்குப் போகவும், யார் கேட்டாலும் (திட்டினாலும்) பரவால்லைன்னு நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை என்று பாடிக் கொண்டே இறங்கினேன். பெரியம்மா அனுப்பிய கார் வந்தது. அவங்க வீட்டுக்குப் போய் நாலு இட்லி அருமையான காப்பி குடித்து மீண்டும் எட்டு மணியளவில் திருக்காட்டுப்பள்ளி நோக்கிப் பிரயாணம்.

இப்போது திருச்சி சாலைகளும், திருக்காட்டுப்பள்ளி நோக்கி செல்லும் சாலைகளும் அகலம் குறைந்தும் நீளம் அதிகமாகியும் தோன்றியது. கல்லணை பாலத்தை ஒரு காலத்தில் நடந்தே கடக்கும் போது அலுப்பாய் இருக்கும். இன்று நடக்கலாம் என்று தோன்றினாலும் நேரம் ரொம்பக் குறைந்து போன உணர்வு வேறு துரத்திக் கொண்டே இருந்தது.

'நாங்க வந்துட்டோம்' என்று ஐந்து நிமிஷத்துக்கு ஒரு போன் வந்து கொண்டே இருந்தது. சரியாக முக்கால் மணி நேரத்துக்குள் திருக்காட்டுப்பள்ளி போய் விடுவோம். வயல், சின்னச்சின்ன வாய்க்கால்கள், குட்டைகளில் லில்லிப் பூக்கள், பச்சைப் பட்டு புல் வெளிகள், துரத்திய மரங்கள் என்று ஒரு பக்கம் பசுமையை நிலை நாட்டிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் அகண்ட காவேரியின் மணல் வெளி கண் கூசியது. கொஞ்சூண்டு தண்ணீ இருக்கென்று காண்பிக்க நடுவில் ஓடிக் கொண்டிருந்தது.

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்த தெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!
பூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!
காமர் மாலை அருகசைய நடந்த தெல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!

என்று மாதவி பாடுவதாகத் சிலப்பதிகாரம் பேசுகிறது. இன்று உன் கணவன் திருச்செங்கோல் வளைந்தது போலும். இந்தனை மேல்மெலிந்து கிடைகிறாயடி காவேரிப் பெண்ணே என்று வருந்திக் கொண்டேன்.

என். வெங்கட்ராமன் உரக்கடை என்று போர்டு போட்டிருந்த கடை முன் இருந்த பூக்கடையில் சாமிக்கும் அம்பாளுக்கும், திரௌபதி அம்மனுக்கும் என்று மூன்று மாலைகள் வாங்கிக் கொண்டு இருந்தார் அப்பா. கடையிலிருந்த இளைஞனின் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அடப் பாவி செந்தில் இன்னும் இவ்வளோ சின்னவனாவே இருக்கானா என்று நினைத்தேன். உள்ளே போய் விட்டான் அந்த இளைஞன். மீண்டும் கிஷோர் போன் வந்தது "எங்க இருக்கீங்க" என்று கேட்டான். 'நேரமாகிட்டது கோவிலுக்கு போயிட்டு ஸ்கூலுக்குப் போலாம் என்றார் அப்பா. "சரீங்கப்பா" என்று என் சுருதி கொஞ்சம் குறைந்தது.


சர் சிவசாமி ஐயர் (எங்கள் பள்ளி ஸ்தாபகர்)

ஸ்கூலைத் தாண்டி சென்றது கார். என் கண் ஸ்கூல் மீதே நின்று விட்டது. முருகன் கோவில் புதுப்பிக்கப்பட்டிருந்தது. அருகில் இருந்த பஞ்சாயத்து போர்டு ஸ்கூல் இரண்டு மாடிக் கட்டிடம் ஆகி விட்டிருந்தது. திரௌபதி கோவிலுக்குப் போனோம். கோவில் வாசலில் கர்ப்பகிரகத்தை மறைத்தவாறு பாலிவினைல் போர்டில் ரஜினி அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். "நீ நடந்தால் நடையழகு" என்று ஆளுயர ஸ்பீக்கர் கத்திக் கொண்டிருந்தது. அருகிருந்த கிரௌண்டில் பதினைந்து வயதுக்குள் இருக்கும் சிறுவர் சிறுமிகள் எல்லாம் விளையாடியும், பாட்டுக்கு ஆடியும் கொண்டிருந்தனர். எம்பொண்ணுக்கு குஷி தாங்கலை. புழுதியில் புரண்டு பட்டுப் பாவாடையெல்லாம் மண்ணாக்கி கொண்டாள். விளையாடட்டும் என்று விட்டு விட்டேன். பொங்கல் பிரசாதத்தைக் கூட அவர்களோடு க்யூவில் நின்று வாங்கி சாப்பிட்டாள். எனக்கு எம்பொண்ணு நானாவே ஆனா மாதிரி இருந்தது. (அடங்கு வித்யா...)

இன்னொரு கோவில் போய் திரும்பிய போது "நாங்கல்லாம் ஸ்கூல்லேந்து கல்லணை டிராவலர் மாளிகைக்குப் போறோம். நீங்க அங்க வந்துருங்க" என்று வில்சன் லூர்து சேவியர் சொன்ன போது மணி இரண்டு."எனக்காக காத்திருக்க வேண்டாம். நீங்க எல்லோரும் சாப்பிட்டு விடுங்க" என்றேன். "நீங்க வரலைனாலும் பரவால்லை. ஹிந்தி மிஸ் (எங்கம்மா) கண்டிப்பா வரணும்" என்றான் (ர்) கிஷோரும் வெங்கியும். அடப் பாவிங்களா....

அக்ரஹாரத்தில் எல்லாம் மாறி விட்டிருந்தது. யார் வீட்டு வாசல் திண்ணையிலோ என் பெண் நின்று உள்ளே எட்டிப் பார்த்தாள். திட்டப் போகிறார்கள் என்று பயந்தேன். "பொண்ணு. ஒட்டுல (ஓரத்தில்) நிக்காதடீ.. விழுந்துடுவடீ..." என்று கரிசனமாய் ஒரு குரல் வந்து என் நெஞ்சைக் கரைத்தது. இன்னும் மனுஷங்க மாறலீங்க.

இரண்டு மணிக்கு கார் கிளம்பிய போது தூர ஆரம்பித்திருந்தது. கல்லணை டிராவலர் மாளிகைக்குப் போயிட்டு போலாம்ங்க என்று எங்கள் "பார்த்தசாரதி" முருகேசன் அண்ணாச்சியிடம் சொல்லவே "இருபது நிமிஷத்துல போயிடலாம்ங்க" என்றார். வழியில் பூண்டி மாதா கோவில் தெரிந்தது. "கிஷோர் நாங்க பூண்டி கிட்ட இருக்கோம். வந்திருவோம். நீங்க இருப்பீங்கல்ல" என்றேன். "பங்களா வந்து கார்த்தி சார்னு சொல்லுங்க" என்றான்(ர்) கிஷோர்.

"பார்த்தசாரதி" சொன்னதுபோல இல்லாமல் பதினைந்து நிமிஷத்திலையே கொண்டு போய் சேர்த்தார். எனக்கு முப்பத்தி நாலு பல்லும் தெரிந்து கொண்டிருந்தது. எம்பொண்ணு தூங்கி போய் விட்டாள். அவளை காரிலேயே கிடத்தி விட்டு அம்மா அப்பா நான் மூவரும் போனோம். முப்பது பேர், முப்பதும் "பசங்க" . அபர்ணா வரலையா, பவானி வரலையா, கஸ்தூரி??? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே எல்லாப் "பசங்க"ளையும் மறு அறிமுகம் செய்து கொண்டேன். நிறையா முகம் மாறி விட்டிருந்தது.


பள்ளி கரஸ்பாண்டென்ட்  திரு. என்.வி.என். அவர்களோடு நம்ம பசங்க


கிஷோர் சின்ன வயதில் பெண் வேடம் போடுவான். அதே போலத்தான் இப்போது, "பால் வடியும்" முகம் - நம்பாதீங்க பெண்களே.. இன்னும் பிரம்மச்சாரியாம்.. :)) உங்கல்யாணத்துல இருக்கு மண்டகப்படி என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.

செந்தில் இருந்தான்(ர்)...அதே முகம், அப்போ கடையில் இருந்தது செந்திலின் தம்பி... :))




வில்சன் அதே உருவம், அதே முகம், அதே உயரம். எங்கள் பள்ளிக்கு முன். வெங்கட், முருகேசன், செந்தில், கிஷோர், வரதராஜன், பஞ்சாபகேசன், சிவசண்முகம், வேணுகோபால் என்று எல்லார் முகமும் மாறி இருந்தது. பழனியப்பன் ரமேஷ் வரலை. அவங்களை பற்றி கேட்கவும் மறந்து விட்டது. டொனால்ட் (நாங்க டக்குன்னு கூப்பிடுவோம்) இப்போ பாதர் ஆகிட்டானாம் (ராம்)


அண்ணன் மாவலியார் வாழ்க வாழ்க

எல்லாரும் நல்லவங்களா நல்ல நிலைமையில், இருக்கிறதப் பாத்து ரொம்ப சந்தோஷம்... மெட்ராஸ் வரும் வரை முப்பத்தி நாலு பல்லும் சிரித்தவாரே காணப்பட்டதாக சமூகத்துல பேசிக்கிறாங்க. அவ்வளோ சிரிப்புங்க அங்க.

மாவலியார் (கார்த்தி) மன்னிக்க, blackcat பாதுகாப்பில் புடை சூழ நின்றபோது கிண்டலடித்து பேசினத்துக்கு ஆட்டோவெல்லாம் அனுப்பவேண்டாம்னு கெஞ்சிக் கேட்டுக் கொண்டு புறப்பட்டபோது கும்பலா ... எல்லாரும் சேர்ந்து என்னைப் பாத்து "நீதானா அந்தக் குயில்" என்று பாடியதை மட்டும்....



..

ஊஞ்சல் 11.12.2009

முதலில் மஹாகவி பாரதியாருக்கு என் வணக்கங்கள். (இன்று அவருக்குப் பிறந்த நாள்)

ஊஞ்சல்

பதிவுலகம் வந்ததால் எனக்கு கிடைத்த முகமறியா நட்புக்களும், நேரில் சந்தித்த நல்ல மனிதர்களான உஷா, உமசக்தி, வால் அருண், நர்சிம் இன்னும் கதைப் பட்டறையில் அவசர கதியில் ஹலோ மட்டும் சொல்லிவிட்டு போன அக்னி பார்வை மற்றும் பலர் (மன்னிக்க பெயர்களைக் குறிக்கத் தவறி விட்டேன்).

பதிவுலகில் நான் எழுதிய திருக்காட்டுப்பள்ளி பதிவால் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்த அறுந்த வால்கள் எல்லாம் மீண்டும் ஒன்று திரண்டு, வாலறுந்த கும்பலாக மாறப்போகும் தினம் 12.12.2009. என்னோடு எல்.கே.ஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை திருக்காட்டுப்பள்ளியில் பயின்ற கும்பலோடு நாளை சந்திப்பு.

தேநீர்

மீண்டும் ஒரு முறை தமிழ் பதிவுலகம் நட்புக்குத்  தோள் கொடுத்து ஒருவருக்கொருவர் பெருமை சேர்த்துள்ளது.

எழுத்துக்களுக்கு முகம் கொடுத்து, அருமையான எழுத்தாளர்களுக்குஅகநாழிகை வாசுவின் புதிய பதிப்பகத்தின் வெளியீடான "அகநாழிகை" சிற்றிதழ் பற்றி எல்லோருக்கும் தெரிந்ததே. இன்று அவர் தம் முதல் புத்தக வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்துகிறார்.

நாள் : டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி

இட‌ம் : டிஸ்கவரி புக் பேலஸ்,

6, மகாவீர் வணிக வளாகம், முனுசாமி சாலை,  கே.கே.நகர் (மேற்கு), பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்), சென்னை - 78.

பா. ராஜாராமின் கருவேல நிழல்கள், நர்சிம்மின் அய்யனார் கம்மா, உயிரோடை லாவண்யா, உமா சக்தி,  TKB காந்தி, என்.விநாயகமுருகன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தலைப் பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு, வெளியில் கையை பிசைந்து கொண்டு நிற்கும் கணவர்கள் போல, நர்சிம்மையும், பா. ராஜாராமையும் நினைக்கையில் ரொம்பவே சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

"இதோ இதான்" என்று அவர்கள் குரலில் தெறிக்கும் மகிழ்ச்சியையும், கண்களில் வழியும் பெருமையையும் மனதாரக் கண்டு ரசிக்கவும்,  நானும் அவர்கள் கண்களைப் பார்த்து அந்த மகிழ்ச்சியில் சிறிது திளைத்து வரலாம் என்று இருக்கிறேன்.

பக்கோடா

எம்பொண்ணு தர்ஷிணி ரொம்ப அடம் பண்ணி என் அம்மாவிடமிருந்து பறித்துக் கொண்டு வந்த  இரண்டடி உயரமுள்ள மண்ணாலான கிருஷ்ணன் சிலைக்கு லிப்ஸ்டிக் முதல் நெயில் பாலிஷ், பவுடர் என்று எல்லா அலங்காரமும் தினசரி நடக்கும். நேற்று சாயந்திரம் துணி மடிக்கும் போது தவறுதலாய் என் கை பட்டு கீழே விழுந்து உடைந்து விட்டது. கிருஷ்ணனின் தலை மட்டும் தனித் துண்டாகி விட்டது.

