நா தஸ்ய ப்ரதிமஸ்தி


பதிவர் அ. மு. செய்யது ரொம்ப நாள் முன்னர் என்னுடைய இந்தப் பதிவில் "நா தஸ்ய பிரதிம அஸ்தி" அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது. (யசூர் வேதம் 32:3)" என்றும் ய‌சூர் வேத‌ம் சொல்லியிருக்க‌, ர‌விவ‌ர்மாவால் வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ ச‌ர‌ஸ்வ‌தி ஓவிய‌த்தை,க‌ட‌வுளாக‌ பாவித்து இந்துக்க‌ள் தொழுவ‌தேன் ??" என்றும் கேட்டிருந்தார்.

அப்போது என்னிடம் எந்தவொரு reference-ம் (ஆதாரங்கள்) இல்லாததாலும், ஏனோ தானோ என்று எதுவும் பேசுவதில் உடன்பாடில்லை என்பதாலும் உடனடியாக எதுவும் சொல்ல முடியவில்லை.

நா தஸ்ய ப்ரதிமஸ்தி என்ற இந்த விவாதத்தை முதலில் எழுப்பியவர் முகமதியராக இருந்தாலும் வேதங்களைப் படித்து அறிந்த, மதிப்புக்குரிய டாக்டர்.ஜாகீர் நாயக் அவர்கள். சமஸ்கிருதத்தின் பதம் பிரிக்கும் முறைகளை அனுமன் போலவே கையாண்ட இவரின் மொழிப் புலமையை வியக்கிறேன். விஞ்ஞானமும் சமஸ்கிருதமும் மட்டும்தான் எடுத்தார் கைப்பிள்ளை. சொல்லும் வண்ணம், பதம் பிரிக்கும் வண்ணம், வளைந்து கொடுத்து நமக்கேற்ற மாதிரி ஒரு அர்த்தம் பலனையும் கொடுக்கும்.

"நா தஸ்ய ப்ரதிமஸ்தி" என்பது ஒரு யஜுர்வேதக் கடலில் இருந்து எடுக்கப்பட்டவொரு சின்னத் துளி.

ஒரு கதையில் ஆசிரியர் "நான் குற்றம் புரிந்த ஒருவன் ஓடுவதைக் கண்டேன்" என்று எழுதி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதில் "நான் குற்றம் புரிந்த ஒருவன்" என்பது ஒரு பக்கத்திலும் "ஓடுவதைக் கண்டேன்" என்பது மற்றொரு பக்கத்திலும் பதிக்கும்போது பதிந்துவிட்டால், அதைப் படிப்பவர் பிற்பகுதியை படிக்காமல் விட்டுவிட்டால், அதை மாற்றான அர்த்தம் கொள்வதும் புரிந்துகொள்வதும் யார் தவறு?

ஒரு வக்கீல் போல, நமக்குச் சாதகமாக ஒன்றை பேச, ஒரே ஒரு வரி கிடைத்து விட்டால், அதை வைத்துக் கொண்டே கொஞ்ச காலம் வாதாட முடியும். புகழடைய முடியும். ஆனால் அதுதான் சரி என்று முடிவெடுக்க முடியாது. உண்மையை மறைப்பதும் பொய்யா இல்லையா? ஒரு திறமையான வக்கீலால் எந்தவொரு சின்ன வார்த்தையைக் கையில் எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் எதிரான ஆயுதமாக ஆக்க முடியும். இதையெல்லாம் யார் போய் ஆராய்ந்து கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற அலட்சியப் போக்கு. மேலும் நம் மக்கள் விரைவிலேயே எதையும் மறந்துவிட்டு அடுத்த பிரச்சினையை கவனிக்கப் போய் விடும் ஆற்றலும்தான் இந்த மாதிரியான பொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களுக்கு அடித்தளமாக ஆகி விடுகிறது. இதைப் பற்றி விமர்சிக்கவோ விவாதிக்கவோ போவதில்லை இங்கு.

விரைவில் யஜுர்வேதத்தின் முழுமையானத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்பை பி.டி.எஃப்-ஆக வெளியிடுகிறேன். இதை முழுதாகப் படிக்கும் பொறுமையிருந்தால் நா தஸ்ய ப்ரதிமஸ்தி என்பதன் விரிவான அர்த்தம் புரியும். ஒரு வரியிலோ, ஒரு பதிவிலோ அடக்க முடியாத பெருங்கடல் அது.

எனக்கு புரிந்ததை மட்டும் சொல்கிறேன்.

ரவி வர்மாவால் வரையப்பட்ட சரஸ்வதி ஒரு தென்னிந்தியப் பெண்ணை மாடலாக வைத்து வரையப்பட்டது. ரவி வர்மாவின் படங்கள் பெரும்பாலும் உயிருடன் இருக்கும் பெண்டிரை வைத்துதான் வரையப்பட்டன. இவரால் வரையப்பட்ட படங்கள் இன்றும் பூஜையறையில் வைத்து வணங்கப்படுகின்றன என்றால் அவரது கலைக்கும் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் அது. மாடலாக இருந்த பெண்டிர்களுக்கும் அழியாத இறைநிலையை அளித்த அவரது ஓவியங்களை என்னவென்று சொல்வது. இன்றும் கூட இந்திய கலைப் பொருட்கள் விற்பனையில் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு அடுத்து ரவிவர்மாவின் ஓவியங்கள்தான் உலகெங்கும் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

நான் இன்றும் வியந்து இரசிக்கும் படங்களில் சில. இந்தப் படங்களில் தெறிக்கும் உணர்வுகளைப் பாருங்கள். எவ்வளவு அழகான ஓவியங்கள்.


இவள் கங்கை.


அர்ஜுனனும் சுபத்திரையும்


தாதிப் பெண்

இறைவன் மனிதனின் நேர்மறையான நம்பிக்கை என்றே வேதங்கள் கூறுகிறது. நம் நம்பிக்கையின் ரூபமாக அல்லாவாக, ஏசுவாக, கிருஷ்ணனாக அல்லது சரஸ்வதி, இல்லை வேறு எந்தக் கடவுள் என்றாலும் அவர்களை நாம் இறைவனின் பிரதிநிதியாக அல்லது messenger ஆகவே வரித்துள்ளோம் என்பதை ஏறத்தாழ எல்லாருமே ஒப்புக் கொண்டிருக்கிறோம். இந்த இறைத்தூதர்கள் கொண்டு வந்த செய்தி "மனிதத்துவம்" மற்றும் "அன்பு".

ஒருவர் தன் நம்பிக்கைக்குப் பெயர் சூட்டுவது சரியென்றால் அதே நம்பிக்கைக்கு இன்னொருவர் தனக்கு பிடித்த உருவமும் கொடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? போகும் பாதை எதுவென்றாலும் இருவரின் இலக்கு "மனிதத்துவம்" மற்றும் "அன்பு" என்ற செய்தியை மற்றவருக்கும் கொடுப்பது மட்டும்தானே?

இலக்கை விட்டு, பாதையிலேயே உழன்று கொண்டிருந்தால், இலக்கை என்று சென்றடைவது? அவரவர் தனக்குக் கிடைத்த பாதையில் சென்றாலே போதுமே. டிராபிக் ஜாம் எதுவும் இல்லாமல் சுலபமாக இலக்கை அடைந்து  விடலாமே. வடையை சாப்பிடாமல் அதில் உள்ள துளைகளை எண்ணிக்கொண்டிருந்தால், வடையை யார் சாப்பிடுவது?

அவர்கள் கொண்டு வந்த செய்தியைத் தொலைத்து விட்டு தூதர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் எந்த மதத்தினரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவராக இல்லை. எல்லோருக்குமே அவரவர் நம்பிக்கை மதிப்புக்குரியதாகவும் இருக்கிறது. அவற்றை சக மனிதர்களின் நம்பிக்கையை விட உசத்தியாக காண்பிப்பதையும் முக்கியமாக நினைக்கிறார்கள். என் நம்பிக்கை சிறந்தது என்று நினைப்பதில் தவறே கிடையாது. அதற்காக அடுத்தவர் நம்பிக்கையை பொய் என்று சொல்வதும், தம் நம்பிக்கையை அடுத்தவர் மீது திணிப்பதும், நிச்சயம் திணிக்கப்பட்ட நம்பிக்கையின் வாழ்நாளைக் குறைக்கும். நம்பிக்கையின் ஆதாரமே, 'அட, இதை நம்பலாம் போலருக்கே' என்று நினைக்கும் சுதந்திரம்தான்.

என் முந்தைய பதிவில் சொன்ன மாதிரியே, என் பதின் பருவங்களில் நான் அலட்சியம் செய்த சிலவற்றை, அதன் பின்னணியில் இருக்கும் காரண காரியங்கள் தெரிந்ததும் ஆச்சரியம் அடைந்து, அவற்றையே நானும் நம்ப ஆரம்பித்தேன். இந்தக் கருத்துக்கள் என் மீது திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ முயற்சிக்காமல் என் தேடலுக்கும், வாசிப்புக்கும் துணை நின்ற என் தந்தையை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நான் ஒவ்வொரு விஷயத்தையும் ஏன், எதற்கு என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் போது என் தந்தை மகிழ்ச்சியோடு ஒவ்வொன்றையும் விளக்குவார்.

எனக்குச் சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும் என் தனிப்பட்ட நலன் மட்டுமின்றி என் குடும்பத்தின் நலனும் அடங்கியே இருந்தன. காரணங்கள் தெரிய ஆரம்பித்ததும், நாளடைவில் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர்கள் சொன்னதை செய்து விட்டு, பின்னர் அதற்கான பலன் கிடைத்ததும் அதற்கான அர்த்தங்களை உணரவும் ஆரம்பித்தேன். இன்று அவர்கள் நம்பிக்கையை நான் புறந்தள்ளாமலும், என் மகளுக்கு எடுத்துச் சொல்லும் போது என் தந்தை கையாண்ட முறையையே பின்பற்றுகிறேன்.

