புழுதி

TANKER பவுண்டேஷன் அமைப்பு - சிறுநீரக சிகிச்சை சேவை

TANKER (Tamilnadu kidney Research Foundation)
17, Wheatcrofts Road
Nungambakkam, Chennai, Tamil nadu 600034
தொலைபேசி: +91 44 28273407 / 28241635
ஈமெயில்: tanker1993@gmail.com
இணையதளம்: http://www.tankerfoundation.com/

TANKER பவுண்டேஷன் அமைப்பு மூலம் சென்னையில் kidney/சிறுநீரகம் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் குறைந்த தொகையில் மருத்துவம், டயாலிசிஸ் (dialysis) போன்றவற்றை சேவை மருத்துவராக செய்து வருகிறார்கள்.

வசதி குறைவான நோயாளிகளுக்கு, டயாலிசிஸ், டிரான்ச்பிலாண்டேஷன் (transplantation), நோயறிதல் மற்றும் சிகிச்சை செலவுகள் போன்றவற்றிற்கும் உதவி புரிகிறார்கள்.

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இச்செய்தியை பரப்புங்களேன். உதவியாக இருக்கக் கூடும்.

கண்டிப்பா வோட்டு போடுங்க. இதனால் இது நிறைய பேரை சென்றடையும். நன்றி.

-வித்யா

.

இரு கடிதங்கள்

ஆயிரங்காலத்து அழுகல் பயிர் - பாகம் 3


And now.....அவ்வ்வ்வ்




டிஸ்கி என்று செல்லமாய் அழைக்கப் படும் disclaimer:-
இது என்ன And Now.... என்றெல்லாம் யோசிக்கபடாது. அது சாமி குத்தமாயிடும் சரியா?

கிராமம் முதல் அயல்தேசமெல்லாம் ஓடிக்கொண்டே
தரையிலேயே இருக்கும் கால் போலவே,
இந்தக் கூரை என் தலையில் விழாது போலவே
ஸ்வரத்தில் பாடினாலும், ஜுரத்தில் பாடுவது போலவே,
மேக்கப் போட்டாலும், ஒரு துளி வியர்வை போலவே,
புரியவே புரியாது புரிந்த நவீனக் கவிதை போலவே,
இத்தனை நேரம் யோசித்தேன், இப்பத்தான் வருகிறது And now போலவே...

"பள்ளியில் திருடிய
பேனாவும் பென்சிலும்,
பொக்கிஷமாய் பதுக்கி வைத்தேன்

வெகு சுவாரசியமாக இருக்கும்
அவற்றால் எழுத..

கால மாற்றங்களில்
காணாமல் போனது
இப்போதெல்லாம் எழுத
பேனா திருடிய கை விரல்களே போதுமே!

(போதுமே!வுக்கு மூன்று முறை தலையை திருப்பி திருப்பி echo effect கொடுத்துகொள்ளவும்) "




And now....


ஆச்சியின் "And Now....."
ஆயில்யனின் "And Now....."
நிஜம்ஸின் "And, Now..."
தமிழ் பிரியன் “And, Now..."
அதிரை ஜமாலின் “And Now..."
ஹரிணி அம்மாவின் "And Now....."
"And Now....."




.

விநாயகரும் நம் மூளையின் அமைப்பும்



விநாயக சதுர்த்தி நேற்று, மண் பிள்ளையார் வாங்கி, விடியற்காலையில் அதை அலங்காரம் செய்து கொண்டிருந்த போது, வெட்டி யோசனை வேறு. அதில் உருவான பதிவுதான் இது.



ஏனோ பிள்ளையார் முகத்திற்கும், நம் மூளையின் செரிபெல்லம் (cerebellum) அமைப்பு யானைக் காதோடும், முதுகு தண்டு (தும்பிக்கை) போன்று ஒரு ஒப்பீடு செய்து பார்க்கத் தோன்றியது. எனக்கு முழு மூளை - முதுகுத் தண்டோடு இணைந்த படம் ஏதும் கிடைக்கவில்லை.





கூகிள் தேடலில் கிடைத்ததில் சிறப்பாக பொருந்தி இருப்பதை போட்டிருக்கிறேன். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறதா என்று கூறுங்களேன்?








.

