காமுன்யக் - ஒரு பெண் சிங்கம்

நேற்றிரவு அனிமல் ப்ளானெட்டில் Heart of lioness மறு ஒளிபரப்பானது. ஒரு மணிநேர நிகழ்ச்சி. அனிமல் ப்ளானெட்டில் ஜனவரி 2002-ல் ஸம்புரு நேஷனல் ரிஸர்வ் கென்யாவில் shoot செய்யப்பட்டது. இதில் ஒரு பெண் சிங்கம் (படபிடிப்புக் குழுவினரால் காமுன்யக்-Kamunyak என்று பெயரிடப்பட்டது) தாயைப் பிரிந்த ஒரு ஆரிக்ஸ் (orix) மான் குட்டியை தத்து(?) எடுத்துப் பாதுகாப்பதை shoot செய்திருந்தனர். நெஞ்சை உருக்குவது போல இருந்தது அந்த சிங்கத்தின் உணர்வு

இந்த படத்தைத் தொகுத்து வழங்கியுள்ள ஸபா என்ற பெண்மணி (Saba Douglas-Hamilton, presenter for Heart of a Lioness), ஸம்புரு மக்கள் அந்த பெண் சிங்கத்தை ஒரு கடவுளாகவே பார்க்கின்றனர் என்கிறார். இந்த பெண் சிங்கம் மான்குட்டியைத் தத்து எடுத்த பின் இரண்டு மூன்று வாரங்களாக வேட்டையாடவே செல்லவில்லை என்கிறார். மேலும் அந்த பெண்சிங்கம் அங்கே வரும் மற்ற மான்களையும் விரட்டி விட்டு அந்த மான்குட்டியே மற்ற மான்களுடன் தப்பி ஓடும் போதும், போக விடாமல் தன்னுடனேயே வைத்திருக்கிறது. அந்த பெண்சிங்கம் இந்த மான்குட்டியை உணவுக்கான அல்லாமல் தன் குடும்பமாக நினைத்து பாதுகாக்கிறது என ஸபா கூறுகிறார்.

தண்ணீர் குடிக்கத் தன்னுடன் கூட்டிச் செல்கிறது. அப்போது யானை கூட்டங்களை குழுவாக யானைகளோடும், அந்தந்த மிருகங்கள் தன் இனக் குழுவினோடு வருவதையும், இவை இரண்டும் ஒன்றாக நீர் அருந்துவதையும் காட்டுகின்றனர். நான் மிகவும் இரசித்த அழகான காட்சி இது.

கடைசியில், ஒரு ஆண்சிங்கம் அந்த மான் குட்டியைச் சாப்பிட்டு விடுகிறது. அப்போது ஆண் சிங்கத்தை எதிர்க்க முடியாமல் ஒதுங்கும், அந்த பெண் சிங்கத்தின் சோக உணர்வை அப்படியே படம்பிடித்துள்ளார்கள். மறுநாள் மதியமே அப்பெண் சிங்கம் ஒரு பன்றிக்குட்டியை கொன்று சாப்பிடுகிறது. இப்போது ஸபா, அந்த மான்குட்டியை இழந்ததும் அப்பெண்சிங்கம் தன் மென்மை உணர்வுகளை இழந்து மீண்டும் predator ஆகி விட்டது என்று கூறுகிறார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு மான் குட்டியோடு அதைக் கண்டதாகவும், ஒரு வருடம் கழித்து ஐந்து மான் குட்டிகளோடு கண்டதாகவும் அவர் கூறுகிறார்.
========================
இதை முன்பே ஓரிரு முறை பார்த்திருந்தாலும், நேற்றிரவு ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அப்போது என் மனதில் இந்தக் கேள்விகள்...