சரி சொந்தக்கதைகளை விட்டு விஷயத்துக்கு வரலாம்.

என் தாயை நான் தெய்வம் என்று நினைத்தால் என் தாய்க்கும், ஒரு நடிகையை அதே போல நினைத்தால் அவருக்கும் கூட, எனக்கு இட வசதியும், அளவுக்கு மீறிய பணமும், வேறு முக்கியப் பொறுப்புக்களோ எதுவும் இல்லாமலும் இருந்தால் கோவில் கட்டி சிலையும் வைக்க எனக்கு தனி மனித சுதந்திரம் இருக்கிறது, இல்லையா?

நமக்கு பிடித்திருந்தால் அங்கு போய் வணங்கலாம். பிடிக்காவிட்டால் ஒன்று போகாமல் இருக்கலாம், இல்லை, அங்கு போய் இருக்கு சிற்பங்களின் கலையழகை இரசித்து விட்டு மட்டும் வரலாம். சில வைஷ்ணவக் கோவில்களில் கிடைக்கும் பிரசாதங்கள் சாப்பிடவும் கூட ரொம்ப பிரமாதமாக இருக்கும். :))

இந்துக்கள் இறைவனும் இறைவியுமாக பல உருவங்களில் ஏன் கொண்டாடுகிறார்கள்?

யோகா பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால், யோக நிலையின் பல்வேறு நிலைகளில் ஒன்றானது குண்டலினி யோகா. இந்த யோக நிலையின் உச்சத்தை அடையும் போது, யோகிக்கு பல்வேறு உணர்வுகளின் காட்சிகள் தெரிகின்றன. இவற்றை வெறுமே வாயால் விரித்துச் சொன்னால் புரிபடுவது சிரமம் என்பதால், அதை உருவகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கான படங்கள் என்னிடம் கிடைக்கவில்லை. இல்லையென்றால் இந்த சிறு விளக்கத்தோடே இந்த பதில் முடிந்திருக்கும்.

பகவத் கீதையில் (7:21) "எந்த வடிவத்தில் என்னை வணங்கினாலும் அதே ஆகிறேன்" என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

குளியல் சோப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதின் நோக்கம் உடல் சுத்தமாக வேண்டும் என்பதுதான். அதில் ஏன் இவ்வளவு வகைகள் இன்று சந்தையில் இருக்கிறது? ஒன்றில் moisturiser அதிகம் இருக்கு என்றும், இன்னொன்றில் pH குறைந்து இருக்கு என்றும், வாசனை சோப் என்றும், சினிமா நட்சத்திரம் உபயோகிக்கும் சோப் என்றும் பலவிதமாக சந்தைப் படுத்துவது ஏன்? ஒரே வீட்டில் எல்லோரும் இருந்தாலும், ஆளுக்கொரு சோப் வைத்துக் கொள்கிறோமே அது ஏன்? அடிப்படை சுகாதாரம் மற்றும் உடல் அழுக்கை நீக்கும் என்பதற்காக இருக்கும் சோப்பிலேயே இவ்வளவு வகைகள்.

தாய் பிள்ளை என்றாலும் தனித்தனி விருப்பு வெறுப்புக்கள் கொண்ட மனித மனத்துக்குள் நம்பிக்கைகள் எத்தனை விதங்கள்! அவற்றிற்கு எத்தனை உருவங்கள் கொடுத்திருக்கலாம். மனிதன் கடந்து வந்த பாதைகளில் இருப்பதையெல்லாம் மரியாதையோடும் பக்தியோடும் புனிதமான ஒன்றாகவே பார்த்து வந்திருக்கிறான்.

வாழ்வா சாவா என்ற இக்கட்டான ஒரு நிலையில் இருக்கும் ஒருவருக்கு, மற்றவரது தகுந்த நேரத்தில் செய்த உதவி, சின்னதே என்றாலும், உதவி பெற்றவனின் மனம், உதவி செய்தவரை தெய்வமாக்கி விடுகிறது. அல்லது அதற்குச் சமமான உயரிடத்தை அவர் இதயத்தில் பெற்று விடுகிறார். இல்லையா?

எல்லோருக்குமே ஒரே மாதிரிதான் இயற்கை மழையாகவும் வெயிலாகவும், காற்றாகவும் இருக்கிறது. மரங்கள் காய்கனிகளைத் தருகின்றன. நதிகளும் கடலும் நீர் தருகின்றன. இவற்றை எல்லாமே தெய்வங்களாக்கிப் பார்க்கிறது இந்துத்துவம். தான் நம்பியதை அடுத்தடுத்த வம்சங்களுக்கும் pass செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒரு கோவிலும் ஒரு உருவமும் கொடுத்து, பரம்பரையாக கொண்டாடிய குலதெய்வ பழக்கங்கள் உண்டாகின. இதனால் கோவில்களும், உருவங்களும் பெருகின.

இந்துத்துவத்தில் இருக்கும் கருத்து சுதந்திரம் எனக்கு பிடித்தமானது. யாரையும் விமர்சிக்காமல், புண்படுத்தாமல், கட்டுப்படுத்தாமல், ஒரு பண்பான ஆசிரியர் போல, இது நல்லது, உனக்கு உடன்பாடென்றால் பின்பற்று என்றும், ஒருவேளை பின்பற்றினால் விதிமுறைகளின் படி பின்பற்றினால் நல்லதென்றும், விதிமுறைகளை மீறுவதால் உண்டாகும் விளைவுகளையும் மட்டும் வேதங்கள் சொல்லியிருக்கிறது. பின்பற்றவில்லையென்றால் உனக்கு கேடு விளையும் என்று வேதங்களில் எங்கும் சொல்லப்படவில்லை.

பதினெட்டு கையுடைய துர்கை அத்தனை ஆயுதங்களின் பிரயோகத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்பதையே குறிக்கிறது. உருவகப்படுத்தும் போது, ஒருவருக்கு இத்தனையும் தெரியும் என்பதை எப்படிக் காட்டுவது? அதனால் பதினெட்டு கைகள் கொடுத்திருக்கலாம்.

வீணை வாசிக்கப்படுவது போன்ற உருவமும் (சரஸ்வதி), ஐந்து தலை நாகத்தில் மனிதன் படுத்திருப்பது போன்ற உருவமும் (விஷ்ணு) குண்டலினி யோகத்தின் உருவகங்களே. யோக சாஸ்திரங்களின் சுலோகங்களைப் படிக்கும் போது, அதில் அந்தந்த யோகத்தின் உச்சநிலையை விவரித்தபடி படமாக வரைந்தால், நிச்சயம் இந்துக் கடவுள்களின் உருவங்களை ஒத்த ஒரு காட்சி விரியக்கூடும்.

இது என் கருத்து மட்டும்தான். இதில் நிறைய பேருக்கு உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம். யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க.

இன்னும் சிறிது தேடினால் இதற்கான படங்களும் ஆதாரங்களும் நிச்சயம் எங்கோ இருக்கலாம். தேடுவேன் :)

இந்தத் தேடலில் நான் அறிந்த சில விஷயங்கள். உங்களுடன் பகிர்தல்.

கிருஸ்துவ சமூகத்தில் ஏசுபிரான் மற்றும் பைபிள் ஒன்றுதான். ஆனால், லத்தின் கதோலிக், சிரியன் கதோலிக் சர்ச்சுக்குள் போகமாட்டாராம். இவர்கள் இருவருமே பெண்டேகோஸ்ட் சர்ச்-க்கு போகமாட்டாராம்.இவர்கள் மூவரும் மர்தொமா சர்ச்-க்கு போகமாட்டாராம்.மர்தொமா மற்றவர்களது சர்ச்-க்கு போகமாட்டார்.இந்த நால்வருமே சால்வேஷன் ஆர்மி சர்ச்-க்கு போகமாட்டார்கள்.இந்த ஐந்து பேருமே செவன்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்-க்குப் போக மாட்டார்கள்.மேற்சொன்ன ஆறு குழுவினரும் ஆர்தொடாக்ஸ் சர்ச்-க்குப் போக மாட்டார்கள்.இந்த ஏழு பேருமே ஜகோபைத் சர்ச்-க்கு போக மாட்டார்கள்.கேரளாவில் மட்டும் 146 விதமான கிருஸ்துவப் பிரிவினர்கள் இருக்கிறார்கள்.இதில் எந்தப் பிரிவினருமே மற்ற சர்ச்சுகள் போவதில்லை அல்லது தமக்கு வரும் நன்கொடைகளைப் பகிர்வதில்லை.

இங்கு இப்படி இருக்க, முஸ்லிம்களில் அல்லா, குரான், நபிகள் எல்லாம் ஒன்றுதான் என்கிறார்கள். ஆனால்,ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.ஷியாக்கள் சுன்னி முஸ்லிம்கள் மசூதிகளுக்குப் போக மாட்டார்கள். அகமதிய மசூதிகளுக்கு இவர்கள் இருவருமே போக மாட்டார்கள். சுஃபி மசூதிக்கு இந்த மூவரும் போக மாட்டார்கள்.முஜாஹித்தின் மசூதிகளுக்கு இவர்கள் யாருமே போகமாட்டார்கள். 13 ஜாதிப் பிரிவுகளைக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரே புனித நூலை அடிப்படையாக கொண்டு, இறை நம்பிக்கை வளர்க்கும்  மனிதர்களிடமே இத்தனை வித்தியாசங்கள்.