ஆயிரங்காலத்து அழுகல் பயிர் - பாகம் 2


சொல்லின் செல்வன் ஹனுமான்
















வால்மீகி இராமாயணத்தில் கஸ்த்வம் (கி + + த்வம்) (நீ யார்?) என்ற கேள்வி இரண்டு இடத்தில் ஹனுமானை பார்த்து கேட்கப்படும் போது, ஹனுமான் இப்படி பதில் அளிக்கிறார்.

தேஹபுத்த்யா த்வதாஸோ (அ )ஸ்மி ஜீவபுத்த்யா த்வதம் ஸக:|

ஆத்மபுத்த்யா தவமேவாஹம் இதி மே நிஷ்சிதா மதி:||

இராம காவியம் சொல்லும் கருத்துக்கள் பல இருந்தாலும், மேற்கண்ட சுலோகத்திற்கு அதன் இடத்திற்கு ஏற்ப இரு விதமான அர்த்தங்களைக் கண்டேன். இரசித்தேன். பகிர்கிறேன். எவ்வளவு கருத்தாழம் கொண்டதாக இருக்கிறது என்று பாருங்கள். சமஸ்கிருத மொழியின் அழகையும் இரசியுங்கள்.

===============================================================
இராமன் ஹனுமானைப் பார்த்துக் "கஸ்த்வம்" (கி + ஸ + த்வம்) (நீ யார்?) என்று கேட்கும் போது,ஹனுமான் பதிலளிக்கிறார்.

நான் (அஸ்மி) உடலாக (தீத்புத்தயா) இருக்கும் போது, உன் (த்வ) தாசனாக (தாஸோ) இருக்கிறேன். நான் ஜீவனாக (ஜீவபுத்தயா) உணரும் போது உன் அம்சம் (த்வ + அம்ஸக:) ஆகிறேன். நான் ஆத்மாவாக (ஆத்மபுத்த்யா) இருக்கும் போது, நான் நீயே (த்வம்+ ஏவ+அஹம்) ஆகிறேன். இது என் உறுதியான கருத்தாகும், இப்படியே நம்புகிறேன்.

நான் உடலாக இருக்கும் போது, உன் தாசனாக இருக்கிறேன். நான் ஜீவனாக உணரும் போது உன் அம்சம் ஆகிறேன். நான் ஆத்மாவாக இருக்கும் போது, நான் நீயே ஆகிறேன். இது என் உறுதியான கருத்தாகும், இப்படியே நம்புகிறேன்.
===============================================================

இதையே இராவணன் "கஸ்த்வம்" என்று ஹனுமானைக் கேட்கும் போது இதே பதிலையே அளிக்கிறார்.

அதாவது,
நான் (அஸ்மி) உடலாக (தேஹபுத்தயா) இருக்கும் போது,
த்வதாஸோ (அ )ஸ்மி
= து + அதாஸ: அஸ்மி (சந்தியினால் த்வ =து+அ ) = நான் உனக்கு தாசனாக இல்லை.
நான் ஜீவனாக (ஜீவபுத்தயா) உணரும் போது,
த்வதம் ஸக: = த்வ + தம்ஸக : நான் உன்னை த்வம்சம் செய்பவன்.
நான் ஆத்மாவாக (ஆத்மபுத்த்யா) இருக்கும் போது,
தவமேவாஹம் = து + அம + ஏவ + அஹம் = நான் உனக்கு கிலி / பயங்கரன் ஆகிறேன்.
(இதி + மே + நிஷ்சிதா+ மதி: )இது என் உறுதியான கருத்தாகும், இப்படியே நம்புகிறேன்.


நான் உடலாக இருக்கும் போது, நான் உனக்கு தாசனாக இல்லை. நான் ஜீவனாக உணரும் போது, நான் உன்னை த்வம்சம் செய்பவன். நான் ஆத்மாவாக இருக்கும் போது, நான் உனக்கு கிலி / பயங்கரன் ஆகிறேன். இது என் உறுதியான கருத்தாகும், இப்படியே நம்புகிறேன்.
===================================================================

உண்மையில் சொல்லின் செல்வன், வால்மிகிப் பெருமானோ என்று அதிசயம் தோன்றுகிறதே?


.