சத்தம் கேட்டு ஓடி வந்தவளுக்கு ஒரே அழுகை. "ஐயோ கிருஷ்ணா!" என்று துண்டான தலையை எடுத்துக் கொண்டு அழுதபடியே என்னைப் பார்த்து "நீ என்ன சிவனா... இப்படி பண்ணிட்டியே??" என்றாள்.

கிர்ர்ர்ர் :(  நான் என்னன்னு பதில் சொல்ல?

(எம்.சீலால் பொம்மையை ஒட்டி புதிய பெயின்ட் அடித்து காய வைத்திருக்கேன்)

மழை

சாரல் சமூக சேவை குழுவினர் டிசம்பர் மாசத்தில் ஞாயிறுகளில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் உள்ள இளஞ்சிறுவர் சீர்திருத்த மையத்தில் (Government observation home for the juveniles) உள்ள குழந்தைகளுக்கு யோகா, படம் வரைதல், எல்லா வகை பள்ளிப் பாடங்கள், பொது அறிவு போன்றவற்றை "புதிய பாதை" என்ற ப்ராஜெக்ட்டின் கீழ் ஒரு புதிய முயற்சியாகச் செய்கிறார்கள்.

நாட்கள்- டிசம்பர் 20, 27, ஜனவரி 3, 10, 17 (ஞாயிறு)

நேரம் : காலை 9 முதல் -மாலை 5 வரை
இடம்: செங்கல்பட்டு சிறைச்சாலை

இக்குழுவினர் ஞாயிரன்று காலை 8 மணிக்கு  நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் ஒன்று கூடி செங்கல்பட்டுக்கு இணைந்து செல்கிறார்கள்.  தொடர்பு கொள்ள 9884014555(M.Maniventhan) இவரை அழைக்கலாம்.




.

முட்டாள் தாத்தாவும் மூடப் பாட்டியும் - 2

முந்தைய பதிவை இங்கே காணலாம்.

எதையும் தேங்காய் உடைச்சாமாதிரி பளிச்சுன்னு நேரிடையாய் ஏனோ சொல்லாததால், இன்றும் பல நல்லப் பழக்கங்கள் பின்பற்றப் படாமல் இருக்கிறது.

காக்கை கரைந்தால் விருந்தினர் வருகை எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் பயணத்திற்கு போகுமுன் மயில் கரைந்தால் அபசகுனம் என்று சொல்வதில் என்ன இருக்கக் கூடும்? மழை வருமோ?

அதே போல வீட்டில் இருக்கிறவர்களுக்கு முதலில் உணவிட்டு விட்டு பின்தான் வீட்டில் வேலை செய்பவர்களுக்குத் தர வேண்டும், கணவரை இழந்த பெண்கள் முன்னால் வந்தால் அபசகுனம், பிள்ளை இல்லாதவர் குழந்தையைத் தூக்கினால் குழந்தைக்கு ஆயுசு குறையும் என்பதில் எல்லாம் சக மனிதரை மனிதராக மதிக்காத, அவர்கள் ஏதோ ஒரு வகையில் இழந்திருக்கும் சில மகிழ்ச்சிகளை மீண்டும் பெற்று விடக்கூடாது என்ற அஹம்பாவம் தவிர வேறெந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

நடை முறைக்கு ஒத்துவரும், பிற மனிதரைத் துன்புறுத்தாத,ஆனால் தனிப்பட்ட ஒருவருக்கு நன்மைகள் அளிக்கக் கூடிய சில 'மூட' பழக்கங்களை காரணம் அறிந்து பின்பற்றுவதில் தவறேதும் இல்லைதானே?

=================================

6. சமையலில் துவரம் பருப்பு வேக விடும்போது மஞ்சள் பொடி போட வேண்டும்.

மஞ்சள் பொடியின் மருத்துவ குணத்தின் நலன் தினசரி சமையலில் சேரவேண்டும் என்பதற்காகக் கூறி இருக்கலாம். இல்லையென்றால் அபசகுனம் என்றெல்லாம் எதுவும் இல்லை.

7. அதிகாலைகளில் துளசி மாடம் அல்லது கோவிலைப் பிரதட்சிணம் செய்வது, அங்கப் பிரதட்சிணம் செய்வது, நின்ற இடத்திலேயே ஸ்தானப் பிரதட்சிணம்/ஆத்மப் பிரதட்சிணம் செய்வது ஏன்? பௌர்ணமி அன்று கிரி வலம் / மலையைப் பிரதட்சிணம் செய்வது ஏன்?

பொதுவாக நடைப் பயிற்சி, elevated steps-களில் ஏறுதல் எல்லாம் இதயத்திற்கு நல்லது. இதை தினசரிப் பயிற்சியாக எப்படி ஆக்குவது? இறைவனோடு இணைத்ததால் பின்பற்றப் பட்டது. இரவில், பௌர்ணமி நிலவில் (நடப்பதால்) பிரதட்சிணம் (circumambulation) செய்வதால் / சுற்றுவதால் இனப்பெருக்க உறுப்புக்கள் வலிமை பெறுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப் பட்டுள்ளது. பொதுவாக இடமிருந்து வலமாகப் பிரதட்சிணம் செய்வார்கள். எங்கே வேண்டுமானாலும் சுற்றலாமே? ஏன் இறைவன் இருக்கும் கர்ப்பக்ருஹத்தை சுற்றி வரவேண்டும்?

ஒரு நடுப்புள்ளி இல்லாமல் வட்டம் வரைய முடியாது. நடக்கும் போது மனம் / வாய்  வேறு சிந்தனைகளோ அல்லது பேச்சுக்களில் ஈடுபடாமல் இருக்க, இறைவனை தியானித்துக் கொண்டே பன்னிரண்டு முறை சுற்றி வருமாறும் பணித்துள்ளனர். இப்படி சாதாரணமாக பன்னிரண்டு முறை சுற்றும் போது ஏறத்தாழ நாம் இருநூறு அடிகள் வைத்திருப்போம். பெரும்பாலும் கோவிலை சுத்தமாகவும், கோவில்களில் (ஸ்தல விருட்சம்) மரங்களும் துளசியும் நிறைந்தே இருக்கும். இதனால் உடலுக்குத் தேவையான நடையும், நல்ல காற்று மற்றும் மனதுக்கு தேவையான தியானப் பயிற்சி மற்றும் அமைதியான சூழல் மன அமைதியையும் அளிக்கிறது. இதை தவிர, எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகாலை எழுந்திருக்கும் பழக்கமும் வருகிறது.

இன்றும் காலை நடைப் பயிற்சியில், அந்த அதிகாலை அமைதியைக் கிழித்துக் கொண்டு சில குரல்கள் பேசிக் கொண்டு நடக்கிறார்கள். நடக்கும் போது பேசுவது உடல் நலத்திற்கும், குரலுக்கும் கேடு விளைவிக்கும்.

8. கோபுர தரிசனம் கோடி புண்ணியமா?

சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களால் கழுத்தை மேல் நோக்கி  தூக்கிப் பார்க்க முடியாது. தலை சுற்றும். அதே போல காலைச் சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முடியாதவர்கள் கண் நோய் நிச்சயம் இருக்கும்.

காலையில் சிறிது நேரம் நடைப் பயிற்சியும், கைகளை binacular போன்று வைத்துக் கொண்டு சூரியனைப் பார்த்து வந்தால் கண்ணுக்கும் உடலுக்கும் நல்லது. நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் இல்லையா?

9. மாலை நான்கு மணிக்கு மேல் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை கூட்டிச் செல்லக் கூடாது. தோஷம் படும். (அல்லது) சூரிய கிரகணத்தில் கர்பிணிகளும் குழந்தைகளும் வெளியே வரக் கூடாது.

மாலை கூடு திரும்பும் பறவைகள் காற்றில் தன் எச்சங்களை விடும். இதன் துகள்கள் காற்றில் கலந்து விஷமாகிறது. ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இன்னும் நோய் எதிர்ப்பு சக்தியோ அல்லது தாங்கும் சக்தியோ குறைவாகவே இருக்கிறது. இந்த பறவை எச்சங்களை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் உடல் நலக் குறைவு ஏற்படும்.
அதே போல, சூரிய வெளிச்சம் பகலில் முழுமையாக மறையும் போது பூமியில் இருந்து பல விஷ நுண்ணுயிர்கள் வெளி வருகின்றன. இவை காற்றில் கலந்து தூசி போல உண்டாகும். நோயெதிர்ப்பு சக்தி கர்ப்ப காலத்தில் குறைந்திருக்கும். அதே போலத்தான் குழந்தைகளுக்கும்.

10. நல்ல நாளில் (வெள்ளி / செய்வாய் / பண்டிகை தினங்கள்) நகம் / முடி வெட்டக் கூடாது. அதே போல படுக்கையில் அமர்ந்து உண்ணக்கூடாது. நகம்/முடி வெட்டக் கூடாது. (மஹாலக்ஷ்மி போய் விடுவாள்!!)

நகம் மற்றும் முடி மூலம் நோய்கள் சீக்கிரம் பரவும். உணவில் விழுந்து விட்டால் ?? நிச்சயம் சாப்பிடும் போது அருவருப்பை உண்டாக்கும். உணவும் வீணாகும். படுக்கையில் விழுந்தாலும் பார்த்தாலே அசிங்கமாய் இருக்கும். இது தவிர இன்று போல் நகம் வெட்ட நெயில் கட்டர் எல்லாம் கிடையாது முன்பு. கத்தி தான். தவறுதலாய் கையை கிழித்து விட்டால் மற்ற வேலைகள் நின்று விடும். பண்டிகை தினங்களில் அதிக வேலை இருக்கும், பொறுமையாக நகம் வெட்ட முடியாது.

11. பச்சை மாவிலை கட்டுவது ஏன்? (பிளாஸ்டிக் தோரணம் இல்லை)

பறிக்கப் பட்ட மாவிலையில் இருந்து அதி வேகமாக ஆக்சிஜன் வெளியேறுகிறது. ஏறத்தாழ இலை வாடும் வரை ஆக்சிஜன் வெளியேறிக் கொண்டே இருக்கிறதாம். இதனால் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுகிறார்கள்.

12. வீட்டில் பறவை கூடு (குருவி) கட்டினால் நல்லது. கூட்டைக் கலைச்சால் தப்பு.

பறவைகள் முட்டையிடும் காலங்களில்தான் பெரும்பாலும் கூடு கட்டுகின்றன. பாதுகாப்பு என்று பறவைகள் நம்பும் இடத்தில்தான் கூடு கட்டுகின்றன. கூட்டைக் கலைக்கும் போது அவைகளுக்குப் போக்கிடம் இல்லாமல் போகலாம்.

13. ஒத்தை பிராமணன் குறுக்கே வந்தால், வந்த திசையில் பிரயாணம் செய்யக் கூடாது?

"ஒத்தை (ஒற்றை) பிராமணன்" என்பவன் மரணம் சம்பவித்த வீட்டில் தானே சமைத்து உண்பவன். இவன் தனியாக வந்து தனியாகவே சமைத்து உண்டு தனியாகவே போய் விடுவான். எல்லோரும் இப்படித்தான் என்று உணர்த்த பின்பற்றப் படும் பழக்கம் இது. வேதம் பயிலும் மாணவர்கள் படிக்கும் போது பிரமச்சரிய விரதத்தை மீறினால் (பெண்களோடு உறவு கொண்டு விட்டால்) அவன் ஒற்றை பிராமணனாகிறான். இது குருகுல காலங்களில் உண்டானது. மேலும் போகும் வழியில் மரணம் சம்பவித்த வீடு இருக்கிறது என்பதால் வேறு திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்க சொல்லப் பட்டது இது.

இப்போது யாருமே பிராமணன் கிடையாது. மேலும் இப்போது மனிதனின் பிணத்தையே கண்டு கொள்ளாமல் தாண்டிச் செல்லும் அளவுக்கு மனப் பக்குவமும் நமக்கெல்லாம் வந்து விட்டது. ஆகையால் இதைப் பற்றி கவலைப்படவேண்டாம்.

14. விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள்?
 

பிரிந்திருக்கும் உறவுகளை "அவர்களா இருக்குமோ" என்று நினைக்கவும் விக்கல் உதவுகிறது.


நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் (335)

பிராணன் பிரிவதற்கு முன்னால் கடைசி விக்கல் வருமாம். அந்த விக்கல் வருவதற்குள், செய்யவேண்டிய அறச்செயல்களையும், நன்றி செலுத்த வேண்டியவைகளையும் செய்து முடித்து விட வேண்டும், என்கிறது இக்குறள்.