1,280 புனித நூல்கள், 12,000 விளக்கங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உபவிளக்கங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், பலதரப்பட்ட மடங்கள், ஆசாரியர்கள், ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள் என்று இருக்கிறது கூட இந்து மதத்தில் இருக்கும் சுதந்திரம் காரணமாகத்தான். ஆனாலும் ஹிந்துக்கள் அனைவரும் எல்லாக் கோவில்களுக்கும் அவரவர் விருப்பம் போல போகிறார்கள்.

சிலை/உருவ வழிபாடு முறையை ஹிந்துக்கள் மட்டும்தான் பின்பற்றுகிறார்கள் என்று இல்லை.  முஸ்லிம்கள் மெக்காவைக் குறித்த ஒரு காபாவையும், கிருஸ்தவர்கள் சிலுவையையும் ஒரு உருவம்/idol ஆக வரித்துக் கொண்டுதான் தத்தம் தொழுகைகைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். படங்களும், ஓவியங்களும், சிலைகளும் இதைப் போன்ற தனிநபர் மன உருவங்களின் வெளிப்பாடுதான்.

பழுத்துப் போன ஆன்மீகவாதிகளுக்கு இறைவனைக் காண மீடியம்(medium) ஏதும் தேவைப்படுவதில்லை. ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலை கத்துக்குட்டிகளுக்கு இதுதான் இறைவன் என்று சொல்லித்தான் தலை வணங்கவே கற்றுக் கொடுத்தார் என் தந்தை. பூஜையறையையும், கோவில்களையும் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், ஒரு ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டே போனால் கூட "கடவுளே அவர்களோடு இரு" என்று வேண்டிக் கொள்வதும் கூட, என் தந்தையார் எனக்குள் இறைவனாக வரித்த உருவங்கள் இருப்பதால் மட்டுமே. இல்லையென்றால் என் தலை வானை நோக்கியே பார்த்துக்கொண்டு, கர்வம் தலைக்கேறி, அடுத்தவர் உணர்வுகளை குனிந்தும் பார்க்காமல், அஹங்கார குழிக்குள் என்றோ விழுந்திருப்பேன்.

மனதிற்குள் மட்டும் உருவமே இல்லாத இறைவைனைக் காணும் அளவுக்கு நமக்கு பக்குவம் வந்து விட்டிருந்தால், நாம் இங்கு blog எழுதிக் கொண்டு, சாயந்திரம் சப்பாத்திக்கு தாலா இல்லை, உருளைக் கிழங்கு குருமாவா என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். அடுத்த மாதம் வரும் அரியர்ஸ் பற்றியும், Activa மற்றும் Wagon-R சர்வீஸ் நாட்களையும் எண்ணிக் கொண்டு டைரியில் குறித்துக் கொண்டிருக்க மாட்டோம்.

முக்கியமாக டூம்ஸ் டே இவ்வளோ சீக்கிரம் வந்து விட்டதே. என் பெண் கல்யாணத்தை பாக்காமலே போயிடுவேனோ என்றெல்லாம் கவலைப்படமாட்டேன்.:))

அழுத்தப்பட்டப் பந்து எப்படி நீரிலிருந்து வெளியேறி விழுந்து விடுமோ, கட்டுப்படுத்தி திணிக்கப்பட்ட கருத்துக்களும், கட்டுப்படுத்துபவன் இருக்கும் வரை இருப்பது போலத் தெரிந்தாலும், காலப்போக்கில் மறைந்து விடும். நம் சமயங்கள் உணர்த்துவது அன்பு மட்டும்தான். நம் வீடுகள் தனித்தனியென்றாலும், பயணிக்கும் பாதைகள் வெவ்வேறேன்றாலும், நம் இலக்கு ஒன்றுதான். இலக்கையே குறித்திருப்போம். நம் நம்பிக்கையை மதிப்பது போலவே மற்றவர் நம்பிக்கையையும் மதிப்போம். இல்லை, குறைந்த பட்சம் விமர்சிக்காமலாவது இருக்கலாமே. :)

ஒரு நாட்டின் கொடி என்பது துணியில் வரையப்பட்ட ஓவியம்தான். ஆனால் தன் நாட்டுக் கொடியை காக்க இராணுவ வீரர்கள் உயிரைக் கூடத் தியாகம் செய்கிறார்கள். துணியில் வரையப்பட்ட கொடியின் உருவம் அவருக்கு அவ்வளவு மதிப்பு மிக்கதாக ஆகி விடுகிறது, இல்லையா?

சாதாரண வெள்ளைத் தாள் எந்த மதிப்பும் இல்லாதது. ஆனால் அதன் மேல் அரசாங்கத்தின் முத்திரை இட்டிருந்தால், அதை வைத்து கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அளவுக்கு மதிப்பு மிக்கதாகி விடுகிறதே?

மின்சாரம் உருவமற்றது. ஆனால் மின் விசிறியோ அல்லது ஏ.சியோ இருந்தால்தான் நம்மால் காற்றைப் பெற முடிகிறது இல்லையா? இரவில் ஒரு ட்யூப் லைட் இருந்தால் தான் ஒளி பெற முடிகிறது. இல்லை அந்த ஆற்றலை ஒரு பாட்டரி மூலம் பெறுகிறோம் இல்லையா?

அதே போலத்தான், ஆற்றலை, ஒருவர் பஜாஜ் ஃபேன் ஆகவும், இன்னொருத்தர் கெய்தான் ஃபேன் ஆகவும், வேறொருவர் ஹவெல்ஸ் ஃபேன் ஆகவும் அவரவர் வீட்டுக் கூடத்தில் பொருத்திக் கொண்டு காற்றை வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்திற்குத் தூண்டிய அ.மு.செய்யதுக்கு நன்றிகள் பல.

யாரையும் புண்படுத்தும் நோக்கமோ, விமர்சிக்கும் எண்ணத்துடனோ எழுதவில்லை. இதில் உள்ளவை என் கருத்துக்கள் மட்டுமே.

யாரையும் காயப்படுத்தாதீர்கள் தாழ்மையான கோரிக்கையோடு ஆரோக்கியமான விவாதத்திற்கு வைக்கிறேன்.

நன்றி.


.

38 comments:

pudugaithendral said...

விரிவான விளக்கம் வித்யா,

தியானம் செய்யும் பொழுது மனதை ஒரு நிலைப்படுத்த ஜோதி, பூ, தனக்கு பிடித்த இறைவன் இப்படி உருவகம் செய்து கொள்வோம்.

உருவ வழிபாடு பக்தி செய்ய ஒரு மார்க்கம். கல்லாக பார்த்தால் கல், கடவுளாக பார்த்தால் கடவுள்.
இது என் கருத்து.

Paleo God said...

//சிலை/உருவ வழிபாடு முறையை ஹிந்துக்கள் மட்டும்தான் பின்பற்றுகிறார்கள் என்று இல்லை. முஸ்லிம்கள் மெக்காவைக் குறித்த ஒரு காபாவையும், கிருஸ்தவர்கள் சிலுவையையும் ஒரு உருவம்/idol ஆக வரித்துக் கொண்டுதான் தத்தம் தொழுகைகைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். படங்களும், ஓவியங்களும், சிலைகளும் இதைப் போன்ற தனிநபர் மன உருவங்களின் வெளிப்பாடுதான்.

பழுத்துப் போன ஆன்மீகவாதிகளுக்கு இறைவனைக் காண மீடியம்(medium) ஏதும் தேவைப்படுவதில்லை. ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலை கத்துக்குட்டிகளுக்கு இதுதான் இறைவன் என்று சொல்லித்தான் தலை வணங்கவே கற்றுக் கொடுத்தார் என் தந்தை. பூஜையறையையும், கோவில்களையும் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், ஒரு ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டே போனால் கூட "கடவுளே அவர்களோடு இரு" என்று வேண்டிக் கொள்வதும் கூட, என் தந்தையார் எனக்குள் இறைவனாக வரித்த உருவங்கள் இருப்பதால் மட்டுமே. இல்லையென்றால் என் தலை வானை நோக்கியே பார்த்துக்கொண்டு, கர்வம் தலைக்கேறி, அடுத்தவர் உணர்வுகளை குனிந்தும் பார்க்காமல், அஹங்கார குழிக்குள் என்றோ விழுந்திருப்பேன்.

மனதிற்குள் மட்டும் உருவமே இல்லாத இறைவைனைக் காணும் அளவுக்கு நமக்கு பக்குவம் வந்து விட்டிருந்தால், நாம் இங்கு blog எழுதிக் கொண்டு, சாயந்திரம் சப்பாத்திக்கு தாலா இல்லை, உருளைக் கிழங்கு குருமாவா என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். அடுத்த மாதம் வரும் அரியர்ஸ் பற்றியும், Activa மற்றும் Wagon-R சர்வீஸ் நாட்களையும் எண்ணிக் கொண்டு டைரியில் குறித்துக் கொண்டிருக்க மாட்டோம்.//

அற்புதமான பதிவு,

சுருங்க சொல்வதானால், மனித மனம் விசித்திரமானது உருவமில்லாத ஒன்றை அது ஏற்றுக்கொள்ள மறுக்கும் அதனால்தான் அண்டவெளி என்ற இந்த பிரபஞ்சத்தை அறிவியலில் இன்னும் ஆராய்ந்துகொண்டே இருக்கிறார்கள், ஒரு நொடிக்கும் இன்னொரு நொடிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள கூட கடிகாரத்தில் இரண்டு புள்ளிகள் நமக்கு தேவை, அடர்ந்த இருட்டில் வைத்த பொருளை தடவி பார்த்து தெரிந்துகொள்ள நமக்கு தடையாய் இருப்பது நமது கண்கள் நன்றாக இருப்பதுதான், பார்வை இல்லாத ஒரு மனிதருக்கும் இதுதான் இது என்ற விளக்கங்கள் பார்வை உள்ள ஒரு மனிதராலேயே சொல்லித்தரபடுகிறது, அதை போலத்தான் இதுவும் இருட்டில் கருவாகும் நம்மை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது நம்மை சுற்றி நிகழும், நிகழ்ந்த காட்சிகள் தான்.