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு

கருப்பான கருப்புத்தான் அட்டக் கரி,
கருப்பு இங்க் போல, சூப்பர் black,
jade black, double african,
அமாவாசைக்குப் பிறந்த மூத்த மகன்,
தீய்ந்து போன சப்பாத்தித் தவாவின் அடிப்பாகம்.
அண்டங்காக்கைக்கு கொள்ளுத்தாத்தா,
குயிலுக்கு தாத்தா, black magic-கில் இருக்கும் black.
ஒரு டின் தார் கூட உன் காலில் விழும் பக்தியோடு,
நிலக்கரி கூட, உன் நிறம் பெற, தவம் செய்கிறது நிலத்தடியில்.
நொந்தேன் நொந்துகொண்டே, கடைக்குச் சென்று
fair and lovely கொடுமெனக் கேட்டேன்.
அது இல்லையென்று சொல்லிவிட்டான்,
அதோடு
நின்றானா,
உனக்கெல்லாம் எதற்கொரு fairness cream
இந்தா பிடி cherry blossom, குறைந்தபட்சம்
உன் கரிமுகத்தில் shining-காவது வரும் என்றான்!

டிஸ்கி: நிலைக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டேதான், இதை எழுதினேன். வேறு யாரையும் புண்படுத்த அல்ல. only humour intended.


.

வருமுன் காப்பீடு செய்வோம்

உயிருக்கு போராடும் நம் பதிவுலக நண்பர் செந்தில்நாதன் அவர்களுக்காக பலரும் பதிவு மூலம் உதவிகள் திரட்டுகின்றனர். நம்மாலான எதையும் செய்வோம்.

ஆனால், இந்நேரத்தில் உங்களுடன் ஒரு சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நான் டாடா இண்டிகாம் நிறுவனத்தில் பணியிலிருந்த போது நடந்த இரு நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தது. இது நடந்தது ஆறு வருடங்களுக்கு முன் என்றாலும் இன்று நினைத்தாலும் என் மனம் பதறும்.

என் சகபணியாளர் ஒருவரின் கணவர் ஸாஃப்ட்வேர் நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனேஜர். பணிநிமித்தமாக பிரான்ஸ் செல்லும் போது, ப்ளைட்டிலேயே இதயம் செயலிழந்து, வழியிலேயே இறந்து விட்டார். அவர் தம் மனைவியிடம் சில கருத்து வேறுபாடுகளால் (வேறென்ன அளவுக்கு மீறிய பணம் கொடுத்த சந்தேகங்கள்) தன் பாங்க் அக்கௌன்ட் மற்றும் இன்வெஸ்ட் செய்துள்ள பத்திரங்கள் பற்றிய எந்தவொரு தகவலையும் அளிக்காமலேயே இருந்திருக்கிறார். இவளுக்கும் மாதம் முப்பதாயிரம் சம்பளம். அவருக்கோ எண்பதாயிரத்துக்கும் குறைவில்லாமல் இருந்துள்ளது.

இருந்தாலும் அவர் உடலை இந்தியாவுக்கு கொண்டுவந்து, அதைப் பெறவே முறையான கட்டணங்கள், இலஞ்சம் எனச் செலவுக்கு அதிகக் கடன் பெற வேண்டிய நிலையில் இவள் மிகவும் திண்டாடிப் போனாள். இருவரும் இவ்வளவு சம்பாதித்தும் தம் அவசரத் தேவைக்கென பணமாக பாங்கில் வைத்திருக்காமல் இன்வெஸ்ட்மென்டில் அத்தனை பணத்தையும் முடக்கியது ஒரு காரணம். அவளுடைய குழந்தைகள் இருவரில் பெண்ணுக்கு மனவளர்ச்சி குறைவு மற்றும் மகனுக்கு ஒரு வயதே ஆகிறது. இதில் வேதனையான ஒன்று என்னவென்றால், அவரைத் தகனம் செய்த அன்று, அவள் உறவினர்களில் சிலர் அவள் கணவர் அவர்களிடம் கடன் வாங்கியுள்ளார் என்று கூறி அதையும் திரும்பத் தரும்படி சண்டை போட்டு, கடைசியில் இருந்த அவள் வீட்டையும் அடமானம் வைக்கும்படி செய்து பணத்தை ஏறத்தாழ கொள்ளையடித்து சென்றனர். இவளுக்கு அப்போது வயதோ இருபத்தியாறு. இந்த நிலை ஏன்? இது ஒரு புறமிருக்கட்டும். இவளுக்காவது கடன் வாங்கினால் திரும்பக் கட்டும்படியாக பொருளாதார நம்பிக்கையிருந்தது. எங்கள் நிறுவனத்தின் லீகல் டிபார்ட்மண்ட் உதவியினால் ஒரளவுக்குப் பிழைத்தாள்.