விக்கல் வருங்கால் விடாய்தீர்த் துலகிடைநீ
சிக்கலெனுஞ் சிக்கல் திறலோனே- (திருவருட்பா)

உரை: நீர்வேட்கை யெழும்போது விக்கல் தோன்றுவது உடம்பின் இயல்பாதலால், தாகத்தால் விக்கல் தோன்றும் போது தண்ணீர் அருந்தி விடாதே.  தீர்த்துக்கொண்டு உலகவாழ்க்கைத் தொல்லையில் சிக்கிக் கொள்ளாதே என்று தன் பெயர்க் குறிப்பால் அறிவுறுத்தும் சிக்கல் நகரில் எழுந்தருளும் பெருமானே என உரைக்கின்றார் திருஞானசம்பந்தர். சிக்கல் நாகைப்பட்டினத்துக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

விக்கல் மாறிலி….
என் நினைவோ முடிவிலி..
உன் விக்கலின் காரணி
இல்லையென் நட்பினி. (Author unknown)


உன் விக்கலுக்கு காரணம் என் நினைவு என்று கூறினால் , நீ விக்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான் என்று அர்த்தம் !!!

இல்லையென்றாலும், வில்லங்கமாக "நான்தான் இங்கிருக்கேனே? யார் உன்னை நினைத்தார்?" என்று செல்ல சண்டை போடவும் செய்யலாம்.

தர்க்கமிட்டுற வாடி யீளைநொய்
கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
சிச்சிசிச்சியெ னால்வர் கூறிடவுழல்வேனோ  (திருப்புகழ்)

தர்க்கவாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (சில காலத்துக்குப் பின்னர்) கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று ஊளை நாய் போல் இழிவு பட்டு சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரிவேனோ? என்று வருந்துகிறார் அருணகிரிநாதர்.

 இதெல்லாம் யார் எப்போது விக்குகிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. யார் விக்கினாலும் கொஞ்சம் நெல்லிக்காயும், தேனும், தண்ணீரும்  கொடுங்கள்.

(இன்னும் வரும்)
.

ஹனுமானும் சைனாக்கார சன் வுகாங்-கும்

ஹனுமத் ஜெயந்தி - டிசம்பர் 16-2009 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தப் பதிவு

பெரும்பான்மையான இடங்களில் ஒவ்வொரு வருடமும் சித்திரை சுக்கில பௌர்ணமி (மார்ச் - ஏப்ரல்) அன்று  கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டில் மார்கழி மாசம் (டிசம்பர் - ஜனவரி) கொண்டாடப் படுகிறது. (ஏன் இந்த நாள் வித்தியாசம் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிரலாம்).

பிறப்பு:

பிருஹஸ்பதி முனிவரின் ஆஸ்ரமத்தில் புஞ்சிகஸ்தலா (மனகர்வா என்ற அப்சரஸ்) தேவ சேவைகள் செய்து வந்தாள். இவளைத்தான் இராவணன் பலாத்காரித்து, "பெண்களை அவள் விருப்பத்திற்கு மாறாக தீண்டினால் தலை சுக்கு நூறாகத் தெறிக்கும்" என்ற பிரம்மனின் சாபம் பெற்றான். இராவணன் வால்மீகி இராமாயணத்தில் இவ்வாறு கூறுகிறான்.

பிதாமஹஸ்ய பாவனம் கச்சந்தீம் புஜ்ஞ்சிகச்தலாம்  |
சஞ்சூர்யமாநாமத்ராக்ஷமாகாஷே அக்னிஷிகாமிவ   || 6-13-11
அத்ராக்ஷ்ஹம் = நான் கண்டேன்; புஞ்சிகஸ்தலா = புஞ்சிகஸ்தலா (பெயர்); அக்னிஷிகாமிவ = நெருப்பைப் போன்ற ஒளியுடைய; சஞ்சூர்யமாநாம் = தன்னை ஒளித்துக் கொண்டவாறு  (இராவணனைக் கண்ட பயத்தில்); ஆகாஷே = வானில்; கச்சந்தீம் = போய் கொண்டிருந்தாள்; பாவனம் = சொர்கத்தை நோக்கி; பிதாமஹஸ்ய = பிரம்மனின் இடமான
ஒரு முறை  அக்னியைப் போன்ற ஒளியுடைய அப்சரஸ் ஒருவள், புஞ்சிகஸ்தலா என்ற பெயருடையவள், தன்னை தானே மறைத்து ஒளிந்து கொண்டு வானில் பிரம்மன் இருக்கும் சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
ஸா ப்ரஹஸ்ய மயா புக்தா க்ரிதா விவஸனா தத: |
ஸ்வயம்பூபாவனம் ப்ராப்தா லோலிதா நளினீ  யதா || 6-13-12
ஸா = அவள்; க்ரிதா = ஆக்கப் பட்டு இருந்தாள்; விவஸனா = ஆடைகள் இன்றி; மயா = என்னால்; புக்தா = அனுபவிக்கப்பட்டு; ப்ரஹஸ்ய = பலாத்காரமாக; தத: = அதன் பின்; ப்ராப்தா = அவள் சென்று அடைந்தாள்; ஸ்வயம்பூ  பாவனம் = பிரம்மனின் இடமான சொர்கத்தை; லோலிதா = நசுக்கி சிதைக்கப்பட்ட; நளினீ  யதா = ஒரு தாமரை போல;
அவளது ஆடைகளை நீக்கி அவளைப் பலாத்காரம் செய்தேன். அதன் பின், அவள் நசுக்கிச் சிதைக்கப் பட்ட ஒரு  தாமரையைப் போல, பிரம்மனின் இடமான சொர்கத்தை சென்றடைந்தாள்.
தச்சா தஸ்ய ததா மன்யே  ஜ்ஞானாதமாஸீன்மஹாத்மன:  |
அத ஸம்குபிதோ வேதா மாமிதம் வாக்யமப்ரவீ  || 6-13-13
மன்யே =நான் நினைக்கிறேன்; தச்சா = இது (இந்த விஷயம்); ஜ்ஞானாத = சொல்லப்பட்டது; ததா = அதன் பிறகு; தஸ்ய = பிரம்மாவுக்கு; மஹாத்மன: = மகாத்மாவான; அத = பிறகு; ஸம்குபித = கடுங்கோபம் கொண்ட; வேதா: = பிரம்மா; அப்ரவீத் = பேசினார்; இதம் = இந்த; வாக்கியம் = வார்த்தைகள்; மாம் = என்னிடம்
இந்த விஷயம் பிரம்மாவிடம் தெரிவிக்கப் பட்டதென்று நினைக்கிறேன். மகாத்மாவான பிரம்மா கடுங்கோபம் கொண்டு இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

அத்யப்ரப்ருதி யாமன்யாம் பலான்னாரீம் காமிஸ்யஸி   |
ததா தே ஷ்டதா முர்தா பலிஸ்யதி  ந சம்ஷய: || 6-13-14
அத்ய ப்ரப்ருதி = இன்று முதல்; காமிஸ்யஸி = காமம் கொண்டு ; யாம் அந்யாம் = வேறெந்த; நாரீம் = பெண்மணி; பலான் = பலத்தை பிரயோகித்து பலாத்காரம்; ததா = பிறகு ; தே = உனது; மூர்தா = தலை; பலிஸ்யதி = தூள் தூளாக (சுக்கு நூறாக); ஷடதா = நூறு (துண்டுகளாக); ந சம்ஷய: = சந்தேகமின்றி
இன்று முதல் காமத்தோடு நீ எந்த பெண்ணையும், உன் பலத்தைப் பிரயோகித்து பலாத்காரம் செய்தால், உன் தலை சுக்கு நூறாக தூளாகும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இத்யாஹம் தஸ்ய ஷாபஸ்ய பீதா: ப்ரஸபமேவ தாம் |
நாரோஹயே பலாத்சீதாம் வைதேஹீம் ஷயனே சுபே  || 6-13-15
பீதா: = பயத்தால்; தஸ்ய = அவரது; ஷாபஸ்ய = சாபத்தால்; இதி = இந்த வகையில்; அஹம் = நான்; நாரோஹயே சீதா (தா)ம் = சீதையை நான் ஒன்றும் செய்யவில்லை வைதேஹீம் = விதேக நாட்டு அரசரின் மகளான அவளை அடைய; சுபே = (என் ) கவர்ச்சிகரமான (அழகான); ஷயனே = படுக்கை; ப்ரஸபமேவ = அவசரப்பட்டு
பிரம்மனால் இந்த வகையில் சபிக்கப் பட்ட பயத்தால், நான் விதேக அரசரின் மகளான சீதையை பலாத்காரம் செய்ய எனது அழகான படுக்கைக்குக் கொண்டு செல்லவில்லை.
==================
இப்படியாக புஞ்சிகஸ்தலா தன்னையுமறியாது சீதைக்காக ஒரு உதவி புரிந்த பூர்வ ஜன்ம புண்ணியத்தால், மீண்டும் அஞ்சனையாகப் இப்புண்ணிய பூமியில் பிறந்து சிவனாரின் ரூபமான அனுமனின் தாயாகிறாள். அதைப் பற்றி மேலே படிக்கலாம்.

புஞ்சிகஸ்தலா ஒரு நாள் தெய்வ ஆராதனைக்காக பூக்கள் பறித்துக் கொண்டிருந்த பொழுது, மானுடப் பெண்கள் சிலர் தங்கள் துணைவரோடு உறவில் இருப்பதைக் கண்டு, உணர்ச்சிவசப்படுகிறாள். காமவயத்தில் அவள் பிருஹஸ்பதி முனிவரை கவர முயற்சிக்கிறாள். இதனால் கோபம் கொண்ட முனிவர் அவளைப் பெண்குரங்காக மாறும்படி சபிக்கிறார். அவள் மன்னிப்பு கேட்ட போது, சிவ ஸ்வரூபமாக ஒருவனை மகனாகப் பெறும் போது இந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவாள் என்றும் சொல்கிறார்.

இப்படி குரங்காக மாறிய அப்சரஸ், கௌதம மகரிஷிக்குப் பெண்ணாகப் பிறந்து அஞ்சனை என்று அழைக்கப்படுகிறாள். இந்தக் குறிப்பு சிவபுராணத்தில் உள்ளது. கௌதமருக்கு அஹல்யா என்ற ரிஷி பத்தினி ஒருவர் மட்டுமே மனைவி என்பதால், இவரையே அஞ்சனையின் தாய் எனக் கொள்ளலாம். (ஆதாரக் குறிப்புக்கள் ஏதும் இல்லை. இது யூகம் மட்டுமே). அஹல்யாவின் தந்தை பிரம்மா என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகையால் அஞ்சனையின் தாய் வழித் தாத்தா பிரம்மன் என்பதாகிறது.

இங்கே குறிப்பிடத்தகுந்த ஒன்று: இராவணனின் தந்தை வழி தாத்தா பிரம்மன் என்றும் சிவபுராணம் குறிக்கிறது. அனுமனும், இராவணனும் பல மொழிகள் பேசும் வல்லமை பெற்று இருந்தனர். அனுமன் கிஷ்கிந்தையில் பேசும் மொழியான தெலுங்கு/கன்னடம் ஆகிய மொழிகள் சீதைக்குத் தெரியாது என்றும்,  வடமொழியான சமஸ்கிருதத்தில் பேசினால் இராவணன் என்று நினைத்து விடுவாள் என்றும், அயோத்தியாவின் மொழியான ப்ரகிரித் மொழியில் பேசியதாக இராமாயணம் கூறுகிறது.  க்ஷத்திரியர்களின் பாஷையான ப்ரகிரித் மொழி, சமஸ்கிருதத்துக்கும் புராதனமானது என்று நம்பப் படுகிறது. சிலர் இதை பண்பட்ட சமஸ்கிருதம் என்றும் கருதிகிறார்கள். அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்களில் இம்மொழி அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அனுமனும், இராவணனும் இசையில் சிறந்து விளங்கினர். இராவணனின் சகோதரன் விபீஷணன் கூட,

வாதே விவாதே சங்க்ராமே; பய் கோரே மகாவரே;
சிங்வ்யாக்ரதி சோரேப்ய ஸ்தோத்ரே பதத் பயம் ந ஹி; என்கிறார்.

அதாவது ஆஞ்சநேயா என்று அழைத்தாலே (பெயரை உச்சரித்தாலே) போதும், பேச்சு, வாக்கு, வாத விவாதங்கள் ஆகியவற்றில் வளமை பெற்று,  அதி பயங்கரமான பயன்கள் போன்றவையிலிருந்து விடுபடலாம். மேலும் பேரழிவை உண்டாக்கும் அபாயங்களில் இருந்தும் விடுபட்டு, செய்யும் எச்செயலிலும் வெற்றி பெறுவார் என்கிறார்.

இன்றும் ஹிந்துஸ்தானி இசையில் ஸ்ரீ ஹனுமத் ராகா என்ற ராகம் பாடப் பட்டு வருகிறது. இது தவிர அஞ்சனி கல்யாண் போன்ற இராகங்களும் ஹனுமானால் பாடப் பட்டவை என்கிறார்கள்.