மற்றபடிக்கு எல்லா மதத்தில் (ஒரே நேரத்தில் பிரசவித்து அந்த) பிறந்த குழந்தைகளை ஒரு தாதி மாற்றிவைத்தால் எந்த கடவுளும் அந்தந்த மதத்தின் படி அக்குழந்தை வாழ வழி செய்வதில்லை, ஏனினில் எங்கு எல்லாமே நம்மாலேயே குழுக்களாய் தீர்மானிக்கப் படுகிறது. ஒவ்வொரு மதமும் இன்று ஒரு தெருவில் வசிக்கும் பல வீடுகளின் நிலையை அடைந்துவிட்டன, என்னை போலவே என் பக்கத்து வீட்டுகாரரும் இருக்க வேண்டும் என்ற நினைப்புதான் (மத) குழாயாடி சண்டைகள்.

ஊரெல்லாம் தண்ணி வந்து இரண்டாவது மாடியில் எட்டி பார்க்கும்போது 'எங்க வீட்டுல
drainage எல்லாம் பக்கா ஆனா உங்க வீட்டுல ஏன் நாறுது? என்ற கேள்வி எழாது. அப்பொழுது உதவிக்கு வரும் நண்பனை நீங்க எந்த மதம் ன்னு கேள்வி கேட்க முடியாது,

அப்போது அங்கே எப்போதும் காட்சி தரும் இறையை (நம்மை காப்பாற்ற வந்த அந்த மனிதனை - மனிதத்தை) ரொம்ப தேங்க்ஸ் ங்க என்று சிம்பிளாக சொல்லிவிட்டு குடும்பத்தோடு ஜாகை மாற்றி மீண்டும் மதம் பிடித்து இறை மறந்து இரை பிடிக்க போய்விடுவோம். ஆமாம் பாதை தொலைந்து பயனித்துகொண்டிருப்பவர்கள்தாம் நாமெல்லோருமே.. உருவமில்லாத, வெளிச்சமில்லாத அந்த பாதையில் நீங்கள் ஓய்வெடுத்த மரம் உங்களுக்கு சுகமாயிருக்கலாம், நான் ஓய்வெடுத்த ஓடை எனக்கு சுகமாயிருந்திருக்கலாம், நானும் நல்லா ஒய்வெடுத்தேன் நீங்களும் நல்லா ஒயிவேடுதேங்களா என்று கேட்டுவிட்டு நடை கட்டி பயணப்படுவது நல்லது, அன்றி உன்
ஓடை நாத்தம், என் மரம்தான் வாசம் என்று சண்டை போட்டுக்கொண்டிருப்பது மூடத்தனம், ஏனென்றால் எல்லோருமே பயணப்படும் இந்த பாதை போய் சேருமிடம் ஒன்றே அன்றி வேறல்ல.

அப்பாவி முரு said...

//யாரையும் புண்படுத்தும் நோக்கமோ, விமர்சிக்கும் எண்ணத்துடனோ எழுதவில்லை. இதில் உள்ளவை என் கருத்துக்கள் மட்டுமே.

யாரையும் காயப்படுத்தாதீர்கள் தாழ்மையான கோரிக்கையோடு ஆரோக்கியமான விவாதத்திற்கு வைக்கிறேன்//

நல்ல முயற்சிக்கு பாராட்டுகள்.

தரமான விவாத்திற்கு தயாராய் இருப்பதும் வரவேற்க்க தக்கது.

வாழ்த்துகள்.

சுந்தரா said...

அருமையான விளக்கம் வித்யா அவர்களே!

//பூஜையறையையும், கோவில்களையும் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், ஒரு ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டே போனால் கூட "கடவுளே அவர்களோடு இரு" என்று வேண்டிக் கொள்வதும் கூட, என் தந்தையார் எனக்குள் இறைவனாக வரித்த உருவங்கள் இருப்பதால் மட்டுமே.//

இதுவே என்னுடைய கருத்தும்.

சிறப்பான பதிவுக்கு நன்றிகள்!

அ.மு.செய்யது said...

வலைச்சரம் பாருங்கள்.நீங்களும் இருக்கிறீர்கள் இன்று.

//முஸ்லிம்கள் மெக்காவைக் குறித்த ஒரு காபாவையும், ஒரு உருவம்/idol ஆக வரித்துக் கொண்டுதான் தத்தம் தொழுகைகைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். //

முற்றிலும் தவறான கருத்து விதூஷ்....!!!

மெக்கா இருக்கும் திசையை நோக்கி மட்டும் தான் முஸ்லிம்கள் தொழுகை நடத்துகிறார்கள்.தவிர,அவர்கள்
மெக்காவை வணங்கவில்லை.

//விரைவில் யஜுர்வேதத்தின் முழுமையானத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்பை பி.டி.எஃப்-ஆக வெளியிடுகிறேன்//

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.காரணம் "நா தஸ்ய பிரதிம அஸ்தி" குறித்து சரியான விளக்கம் இந்த பதிவின் மூலம் எனக்கு கிடைக்க வில்லை.

ரவிவர்மாவின் ஓவியங்கள் எல்லாம் தெய்வீக அம்சம் பொருந்தியவை என்பதற்காக அவற்றை வணங்கலாம்
என்பது ஒரு தெளிவான பதிலாக என்னால் ஏற்று கொள்ள முடியாது.



டாக்டர் ஜாஹிர் நாயக் குறித்து சொல்வதென்றால், அவர் சாதாரண இந்துக்களை விட அதிகம்
வேதங்களை கற்றவர்.அவருடைய உபநிடதங்கள் குறித்த கருத்துகளை இந்துக்களே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவர் வாக்கியத்தை வைத்து மட்டும் எல்லாம் கல்லா கட்ட முடியாது.நிறைய கம்பேரடிவ் ஸ்டடி பண்ண‌
வேண்டும்.

Vidhoosh said...

புதுகை தென்றலுக்கு நன்றி.

பலா பட்டறை: உங்கள் பதிவுகளை இன்று பார்த்தேன். பின்னூட்டம் இடமுடியவில்லை. உங்கள் templateட்டில் ஏதோ கோளாறு. கவனிக்க.

அப்பாவி முரு: நன்றி

சுந்தரா: நன்றி.

Vidhoosh said...

செய்யது: நன்றி. :)

வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி.

பி.டி.எஃப் வெளியிட இன்னும் அங்கீகாரம் வரவில்லை. உரிமையாளரிடம் கேட்டிருக்கிறேன்.

அதுவரை ஆங்கிலத்தில் இருக்கிற இதையும் படித்துப் பாருங்கள்.

யஜுர் வேத சம்ஹிதம் 32-வது அத்தியாயத்தில் "புருஷ" எனப்படும் ஆற்றலுக்கு என்னவே முடியாத தலைகள் இருப்பதாகக் கூறுகிறது.

Svetasvatara Upanishad
Third Chapter
2. For there is one Rudra only, they do not allow a second, who rules all the worlds by his powers. He stands behind all persons, and after having created all worlds he, the protector, rolls it up at the end of time.

3. That one god, having his eyes, his face, his arms, and his feet in every place, when producing heaven and earth, forges them together with his arms and his wings.

4. He, the creator and supporter of the gods, Rudra, the great seer, the lord of all, he who formerly gave birth to Hiranyagarbha, may he endow us with good thoughts.

5. O Rudra, thou dweller in the mountains, look upon us with that most blessed form of thine which is auspicious, not terrible, and reveals no evil!

6. O Lord of the mountains, make lucky that arrow which thou, a dweller in the mountains, holdest in thy hand to shoot. Do not hurt man or beast!

==============
Excerpts from the Fourth Chapter

12. He, the creator and supporter of the gods, Rudra, the great seer, the lord of all, who saw, Hiranyagarbha being born, may he endow us with good thoughts.

13. He who is the sovereign of the gods, he in whom all the worlds rest, he who rules over all two-footed and four-footed beings, to that god let us sacrifice an oblation.

14. He who has known him who is more subtile than subtile, in the midst of chaos, creating all things, having many forms, alone enveloping everything, the happy one (Siva), passes into peace for ever.

15. He also was in time the guardian of this world, the lord of all, hidden in all beings. In him the Brahmarshis and the deities are united, and he who knows him cuts the fetters of death asunder.

16. He who knows Siva (the blessed) hidden in all beings, like the subtile film that rises from out the clarified butter, alone enveloping everything, he who knows the god, is freed from all fetters.

17. That god, the maker of all things, the great Self 4, always dwelling in the heart of man, is perceived by the heart, the soul, the mind 5;--they who know it become immortal.

18. When the light has risen, there is no day, no night, neither existence nor non-existence; Siva (the blessed) alone is there. That is the eternal, the adorable light of Savitri, and the ancient wisdom proceeded thence.

19. No one has grasped him above, or across, or in the middle. There is no image equivalent of him whose name is Great Glory.
[Na tasya pratimasti Nainam urdhvam na tiryancam na madhye na parijagrabhat na tasy pratime asti yasya nama mahad yasah] -- Svetasvatara Upanishad chapter 4:19

20. His form cannot be seen, no one perceives him with the eye. Those who through heart and mind know him thus abiding in the heart, become immortal.