முப்பதே வயதான என் நண்பர், ஜெயின் இனத்தவர். மிகுந்த முற்போக்குச் சிந்தனை கொண்டவன் என்றாலும் பெற்றோர் கட்டாயப்படுத்தி இவருக்கு பதினெட்டு வயதே (எட்டாம் வகுப்பு வரை பயின்ற) ஆன பெண்ணை மணமுடித்தார்கள். மனைவியும் இவனும் மட்டும் சென்னையில். சென்னைக்கு வந்த மூன்றே மாதத்தில் இவனுக்கு வலிப்பு ஏற்பட்டு தானே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டான். கடைசியில் ஆஸ்பத்திரி இவன் வீட்டைத் தொடர்பு கொண்டு, பாஷையும் தெரியாமல் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திண்டாடியிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு ஏடிஎம், பாங்க் போன்ற எந்த விஷயஞானமும் இல்லாதது ஒருபுறமிருக்க, ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தாலும் கார்டு கையில் இல்லாமல், மயக்க நிலையில் அவனால் பேசவும் முடியாமல், பணத்தைக் கட்டாமல் டிஸ்சார்ஜ் செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்த ஆஸ்பத்திரியில் மாட்டிக்கொண்டு திண்டாடியிருக்கிறார்கள். இரண்டு நாட்களாக இவன் அலுவலகத்துக்கு வரவில்லையே, எந்த செய்தியும் இல்லையே, என்று நான் அவர்கள் வீட்டிற்கு போய் பார்க்கும் போது, விஷயம் தெரிந்து ஆஸ்பத்திரி போய் பார்த்தால், அழுது சிவந்த கண்களுடன் வீங்கிய முகத்தோடு பயந்து ஒரு கோழிக்குஞ்சு போல சோபாவில் பதுங்கியிருந்தவளை பார்த்து ரொம்ப வேதனைப்பட்டேன். அலுவலகத்தின் உதவியோடு பணம் கட்டி அவனை அழைத்து வந்தோம்.

இந்த இரண்டு நிலைகளிலும் இதே மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தால் கணவன்மார்கள் இவ்வளவு திண்டாடியிருப்பார்களா என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி அதிகம் நிகழ்வதாக நான் கேள்விப்பட்டதுமில்லை. முன்னவள் படித்து அதிகாரியாக பணிசெய்து கொண்டிருந்தாள், பின்னவள் படிக்காதவள், ஆனால் இருவருமே ஏறத்தாழ ஒரே மாதிரியான சூழலில் எல்லாம் இருந்தும் திண்டாடியிருக்கின்றனர்.

பொருளாதார சரிவு ஏற்பட்டு உலகமே பணத்திற்காக திண்டாடும் சென்ற ஒரு வருடம் மட்டுமல்ல, பொருளாதாரம் நன்கு இருந்த நாட்களிலேயே கூட, நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது மெடிக்கல் இன்சூரன்ஸ் (மருத்துவக் காப்பீடு) ப்ரீமியம் கட்டுவதை ஒரு வீண் செலவாகவே கருதிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவோ செலவு செய்யும் நாம், தேவையில்லாமல் வார இறுதிகளில் மகிழ்ச்சிக்காக எவ்வளவோ ரெஸ்டாரண்டுகள் மற்றும் தியேட்டர்களில் ஆயிரக்கணக்கில் மூன்று நான்கு மணிநேரத்தில் செலவு செய்யத் துளியும் தயங்காத நாம், மாதம் ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் கட்ட யோசிக்கிறோம்.

