விட்டாச்சு லீவு

எல்லோருக்கும் ஹோலி நல்வாழ்த்துக்கள்

விக்னேஸ்வரி ரொம்ப அருமையான நாளை கொண்டாடப் போறாங்க. குலாலில் கொஞ்சம் என்னையும் நினைத்துக்கோங்க :)

வரைமுறை இல்லாம வாரக் கணக்கில் லீவு விட்டுருக்கேன். விரைவில் திரும்புவேன். அது வரை எல்லோரும் நிம்மதியா இருங்க. முடிந்த போதெல்லாம் வந்து உங்கள் எல்லாருடைய எல்லாப் பதிவுகளையும் கண்டிப்பாப் படிப்பேன்..:)

நம்மையேனேவுகிரீரென்று இந்திரன் யமனிடம் கேட்டார்


ஊஞ்சல் - 23.2.2010

ஊஞ்சல்:
கேரளாவின் கோவில் யானைகளுக்குச் சொக்கத் தங்கத்தால் பட்டை அணிவித்து கொண்டாடினாலும், சுதந்திரமாக இருக்க வேண்டிய மிருகத்தை இப்படி அங்குசத்தால் குத்தி குத்தி, இரும்புத்தடியால் அடியில் தட்டி, துன்புறுத்தி தெய்வத்தைச் சுமக்க வைக்க வேண்டியதன் அவசியம் என்ன? ரொம்பவே அருகில் சென்று தெய்வ தரிசனம் செய்யும் வாய்ப்பில், யானைக்கான வன்முறைகளையும் கண்டு நெஞ்சு பதைத்தது. இதில் அந்த யானை மூன்று வலம் வந்து முடித்தது இயற்கை உபாதையால் மலஜலம் கழித்து விட்டது. கூட்டத்தில் யாரோ, "கேசவன் இப்படியெல்லாம் பண்ணாது தெரியுமா" என்று கூறிக் கொண்டிருந்தார். யானைக்கு toilet training சரியாக் கொடுக்காத பாகனை என்ன செய்யலாம்?


ஏம்பா இப்படி?


அப்புறம் பின்னாடி ஒருநாள் இன்னும் நூறுதான் மிஞ்சியிருக்குன்னு மட்டும் சொல்லி, எப்படிக் காப்பது என்பதையோ, அதற்கான தீர்வையோச் சொல்லாமலேயே, ஒரு நிறுவனம் தன் Logo-வுடன் "அக்கறை" காட்டும். நம்ம பதிவர்/நண்பர் வால்பையன் போன்ற சமூக நல சிந்தனைவாதிகளும், இவரும் அதற்கான தீர்வைச் சொல்லாமலேயே,   "இவன் ஏன் இதுக்கு மேலே உக்காந்திருக்கான்" அப்டீன்னு பதிவு போட்டு, இந்திரனை கிழி கிழி எனக் கிழித்துக் கும்மிகளை கிளப்பச் சௌகரியமாக இருக்கலாம். விளம்பரம் ஒன்றுதானே நோக்கம் வியாபாரத்தில். நடக்கட்டும் கச்சேரிகள். ஆனால் தில்லானாவில், எப்படி புலிகளைக் காப்பது என்ற குறிப்பும், தாள லயத்தோடு, ரசிக்கும் படியாக இருந்தால் எங்களைப் போன்ற பொதுபுத்தி உடையவர்களுக்கும் உதவியாக இருக்கும். வீட்டுக்கு ஒரு புலி வளர்க்கலாம் என்றாலும் இடம் பத்தாதே..


தேநீர்:


அப்படியே அருணா சாயிராமின் "காளிங்க நர்த்தன தில்லானாவில்" ஐந்து தலை நாகம் ஆன காளிங்கன் "கர மந்தஸ்ஸ்ஸ்ஸ்" என்று பெருமூச்சோடு சரிவதையும் கேட்டு, இந்தப் பாட்டுக்கு மொத்த பார்வையாளர்களும் நர்த்தனமாடும் அழகையும், கைகட்டி வாயடைத்து, சிலையாகி இசையில் மூழ்கி விட்ட ஒரு ரசிகரையும் கண்டு ரசியுங்கள். காளிங்கன் போன்ற ஐந்து தலை நாகங்கள் இப்போது இல்லாமல் போனதற்கு கிருஷ்ணன் காரணமில்லை என்பதை மட்டும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.




பக்கோடா:
துளசி அம்மா மாதிரி பயணக் கட்டுரையெல்லாம் எழுத முடியுமான்னு தெரியலை. செண்ட கொட்டு என்றழக்கப்படும் இசை சேவை காலையில் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் ஏறத்தாழ மூன்று மணிநேரம் பறையடித்தல் நிகழ்ந்தது. ரொம்பவே சிலிர்ப்பான அனுபவம். எத்தனையோ முறை சென்னையில் ஐயப்பன் பூஜையில் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும், இந்த முறை ரொம்பவே வித்யாசமாக இருந்தது. சுவாமி பக்தி-ஸ்ரத்தைக்கு கேரளா தாங்க.


இந்த வீடியோ you tube-பில் இருந்து எடுத்தேன். என்னால் ஒரு பத்து நிமிஷம் தான் வீடியோ எடுக்க முடிந்தது. அதற்குள் தர்ஷிணி பொறுமை இழந்து விட்டாள். விரைவில் upload செய்து பகிர்கிறேன். life time அனுபவம்.