21. 'Thou art unborn,' with these words some one comes near to thee, trembling. O Rudra, let thy gracious face protect me for ever!

22 2. O Rudra! hurt us not in our offspring and descendants, hurt us not in our own lives, nor in our cows, nor in our horses! Do not slay our men in thy wrath, for, holding oblations, we call on thee always.

--

Vidhoosh said...

====================

Fifth Chapter

1. In the imperishable and infinite Highest Brahman, wherein the two, knowledge and ignorance, are hidden, the one, ignorance, perishes, the other, knowledge, is immortal; but he who controls both, knowledge and ignorance, is another.

2. It is he who, being one only, rules over every germ (cause), over all forms, and over all germs; it is he who, in the beginning, bears in his thoughts the wise son, the fiery, whom he wishes to look on while he is born.

3. In that field in which the god, after spreading out one net after another in various ways, draws it together again, the Lord, the great Self, having further created the lords, thus carries on his lordship over all.

4. As the car (of the sun) shines, lighting up all quarters, above, below, and across, thus does that god, the holy, the adorable, being one, rule over all that has the nature of a germ.

5. He, being one, rules over all and everything, so that the universal germ ripens its nature, diversifies all natures that can be ripened, and determines all qualities.

6. Brahma (Hiranyagarbha) knows this, which is hidden in the Upanishads, which are hidden in the Vedas, as the Brahma-germ. The ancient gods and poets who knew it, they became it and were immortal.

7. But he who is endowed with qualities, and performs works that are to bear fruit, and enjoys the reward of whatever he has done, migrates through his own works, the lord of life, assuming all forms, led by the three Gunas (Rajo, Sath and Tamas), and following the three paths.

8. That lower one also, not larger than a thumb, but brilliant like the sun, who is endowed with personality and thoughts, with the quality of mind and the quality of body, is seen small even like the point of a goad.

9. That living soul is to be known as part of the hundredth part of the point of a hair, divided a hundred times, and yet it is to be infinite.

10. It (The Soul) is not woman, it is not man, nor is it neuter; whatever body it takes, with that it is joined (only).

11. By means of thoughts, touching, seeing, and passions the incarnate Self assumes successively in various places various forms, in accordance with his deeds, just as the body grows when food and drink are poured into it.

12. That incarnate Self, according to his own qualities, chooses (assumes) many shapes, coarse or subtile, and having himself caused his union with them, he is seen as another and another, through the qualities of his acts, and through the qualities of his body.

13 3. He who knows him who has no beginning and no end, in the midst of chaos, creating all things, having many forms, alone enveloping everything, is freed from all fetters.

14. Those who know him who is to be grasped by the mind, who is not to be called the nest (the body), who makes existence and non-existence, the happy one (Siva), who also creates the elements, they have left the body.

--

வால்பையன் said...

ஏன் உருவ வழிபாடுன்னு கேட்டா, ஷியா, சன்னி சண்டைன்னு அம்பை திருப்பி விடுறிங்களே!

ஆரம்பத்திலிருந்தே த்வைதம், அத்வைதம் என்று இரு பிரிவுகளாக இந்து மதம் நிற்கிறது!, இருவருமே வேதத்தை ஆதாரமாக வைத்து தான் தர்க்கம் செய்கிறார்கள்!

உடன்கட்டை முறையை ஒழித்த ராசாராம் மோகன் ராய் உருவ வழிப்பாட்டை எதிர்த்தவர், ஆரம்பத்தில் விவேக் இவரது சீடராக தான் இருந்தார், பின் தான் ராமகிருஷ்ணருக்கு சீடராக போய் விட்டார்!

உங்கள் பதிவில் தெளிவில்லையே!

வால்பையன் said...

//மெக்கா இருக்கும் திசையை நோக்கி மட்டும் தான் முஸ்லிம்கள் தொழுகை நடத்துகிறார்கள்.தவிர,அவர்கள்
மெக்காவை வணங்கவில்லை. //


அந்த திசையில எதாவது காந்தம் இழுக்குதா என்ன!?

வால்பையன் said...

//ரவிவர்மாவின் ஓவியங்கள் எல்லாம் தெய்வீக அம்சம் பொருந்தியவை என்பதற்காக அவற்றை வணங்கலாம்//

ஹுஸைன் வரைந்ததையும் தெய்வீக தன்மையோடு பார்க்கலாமே!

வால்பையன் said...

//அதுவரை ஆங்கிலத்தில் இருக்கிற இதையும் படித்துப் பாருங்கள். //


இது ஆவுறதில்லை!

மொழி பெயர்த்து போடுங்க!

கிருஷ்ண மூர்த்தி S said...

எழுத எடுத்துக் கொண்ட விஷயமாகட்டும், எழுதிய விதமாகட்டும், நல்ல முதிர்ச்சி தெரிகிறது, விதூஷ்!
என்னுடைய வாழ்த்துக்கள்!
முதலில் ரவிவர்மா வரைந்த ஓவியத்தை வைத்து, இங்குள்ள எல்லோருமே வழிபடுவதில்லை. ரவிவர்மாவின் ஓவியத் திறமையைப் பற்றியே நிறையக் கேள்விகளும் சந்தேகங்களும் இணையத்திலேயே நிறையவிமரிசனங்களாகக் கிடைக்கிறது. அதனால், ரவி வர்மாவை விட்டுவிடலாம்.
அடிப்படைக் கேள்வி, உருவ வழிபாடு, அதிலும் ஆண் பெண் என்று,அப்புறம் எக்கச்சக்கமான வடிவங்களில் பெயர்களில் என்று இவைதான் எதோ ஒரு குறிப்பிட்ட வழிபாடு, அல்லது மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்கிறவர்கள், அ.மு.செய்யது உட்பட எழுப்புகிற கேள்விகள். இதையே கொஞ்சம் உல்டா அடித்து, நாத்திகம் பேசுகிறவர்களும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கேள்விக்கு, ஒரே விடைதான்! மிகவும் எளிதானதுதான்! பதிலைக் கேட்பதற்கு, எங்க வால்பையனைப் போலவே பொறுமைதான் இல்லை!
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்று சொல்லிக் கொண்டே போனால், ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு எப்படிப் புரியும்? உருவ வழிபாடு, பல்வேறு வடிவங்கள், பெயர்கள், கதைகள் என்பன ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கே சொல்லப்பட்டவை. உருவ வழிபாட்டில் ஆரம்பித்து, இறை நிலையை உருவம் அருவம் அவன் அவள் என்ற நிலையெல்லாம் கடந்து, இறைநிலை என்பது எங்கேயோ இல்லை, தனக்குள்ளேயே என்பதை ஒவ்வொரு படியாகச் சொல்லிக் கொடுப்பதில் இந்தியத் தத்துவ மரபுகளுக்கு நிகர் வேறேதும் இல்லை! மிருக நிலையில் இருந்து விடுபட்டு, உணர்விலும் அறிவிலும் தெய்வீக விழிப்பு நிலையைத் தன்னுள்ளேயே திருவுரு மாற்றமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்பதைச் சொன்ன ஞான மரபுஇங்குண்டு.

என்ன, நம்மில் பெரும்பாலானோர், அந்த ஆரம்ப நிலையைக் கடந்து போக முயற்சிப்பதே இல்லை!

உபநிஷதங்கள், ஒரு தத்துவ விசாரத்தை எழுப்பிக் கொண்டு, ஒரு கதை சொல்கிற மாதிரியே, முத்தாய்ப்பாக சொல்ல வருகிற அடிப்படைக் கருத்தைத் தேடி அடைகிறது. புரிந்து கொள்ள, பக்குவம் வேண்டும். வருகிற வரையில், அது எவனோ வேலையற்றவன் எழுதி வைத்து விட்டுப்போனதாகத் தான் தெரியும். பக்குவம் உள்ளவனுக்கு உபநிஷதம் சொல்லிக் கொடுக்கும் பாடங்களே வேறு!

இந்தப்பதிவை ஒரு எழுத்து விடாமல் இரண்டு முறைக்கு மேல் படித்த பிறகு எனக்குள் எழுந்த கேள்வி இது.

தமிழ் ஓவியா ஐயா தன்னுடைய பதிவுகளில் கிளிப்பிள்ளை மாதிரி, திரும்பத் திரும்ப 'என்னுடைய இந்தப்பதிவை அல்லது அந்தப் பதிவைப் படியுங்கள்! உண்மையை உணருங்கள்!' என்று சொல்லிக் கொண்டிருக்கிற மாதிரி, இவ்வளவும் யாருக்காக? பதிவைப்படித்தவுடன் யாராவது தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டு விடப்போகிறார்களா? அல்லது, இந்த விஷயத்தில் கொஞ்சம் சுய சிந்தனையுடன், என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்த்தது இன்ன விதமாக இருக்கிறது, இந்த இடத்தில் நான் மாறுபடுகிறேன் என்று, விவாதத்தை மேலும் செழுமைப்படுத்த முன்வரப் போகிறார்களா?

இதெல்லாம் ஒன்றுமில்லை, நான் எழுதுவது எனது ஆத்ம திருப்திக்காகவே, என்னுடைய சிந்தனைப்போக்கைத் தெளிவு படுத்திக் கொள்ளத் தான் இத்தனையும், இவை என்னுடைய வாசிப்பில் இருந்து அல்ல, என்னுடைய அனுபவங்களாகவும் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் தான் என்று இருந்தால், பிடியுங்கள் நூற்றுக்குநூறு!

வால்பையன் said...

//பதிலைக் கேட்பதற்கு, எங்க வால்பையனைப் போலவே பொறுமைதான் இல்லை!//

சனி,ஞாயிறா பார்த்து போன் பண்ணுங்க சார்!
பொறுமையா கேப்போம்!