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றைய நிலையில் எவ்வளவு முக்கியம்? மருத்துவமனைகள் அனைத்துமே நம் பயத்தை பயன்படுத்தி பணம் பிடுங்கும் பகல் கொள்ளை காடுகளாக மாறிவிட்ட போது, நாமும் அதற்கேற்ப நம்மை உஷாராக வைத்துக்கொள்ள வேண்டாமா? இன்சூரன்ஸ் எடுத்தால் மட்டும் போதாது. அதைப் பற்றிய முழு விபரங்கள், எந்தெந்த நோய் / வியாதிகளை கவர் செய்கிறது, எந்தெந்த மருத்துவமனையில் அதை அனுமதிக்கிறார்கள் என்றெல்லாம் நம் வாழ்க்கைத்துணை (கணவன் / மனைவி) மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு விளக்குவது அவசியம். இல்லையென்றால், நோய் சுமை குறைந்து வீட்டுக்கு வரும்போது, கடன் சுமை அழுத்தினால், எப்படி உடல்நலம் மீளும்?

ப்ரீமியம் நிச்சயம் ஒரு அதிகப்படியான செலவுதான். ஆனால், அது நம்மை பெரிய இழப்புக்களிலிருந்து காக்கும். நமக்கு எப்போது பெரிய நோய்கள் / மருத்துவ செலவு நேரிடும் என்று தெரியாத நிலையில், குறைந்தது 80 சதவீதம் வரை மருத்துவச் செலவை கட்டிவிடும், காப்பீடு, அதுவும் ஒரு நம்பகமான இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து காப்பீடு பெறுவது அவசியம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஏற்றவாறு, ஒரு மருத்துவக் காப்பீட்டை இன்றே உங்கள் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளிடம் கலந்தாலேசியுங்கள்.

இதனால் மருத்துவச் செலவால், உங்கள் சேமிப்பு கரைவதை தவிர்ப்பது மட்டுமல்லாமல், நீங்கள் கடனாளி ஆவதையும் தவிர்க்கலாம். உங்கள் மருத்துவச் செலவு அனைத்தையும் நீங்களே ஏற்றுக் கொள்வதை விட, இதற்கான ப்ரீமியம் தொகை மிகக் குறைவானதுதான்.


காப்பீடு செய்யும் போது எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்?

1. உங்கள் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் உடல் நலத் தேவைகளை கருத்தில் கொண்டு, முக்கிய குடும்பச் செலவு போக, ப்ரீமியம் எவ்வளவு கட்ட முடியும் என்பதை கணக்கிடுங்கள்.
2. இதனடிப்படையில் எவ்வளவு தொகைக்கான மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்தால் தடைபடாமல் செலுத்தமுடியும் என்பதை கணக்கிடுங்கள்.
3. சரியான இன்சூரன்ஸ் (ஏஜென்ட்/ஆலோசகர்) அட்வைசரைத் தேர்ந்தெடுங்கள்.
4. உங்கள் இன்சூரன்ஸ் என்னென்ன நோய்களை கவர் செய்கிறது என்று கவனியுங்கள்.

கவரேஜ் (கவர்டு ஸர்வீஸ்/covered service) என்றால் என்ன?

மருத்துவ இன்சூரன்ஸ் என்பது உங்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குமான ஒரு ஒப்பந்தம். உங்கள் பாலிஸியில், மருத்துவ மற்றும் லேபரட்டரி டெஸ்டுகள், மருந்துகள், மருத்துவச் செலவுகள் போன்ற மருத்துவ பெனிபிட்டுக்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். இதைத்தான் கவரேஜ் என்கிறோம்.

மருத்துவத்தின் அவசியத்தை உங்கள் மருத்துவர் தீர்மானிக்கிறார். ஆனால் மருத்துவ நிவாரணத்தை (பெனிபிட்/benefit) உங்கள் இன்சூரன்ஸ் ப்ளான் மட்டுமே தீர்மானிக்கும். இல்லையென்றால், மருத்துவச் செலவுகளின் சுமை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அழுத்தும். இதன் பாதிப்புக்கள் உங்கள் குழந்தைகள் மீது நிச்சயம் ஏற்படலாம்.

உங்கள் குடும்ப மருத்துவருக்கு உங்கள் குடும்பத்துக்குத் தேவையான இன்சூரன்ஸ் பற்றிய ஞானம் இருக்கக்கூடும். அவரையும் ஆலோசியுங்கள்.

உங்கள் இன்சூரன்ஸ் பாலிஸியை நிதானமாக முழுதும் படித்துப் பார்த்து முடிவெடுங்கள்.