இப்போது இருக்கும் வயலின் கருவி, இராவணன் கி.மு.5000-ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய இராவணஸ்தம் என்ற கருவியின் அடிப்படையில் அமைந்தது என்றும் கூறுகிறார்கள். அதேபோல, இராவணன் வாசித்த ஹஸ்தவீணை / இராவண ஹஸ்தம் (தந்திகள் கொண்ட வீணை)  ஏழாம் நூற்றாண்டில் இருந்ததாக அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். 22 அங்குல நீளமும், எட்டு கட்டைகள் (ஆக்டேவ்) கொண்டதும், குடம் தேங்காய் ஓட்டாலும், தண்டு மூங்கிலாலும், தந்திகள் உலோகத்தாலும், குதிரை வால் முடியாலும் செய்யப்பட்டு இருந்ததாகக் குறிப்புக்கள் புராணங்களிலும், நவீன ஆராய்ச்சி சான்றுகளிலும் உள்ளன. இப்படிப் பார்த்தால் வயலின் வாத்தியக் கருவி, மூன்று கட்டைகளும், நான்கு தந்திகளும், விரல் பலகை 5-1/4 அங்குலம் அளவுகளைக் கொண்டது. இது கணக்குப்படி நான்கால் பெருக்கும் போது இராவணஹஸ்தத்தின் அளவான 22 வருகிறது. அப்படியென்றால் அவர்களின் உருவ அளவை கற்பனை செய்து பாருங்கள். :)

இன்றும் இவ்வகை தந்தியுடைய கருவிகள் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வாசிக்கப் படுகின்றன. புராணங்கள், இராவணனின் கொடியில் கூட வீணை முத்திரை இருந்ததாகக் குறிக்கிறது.  போரில் இராவணன் மூக-வீணை (வாயாலும் வாசிக்கலாமாம்) வாசித்து எதிரிகளின் நம்பிக்கையைக் குலையச் செய்வானாம்.   சரி, மீண்டும் அனுமனுக்கு வருவோம்.

அஞ்சனையின் கணவரான கேசரி வானர அரசராவார். கேசரியின் தந்தை ப்ரிஹஸ்பதி. ப்ரிஹஸ்பதி தேவகுருக்களில் ஒருவர், நாரதரைப் போன்ற சமகால தேவ ரிஷி ஆவார். அனுமன் தன் தந்தையென்று சொல்லும் போதெல்லாம் இவரை முதலிலும் பின்தான் வாயுவையும் குறிப்பிடுகிறார்.


அனுமனுக்கு இரு தந்தைகள் என்று புராணக் குறிப்புக்கள் உணர்த்துகின்றன. வாயு என்பவர் ஒரு தேவனாக இருந்திருக்கலாம், காற்றின் உருவமானவர் என்று குறிப்புக்கள் கூறுகின்றன. "மருத்" என்ற வம்சத்தினராக கருதப்படும் குழுவை உருவாக்கியவர் வாயு. மருத் என்பவர்கள் சிவனின் மகன்கள் என்றும் குறிப்புக்கள் உள்ளன. இவ்வகையில் அனுமன் சிவனின் பேரன் முறையாகிறார்.

இராமாயணத்தில் அனுமனின் பிறப்பு பற்றிய குறிப்புக்களில், அயோத்தி அரசரான தசரதன் பிள்ளை வேண்டி புத்திர காமேஷ்ட்டி யக்ஞம் செய்யும் போது அக்னி தேவன் ஹோமத்தின் (யக்ஞம்) பலனாக (பிரசாதம்) பாயஸம் ஒன்றை, தசரதனின் நான்கு மனைவிகளுக்குப் பகிர்ந்து அளிக்குமாறு கூறி,  கொடுக்கிறார். இந்நிலையில் சிவனை குறித்து கடுந்தவம் புரிந்த அஞ்சனைக்கு சிவரூபமாக ஒரு மகன் பிறப்பான் என்று வரமளிக்கிறார். தசரதன் கொண்டு செல்லும் பாயசத்தின் ஒரு பகுதியை கழுகு ஒன்று பறித்துச் செல்கிறது. இதில் சிதறிய துளிகளில் கொஞ்சம் காற்றில் கலந்து அஞ்சனையின் கைகளில் விழுகிறது. இதை அருந்தும் அஞ்சனைக்கு பின்னாளில் அனுமன் பிறப்பதாக சிவ புராணம் கூறுகிறது. பீமனும் வாயுவுக்குப் பிறந்ததாகக் கருதப் படுகிறான்.

மருத் வம்சத்தின் வாயுவின் மகன் என்பதால் வாயு புத்திரன் / மாருதி / பவன புத்திரன் என்றும், அஞ்சனை மகன் என்பதால் ஆஞ்சநேயன் என்றும், வானர அரசரான கேசரி மகன் என்பதான் கேசரி நந்தன் என்றும், வஜ்ஜிரம் (வைரம்) போன்ற உடலுடையவர் என்பதால் பஜ்ரங்கபலி (சமஸ்கிருதம்) என்றும், சிவரூபமானதால் மகாருத்ரன் என்றும் அழைக்கப் படுகிறார்.

மகாராஷ்ட்ராவில் உள்ள த்ரிம்பகேஷ்வர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பிரம்மகிரி மலை அனுமன் பிறப்பிடமாக கருதுகிறார்கள்.  சிலர் கர்நாடக மாநிலத்தில் (மாநிலமாக நவம்பர் 1, 1956-ஆம் ஆண்டு உருவானது) உள்ள ஹம்பியில் (இப்போது விஜயநகர சாம்ராஜ்யத்தின் வரலாற்று மிச்சங்கள்), பம்பை நதிக்கரையில் அமைந்துள்ள ரிஷ்யமுக பர்வதம் என்றழைக்கப்படும் மலையில் பிறந்ததாகவும் கருதுகின்றனர்.

மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் கும்லா என்ற இடத்திலிருந்து 18 கி.மி. தொலைவில், ஆஞ்சன் என்ற கிராமம் ஒன்றும் உள்ளது, அஞ்சனை இருந்ததால் இப்பெயர் காரணம் என்கின்றனர். இன்றும் நான்கு கிலோமீட்டர் மலை உயரத்தில் குகைகள் இருப்பதாகவும், அங்கே அகழ்வாராய்ச்சிக்கு உகந்த பொருட்களும் கிடைப்பதாக கூறுகின்றனர். இந்தப் பொருட்களை பாட்னாவில் காட்சிக்கு வைத்துள்ளனர்.

தொன்மை மற்றும் சிறப்பு மிக்க வழிபாட்டுத் தலங்கள்:
  1. மிகத் தொன்மையான ஆஞ்சநேயர் சிலையொன்று கஜுராஹோவில் உள்ளது. இதை கி.பி.883-யில் 'காஹில் மகனான கோல்லாக்' என்பவர் நிறுவியதாக கல்வெட்டுக் குறிப்புள்ளது.
  2. ஜலந்தரில் உள்ள பில்லௌர் (பஞ்சாப்) என்ற 50362 கி.மி. பரப்பளவில் சங்கட மோச்சன் ஸ்ரீ ஹனுமான் மந்திர் உள்ளது. இக்கோவிலின் உயரம் 121 அடியாகும். இங்கு உயரமான 67 அடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
  3. மகாராஷ்டிரா NH-6-ல் அமைந்துள்ள நந்துரா என்ற இடத்தில் 105 அடியுள்ள சிலை உள்ளது.
  4. தமிழ்நாடு நாமக்கல்லில் சுயம்பு எனக் கருதப் படும் 18 அடி உயரமுள்ள சிலை உள்ளது. இது வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள். இதனால் இங்கு கூரை வேயப் படவில்லை.
  5. 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றான சோழிங்கூர் / சோளிங்கர் (வேலூர் வாலாஜா தாலுக்கா) என்ற இடத்தில் யோக ஆஞ்சநேயர் சின்ன மலையில் அமைந்துள்ளார். இதற்கு 480 படிகள் உள்ளன. சங்கு, சக்கரம், ஜபமாலை, ஜப சங்காரம் ஏந்திய நான்கு கைகள் (சதுர்புஜம்) உள்ள ஆஞ்சநேயரை இங்கு காணலாம்.
  6. ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில் பெங்களூர் ஜே.பி.நகரில் உள்ளது. இக்கோவில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது.
  7. நேருல், நவி மும்பையில் ஒரு தொன்மையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வெள்ளிக் கவசத்தோடு கூடிய சிலை காணப் படுகிறது.
  8. சென்னை நங்கநல்லூரில் 32 அடி உயரமுள்ள ஆதிவியாதிஹர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இங்கு மிகவும் சிறப்பு மிக்கது.
  9. ஒரிசா ரூர்கேலாவில் 72 அடி ஹனுமான் சிலை உள்ளது.
  10. ஆந்திரா குண்டூர் பொன்னூரில் 30 அடி ஹனுமான் சிலை உள்ளது.
  11. ராஜஸ்தான் தௌசா-வில் உள்ள ஹனுமானை டாகுர்ஜி (ஸ்ரீ மேஹந்திபுர்ஜி பாலாஜி)என்று அழைக்கிறார்கள். 
  12. ஆந்திராவில் பரிதலா என்ற இடத்தில் 135 அடி ஆஞ்சநேயர் உள்ளார். (2003 ஆம் ஆண்டு கட்டப்பட்டது)
  13. கும்பகோணத்தில் பஞ்சமுக அனுமான் - கிழக்கை நோக்கி குரங்கு முகம் (அ) ஹனுமான் (புத்தி-வெற்றி), தெற்கில் சிங்க முகம் (அ) நரசிம்மர் (வெற்றி-தைரியம்),  மேற்கில் கருட முகம் (அ) விஷ்ணு (மாந்த்ரீகம் மற்றும் விஷம் நீக்க), தெற்கில் வராஹம் (அ)  விஷ்ணு, வான் நோக்கி குதிரை முகம் (அ) ஹயக்ரிவர் (ஞானம் மற்றும் குழந்தைச் செல்வம்)
  14. இவற்றில் மிக முக்கியமாக ஹிமலாயாவில் உள்ள சித்ரகூட், அனுமன் ஓய்வெடுக்கும் இடமாகக் கருதப் படுகிறது. மலை முகட்டில் அமைந்துள்ள கோவிலும் ஹனுமான் தாரா என்று அழைக்கப் படும் நீர்வீழ்ச்சியும் ஒரு அற்புத அனுபவம். 
  15. பஞ்சவடியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்
 

சைனாக்கார சன் வுகாங்
குரங்கு அரசனான சன் வு குங் (Sun Wukong) என்பவன் கற்பனையில் உருவாக்கப்பட்ட நாயகனாகக் கொண்டு 1590-யில் மிங் டைனாஸ்டியின் போது எழுதப் பட்ட சீன இலக்கியங்களில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். மிகவும் சுவாரசியமான எழுத்து நடைக்கு இவ்விலக்கியம் ஒரு சிறந்த உதாரணம். Journey to the West பி.டி.எப். கோப்பு இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள கிளிக் செய்யுங்கள். நூறு அத்தியாயங்களுடன் மொத்தம் 1410 பக்கங்கள் இருக்கின்றன.

இந்த இலக்கியம் இவன் வானிலிருந்து விழுந்த ஒரு துகளிலிருந்து பிறந்ததாகக் கூறுகிறது. பேராற்றல் படைத்த வீரனாகவும், குரங்குகளிலேயே மிகவும் அழகானவனாகவும் (!!?), மிருகமாகவும், மனிதனாகவும், உருவத்தை பெரிதாக்கியும், சிரியதாக்கியும் கொள்ள முடியும் ஆற்றல் கொண்டும், 72 வகையான உருவத்தில் தன்னை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டும், கூடு விட்டு கூடு பாயும் சக்தியோடும் விளங்கினானாம். 13500 கேட்டி (jīn (or) catty i.e., 1 jīn = 8,100 kgs ) அளவுக்கு பாரம் தூக்கும் பலம் பெற்றவனாகவும், ஒரு நிமிடத்திற்குள் 108,000 Li (1 Li = 500 metres) தொலைவு தாண்டக் கூடிய ஆற்றலும் கொண்டிருந்தானாம். டாவோயிசம் (Taoism) கற்றவனாகவும் இருந்தானாம்.

டன் சங் ஜங் (Tan Sang Zang) என்றவன் (அரசன்!!) பயணம் செய்து கொண்டிருந்த போது இவனைச் சந்தித்து, இவனை காக்கின்றனர். இருவரும் நட்பாகி விட்டனர். இவனுக்கு மனிதர்கள் போல பேசவும் நடந்து கொள்ளவும் கற்றுக் கொடுத்தானாம். மேலும் சன்-னுக்கு மந்திர மாந்த்ரீக ஆற்றல்களையும் கற்பித்தானாம். Space Shifting என்று இப்போது அழைக்கப் படும் ஆகாய கமனம்  (ஆகாய பயணம்/விண் நடமாட்டம்) செய்தலையும் சன் கற்றானாம். வழியில் இவர்கள் இருவரைச் சந்தித்து அவர்களும் கூட்டணியில் இணைகின்றனர்.

தன் உடலின் ஒவ்வொரு ரோமத்தையும் ஒரு உயிராகப் படைக்கும் வித்தையையும் கற்பித்தானாம். (கவனிக்க: லங்கா தகனத்திற்குப் பிறகு அனுமன் தன் வாலை கடலில் முழ்க வைத்து அணைக்கும் போது சிந்திய வேர்வைத் துளியிலிருந்து பாதாள லோக காப்பாளன் மகர-த்வஜன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறது)

இவனால் ஒரே சமயத்தில் பல தலைகளையும், பல கைகளையும் ஒரே உடலில் உருவாக்க முடியுமாம். (கண் கட்டு வித்தையோ??!!) நீருக்குள்ளும், நெருப்பிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் கடக்க முடியுமாம். இவன் நினைத்த மாத்திரத்தில் கொதி நீர்ச் சுனையிலும், ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரிலும் மூழ்கிக் குளிக்க முடியுமாம். இவனுக்கு பச்சிலை வைத்தியம் தெரிந்திருந்ததாம். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் ஒரு அரசனனின் உயிர் காக்க இந்த ஆற்றலைப் பயன் படுத்தினானாம். (துரோணகிரியில் இருந்த, லக்ஷ்மணனைக் காத்த பச்சிலையோ???)  இவனை பீ மா வென் / Bi Ma Wen (பீமவான்!!) என்றும் கூறுகிறார்கள். இவன் குதிரைகள் அடக்கவும் அவற்றை தன் கட்டுப் பாட்டில் கொண்டுவரவும் ஆற்றல் மிக்கவனாம். ஒருமுறை இவன் கடலைக் கடந்து கொண்டிருந்த போது நான்கு டிராகோன்-களைக் கொன்றானாம்.