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் பொறுமையாக் கேப்போம்னு கிழமை குறிச்சது:

/சனி,ஞாயிறா பார்த்து /

?? !!?? !!

வால்பையன் said...

///சனி,ஞாயிறா பார்த்து /

?? !!?? !! //

அன்னைக்கு தானே கேட்க ஒரு ஆளா,
பேச ஒரு ஆளா இருப்பேன்!

Ashok D said...

ரவிவர்மா-ஓவியம்-சரஸ்வதி-விதூஷ்-திசை-கடவுள்-செய்யது
இவைகள்/இவர்கள்
என்ன/யார்?

வால்பையன் said...

//ரவிவர்மா-ஓவியம்-சரஸ்வதி-விதூஷ்-திசை-கடவுள்-செய்யது
இவைகள்/இவர்கள்
என்ன/யார்? //

அசோக்ஜி இன்னும் தெளியலையா!?

இன்றைய கவிதை said...

//அழுத்தப்பட்டப் பந்து எப்படி நீரிலிருந்து வெளியேறி விழுந்து விடுமோ, கட்டுப்படுத்தி திணிக்கப்பட்ட கருத்துக்களும், கட்டுப்படுத்துபவன் இருக்கும் வரை இருப்பது போலத் தெரிந்தாலும், காலப்போக்கில் மறைந்து விடும். நம் சமயங்கள் உணர்த்துவது அன்பு மட்டும்தான். நம் வீடுகள் தனித்தனியென்றாலும், பயணிக்கும் பாதைகள் வெவ்வேறேன்றாலும், நம் இலக்கு ஒன்றுதான். இலக்கையே குறித்திருப்போம். நம் நம்பிக்கையை மதிப்பது போலவே மற்றவர் நம்பிக்கையையும் மதிப்போம். இல்லை, குறைந்த பட்சம் விமர்சிக்காமலாவது இருக்கலாமே. :)
//

அருமை!

அது சரி, 'உருவ வழிபாடு ஏன்?' என்கிற தலைப்பு மாலையில்
'நா தஸ்ய ப்ரதிமஸ்தி' என மாறிப் போனது ஏன்?

-கேயார்

Ashok D said...

//அசோக்ஜி இன்னும் தெளியலையா!?//

ashok-தெளிவு-வால்-என்பதென்ன?

வால்பையன் said...

//ashok-தெளிவு-வால்-என்பதென்ன? //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anna said...

"மதிப்புக்குரிய டாக்டர்.ஜாகீர் நாயக்"

If he is the one and only Dr. Zakir Naik, 'respectable' is NOT the word I would use to describe him unfortunately. I haven't read any of his writings on hinduism. But I have read quite a few of his articles on explanations of Islamic principles and his claims to give rational, scientific explanations, which are anything but scientific.

One website I could quickly find was this:
http://www.wikiislam.com/wiki/Rebuttals_to_Zakir_Naik

"என் நம்பிக்கை சிறந்தது என்று நினைப்பதில் தவறே கிடையாது. அதற்காக அடுத்தவர் நம்பிக்கையை பொய் என்று சொல்வதும், தம் நம்பிக்கையை அடுத்தவர் மீது திணிப்பதும், நிச்சயம் திணிக்கப்பட்ட நம்பிக்கையின் வாழ்நாளைக் குறைக்கும்."

Just one extreme example: One of the beliefs among many tribes in Africa is that genital mutilation of girls as a necessary part of raising a girl properly, and a way to prepare her for adulthood and marriage. This is often motivated by beliefs about what is considered proper sexual behaviour, linking procedures to premarital virginity and marital fidelity. It is believed by some to reduce a woman's libido and help her resist "illicit" sexual acts. ARRGH!

The world health organization reports that an estimated 100 to 140 million girls and women worldwide are currently living with the consequences of genital mutilation and In Africa, about three million girls are at risk for FGM annually. The procedure has no health benefits for girls and women. Procedures can cause severe bleeding and problems urinating, and later, potential childbirth complications and newborn deaths.

Do you seriously think we should not ask questions or criticize this belief?

There are many beliefs that are different or even beliefs which totally contradict each other in different religions. How can you belief a point of view and still totally respect/give equal value to a belief that completely contradicts it?

"When two opposite points of view are expressed with equal force, the truth does not necessarily lie in the middle. It is possible for one side to be totally wrong, and that justifies passion on the other side." I can't remember who said that, but it's true. It is also true that both points of views could be wrong as well.
What is important is to question every belief for the wisdom behind it and if you can’t find that wisdom or any basis for that belief, it is ok to discard it. In fact it should be discarded.

“Religion doesn't seem to work like that; it has certain ideas at the heart of it which we call sacred or holy or whatever. That's an idea we're so familiar with, whether we subscribe to it or not, that it's kind of odd to think what it actually means, because really what it means is 'Here is an idea or a notion that you're not allowed to say anything bad about; you're just not. Why not? — because you're not!' If somebody votes for a party that you don't agree with, you're free to argue about it as much as you like; everybody will have an argument but nobody feels aggrieved by it. If somebody thinks taxes should go up or down you are free to have an argument about it, but on the other hand if somebody says 'I mustn't move a light switch on a Saturday', you say, 'Fine, I respect that'.”- Dawkins.

Why is that?

ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலை கத்துக்குட்டிகளுக்கு இதுதான் இறைவன் என்று சொல்லித்தான் தலை வணங்கவே கற்றுக் கொடுத்தார் என் தந்தை. பூஜையறையையும், கோவில்களையும் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், ஒரு ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டே போனால் கூட "கடவுளே அவர்களோடு இரு" என்று வேண்டிக் கொள்வதும் கூட, என் தந்தையார் எனக்குள் இறைவனாக வரித்த உருவங்கள் இருப்பதால் மட்டுமே. இல்லையென்றால் என் தலை வானை நோக்கியே பார்த்துக்கொண்டு, கர்வம் தலைக்கேறி, அடுத்தவர் உணர்வுகளை குனிந்தும் பார்க்காமல், அஹங்கார குழிக்குள் என்றோ விழுந்திருப்பேன்.
I sincerely do not believe that you being a humanistic person ahs anything to do with your idol worship. You don't need religious beliefs to have compassion toward your fellow human beings or to lead a moral life.

Vidhoosh said...

வால்:
:)) அம்பைத் திருப்பலைங்க. எல்லோரும் ஒரே குட்டையில் தான் இருக்கிறோம். இதில் என்ன கேள்வியும் பதிலும் என்றுதான்.

ஹுசைன் வரைந்தது தெய்வீகத் தன்மையைக் காட்ட மட்டும்தான் என்றால் நீங்கள் கூறும் வாதத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். சரி அதை விடுங்கள். இதைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தால் பதிவின் நோக்கம் மாறிவிடும்.:))

தமிழ் மொழி பெயர்ப்பு ஏற்கனவே ஒருவர் செய்து விட்டார். மிகவும் நன்றாக வந்துள்ளது. அவர் அனுமதி கொடுத்தால் எனக்கு நேரம் மிச்சமாகும். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.

=====================================

கிருஷ்ணமூர்த்தி சார். வாங்க. ரொம்ப நாளா ஆளையே காணோம். :)
///நான் எழுதுவது எனது ஆத்ம திருப்திக்காகவே, என்னுடைய சிந்தனைப்போக்கைத் தெளிவு படுத்திக் கொள்ளத் தான் இத்தனையும், இவை என்னுடைய வாசிப்பில் இருந்து அல்ல, என்னுடைய அனுபவங்களாகவும் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் தான்//

அதே அதே. அதனால் உங்கள் நூற்றுக்கு நூறுக்கு நன்றிகள் கோடி.

நான் எழுதுவது ஆத்மதிருப்திக்காக மட்டும் இல்லை, என்னையும் தாய் போல நினைக்கும் என் அக்கா மகள் வைஷ்ணவிக்கும், என் மகள் தர்ஷிணிக்கும் நான் சொல்ல நினைப்பவைகளில் இதெல்லாம் அடங்கும்.

யாரையும் கருத்துத் திணித்தல் மாற்றாது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. தானே உணரவேண்டும் என்பதால் என் மகளுக்குக் கூட அறிவுரைகள் அதிகம் சொல்வதில்லை. ஒரே ஒரு முறைதான் எதுவேன்றாலும். என் வழி என் தந்தையார் காட்டியது ஒன்றேதான். அனுபவமே சிறந்த ஆசிரியன் என்பதில் அவர் அலாதி நம்பிக்கை வைத்துள்ளார். அவரும் யாருக்கும் அதிகம் அறிவுரைகள் சொல்லமாட்டார். இதனால் இந்த பலன் விளையும். பிருகு உன்னிஷ்டம் என்றே ஒவ்வொரு முறையும் சொல்வார். :)

ரவிவர்மாவின் படைப்புக்களில் வாத விவாதங்கள் இருந்தாலும் படைப்புக்களில் இருக்கும் உயிர் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவ்வளவுதான். வேறொன்றும் சிறப்பு செய்தி இதில் இல்லை.

====================================

அஷோக்: எதுவுமில்லை. அதை புரிந்து கொள்ளும் பக்குவம் வரும் வரை இதெல்லாம் தொடரும் :))

=====================================
கேயார் சார்:

உண்மையில் யஜுர் வேதம் - ஸ்வேதஸ்வதார உபநிஷத்-தில் நான்காம் அத்தியாயத்தின் பத்தொன்பதாவது சுலோகம்

"நா தஸ்ய பிரதிமஸ்தி
நயனம் ஊர்த்வம் ந திர்யஞ்சம்
ந மத்யே ந பரிஜாக்ராபத்
ந தசி பிரதிமே அஸ்தி
யஸ்ய நாம மஹத் யச:"

என்பதுதான் முழு சுலோகம்.