  • சிங்கங்கள் பொதுவாகவே pride எனப்படும் ஒழுங்குபட்டக் குழுவில்தான் வாழும். ஆனால் இந்த பெண் சிங்கம் ஏன் தனியாக இருக்கிறது?
  • எப்போதும் அதன் கழுத்துப்பகுதியில் ஈக்கள் மொய்த்தபடியே இருக்கிறதே? நோய்வாய்ப்பட்டதாலேயே அந்த பெண்சிங்கம் தனித்திருக்கிறதா? அப்படிஎன்றால் அது மற்ற மான்களைத் துரத்தும் போது ஏன் அந்த ஈக்கள் காணப்படவில்லை?
  • பார்த்துக்கொண்டிருந்த எனக்கே எப்போது அந்த பெண் சிங்கம் அந்தமான்குட்டியை சாப்பிட்டு விடுமோ என்றிருந்தது. அந்த மான்குட்டிக்குஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும்? அந்த பயம்அதற்கு இருந்ததால் தானே அந்த மான்குட்டி தன் இனத்தோடு தப்பி ஓடமுயன்றது?
இது இயற்கையையோ தாய்மையுணர்வையோ காட்டிய ஒரு நிகழ்ச்சியாக என்னால் பார்க்க முடியவில்லை. மாறாக இரண்டு பரிதாபமான மிருகங்கள் உணவின்றித் தவிக்கும் நிலையை மட்டுமே என்னால் message between the lines ஆகப் பார்க்க முடிந்தது.

படப்பிடிப்புக் குழுவினருக்கு எந்த விதமான கட்டாயங்கள், சட்டத்திட்டங்கள் இருக்கின்றன என்பது பற்றிய ஞானம் எனக்கு இல்லை. ஆனால் ஒரு வேளை நான் ஸபா-வாக இருந்திருந்தால், எல்லா ரூல்ஸையும் (rules) உடைத்தெறிந்து விட்டு அந்த சிங்கத்தை டிரான்க்குலைஸ் (tranquillise) செய்து விட்டு மான்குட்டியைக் காப்பாற்ற முயற்சித்து இருப்பேன். இது இயற்கை.. அதை தொந்தரவு செய்யக்கூடாது என்று பேசாமல் இருந்திருக்க மாட்டேன்.

நாமும் இயற்கையின் ஓரு அங்கம்தானே. அந்த மிருகம் தன் இயல்பிலிருந்து மாறி, இயற்கைக்கு மாறாக, தன் மேன்மையான குணத்தைக் காட்டும் போது ('a bit of uncharacteristic humanity' in Saba’s words), நமக்கு அம்மிருகத்திடம் இல்லாத பகுத்தறிவு இருக்கிறதே. தாயைப் பிரிந்த அந்த மான்குட்டியை காப்பாற்ற முயற்சித்த ஒரு மிருகத்திற்கு இருந்த உணர்வு கூட அந்த மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே, instead filming it was raw brutality, என்று வருந்தினேன். "We must let nature take its course" is a cold blooded attitude. Oh, wait! They did throw a little meat in the way of the lioness!

பெண்சிங்கத்தின் அந்த உணர்வை an exception to 'the rule' -ஆக ஏற்ற நம்மால், அந்த மான்குட்டியை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய், அதை வாழவிடுவதை மறுத்து 'within their nature'-ஆக இருக்க மனிதர்கள் முடிவெடுத்தது எந்த விதத்தில் நியாயம்?

குறைந்த பட்சம் அந்த ஆண்சிங்கம் தன் குணத்தை நேர்மையான முறையில் காட்டி, (கருணை) கொலை செய்ததால் எப்படியும் உணவின்றி இறக்கப்போகும்அந்த மான்குட்டி மிகுதி நாளையும் பயத்தோடு கழிக்காமல் இறந்தே போனது? அந்த பெண்சிங்கமும் தகுந்த குழுவில் இல்லாமல் பின் நாட்களில் இறந்தே போயிருக்கும்.

ஆனால் my guess is the filmmakers probably acted out their voyeuristic blood lust (very thinly disguised with the sheen of 'respecting nature') and filmed that too. I understand and respect the opinion that we should leave the wild to the wild, but this was different. This was NOT a normal circumstance. Reality TV completely sucks, even reality TV wild kingdom style. I've always justified it as "They are wild animals, and so goes the circle of life." Not this time.

மற்றபடி ஒரு தனிமைப்பட்ட பெண் சிங்கத்தின் மென்மையான உணர்வுகளை பொறுமையுடன் follow செய்த படம், அதன் அருமையான போட்டோக்ராபி, அற்புதமான தொகுப்பு.

3 comments:

நந்தாகுமாரன் said...

இயற்கையின் விநோத exceptions படு ஸ்வாரஸ்யமாக இருக்கின்றன

Vidhoosh said...

நன்றி நந்தா.

butterfly Surya said...

மிக அருமையான வர்ணனை. நிகழ்சியை பார்த்தது போல இருந்தது.

பகிர்விற்கு நன்றி..

வாழ்த்துகள்.

Post a Comment