சன் வுகாங் பெருவிழா (Monkey God Festival) சீனாவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதங்களில் கொண்டாடப் படுகிறது.

கண்டோனிய மொழியில் ஸ்யுன் இங் ஹூங் (Syun Ng Hung) என்றும், கொரியாவில் சொன் ஒஹ் கோங் (Son Oh Gong) என்றும், வியட்நாமில் டான் இங்கோ கோங் (Ton Ngo Khong) என்றும், ஜப்பானில் சொன் கோகூ  (Son Goku) என்றும், இந்தோனேசியாவில் சன் ஹோ காங் (Sun Go Kong) என்றும் அழைக்கப்படுகிறான்.

 ( ^_^ )


.

பரமபதம் என்ற ஸ்நேக் அண்டு லேடர்ஸ்


தற்போது இருக்கும் பரமபதம்

பரமபத சோபானம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் தொன்மையான விளையாட்டு. ஹிந்துத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் மதிப்பை இளையவர்களுக்கு (குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு) கற்றுத் தர உருவாக்கப் பட்டது. மோக்ஷ பதம், பரம பதம், மோக்ஷபத் (ஹிந்தி), மோக்ஷ படமு (தெலுங்கு), என்று இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கில் பலவாறு அழைக்கப் படும் இவ்விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள். ஆனால் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருவதற்கான குறிப்புக்கள் உள்ளன. ஆரம்பத்தில் தசபதம் என்று 10 x 10 கட்டங்களில் விளையாடப் பட்டு, பின் நூறு கட்டங்களாக வளர்ந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன.


தொன்மையான பரமபதம் (துணியில் வரையப் பட்டது)

பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் பன்னிரெண்டாம் இடம் உண்மையையும், ஐம்பத்தொன்றாம் இடம் நம்பிக்கையையும், ஐம்பத்து ஏழாம் இடம் பெருந்தன்மையையும், எழுபத்தாறாம் இடம் ஞானத்தையும், எழுபத்தெட்டாம் இடம் சன்யசத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

நாற்பத்தொன்றாம் கட்டத்தில் கீழ்ப்படியாமை, நாற்பத்து நான்காம் கட்டம் அகந்தை, நாற்பது ஒன்பதாம் கட்டம் ஈனம், ஐம்பத்து இரண்டாம் இடம் களவு/திருட்டு, ஐம்பத்து எட்டாம் இடம் பொய்/புரட்டு, அறுபத்து இரண்டு மதுபானம் அருந்துதல், அறுபத்து ஒன்பது கடன், எழுபத்து மூன்று கொலை, எண்பத்து நான்கு கோபம்/வெஞ்சினம்/வஞ்சம், தொண்ணூற்று இரண்டு கர்வம், தொண்ணூற்று ஐந்து பெருமை, தொண்ணூற்று ஒன்பது காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம்/அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கட்டங்களைக் கொடுக்கும்.

இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க 'தாயம்' அதாவது 'ஒன்று' விழ வேண்டும். முதலில் மோக்ஷம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார்.

நூறாம் கட்டம் நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்று அழைக்கப் பட்டது.

1892-ஆம் ஆண்டு பிரிட்டிஷார்கள் (மில்டன் பிராட்லி - Milton Bradley) இவ்விளையாட்டை இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று, snake & ladders / Chutes என்ற பெயரில் விக்டோரியன் முறைப்படி மாற்றினார்கள்.

1943-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு இவ்விளையாட்டு சென்றைடைந்த நேரத்தில் நல்லொழுக்க நெறிகள் மாற்றத்திக்கு ஆளாகி இருந்தன.உண்மையில் குறைந்து இருந்தன என்ற சொல்லலாம். கனடாவில் tobogaan runs என்றழைக்கப் படுகிறது.

தொன்மை வாய்ந்த இந்த விளையாட்டு snake and ladders மூலம் அழிந்து விட்டது. இப்போதெல்லாம் யாரும் விளையாடுகிறார்களா?

இன்றும் சிலர் வைகுண்ட ஏகாதசி அன்று இரவெல்லாம் கண்விழித்து இவ்விளையாட்டை விளையாடுகிறார்கள். படத்தை பெரிதாக்கிப் பார்க்கலாம். தெலுங்கில் உள்ளது. (நன்றி விக்கிமீடியா)






.

ஒரு மரம் ஒரு நான்

பெரிய்ய தேவதாஸ் பரம்பரையாக்கும்

எல்லாம் மாயா


கொடியது கேட்கின் வரிவடிவேலோய்



உங்களைச் சுற்றி உலகில் வேறெந்த ஜீவனுமே மிச்சமில்லாமல் போய்விட்டால், நீங்கள் மட்டுமே உயிரோடு இருப்பதாக இருந்தால், சுற்றிலும் பிணங்களே இருந்தால், நீங்கள் நம்பிக்கை இழக்காமல், மனம் தளராமல், துணையேதும் இன்றி எப்படி வாழ்வீர்கள்.

உலகமே அழிந்து விட்டு நாம் மட்டும் தனியாக இருந்தால் என்ன செய்வது.  நாம் மட்டும் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் என்று கேட்கிறீர்களா? யார் கண்டது... நதியின் அக்கரையில் ஒரு ஹ்ருதிக் ரோஷனோ, அல்லது ஸ்ரேயாவோ உயிரோடு இருந்தால்.


ஆகவே, இனியும் கங்கையை அசுத்தப்படுத்த வேண்டாம்  என்ற பதிவின் தொடர்ச்சியாக.

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே


இவையெல்லாவற்றையும் விடக் கொடியது தனிமை.


நம் generation-களில் single child என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. அதையும் தவிர சூழ்நிலைக் காரணங்களாலும், தன் சொந்த விருப்பத்தாலும், பணி நிமித்தமாகவும், குடும்பத்தோடு கூடி இருந்தாலும் களிப்பில்லாமல் மனதாலும், தன்னம்பிக்கை இல்லாது சமூகத்தோடு இணைய முடியாமலும், சமூகத்தால் பல காரணங்களுக்காக மதிக்கப்படாமல் இருத்தலும், துணை மற்றும் மகன் / பெற்றோர் போன்ற உறவுகளின் இழப்பு, மற்றவர் மீது நம்பிக்கையின்மை, சுய-மதிப்பின்மை, போன்ற பல காரணங்களுக்காக ஒருவர் தனித்துப் போகிறார்.


இக்காரணங்களில் எதுவுமே ஒருவர் மனதிற்கு நேர்மறையான விளைவுகளைக் கொடுப்பதில்லை. இதனால் வெறுமை, வெறுப்பு, பாதுகாப்பு உணர்வின்மை, மன அழுத்தம், தற்கொலை உணர்வு, போன்ற எதிர்மறை எண்ணங்கள் விளைகின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் உடலில் பல்வேறு ஆற்றொணாக் கொடுநோய்கள் விளைய வித்தாகின்றன.


தனிமையில் இருந்தாலும் தனித்தில்லாமல் இருக்க நம்மிடம் டீ.வி., ரேடியோ, மியூசிக் பிளேயர் போன்ற பல வசதிகள் இருந்தாலும், மனம் லயிக்குமா? நம்மோடு ஒருவர் இருந்து அவர் football match பார்க்க விருப்பம் என்று சொன்னால், ஒரு போட்டிக்காவது 89-களின் ஹீரோ கப் repeat telecast-டில் கபில்தேவை பிடிவாதமாய் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் போட்டிக்கு ஆளே இல்லையென்றால், டீ.வியில் மனம் லயிக்காது. மனம் அப்போது வெறுமையால் சோர்வுறாமல் இருக்க என்ன செய்வது?


இந்து சமூகத்தில் ஒரு பிரிவினர் தினமும் சமைத்த உண்ணும் உணவை சாப்பிடும் முன் காக்கைக்கு இட்டு, பின் தட்டின் முன் அமர்ந்து 'பரிஷேஷனம்' செய்துவிட்டு சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இதன் பின்னணியில் இருக்கும் மனோதத்துவம் என்ன? இதனால் ஒருவருக்கு விளையும் நன்மைகள் என்ன?


நம் மூத்தோர்கள் இறந்து, காக்கை ரூபத்தில் வந்து நம் வீட்டில் உணவு உண்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இதில் எத்தனை உண்மை இருக்கலாம். 


ஒரு உதாரணத்திற்கு என்றாலும் என் தாய் வீட்டில் ஒரு நிகழ்வை இன்றும் நினைத்து நினைத்து ஆச்சரியப்படுவேன். எங்கள் பாட்டி (அம்மாவின் மாமியார்) தன் தாயார் திதி மற்றும் சுமங்கலி பிரார்த்தனை செய்யும் நாட்களில், எள் கலந்த சாதம் வைப்பார். அன்று மட்டும் ஜோடியாக ஒரு அண்டங்காக்கையும் காகமும் வந்து சாப்பிடும். மற்ற தினங்கள் எல்லாமே, பாட்டி கொடுக்கும் உணவை அந்தக் காகம் மட்டும் தான் வந்து உண்டு செல்லும். காகங்கள் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், நான் கூட சின்ன வயதில் "எப்படிப் பாட்டி இந்த காக்காய்தான் தினோம் வரதுன்னு கண்டுபிடிகிற" என்றும் "பாட்டி. உங்கம்மா வந்திருக்கா பாரு" என்று கிண்டல் செய்துள்ளேன். ஆனால் இன்றும் கூட என் பாட்டி திதியன்று இதே போலத்தான் நிகழ்கிறது. மிகச் சரியாக திவசம் (திதி காரியங்கள்) முடிந்து, அந்தணர்களுக்கு இலையில் சாதம் பரிமாறி,  அவர்கள் பரிஷேஷனம் செய்யும் போது, "சாப்பிடும்மா" என்று பாட்டி (இப்போது என் தாய்) குரல் கொடுத்த பின்தான், காக்கையும் உணவைச் சாப்பிடும். இதை படிக்கும் போது, நம்பவே முடியாது. ஆனால் நான் கண்ணால் கண்டு கொண்டிருக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.



சமீபத்தில் இந்து பத்திரிகையில் ஒரு article வந்திருந்தது. காக்கைக்கும், பறவைகளுக்கும், வீட்டுக் கொட்டில் மாட்டுக்கும் உணவு கொடுத்துச் சாப்பிடும் பழக்கம், மற்றும் அதே போல நாய், பூனை போன்ற மிருகங்களை வீட்டில் வளர்ப்பதும் தனிமை உணர்வைக் கொல்கிறதாம்.


தைத்திரீய உபநிஷதில் குறிப்பிட்டபடி,



"அஹம் அன்னம் அஹம் அன்னம்  அஹம் அன்னம்,
அஹம் அன்னாதோஹம் அஹம் அன்னாதோஹம் அஹமன்னத: " என்று பிராணனுக்கு அன்னத்தை வழங்குகிறார்கள்.


இதன் பொருள்: நான் பரமாத்மாவுக்காக இந்த உணவை உண்கிறேன், அதனால் ஆத்மாவுக்கு நானே உணவாகிறேன். நானே இந்த உணவு. நானே இதை உண்கிறேன். நானே ஆத்மா. ஆத்மாவை மகிழ்விக்க நான் என்னையே உணவாக  உண்கிறேன்.


உணவை வெறும் ருசிக்காக இல்லாமல் ஆத்மாவோடு இணைத்து ஆத்மநிந்தனைக்கு (உடலையும் மனதையும் வருத்துதல்) இடமில்லாமல் செய்ய இந்த சுலோகம் உதவுகிறது. பரிஷேஷன தத்துவம் என்ன? பரிஷேஷனம் என்றால் என்ன? இதை ப்ராணாக்னிஹோத்ரம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. அக்னி ஹோத்ரம் / நித்ய யக்ஞம். நித்ய யக்ஞம் என்பது daily assertions. Self-Love, Counselling, Prayer, Meditation என்றெல்லாம் ஆங்கிலத்தில் ஒரு Psycho-analyst சொல்லும்போதுதான் நமக்கு அதைச் செய்து பின்பற்றுவது பற்றிய ஒரு பெருமை உண்டாகிறது. சரி!