அவனை யாராலும் அறிய முடியாது. அவன் உருவத்தை ப்ரிதிமைக்குள் அடக்க முடியாது. அவன் ரூபத்திற்கு இணை ஏதும் இல்லை. அவனே சர்வமும்.

வெறும் கண்களால் அவனைக் காண முடியாது (நயனம் ஊர்த்வம் ந திர்யஞ்சம்) என்று சொல்லியிருப்பது யோக நிலையைக் குறித்தது ஆகும்.

யோக அனுபவம் பெற்று படிக்கும் போது மட்டுமே வேதங்களின் உண்மையான சாரம் பிடிபடும்.

உருவ வழிபாடு ஏன் என்பது உருவ வழிபாட்டை அங்கீகரிப்பது போல இருந்தது. உருவ வழிபாடு என்பது ஆரம்ப நிலை ஆன்மீக பயணம் மட்டுமே. அந்த ஓரடியையும் தாண்டாமலே "ஏன்" என்பதற்கான விடையாக இந்தப் பதிவை கொள்ள முடியாது. அதனால்
"நா தஸ்ய ப்ரதிமஸ்தி"க்கான 0.1 சதவீத விளக்கமாகக் கொள்ளலாம். என் இந்த முயற்சியில் ஓரளவு மனத் திருப்தி இருந்தது. அதனால் தலைப்பை மாற்றி விட்டேன், புடவைக்கு தகுந்த சட்டை போல. :))

==================================

Vidhoosh said...

அனலிஸ்ட்:

எல்லோரும் மதிப்புக்குரியவர்களே. ஒருவரது கருத்தை மட்டும் தான் தவறென்று நம்மால் சொல்ல முடியும். எல்லோரும் தான் வேதங்களை மாற்றி ஒப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் tribals இந்த extremes எல்லாம் தாண்டியும் விட்டார்கள். அங்கு reverse evolution நடந்து கொண்டிருக்கிறது.

///ARRGH!/// இதையெல்லாம் கற்பனை செய்து பார்க்காதீர்கள். எதிர்மறை விமர்சனங்களால் நமக்கு நேர விரயம் மட்டும் தான் ஆகக் கூடும். கேள்வி கேட்கலாம். தகுந்த இடத்தில், தகுந்தவர்களிடம் மட்டும். வெறும் காற்றில் அம்பெய்வது போல கேள்விக் கனிகளை வீசிக் கொண்டே போனால் இலக்கை இழந்து விடுவோம்.

நம் கடமையெல்லாம் (இலக்கு) நம் அடுத்த generation இன்னும் பண்பட்டு இருக்க வேண்டும் என்பதாக மட்டும் கருதவேண்டியதுதான்.

மன அமைதியை நாடவும், நிதானமாக சிந்திக்கவும், ஆண் பெண் இருவரையும் மனிதர்களாக பார்க்கவும் கற்றுக் கொடுக்க வேண்டியது நம் (பெற்றோர்கள்) பொறுப்பு. ஒவ்வொருத்தருக்கும் இந்த உணர்வு வந்துவிட்டால் எல்லா வீட்டுக் குழந்தைகளும் பண்பட்டு ஒரு சமூக மாற்றம் வரலாம். அனுபவமே சிறந்த ஆசிரியன். எல்லோரும் சிறப்பானவராக இருப்பதையே விரும்புவதால் ஒருவரைப் பார்த்து மற்றவருக்கும் மாற்றங்கள் ஏற்படலாம். ஒரு நம்பிக்கைதான்.. :))
cool...


//In fact it should be discarded.// சரி, கருத்துத் திணிப்பால் நேர்மறையான விளைவுகள் ஏற்படப் போவதில்லை. இப்போதே முக்கால் வாசி பேர், சிலைகளுக்கும் படங்களுக்கும் வணக்கம் மட்டும்தான் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பக்கம் மாறாக மனிதர்களை (சாமியார்கள் என்று அழைத்துக் கொள்ளும் மனிதர்கள்) இறைவனாக்கியும் கொண்டாடுகிறோம். இந்த முரண்களும் மத-வாதங்களும் "உண்மையரிதல்" என்ற புரிதல் உணர்வு புலப்படும் போதுதான் நிகழும்.

அந்தப் புரிதலைத்தான் "யோகா" முறைகள் தருகிறது. வெறும் பிராணாயாமப் பயிற்சியும் சூரிய வணக்கமும் செய்வதில் எந்த மதவுணர்வும் கலந்திருக்க வில்லை. சூரியனும் மூச்சுக் காற்றும் எல்லோருக்கும் பொதுதானே. இதை தொடர்ந்து செய்து வந்தாலே மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும் என்கிறார்கள். ஆரோக்கியமான உடலும் மனமும், உருவங்களையோ, அதன் பிரதிநிதிக்களையோ, பரிகாரங்களையோ அல்லது அதிர்ஷ்டங்களையோ தேடாது. அவ்வளவுதான்.


//you being a humanistic person ahs anything to do with your idol worship. You don't need religious beliefs to have compassion toward your fellow human beings or to lead a moral life.///

மனிதனாக இருப்பது மனிதனாகப் பிறப்பதால் மட்டும் நிகழ்வதில்லை. குழந்தையாக இருக்கும் போது "கெட்ட வார்த்தை பேசினால் சாமி கண்ணைக் குத்தும்" என்று சொல்லப் பட்டே ஒரு பாதுகாப்பான சூழலில் வளர்ந்து திடீரென 20 வயதில் சென்னை கோடம்பாக்கத்திலிருந்த எங்கள் flat-ட்டில் தன்னந்தனியாக வந்து வசித்து, பஸ்ஸில், அலுவலகத்துக்கு பயணித்த போது ஒவ்வொரு பேருந்து நிறுத்ததிலும் காதில் விழுந்த ஒரு கெட்ட வார்த்தையை கற்றுக் கொண்டேன். இவர்கள் கண்ணெல்லாம் குத்தப் படவில்லையே என்று நினைத்துக் கொள்வேன். அப்புறம் சிறிது சிறிதாக, தனிமை புத்தக வாசிப்பை அன்பளிப்பாகக் கொடுத்தது. கன்னிமாரா மற்றும் பிரிட்டிஷ் நூலகங்களில் அறிந்தவையே அதிகம். நல்லவேளை சினிமா பார்க்கும் பழக்கம் அப்போது இல்லை. டி வீ யும் வீட்டில் இல்லை. ரேடியோ கூட இல்லை என்னிடம். ஒரு BPL Sanyo வாங்குவதற்காக உண்டியலில் காசு சேர்த்த நாட்களும் உண்டு..:))

அப்போது விநாயகரும் சரஸ்வதியும் யோகாவும் தான் எனக்குத் துணை. :)) ஒருவேளை இந்த நம்பிக்கை இல்லாது இருந்தால், தனிமையில் செய்வதறியாமல், "மன அழுத்தம்" என்ற கொடுமையான நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பேன்.

அதே போல, தலை வணங்குவது / பணிவது என்பது நம்மில் பெரும்பாலானோர் முதன் முதலாக நாம் கடவுளை நோக்கித்தான் என்றே நினைக்கிறேன். இல்லையா?

பணிவு இருக்கும் இடத்தில்தான் மனிதத் தன்மையும் இருக்கும்.

========

Sundar சுந்தர் said...

ரொம்ப அருமையா, தெளிவா சொல்லிருக்கே. proud of you my friend :)

வால்பையன் said...

//ரொம்ப அருமையா, தெளிவா சொல்லிருக்கே. proud of you my friend :) //

அப்ப!, எங்களுகெல்லாம் மிக்ஸிங்குல கோளாறா!?

Vidhoosh said...

வாய்யா சுண்டர் ;) நன்றி.
//proud of you my friend :) //
கடைசீல இப்போதான் ஒத்துக்கறையா? என்ன செய்தி?

--வித்யா

Vidhoosh said...

அறுந்த வாலு.... COCKTAIL இது. சரியாத்தான் MIXING செய்யணும்... எங்க கோளாறுன்னு சொல்ல்றத்துக்கில்லை..:))

Unknown said...

எவ்ளோ பெரிய பதிவு....
நல்ல கருத்து வாழ்த்துக்கள்...

Vidhoosh said...

வால் / செய்யது:

நிஜமாகவே பதிவை முழுதும் படித்தீர்களா? :)) :)) சபாஷ்.

//ரவிவர்மாவின் ஓவியங்கள் எல்லாம் தெய்வீக அம்சம் பொருந்தியவை என்பதற்காக அவற்றை வணங்கலாம்//

வணங்கலாம் என்று எங்கே சொல்லியிருக்கிறேன்?

///ரவி வர்மாவால் வரையப்பட்ட சரஸ்வதி ஒரு தென்னிந்தியப் பெண்ணை மாடலாக வைத்து வரையப்பட்டது. ரவி வர்மாவின் படங்கள் பெரும்பாலும் உயிருடன் இருக்கும் பெண்டிரை வைத்துதான் வரையப்பட்டன. இவரால் வரையப்பட்ட படங்கள் இன்றும் பூஜையறையில் வைத்து வணங்கப்படுகின்றன என்றால் அவரது கலைக்கும் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் அது. மாடலாக இருந்த பெண்டிர்களுக்கும் அழியாத இறைநிலையை அளித்த அவரது ஓவியங்களை என்னவென்று சொல்வது. இன்றும் கூட இந்திய கலைப் பொருட்கள் விற்பனையில் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு அடுத்து ரவிவர்மாவின் ஓவியங்கள்தான் உலகெங்கும் அதிக விலையில் விற்கப்படுகின்றன.///

Vidhoosh said...