அவசர சிகிச்சைக்கான அவசியம் ஏற்பட்டால் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் எவ்வளவு தூரம் மருத்துவச் செலவை ஏற்கும் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

சில மருத்துவச் செலவுகளை, மருத்துவம் செய்யப்படும் முன்பே இன்சூரன்ஸ் நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இருக்கும்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எந்த மருத்துவச் செலவுகளை எல்லாம் தம் நிறுவனம் கட்ட வேண்டும் என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம்தான் தீர்மானிக்கிறது. உங்கள் டாக்டர் அல்ல.

உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் எந்தவொரு கேள்வியையும் இன்சூரன்ஸ் ஏஜென்டிடம் எந்தவொரு தயக்கமும் இன்றி கேட்டுத் தெளிவுறுங்கள்.

இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் க்ளெம்களை மறுக்கவும் (டினையிங் தி க்ளெம்) கூடும். உங்களுக்கு மறுக்கப்பட்ட க்ளெம்களை மறுப்பதற்கான ஆதாரங்களைக் கோரி அப்பீல் செய்ய முடியும். இப்படி அப்பீல் செய்யும் முன் அப்பீல் செய்வதற்கான விதிமுறைகளை படித்து அறிந்து கொள்ளுங்கள். உங்கள் ப்ளான் கையேட்டிலேயே இந்த விபரங்கள் இருக்கும்.

வருமுன் காப்பீடு செய்வோம். அவசரத் தேவைக்கென ஒரு குறிப்பிட்ட அளவில் பணமாக ஏ.டி.எம். வசதி உள்ள ஒரு வங்கியில் சேமிப்பதை பழக்கிக் கொள்வோம்.
-------------------------------------------------
திரு.குகன் அவர்களை மருத்துவக் காப்பீடு பற்றிய தெளிவான பதிவு எழுத வேண்டுகிறேன். மேற்கூறிய விபரங்களில் ஏதும் தவறுகள் இருந்தால் குறிப்பிடவும்.
-------------------------------------------------
உங்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாகத் தோன்றினால் தமிலிஷில் ஓட்டு போடவும். இதனால் இச்செய்தி அதிகம் பேரைச் சென்றடையும்.

-வித்யா.


.

வித விதமாய் கட்டுங்கள் - Shoe Lace - 2




சர்ஜன் ஷூ நாட்

























டர்டில் ஷூ நாட்



























.

ஆயிரங்காலத்து அழுகல் பயிர்

பந்தம்

ஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்)

========================================================
Updated on 13.8.09 @ 10.30 AM

REMEDIES FOR SWINE FLU - THE INDIAN WAY

PLEASE CLICK THE FOLLOWING LINKS TO KNOW MORE.
1. HERE
2. HERE
3. HERE

I WILL ALSO TRY TO PUBLISH THEM IN TAMIL AFTER AVAILING DUE PERMISSION FROM THE OWNERS OF THESE ARTICLES/WEBSITES.


-VIDHYA

=============================================================

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?


ஸ்வைன் இன்புளுயன்சா ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கு / கோழிகளுக்கு (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.

பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.

மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.

கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது?

ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.

முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

என்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
  • உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.
  • நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
  • முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிபோட்டுக் கொள்ளவும் (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவலாம்).
  • வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ளவும்.
  • தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளவும். உடனே கையை அலம்பிகொள்ளவும்.
  • நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.
  • உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம்.
  • மாஸ்க் அணித்து பயணிக்கவும்.
  • மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ளவும்.
  • இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக் காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால், தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஒதுக்கி கொள்ளவும்.
நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்
  • தொடர்ந்த தலை வலி
  • குளிருதல், நடுங்குதல்
  • இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்
  • பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
  • தலை சுற்றல் / மயக்கம்
  • பசியின்மை
  • உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
  • இடைவிடாத காய்ச்சல்
  • வயிற்று போக்கு
  • வாந்தி எடுத்தல்
  • மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்
  • உயிரிழப்பும் ஏற்படலாம்
குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?
  • தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்
  • மூச்சு விட சிரமப் படுவார்கள்
  • உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்
  • தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்
  • அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்
  • தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்
  • தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்
இந்நோய்க்கு மருந்துகள் ஏதும் உள்ளனவா?

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) இந்நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாக நம்புகிறார்கள். நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தொற்றுநோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள். 1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ நோய் தான் அதிகம் பேரை கொன்றுள்ளது. இந்த நோய் தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்த நோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை அங்கு முடங்கியுள்ளது.