வெறும் பசியாற்றுவது மட்டும் உணவின் செயல் இல்லை. உடலின் ஆற்றலுக்கும் சுறுசுறுப்புக்கும் மந்தத் தன்மைக்கும் நாம் உண்ணும் உணவே அடிப்படையாக அமைகிறது. அந்த உணவு தகுந்த முறையில் ஜெரிக்கப்பட்டு, கழிவுகள் வெளியேற்றப்படும்போதுதான் உணவின் சுழற்சி முடிந்து மீண்டும் பசி ஏற்படுகிறது. இந்த சுழற்சிகள் சரியான முறையில் நடைபெற "ப்ராண" என்று வேதங்கள் சொல்லும் வாயு (காற்று) மிகவும் முக்கியமானது. காற்றே நம் உடலை இயக்குகிறது. காற்றுதான் நம் மூட்டுக்களின் அசைவுக்கு காரணம். காற்றே இரத்த சுழற்சிக்கு தூண்டுகிறது. அதனால்தான் ஒருவர் இறந்துவிட்டால் "ப்ராணன் போய் விட்டது" அல்லது "breathed their last" என்கிறார்கள்.


பிராணா / ஆத்மா இரண்டுமே இணைந்து அன்னமய கோஸம், பிராணமய கோஸம், மற்றும் மனோன்மய கோஸம் ஆகிறது. அன்னமும் பிராண வாயும் மனதை ஆட்டி படைக்கும் ஆற்றல்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சைவ அசைவ உணவுகள் எதுவென்றாலும் ஆத்மாவுக்கு என்று சொல்லி ருசி-அருசிகளை பாராது மகிழ்ச்சியோடு ஏற்று உண்ணும் போது மனது (ஆத்மா) மகிழ்கிறது. "இன்று இந்த உணவை இவர்களோடு பகிர்கிறேன்" என்று மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அளித்து உண்ணும்போது தனிமை நீங்கி மனம் திருப்தி அடைகிறது. 


பரிஷேஷனம் மூன்று  நிலையாக செய்யப் படுகிறது. அதாவது, ஆபோஜனம் (உணவுக்கு முன்), ப்ராணாஹுதி (உணவை பிராணனுக்கு வழங்குவது / சாப்பிடுதல்), உத்திரபோஜனம் (உணவுக்குப் பின்).


ஓம் பூர் புவ: ஸுவ: என்று காயத்ரி மந்திரம் சொல்லி,


சத்யம் த்வருதேன  பரிஷிஞ்சாமி"  என்று பகலிலும் (சத்யம் + து + றுதேன + பரிஷிஞ்சாமி = உணவே! நீயே சத்யம். எனக்கு ஏற்ற உணவான (சரியான) உன்னைச் சுற்றி தண்ணீர் தெளித்து, தெய்வமாக வணங்குகிறேன்) இரவில் "ருதம் தவ சத்யேன பரிஷிஞ்சாமி" என்றும் (அதே அர்த்தம் தான் - ஆனால் வார்த்தைகள் இடம் மாறி இருப்பதைக் கவனிக்க) வணங்குகிறார்கள்.


ஓம் ப்ரணய ஸ்வாஹா (மூச்சுக் காற்றை வணங்குதல் / breath )
ஓம் அபானாய ஸ்வாஹா (மல ஜலங்கள் வெளியேறும் முறையை வணங்குதல் /excretion system )
ஓம் வ்யானாய ஸ்வாஹா (இரத்தவோட்டத்தை வணங்குதல் / circulatory system)
ஓம் உதானாய ஸ்வாஹா (சுவாசத்தை வணங்குதல் / respiratory system)
ஓம் ஸமானாய  ஸ்வாஹா (ஜெரிக்க உதவும் உறுப்புக்களை வணங்குதல் / digestive system)
ஓம் ப்ரஹ்மனே ஸ்வாஹா (காக்கும் கடவுளாக பிரம்மனை வரித்ததால் இந்த உணவு பிரம்மனாகட்டும்)

ஓம் பிரம்மாணி மா ஆத்மா அம்ருதத்வாய (இந்த உணவே இந்த அனைத்தையும் இணைத்து (ப்ராண, அபான, வ்யான, உதான, ஸமான) என் ஆத்மா மற்றும் உடலாகி என்னையும் பிரம்மனாக்கட்டும்)



சந்தோக்யோபநிஷத்-தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தத் யத் பக்தான  ப்ரதமமாகச்சேத் தத்தோமீயம்!
ஸ யாம் ப்ரதமாம் ஆஹுதிம் ஜுஹுயாத் ப்ராணாய ஸ்வாஹேதி!
ப்ராணஸ்த்ருப்யாதி !

ப்ராணே த்ருப்யாதி சக்ஷுஸ் த்ருப்யாதி!
சக்ஷுஷி த்ருப்யத்யாத் ஆதித்யஸ் த்ருப்யாதி!
ஆதித்யே த்ருப்யாதி த்யௌஸ் த்ருப்யாதி!
திவி த்ருப்யந்த்யாம் யத் கிஞ்ச தௌஸ்வ ஆதித்யஸ்சாத் அதிதிஷ்டாத:
தத் த்ருப்யாதி!
தஸ்ய அனுத்ருப்திம் த்ருப்யாதி பிரஜா பஷுபீர் அன்னாத்யேன தேஜஸா
ப்ரஹ்மாவரச்சேநேதி !


இதன் பொருள்: உணவை உண்பவன் முதலில் தானம் (மற்றவருக்கு அதாவது மனிதன், மிருகம், பறவைகள் முதலானவை) அளித்து விட்டு உண்கிறான். அப்படி அளிக்கப்பட்ட உணவானது இறைநிலை பெறுகிறது. இதனால் ப்ராணன் திருப்தி அடைகிறது. இந்தத் திருப்தியானது ஹோமம் செய்வதற்கு ஒப்பானதாகும். ப்ராணன் திருப்தி அடைந்ததும் (மற்றவர்கள் திருப்தியாக உண்பதைக் கண்ட) கண்களும் திருப்தி அடைகின்றன. கண்கள் திருப்தியடைந்ததும் சூரியன் திருப்தியடைகிறான். சூரியன் திருப்தியடைந்ததும் ஸ்வர்கங்கள் (ப்ரபஞ்சம்) திருப்தியடைகிறது. எல்லாரும் திருப்தியடைகிறார்கள். பசு (மிருகங்கள்), பக்ஷி (பறவைகள்) ஆகியவையும் மனிதர்கள் போலவே திருப்தியடைகிற காரணத்தால், எங்கும் தேஜஸ் (ஒளி) நிறைந்திருக்கிறது. இதனால் பிரம்ம தேஜஸ் (உயிர் / ஆத்மா ஒளி) எங்கும் பரவி மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது.



இவை எல்லாவற்றிற்கும் மேலே "அம்ருதோபஸ்தரணம் அஸி" என்றும் தண்ணீரை உணவுக்கு ஆடையாக போர்த்தி அம்ருதம் என்றழைக்கிறது வேதம். பூமிக்கும், மிருகங்களுக்கும், பக்ஷிகளுக்கும் இதே நீரை அம்ருதமாக வழங்குமாறும் அறிவுறுத்துகிறது.


(இன்னும் வரும்)







.


டிராகுலாவின் காதலி

ஒரு ஆங்கிலக் கவிதை போலும்

நா தஸ்ய ப்ரதிமஸ்தி


பதிவர் அ. மு. செய்யது ரொம்ப நாள் முன்னர் என்னுடைய இந்தப் பதிவில் "நா தஸ்ய பிரதிம அஸ்தி" அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது. (யசூர் வேதம் 32:3)" என்றும் ய‌சூர் வேத‌ம் சொல்லியிருக்க‌, ர‌விவ‌ர்மாவால் வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ ச‌ர‌ஸ்வ‌தி ஓவிய‌த்தை,க‌ட‌வுளாக‌ பாவித்து இந்துக்க‌ள் தொழுவ‌தேன் ??" என்றும் கேட்டிருந்தார்.

அப்போது என்னிடம் எந்தவொரு reference-ம் (ஆதாரங்கள்) இல்லாததாலும், ஏனோ தானோ என்று எதுவும் பேசுவதில் உடன்பாடில்லை என்பதாலும் உடனடியாக எதுவும் சொல்ல முடியவில்லை.

நா தஸ்ய ப்ரதிமஸ்தி என்ற இந்த விவாதத்தை முதலில் எழுப்பியவர் முகமதியராக இருந்தாலும் வேதங்களைப் படித்து அறிந்த, மதிப்புக்குரிய டாக்டர்.ஜாகீர் நாயக் அவர்கள். சமஸ்கிருதத்தின் பதம் பிரிக்கும் முறைகளை அனுமன் போலவே கையாண்ட இவரின் மொழிப் புலமையை வியக்கிறேன். விஞ்ஞானமும் சமஸ்கிருதமும் மட்டும்தான் எடுத்தார் கைப்பிள்ளை. சொல்லும் வண்ணம், பதம் பிரிக்கும் வண்ணம், வளைந்து கொடுத்து நமக்கேற்ற மாதிரி ஒரு அர்த்தம் பலனையும் கொடுக்கும்.

"நா தஸ்ய ப்ரதிமஸ்தி" என்பது ஒரு யஜுர்வேதக் கடலில் இருந்து எடுக்கப்பட்டவொரு சின்னத் துளி.

ஒரு கதையில் ஆசிரியர் "நான் குற்றம் புரிந்த ஒருவன் ஓடுவதைக் கண்டேன்" என்று எழுதி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதில் "நான் குற்றம் புரிந்த ஒருவன்" என்பது ஒரு பக்கத்திலும் "ஓடுவதைக் கண்டேன்" என்பது மற்றொரு பக்கத்திலும் பதிக்கும்போது பதிந்துவிட்டால், அதைப் படிப்பவர் பிற்பகுதியை படிக்காமல் விட்டுவிட்டால், அதை மாற்றான அர்த்தம் கொள்வதும் புரிந்துகொள்வதும் யார் தவறு?

ஒரு வக்கீல் போல, நமக்குச் சாதகமாக ஒன்றை பேச, ஒரே ஒரு வரி கிடைத்து விட்டால், அதை வைத்துக் கொண்டே கொஞ்ச காலம் வாதாட முடியும். புகழடைய முடியும். ஆனால் அதுதான் சரி என்று முடிவெடுக்க முடியாது. உண்மையை மறைப்பதும் பொய்யா இல்லையா? ஒரு திறமையான வக்கீலால் எந்தவொரு சின்ன வார்த்தையைக் கையில் எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் எதிரான ஆயுதமாக ஆக்க முடியும். இதையெல்லாம் யார் போய் ஆராய்ந்து கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற அலட்சியப் போக்கு. மேலும் நம் மக்கள் விரைவிலேயே எதையும் மறந்துவிட்டு அடுத்த பிரச்சினையை கவனிக்கப் போய் விடும் ஆற்றலும்தான் இந்த மாதிரியான பொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களுக்கு அடித்தளமாக ஆகி விடுகிறது. இதைப் பற்றி விமர்சிக்கவோ விவாதிக்கவோ போவதில்லை இங்கு.

விரைவில் யஜுர்வேதத்தின் முழுமையானத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்பை பி.டி.எஃப்-ஆக வெளியிடுகிறேன். இதை முழுதாகப் படிக்கும் பொறுமையிருந்தால் நா தஸ்ய ப்ரதிமஸ்தி என்பதன் விரிவான அர்த்தம் புரியும். ஒரு வரியிலோ, ஒரு பதிவிலோ அடக்க முடியாத பெருங்கடல் அது.

எனக்கு புரிந்ததை மட்டும் சொல்கிறேன்.

ரவி வர்மாவால் வரையப்பட்ட சரஸ்வதி ஒரு தென்னிந்தியப் பெண்ணை மாடலாக வைத்து வரையப்பட்டது. ரவி வர்மாவின் படங்கள் பெரும்பாலும் உயிருடன் இருக்கும் பெண்டிரை வைத்துதான் வரையப்பட்டன. இவரால் வரையப்பட்ட படங்கள் இன்றும் பூஜையறையில் வைத்து வணங்கப்படுகின்றன என்றால் அவரது கலைக்கும் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் அது. மாடலாக இருந்த பெண்டிர்களுக்கும் அழியாத இறைநிலையை அளித்த அவரது ஓவியங்களை என்னவென்று சொல்வது. இன்றும் கூட இந்திய கலைப் பொருட்கள் விற்பனையில் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு அடுத்து ரவிவர்மாவின் ஓவியங்கள்தான் உலகெங்கும் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

நான் இன்றும் வியந்து இரசிக்கும் படங்களில் சில. இந்தப் படங்களில் தெறிக்கும் உணர்வுகளைப் பாருங்கள். எவ்வளவு அழகான ஓவியங்கள்.


இவள் கங்கை.


அர்ஜுனனும் சுபத்திரையும்


தாதிப் பெண்

இறைவன் மனிதனின் நேர்மறையான நம்பிக்கை என்றே வேதங்கள் கூறுகிறது. நம் நம்பிக்கையின் ரூபமாக அல்லாவாக, ஏசுவாக, கிருஷ்ணனாக அல்லது சரஸ்வதி, இல்லை வேறு எந்தக் கடவுள் என்றாலும் அவர்களை நாம் இறைவனின் பிரதிநிதியாக அல்லது messenger ஆகவே வரித்துள்ளோம் என்பதை ஏறத்தாழ எல்லாருமே ஒப்புக் கொண்டிருக்கிறோம். இந்த இறைத்தூதர்கள் கொண்டு வந்த செய்தி "மனிதத்துவம்" மற்றும் "அன்பு".