மழை:
தமிழ்நாடு ஸ்டேட் போர்ட் பாடப்புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே பாருங்கள்.  
NCERT - Online Textbooks for Classes I to XII





ஒரு வாளி நிறையா வாழ்க்கை - பதின்மம் - தொடர் பதிவு

நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்

 

குட் பிளாக்ஸ்



நன்றி விகடன்


யமா..இஃதோ வுந் தருமம்

Buzz's So Noisy, isn't it

social networking - buzz தானாவே என் மெயில் பாக்ஸ்சில் இருந்ததை பார்த்து இது என்ன புதுசா என்று யோசிக்கும் முன்னேயே, என்னோட பதிவுகள், google reader-ரில் நான் ஷேர் செய்பவை, picasa photos, என்று வரிசையாய் சகலமும் சில்லறை சிதறினது போல ஆயிற்று. இது என்னடா கூத்து என்று யோசித்து கொண்டே, கொஞ்சம் buzz செய்தும் பார்த்தேன்.

மிக முக்கியமாக, உங்கள் அனுமதியோ இஷ்டமோ இல்லாமல் உங்கள் contact list-டில் உள்ளவர்கள் எல்லோரும் visible ஆவார்கள். இதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை. இதனால் hackers மற்றும் spam mailersகளுக்கு நிச்சயம் கொண்டாட்டமாகவே இருக்கும்.  ஒரு etiquette நிமித்தத்தில் எல்லோரையும் follow செய்து, மதியம் லஞ்ச் போது பாத்தால் mail box-சில் ஏகப்பட்ட மெசேஜுகள். : ( 

ஏகப்பட்ட மெயில் ஐடிகள் வைத்திருக்கும் பழக்கம் இல்லாததால்,  டமால் டமால் என்று வரிசையாய் மெயில் வந்து குமிஞ்சிருந்த மெயில்களையும் buzz-சையும் தனியாகப் பிரிக்கத் தெரியாமல் சுர்ர்-னு BP ஏறியது.

நேத்தே பட்டர்பிளை சூர்யா இதை பண்ணிட்டார், எனக்குத்தான் எப்படி வெளியேறுவது என்ற வழி தெரியாமல் இருந்தேன்.  இன்று காலை நான் செய்த முதல் காரியம், (என் நண்பர் "Techi" Nag-குக்கு நன்றிகள் பல) unfollow செய்ததும், buzz-சை turn off செய்ததும்தான்.
இங்க போயி ஒருத்தரோட அனுபவத்தை படிச்சுப் பாருங்க.

பஸ்ஸு ரொம்ப கூட்டமாவும் இரைச்சல் ஜாஸ்தியாவும் இருக்குங்க... மிக முக்கியமாக நிமிஷம் நிமிஷமாக ஆகும் நம்ம நேர விரயம் ... ஈடு செய்ய முடியுமா???? :(


என் நண்பர் எனக்கு சொன்னதை அப்படியே பகிர்கிறேன். How to stop buzz-ing?
////click on your followers and block those you dont want in your group.
click on the list you follow and 'unfollow' those whose messages you dont want to see.

Just be aware that anything you do linked to this id could potentially be visible to all that are connected to the id or even to hackers.

guess google will improve this to provide more options to filter out the noise v receive in future. you may want to block all and ignore Buzz until it gets better to the level u are comfortable with.
  /////

எறும்பு ராஜகோபால் அப்பாவாயிட்டார்



பதிவர் நண்பர் எறும்பு ராஜகோபால் ஒரு அழகான பெண் குழந்தைக்கு அப்பாவாயிட்டார். அப்பா அம்மாவுக்கு அன்பான வாழ்த்துக்கள். குழந்தை பேரு "ஷிவாஞ்சலி". எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம்.

"திண்ணவேலி" போனா இருட்டுக் கடை அல்வா தருவாதாகவும் செய்தி அனுப்பியுள்ளார். வண்டியக் கட்டுகங்கப்பா....

எல்லா தமிழ் பதிவர்கள் சார்பாகவும் -- பாஸ்கர், தர்ஷிணி மற்றும் நான்.

கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்

"ஹேய்.. இந்த வாலேண்டைனுக்கு என்ன பண்ணலாம்?" அப்டீன்னு கேட்டேன்.

அதல்லாம் காதலன் காதலி கொண்டாடரதுன்னா... என்று இழுத்தார்

"நீங்க இன்றும் என் காதலன்தான்"

"ஆனா... நீ... என் காதுல எலி"


"கிர்ர்ர்"


(bulb fiction-னில் சண்டைக் காட்சிகள் வெளியிடப் படமாட்டாது.)

புலப்படாத நூலிழைகளால் பின்னிய அடிவானம்

மகா ராஜ ஸ்ரீ யமராஜன் ரிடர்ன்ஸ்

கத்தரிக்காயும் கலியுக முடிவும்

எல் மகினோட்ரோமோ

இந்த வீடியோவை நான் சென்றவருடம்தான் பார்த்தேன். இப்போது திடீரென்று நினைவுக்கு வந்து தேடி எடுத்தேன். எனக்கு என்னதான் acrophobia இருந்தாலும், இந்த இடத்துக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். :) 

Caminito del Rey (Wiki)

 





இதையும் பாருங்களேன்.

கத்தரிக்கா யாபாரமா