வெப்ப நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை, என ஒரு பக்கம் கூறினாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்த நோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர், என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 30 லட்சம் பேருக்கு தேவையான "டேமிப்ளு'' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்த வகையான "ப்ளு'' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சிப்லா, ரன்பாக்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்துகளை சப்ளை செய்ய ஒப்பு கொண்டுள்ளன.
========================================================
இந்தியாவில் எங்கெங்கு இதற்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப் படுகின்றன?
-----------------------------------------------------------------------
Chennai

King Institute of Preventive Medicine (24/7 Service)
Guindy, Chennai – 32
(044) 22501520, 22501521 & 22501522

Communicable Diseases Hospital
Thondiarpet, Chennai
(044) 25912686/87/88, 9444459543

Government General Hospital
Opp. Central Railway Station, Chennai – 03
(044) 25305000, 25305723, 25305721, 25330300
------------------------------------------------------------------------
Pune
Naidu Hospital
Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01
(020) 26058243

National Institute of Virology
20A Ambedkar Road, Pune – 11
(020) 26006290
------------------------------------------------------------------------
Kolkata
ID Hospital
57,Beliaghata, Beliaghata Road, Kolkata - 10‎
(033) 23701252
------------------------------------------------------------------------
Coimbatore
Government General Hospital
Near Railway Station,
Trichy Road, Coimbatore – 18
(0422) 2301393, 2301394, 2301395, 2301396
------------------------------------------------------------------------
Hyderabad
Govt. General and Chest Diseases Hospital,
Erragadda, Hyderabad
(040) 23814939
------------------------------------------------------------------------
Mumbai
Kasturba Gandhi Hospital
Arthur Road, N M Joshi Marg, Jacob Circle, Mumbai - 11
(022) 23083901, 23092458, 23004512

Sir J J Hospital
J J Marg, Byculla, Mumbai - 08
(022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366

Haffkine Institute
Acharya Donde Marg, Parel, Mumbai – 12
(022) 24160947, 24160961, 24160962
------------------------------------------------------------------------
Kerala
Government Medical College
Gandhi Nagar P O, Kottayam - 08
(0481) 2597311,2597312

Government Medical College
Vandanam P O, Allapuzha - 05
(0477) 2282015

Taluk Hospital
Railway Station Road, Alwaye, Ernakulam
(0484) 2624040 Sathyajit - 09847840051

Taluk Hospital
Perumbavoor PO, Ernakulam 542
(0484) 2523138 Vipin - 09447305200
------------------------------------------------------------------------
Gurgaon & Delhi

All India Institute of Medical Sciences (AIIMS)
Ansari Nagar, Aurobindo Marg Ring Road, New Delhi – 29
(011) 26594404, 26861698
Prof. R C Deka - 9868397464

National Institute for Communicable Diseases
22, Sham Nath Marg,
New Delhi – 54
(011) 23971272/060/344/524/449/326

Dr. Ram Manohar Lohia Hospital
Kharak Singh Marg,
New Delhi – 01
(011) 23741640, 23741649, 23741639
Dr. N K Chaturvedi – 9811101704

Vallabhai Patel Chest Institute
University Enclave, New Delhi- 07
(011) 27667102, 27667441, 27667667, 27666182
------------------------------------------------------------------------
Bangalore
Victoria Hospital
K R Market, Kalasipalayam, Bangalore – 02
(080) 26703294
Dr. Gangadhar - 94480-49863

SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases
Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29
(080) 26631923
Dr. Shivaraj - 99801-48780
------------------------------------------------------------------------

நோய் உங்களையோ, உங்களுக்கு தெரிந்தவரையோ தாக்கி இருப்பதாக அறிய வந்தால், இருபத்து நாலு மணிநேர தொலைபேசி சேவை மையத்தை 1075 என்ற எண்ணிலும் 011-23921401 அல்லது EMR Control Room 011-23061469-மைத் தொடர்பு கொண்டால், நோய் பரவாமல் இருப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.
==========================================================================

Update (10.Aug.09 @ 10.30 AM): ஹெல்த் மினிஸ்ட்ரி ஒரு புதிய வெப் சைட் திறந்துள்ளது.

இதைப் பற்றிய இன்னொரு வெப்சைட் பார்க்க இங்கே சுட்டவும்.