ஒருவர் தன் நம்பிக்கைக்குப் பெயர் சூட்டுவது சரியென்றால் அதே நம்பிக்கைக்கு இன்னொருவர் தனக்கு பிடித்த உருவமும் கொடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? போகும் பாதை எதுவென்றாலும் இருவரின் இலக்கு "மனிதத்துவம்" மற்றும் "அன்பு" என்ற செய்தியை மற்றவருக்கும் கொடுப்பது மட்டும்தானே?

இலக்கை விட்டு, பாதையிலேயே உழன்று கொண்டிருந்தால், இலக்கை என்று சென்றடைவது? அவரவர் தனக்குக் கிடைத்த பாதையில் சென்றாலே போதுமே. டிராபிக் ஜாம் எதுவும் இல்லாமல் சுலபமாக இலக்கை அடைந்து  விடலாமே. வடையை சாப்பிடாமல் அதில் உள்ள துளைகளை எண்ணிக்கொண்டிருந்தால், வடையை யார் சாப்பிடுவது?

அவர்கள் கொண்டு வந்த செய்தியைத் தொலைத்து விட்டு தூதர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் எந்த மதத்தினரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவராக இல்லை. எல்லோருக்குமே அவரவர் நம்பிக்கை மதிப்புக்குரியதாகவும் இருக்கிறது. அவற்றை சக மனிதர்களின் நம்பிக்கையை விட உசத்தியாக காண்பிப்பதையும் முக்கியமாக நினைக்கிறார்கள். என் நம்பிக்கை சிறந்தது என்று நினைப்பதில் தவறே கிடையாது. அதற்காக அடுத்தவர் நம்பிக்கையை பொய் என்று சொல்வதும், தம் நம்பிக்கையை அடுத்தவர் மீது திணிப்பதும், நிச்சயம் திணிக்கப்பட்ட நம்பிக்கையின் வாழ்நாளைக் குறைக்கும். நம்பிக்கையின் ஆதாரமே, 'அட, இதை நம்பலாம் போலருக்கே' என்று நினைக்கும் சுதந்திரம்தான்.

என் முந்தைய பதிவில் சொன்ன மாதிரியே, என் பதின் பருவங்களில் நான் அலட்சியம் செய்த சிலவற்றை, அதன் பின்னணியில் இருக்கும் காரண காரியங்கள் தெரிந்ததும் ஆச்சரியம் அடைந்து, அவற்றையே நானும் நம்ப ஆரம்பித்தேன். இந்தக் கருத்துக்கள் என் மீது திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ முயற்சிக்காமல் என் தேடலுக்கும், வாசிப்புக்கும் துணை நின்ற என் தந்தையை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நான் ஒவ்வொரு விஷயத்தையும் ஏன், எதற்கு என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் போது என் தந்தை மகிழ்ச்சியோடு ஒவ்வொன்றையும் விளக்குவார்.

எனக்குச் சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும் என் தனிப்பட்ட நலன் மட்டுமின்றி என் குடும்பத்தின் நலனும் அடங்கியே இருந்தன. காரணங்கள் தெரிய ஆரம்பித்ததும், நாளடைவில் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர்கள் சொன்னதை செய்து விட்டு, பின்னர் அதற்கான பலன் கிடைத்ததும் அதற்கான அர்த்தங்களை உணரவும் ஆரம்பித்தேன். இன்று அவர்கள் நம்பிக்கையை நான் புறந்தள்ளாமலும், என் மகளுக்கு எடுத்துச் சொல்லும் போது என் தந்தை கையாண்ட முறையையே பின்பற்றுகிறேன்.

சரி சொந்தக்கதைகளை விட்டு விஷயத்துக்கு வரலாம்.

என் தாயை நான் தெய்வம் என்று நினைத்தால் என் தாய்க்கும், ஒரு நடிகையை அதே போல நினைத்தால் அவருக்கும் கூட, எனக்கு இட வசதியும், அளவுக்கு மீறிய பணமும், வேறு முக்கியப் பொறுப்புக்களோ எதுவும் இல்லாமலும் இருந்தால் கோவில் கட்டி சிலையும் வைக்க எனக்கு தனி மனித சுதந்திரம் இருக்கிறது, இல்லையா?

நமக்கு பிடித்திருந்தால் அங்கு போய் வணங்கலாம். பிடிக்காவிட்டால் ஒன்று போகாமல் இருக்கலாம், இல்லை, அங்கு போய் இருக்கு சிற்பங்களின் கலையழகை இரசித்து விட்டு மட்டும் வரலாம். சில வைஷ்ணவக் கோவில்களில் கிடைக்கும் பிரசாதங்கள் சாப்பிடவும் கூட ரொம்ப பிரமாதமாக இருக்கும். :))

இந்துக்கள் இறைவனும் இறைவியுமாக பல உருவங்களில் ஏன் கொண்டாடுகிறார்கள்?

யோகா பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால், யோக நிலையின் பல்வேறு நிலைகளில் ஒன்றானது குண்டலினி யோகா. இந்த யோக நிலையின் உச்சத்தை அடையும் போது, யோகிக்கு பல்வேறு உணர்வுகளின் காட்சிகள் தெரிகின்றன. இவற்றை வெறுமே வாயால் விரித்துச் சொன்னால் புரிபடுவது சிரமம் என்பதால், அதை உருவகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கான படங்கள் என்னிடம் கிடைக்கவில்லை. இல்லையென்றால் இந்த சிறு விளக்கத்தோடே இந்த பதில் முடிந்திருக்கும்.

பகவத் கீதையில் (7:21) "எந்த வடிவத்தில் என்னை வணங்கினாலும் அதே ஆகிறேன்" என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

குளியல் சோப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதின் நோக்கம் உடல் சுத்தமாக வேண்டும் என்பதுதான். அதில் ஏன் இவ்வளவு வகைகள் இன்று சந்தையில் இருக்கிறது? ஒன்றில் moisturiser அதிகம் இருக்கு என்றும், இன்னொன்றில் pH குறைந்து இருக்கு என்றும், வாசனை சோப் என்றும், சினிமா நட்சத்திரம் உபயோகிக்கும் சோப் என்றும் பலவிதமாக சந்தைப் படுத்துவது ஏன்? ஒரே வீட்டில் எல்லோரும் இருந்தாலும், ஆளுக்கொரு சோப் வைத்துக் கொள்கிறோமே அது ஏன்? அடிப்படை சுகாதாரம் மற்றும் உடல் அழுக்கை நீக்கும் என்பதற்காக இருக்கும் சோப்பிலேயே இவ்வளவு வகைகள்.

தாய் பிள்ளை என்றாலும் தனித்தனி விருப்பு வெறுப்புக்கள் கொண்ட மனித மனத்துக்குள் நம்பிக்கைகள் எத்தனை விதங்கள்! அவற்றிற்கு எத்தனை உருவங்கள் கொடுத்திருக்கலாம். மனிதன் கடந்து வந்த பாதைகளில் இருப்பதையெல்லாம் மரியாதையோடும் பக்தியோடும் புனிதமான ஒன்றாகவே பார்த்து வந்திருக்கிறான்.

வாழ்வா சாவா என்ற இக்கட்டான ஒரு நிலையில் இருக்கும் ஒருவருக்கு, மற்றவரது தகுந்த நேரத்தில் செய்த உதவி, சின்னதே என்றாலும், உதவி பெற்றவனின் மனம், உதவி செய்தவரை தெய்வமாக்கி விடுகிறது. அல்லது அதற்குச் சமமான உயரிடத்தை அவர் இதயத்தில் பெற்று விடுகிறார். இல்லையா?

எல்லோருக்குமே ஒரே மாதிரிதான் இயற்கை மழையாகவும் வெயிலாகவும், காற்றாகவும் இருக்கிறது. மரங்கள் காய்கனிகளைத் தருகின்றன. நதிகளும் கடலும் நீர் தருகின்றன. இவற்றை எல்லாமே தெய்வங்களாக்கிப் பார்க்கிறது இந்துத்துவம். தான் நம்பியதை அடுத்தடுத்த வம்சங்களுக்கும் pass செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒரு கோவிலும் ஒரு உருவமும் கொடுத்து, பரம்பரையாக கொண்டாடிய குலதெய்வ பழக்கங்கள் உண்டாகின. இதனால் கோவில்களும், உருவங்களும் பெருகின.

இந்துத்துவத்தில் இருக்கும் கருத்து சுதந்திரம் எனக்கு பிடித்தமானது. யாரையும் விமர்சிக்காமல், புண்படுத்தாமல், கட்டுப்படுத்தாமல், ஒரு பண்பான ஆசிரியர் போல, இது நல்லது, உனக்கு உடன்பாடென்றால் பின்பற்று என்றும், ஒருவேளை பின்பற்றினால் விதிமுறைகளின் படி பின்பற்றினால் நல்லதென்றும், விதிமுறைகளை மீறுவதால் உண்டாகும் விளைவுகளையும் மட்டும் வேதங்கள் சொல்லியிருக்கிறது. பின்பற்றவில்லையென்றால் உனக்கு கேடு விளையும் என்று வேதங்களில் எங்கும் சொல்லப்படவில்லை.

பதினெட்டு கையுடைய துர்கை அத்தனை ஆயுதங்களின் பிரயோகத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்பதையே குறிக்கிறது. உருவகப்படுத்தும் போது, ஒருவருக்கு இத்தனையும் தெரியும் என்பதை எப்படிக் காட்டுவது? அதனால் பதினெட்டு கைகள் கொடுத்திருக்கலாம்.

வீணை வாசிக்கப்படுவது போன்ற உருவமும் (சரஸ்வதி), ஐந்து தலை நாகத்தில் மனிதன் படுத்திருப்பது போன்ற உருவமும் (விஷ்ணு) குண்டலினி யோகத்தின் உருவகங்களே. யோக சாஸ்திரங்களின் சுலோகங்களைப் படிக்கும் போது, அதில் அந்தந்த யோகத்தின் உச்சநிலையை விவரித்தபடி படமாக வரைந்தால், நிச்சயம் இந்துக் கடவுள்களின் உருவங்களை ஒத்த ஒரு காட்சி விரியக்கூடும்.

இது என் கருத்து மட்டும்தான். இதில் நிறைய பேருக்கு உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம். யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க.

இன்னும் சிறிது தேடினால் இதற்கான படங்களும் ஆதாரங்களும் நிச்சயம் எங்கோ இருக்கலாம். தேடுவேன் :)

இந்தத் தேடலில் நான் அறிந்த சில விஷயங்கள். உங்களுடன் பகிர்தல்.

கிருஸ்துவ சமூகத்தில் ஏசுபிரான் மற்றும் பைபிள் ஒன்றுதான். ஆனால், லத்தின் கதோலிக், சிரியன் கதோலிக் சர்ச்சுக்குள் போகமாட்டாராம். இவர்கள் இருவருமே பெண்டேகோஸ்ட் சர்ச்-க்கு போகமாட்டாராம்.இவர்கள் மூவரும் மர்தொமா சர்ச்-க்கு போகமாட்டாராம்.மர்தொமா மற்றவர்களது சர்ச்-க்கு போகமாட்டார்.இந்த நால்வருமே சால்வேஷன் ஆர்மி சர்ச்-க்கு போகமாட்டார்கள்.இந்த ஐந்து பேருமே செவன்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்-க்குப் போக மாட்டார்கள்.மேற்சொன்ன ஆறு குழுவினரும் ஆர்தொடாக்ஸ் சர்ச்-க்குப் போக மாட்டார்கள்.இந்த ஏழு பேருமே ஜகோபைத் சர்ச்-க்கு போக மாட்டார்கள்.கேரளாவில் மட்டும் 146 விதமான கிருஸ்துவப் பிரிவினர்கள் இருக்கிறார்கள்.இதில் எந்தப் பிரிவினருமே மற்ற சர்ச்சுகள் போவதில்லை அல்லது தமக்கு வரும் நன்கொடைகளைப் பகிர்வதில்லை.

இங்கு இப்படி இருக்க, முஸ்லிம்களில் அல்லா, குரான், நபிகள் எல்லாம் ஒன்றுதான் என்கிறார்கள். ஆனால்,ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.ஷியாக்கள் சுன்னி முஸ்லிம்கள் மசூதிகளுக்குப் போக மாட்டார்கள். அகமதிய மசூதிகளுக்கு இவர்கள் இருவருமே போக மாட்டார்கள். சுஃபி மசூதிக்கு இந்த மூவரும் போக மாட்டார்கள்.முஜாஹித்தின் மசூதிகளுக்கு இவர்கள் யாருமே போகமாட்டார்கள். 13 ஜாதிப் பிரிவுகளைக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரே புனித நூலை அடிப்படையாக கொண்டு, இறை நம்பிக்கை வளர்க்கும்  மனிதர்களிடமே இத்தனை வித்தியாசங்கள்.

1,280 புனித நூல்கள், 12,000 விளக்கங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உபவிளக்கங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், பலதரப்பட்ட மடங்கள், ஆசாரியர்கள், ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள் என்று இருக்கிறது கூட இந்து மதத்தில் இருக்கும் சுதந்திரம் காரணமாகத்தான். ஆனாலும் ஹிந்துக்கள் அனைவரும் எல்லாக் கோவில்களுக்கும் அவரவர் விருப்பம் போல போகிறார்கள்.

சிலை/உருவ வழிபாடு முறையை ஹிந்துக்கள் மட்டும்தான் பின்பற்றுகிறார்கள் என்று இல்லை.  முஸ்லிம்கள் மெக்காவைக் குறித்த ஒரு காபாவையும், கிருஸ்தவர்கள் சிலுவையையும் ஒரு உருவம்/idol ஆக வரித்துக் கொண்டுதான் தத்தம் தொழுகைகைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். படங்களும், ஓவியங்களும், சிலைகளும் இதைப் போன்ற தனிநபர் மன உருவங்களின் வெளிப்பாடுதான்.

பழுத்துப் போன ஆன்மீகவாதிகளுக்கு இறைவனைக் காண மீடியம்(medium) ஏதும் தேவைப்படுவதில்லை. ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலை கத்துக்குட்டிகளுக்கு இதுதான் இறைவன் என்று சொல்லித்தான் தலை வணங்கவே கற்றுக் கொடுத்தார் என் தந்தை. பூஜையறையையும், கோவில்களையும் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், ஒரு ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டே போனால் கூட "கடவுளே அவர்களோடு இரு" என்று வேண்டிக் கொள்வதும் கூட, என் தந்தையார் எனக்குள் இறைவனாக வரித்த உருவங்கள் இருப்பதால் மட்டுமே. இல்லையென்றால் என் தலை வானை நோக்கியே பார்த்துக்கொண்டு, கர்வம் தலைக்கேறி, அடுத்தவர் உணர்வுகளை குனிந்தும் பார்க்காமல், அஹங்கார குழிக்குள் என்றோ விழுந்திருப்பேன்.

மனதிற்குள் மட்டும் உருவமே இல்லாத இறைவைனைக் காணும் அளவுக்கு நமக்கு பக்குவம் வந்து விட்டிருந்தால், நாம் இங்கு blog எழுதிக் கொண்டு, சாயந்திரம் சப்பாத்திக்கு தாலா இல்லை, உருளைக் கிழங்கு குருமாவா என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். அடுத்த மாதம் வரும் அரியர்ஸ் பற்றியும், Activa மற்றும் Wagon-R சர்வீஸ் நாட்களையும் எண்ணிக் கொண்டு டைரியில் குறித்துக் கொண்டிருக்க மாட்டோம்.

முக்கியமாக டூம்ஸ் டே இவ்வளோ சீக்கிரம் வந்து விட்டதே. என் பெண் கல்யாணத்தை பாக்காமலே போயிடுவேனோ என்றெல்லாம் கவலைப்படமாட்டேன்.:))

அழுத்தப்பட்டப் பந்து எப்படி நீரிலிருந்து வெளியேறி விழுந்து விடுமோ, கட்டுப்படுத்தி திணிக்கப்பட்ட கருத்துக்களும், கட்டுப்படுத்துபவன் இருக்கும் வரை இருப்பது போலத் தெரிந்தாலும், காலப்போக்கில் மறைந்து விடும். நம் சமயங்கள் உணர்த்துவது அன்பு மட்டும்தான். நம் வீடுகள் தனித்தனியென்றாலும், பயணிக்கும் பாதைகள் வெவ்வேறேன்றாலும், நம் இலக்கு ஒன்றுதான். இலக்கையே குறித்திருப்போம். நம் நம்பிக்கையை மதிப்பது போலவே மற்றவர் நம்பிக்கையையும் மதிப்போம். இல்லை, குறைந்த பட்சம் விமர்சிக்காமலாவது இருக்கலாமே. :)

ஒரு நாட்டின் கொடி என்பது துணியில் வரையப்பட்ட ஓவியம்தான். ஆனால் தன் நாட்டுக் கொடியை காக்க இராணுவ வீரர்கள் உயிரைக் கூடத் தியாகம் செய்கிறார்கள். துணியில் வரையப்பட்ட கொடியின் உருவம் அவருக்கு அவ்வளவு மதிப்பு மிக்கதாக ஆகி விடுகிறது, இல்லையா?

சாதாரண வெள்ளைத் தாள் எந்த மதிப்பும் இல்லாதது. ஆனால் அதன் மேல் அரசாங்கத்தின் முத்திரை இட்டிருந்தால், அதை வைத்து கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அளவுக்கு மதிப்பு மிக்கதாகி விடுகிறதே?

மின்சாரம் உருவமற்றது. ஆனால் மின் விசிறியோ அல்லது ஏ.சியோ இருந்தால்தான் நம்மால் காற்றைப் பெற முடிகிறது இல்லையா? இரவில் ஒரு ட்யூப் லைட் இருந்தால் தான் ஒளி பெற முடிகிறது. இல்லை அந்த ஆற்றலை ஒரு பாட்டரி மூலம் பெறுகிறோம் இல்லையா?

அதே போலத்தான், ஆற்றலை, ஒருவர் பஜாஜ் ஃபேன் ஆகவும், இன்னொருத்தர் கெய்தான் ஃபேன் ஆகவும், வேறொருவர் ஹவெல்ஸ் ஃபேன் ஆகவும் அவரவர் வீட்டுக் கூடத்தில் பொருத்திக் கொண்டு காற்றை வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்திற்குத் தூண்டிய அ.மு.செய்யதுக்கு நன்றிகள் பல.

யாரையும் புண்படுத்தும் நோக்கமோ, விமர்சிக்கும் எண்ணத்துடனோ எழுதவில்லை. இதில் உள்ளவை என் கருத்துக்கள் மட்டுமே.

யாரையும் காயப்படுத்தாதீர்கள் தாழ்மையான கோரிக்கையோடு ஆரோக்கியமான விவாதத்திற்கு வைக்கிறேன்.

நன்றி.


.

ஊஞ்சல் - 16 Nov 09

========================================================================================== 
ஊஞ்சல்:
==============================================================================================
நம் உடலிலிருந்து வெளியேறும் எண்பது சதவிகித நச்சுக்கள் நம் மூச்சுக்காற்றின் மூலம் வெளியேறுகின்றது. மேலும் ஆழ்ந்த மூச்சிழுத்தல் (Inhalation) மூலம் இரத்த ஓட்டம் சீராகி மனமும் உடலும் அமைதி பெறுகின்றது. 

இந்துக்களில் ஒரு பிரிவினர் தன் தினசரி வழக்கமாக மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வது என்று வைத்திருக்கிறார்கள். ஆழ்ந்து கவனிக்கும் போது சந்தியாவந்தனப் பயிற்சிகளில், சூரிய வெளிச்சத்தை உள்வாங்குவதும், மூச்சுப் பயிற்சியும் உள்ளடங்கி இருக்கின்றன. 

கடந்த இரண்டு மாதங்கள், நிறைய பிரயாணங்கள் மற்றும் ஓயாத சொந்த மற்றும் புற வேலைகள் ஒய்வு என்பதையே இல்லாமல் செய்து தினமும் உறங்கும் நேரமே ஒன்றிரண்டு மணிநேரம் மட்டும் என்றாகி, பதினைந்து நாட்களுக்கு முன் தீராத தலை வலி மற்றும் கழுத்து வலி உண்டாகி துன்புற்றேன். அதன் விளைவாக நான்காவது முறையாக இப்பயிற்சி வகுப்புக்களுக்குப் போனேன்.

புல்லாங்குழல் ஊதுவது போன்ற இசையான ஒலியோடு மூச்சை உள்ளிழுத்தும், கடல் அலை போன்ற ஒலியோடு மூச்சை வெளி விட்டும் காட்டினார் குருஜி (கணேஷ்).

ஒவ்வொரு முறை வகுப்புக்களுக்குப் போகும்போதும் குருஜி "தினமும் உனக்கென ஒரு மணி நேரம் ஒதுக்கக் கூடாதா?" என்று கேட்பார். 

வழக்கம் போல புன்னைகைத்து "இப்போதெல்லாம் blog எழுதறேன் குருஜி" என்று சொல்லினேன். 

"அதான்" என்றார் சிரித்தார் குருஜி.

நான் என்னவோ "blogging எனக்கு ஒரு மாற்று சிந்தனை மாதிரி குருஜி" என்றே இன்னும் புன்னகைத்துக் கொண்டே சொல்லிவிட்டு வந்தேன்.

வாழும் கலை பயிற்சியில் பல நுணுக்கமான மூச்சு பயிற்சிகள் சுலபமாகப் பின்பற்றும் வகையில் கற்றுகொடுக்கப்படுகின்றது. கஷ்டமான உடற்பயிற்சியை aerobics என்ற வகையில் சுலபமாகினது போல. உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள வாழும் கலை மையத்திற்குச் சென்று முடிந்தால் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறுங்கள்.

"தினோம்தான் மூச்சு விடறோம். இதுக்குப் போயி பாடம் சொல்லிக்கணுமா?" என்று கேட்பவர்கள் கொஞ்சம் மாத்தி யோசிங்க. குருஜிக்களின் கதைகளையும் உரையாடல்களையும் கொஞ்சம் பின்னே தள்ளி விட்டு, பயிற்சி முறைகளை மட்டும் கவனியுங்கள். ஒரே ஒரு முறை சும்ம்ம்ம்ம்மா முயற்சித்துப் பாருங்களேன்.  காற்றின் மொழி இசைபோல இதமாக இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து அனுபவித்தேன். பின்ன...சும்ம்ம்மாவா?

சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்  
வகைதெரி வான்கட்டே உலகு (27)
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

=============================================================================================
மழை:
============================================================================================== 
நண்பர் நேசமித்திரன் அனுப்பிய மின்னஞ்சல் தகவல். மீண்டும் ஒரு அற்புதமான சேவையைத் தருகிறது டாட்டா நிறுவனம். எத்தனையோ குறை நிறைகள் இருந்தாலும், ethics and morale விஷயங்களில் டாட்டா நிறுவனங்களில் உள்ள கட்டுப்பாடு வேறெங்கும் நான் கண்டதில்லை. சரி. விஷயத்துக்கு வருவோம்.

இதய நோய் உள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் அவர்கள் பெற்றோர்களை திக்கித்து விடச் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் தொண்டு அமைப்பு இந்தச் சிகிச்சைகளை இலவசமாகவே செய்கிறது.

உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும், மற்ற எல்லோருக்கும் இத்தகவலைப் பரப்புங்களேன்.


ஈ.பி.ஐ.பி ஏரியா, வைட் ஃபீல்டு, பெங்களூர் - 560066 கர்நாடகா, இந்தியா.
போன்: +91-80-28411500, ஃபாக்ஸ்: +91-80-28411508
மின்னஞ்சல்: adminblr@sssihms.org.in

E.P.I.P. Area, Whitefield, Bangalore - 560066 Karnataka, India
Phone: +91-80-28411500, Fax: +91-80-28411508
Email: adminblr@sssihms.org.in

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19

மழை பெய்யவில்லையானால் இந்தப் பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லை
=============================================================================================
பக்கோடா: 
==============================================================================================
இதுவும் ஒரு மின்னஞ்சல்தான்.

உங்கள் கார் கண்ணாடிகளில் முட்டை எறியப்பட்டால், Wiper அல்லது Wind Shield Washer (தண்ணீரை spray செய்வது) போன்றவற்றை இயக்கவேண்டாம். இதனால் முட்டை கலக்கப்பட்டு, வெண்ணிறமாக உங்கள் கார் கண்ணாடியில் பால் போல படிந்துவிடும். பார்வையையும் மறைக்கும். இதனால் வேறு வழியின்றி நீங்கள் காரை ஓரமாக ஒதுக்க வேண்டி வரும். வழிப்பறி கொள்ளைக்காரர்கள் இப்போது (இந்தியாவில் இன்னும் ஆரம்பிக்கவில்லை) இது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு உங்களை சிக்க வைக்கிறார்களாம்.  மாறாக முட்டையை உடனே துடைக்காமல் கொஞ்ச தூரம் ஓட்டிச் சென்று விட்டு நிதானித்துத் துடையுங்கள். ஜாக்கிரதை நண்பர்களே.

எப்படியெல்லாம் பீதியக் கிளப்புறாங்கப்பா!
  
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். (284)


அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

==============================================================================================
தேநீர்:
==============================================================================================
தொலைதூரக்கல்வி மாணவர்கள் கூடுதலாக பட்டயபடிப்பில் சேர்ந்தால் அவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும் என்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பல்கலைக்கழக மானியக்கழு மற்றும் தொலைநிலைக்கல்வி குழுமம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி பட்டப்படிப்புகளுக்கான பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரே குறிக்கோள் தொலைதூரக்கல்வி பாடங்களும் நேரடி வகுப்பு பாடங்களும் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதுதான். மாணவர்கள் தங்களது விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்  பாடத்திட்டங்களும் தரமாகவும் சுலபமாகவும் புரியும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. நேரடிப் பயிற்சி வகுப்புகள் பல புதிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பாடங்கள் பட்ட மேற்படிப்பு, பட்ட படிப்பு, பட்டய மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளை உள்ளடக்கியதாகும்.
தொலைதூரக்கல்வி மூலம் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மேலும் ஒரு பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் அல்லது சான்றிதழ் படிப்பினை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும்போது அவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

இப்பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தற்போது தொலைதூரக்கல்வி மூலம்பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் படிக்க விரும்பினால் அவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

(நன்றி தினத்தந்தி - 15.11.2009)

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399)
                       

தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்.

==============================================================================================
நிச்சயம் வோட்டுப் போடுங்க. இந்த தமிழ்மணத்தில் இணையவே முடியலையே...:(
==============================================================================================

.