==========================================================================


.

shoe lace-சை எப்படி கழற்றுவது?

  • சில நேரம் குழந்தைகள் ஷூ-லேசை இறுக்கி முடிச்சிட்டு கொண்டு வந்து விடுவார்கள். காலிலிருந்து ஷூ-வை கழற்ற முடியாமல் திண்டாடுவோம். முடிந்தவரை காலிலிருந்துஷூ-வை கழற்றி விட்டே முடிச்சை நீக்க முயற்சிக்கவும். கழற்ற முடியாவிட்டால், அந்தநபரை ஒரு சேரிலோ சோபாவிலோ அமரச் செய்து, நீங்கள் தரையில் அமர்ந்து கொண்டால், அந்த நபர் தடுமாறி கீழே விழுவதைத் தவிர்க்கலாம்.
  • ஒரு மெட்டல் போர்க்-கைப் (metal fork) அல்லது கோணி ஊசி பயன் படுத்தி மெதுவாக கழற்றப்பாருங்கள். அதிக அழுத்தம் கொடுத்தால், போர்க் / ஊசி நழுவி காயப்படுத்தக் கூடும்.முடிந்தவரை எதுவும் லூப் கிடைக்கிறதா என்று பார்த்து, அந்த லூபிலிருந்து ஆரம்பியுங்கள். பொறுமை மிக அவசியம்.
  • மழைக் காலத்தில் சிக்கலான ஒரு விஷயம் ஈரமான ஷூக்கள், மற்றும் ஈரத்தில் இறுகிப்போன லேய்ஸ் முடிச்சுதான். அதை எப்படி இலகுவாக கழற்றுவது என்று பார்க்கலாம்.
  • ஈரமான ஷூ-வை நல்ல தண்ணீரில் அலசி விட்டு, ஷூ-வின் வடிவம் மாறாமல் இருக்க, நியூஸ் பேப்பரை உருட்டி உள்ளுக்குள் திணித்து வைத்து, காய வையுங்கள். இதனால்ஷூ-வுக்குள் இருக்கும் ஈரமும் பேப்பரால் உறிஞ்சப் படும்.
  • காய்ந்த பின், போர்க் அல்லது கோணி ஊசியால் நீக்கினால் சுலபமாக வந்து விடும். ஷூ-வுக்குள் ஈரம் நன்கு காய்ந்த பிறகு போரிக் பவுடர் தூவி வைக்கவும்.
  • எதுவுமே கைகூடவில்லை என்றால் கத்தரிக்கோல் உபயோகித்து கத்தரித்து விடவும்.
  • முடிந்த வரை, ஷூ லேஸ் அதிக நீளத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். இதனால்அடிக்கடி லேஸ் கழன்று விடுவதையும், கால்தடுக்கி கீழே விழுவதையும் தவிர்க்கலாம்.
  • காட்டன் அல்லது ரோப் ஸ்டைல் லேஸ்களே சிறந்தவை. எலாஸ்டிக் மற்றும் சிந்தெடிக்இரகங்கள் அடிக்கடி கழன்று விடும்.

பொறுப்பு அறிவிப்பு: இது ஈமெயில்-லில் வந்தது. தமிழ் மொழிக்கு மாற்றம் செய்தது மட்டுமே என் உழைப்பு.


.

வித விதமாய் கட்டுங்கள் - Shoe Lace - 1

சூ லேய்ஸ் கட்டுவதில் இத்தனை விதங்களா? என்று வியக்கும் வண்ணம் பல விதமான knot முறைகள் இருக்கின்றன. அவற்றை தொகுத்து வரிசைப்படுத்தியிருக்கிறேன்.

இண்டர்நெட்டில்
பல இடங்களில் இருந்து தொகுத்து உள்ளேன். இந்தத் தொகுப்பில் வரும் படங்கள், இன்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்டு, என்னால் போடோஷாப் மற்றும் ஜிம்ப்-பில் எடிட் செய்யப்பட்டவை.

1. வழக்கமாக லேய்ஸ் கட்டும் முறைதான்.




























2. செகூர்ட் நாட்டிங் முறை:






























.

பிரைன் சிப் பதித்த இதயம்

பைத்தியம் - கடைசி பாகம்

பைத்தியம் - 5

பைத்தியம் - 4