நன்றி பேநா மூடி :)

கிருஷ்ண மூர்த்தி S said...

அன்புள்ள அனலிஸ்ட்.
தருமியின் வலைப்பக்கங்களிலேயே, சொல்லுங்கள் கேட்கத் தயாராக இருக்கிறேன் என்று ஒரு பின்னூட்டத்தில் எனக்கு சொல்லி இருந்தீர்களே நினைவிருக்கிறதா?

அப்போதும் சரி, இப்போதும் சரி, உங்களுடைய வலைப்பக்கங்களில் வந்து பார்த்தபோதும் சரி, நீங்கள் தயாராக இன்னமும் கொஞ்சம் காலம் தேவைப்படும் என்பது தெரிந்தது. வீண் விவாதம் எதற்கும் உதவாது என்பதால் விட்டு விட்டேன்.

இப்போது உங்களுடைய பின்னூட்டத்தில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

ஆப்பிரிக்கப்பழங்குடியினரின் மூட நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாதா என்று, கொஞ்சம் திசைதிருப்பும் புள்ளிவிவரங்களோடு கேட்டிருக்கிறீர்கள்.

விக்கிபீடியாவில் நீங்கள் சொல்லும் புள்ளிவிவரங்களே, சரியானவை என்று சொல்ல முடியாதவை என்ற எச்சரிக்கையுடன் தான் வெளியிடப்பட்டிருக்கிறது.

எல்லா நம்பிக்கைகளுமே காலா காலத்திற்கும் மாறாமல் இருப்பவை என்று யாருமே சொல்லவில்லை. குறிப்பாக மருத்துவ முறைகளில், பெரும் மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான்.

இயற்கையோடு ஒன்றி வாழத் தெரிந்த பழங்குடி மக்களுக்கு, நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் தெரிந்திருக்கும் அளவுக்கு, நவீன மருத்துவ முறைகளைக் கையாளுவோருக்குப் பெரும்பாலான சமயங்களில் தெரிந்திருப்பதும் இல்லை என்பதையாவது அறிந்திருக்கிறீர்களா? இந்தியாவில், வேம்பு, எப்படி நோய்களைத் தீர்க்கும் இயற்கையான ஆண்டிபயாடிக் மருந்தாக இருந்திருக்கிறது, அதே மாதிரி, சில தாவரங்கள், உயிர் காக்கும் மூலிகைகளாக இருப்பதை
உங்களுடைய பார்வையில் மூட நம்பிக்கையாளர்களாகத் தெரிபவர்களுக்குத் தான் தெரிந்திருந்தது. எந்த ஒரு விஷயத்திலும், நூற்றுக்கு நூறு உண்மையோ, பொய்யோ இருப்பதில்லை. கலந்திருக்கும் விகிதம் மாறியிருக்கலாம்.

இப்போது நமக்குத் தேவை என்ன? முந்தைய தலைமுறையை, அல்லது அவர்களுடைய நம்பிக்கைகளைக் குறைசொல்லிக் கொண்டு இருப்பது மட்டும் தானா?

அல்லது, அவைகளில் இருந்து கற்றுக்கொள்ள முடிகிற அளவுக்குக் கற்றுக்கொண்டு, அறிவையும் அனுபவத்தையும் இன்னமும் விரிவுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவதா?

கொஞ்சம் இந்தக் கேள்வியையும், analyse செய்து பதில் சொல்லுங்களேன்!

Anna said...

"எல்லோரும் மதிப்புக்குரியவர்களே. ஒருவரது கருத்தை மட்டும் தான் தவறென்று நம்மால் சொல்ல முடியும். எல்லோரும் தான் வேதங்களை மாற்றி ஒப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள்."

I sometimes have little tolerance for educated people deliberately misleading the lay public. Tolerance of everybody is essential, but there is a limit. Tolerance to intolerance can be very harmful.

"ஆப்பிரிக்காவில் tribals இந்த extremes எல்லாம் தாண்டியும் விட்டார்கள். அங்கு reverse evolution நடந்து கொண்டிருக்கிறது."

Female genital mutilation (FGM) is still very prevalent in many African communities. There are no benefits to the girls by this practice. In fact, it is very gruesome and inhumane and the girls suffer throughout their lifetime because of this.

That ARRRGH was not because of imagination. It was because of utter frustration of not being able to do anything, of helplessness. I have done enough crying while I was talking to people or even reading firsthand accounts of such horrors. One such example is the book - Do They Hear You When You Cry? by Fauziya Kassindja – if you are interested.
Anyway, we are diverting from the subject here. The only reason for FGM to be popped up instantly in my head was probably because I was talking about it to some people recently. I merely wanted to alert to the fact that numerous beliefs are held without any wisdom or valid reason behind them, by people from varying background that are actually harmful to many groups of people. So it is important to question beliefs, examine the origins and evaluate their usefulness to today’s societies.

I would also still like to know ‘How can you belief a point of view and still totally respect/give equal value to a belief that completely contradicts it?'

"மனிதனாக இருப்பது மனிதனாகப் பிறப்பதால் மட்டும் நிகழ்வதில்லை."
It is certainly true that just because you are human biologically doesn’t mean that you will be humanistic. It depends on your personality, your upbringing and the environment you grew up in.

"குழந்தையாக இருக்கும் போது "கெட்ட வார்த்தை பேசினால் சாமி கண்ணைக் குத்தும்" என்று சொல்லப் பட்டே"
This is one way of parenting, but I tend not to agree with it. Children are a lot cleverer and understand a lot more that adults give them credit for. It is important to explain to them simplistically why a particular action is bad or good. Again there are many secular parents who bring up their children in a very ethical and moral way.

I love what Einstein said. “If people are good only because they fear punishment from god and hope for a reward, then we are a very sorry lot indeed.”

Seems like you, like myself were given a good chance to develop in to your own person, to think for yourself. Good for you and hats off to your parents. Unfortunately there are many people in our community who were never given this chance. I see this almost every day in my community and I put a huge part of the blame on the cultural practices and upbringing. I believe installing critical thinking skills is essential for every kid. But these beliefs are normally passed down with warnings of punishments and children who question them are normally silenced without proper explanations.

You also seem to be suggesting that you need religious practices to be able to grow up into a well grounded, humanistic adult human being. Again there is no basis for this. There are many people around the world who live a perfectly moral life without any beliefs in a higher power.

Anna said...

TO Mr. Krishnamoorthy:
"அப்போதும் சரி, இப்போதும் சரி, உங்களுடைய வலைப்பக்கங்களில் வந்து பார்த்தபோதும் சரி, நீங்கள் தயாராக இன்னமும் கொஞ்சம் காலம் தேவைப்படும் என்பது தெரிந்தது. வீண் விவாதம் எதற்கும் உதவாது என்பதால் விட்டு விட்டேன்."

Thank you for reminding that I have created a blog.  I can’t seem to get the time to do any posts so far.
But, I am not sure which of my writings/comments gave you the impression that I am not prepared to hear what you have to say. Please let me know. Because I thought my first post said that I wanted to be challenged on my ideas. Just as you have thought through and have arrived at your decision, so have I. If I come across with a strong view, I normally try to back it up by giving explanations, evidence or some hypothesises backed up by circumstantial evidence for it. I am all for critically analysing my ideas or positions – as it’s a way of learning and improving one’s self.

"விக்கிபீடியாவில் நீங்கள் சொல்லும் புள்ளிவிவரங்களே, சரியானவை என்று சொல்ல முடியாதவை என்ற எச்சரிக்கையுடன் தான் வெளியிடப்பட்டிருக்கிறது."

I did not get my data from wikepedia. The one I mentioned in the comments were from the world health organization. But there are many other resources out there to assess the situation. Please also refer to my reply to Vidhoosh’s comment.

"இந்தியாவில், வேம்பு, எப்படி நோய்களைத் தீர்க்கும் இயற்கையான ஆண்டிபயாடிக் மருந்தாக இருந்திருக்கிறது, அதே மாதிரி, சில தாவரங்கள், உயிர் காக்கும் மூலிகைகளாக இருப்பதை
உங்களுடைய பார்வையில் மூட நம்பிக்கையாளர்களாகத் தெரிபவர்களுக்குத் தான் தெரிந்திருந்தது."

I am well aware that there are many herbs and plant remedies that have been used by our elders and are still being used by us with many benefits. The antimicrobial properties of ‘vempu’ have been proven.

I simply was trying to say that there are still many beliefs prevalent in several societies that have no basis, no benefits which are in fact it do a lot of harm. Therefore, if the benefits are not so apparent the beliefs should be critically evaluated to make sure that the potential benefits outweigh the potential hazards.

In recent times I have seen quite a few reports on deaths of children by preventable diseases simply because parents refused proven medicines and treated the kids with homeopathic remedies. Many of the parents were charged with manslaughter after the death. One such incident: http://www.foxnews.com/story/0,2933,556543,00.html.

But there are many.

I have personally witnessed the death of my friend’s sister when I was in high school. She was an asthmatic. But their parents were Protestants and they did not believe in treating the sick, but believed prayers will do the trick. She had a severe asthma attack and she died.

"இப்போது நமக்குத் தேவை என்ன? முந்தைய தலைமுறையை, அல்லது அவர்களுடைய நம்பிக்கைகளைக் குறைசொல்லிக் கொண்டு இருப்பது மட்டும் தானா?

அல்லது, அவைகளில் இருந்து கற்றுக்கொள்ள முடிகிற அளவுக்குக் கற்றுக்கொண்டு, அறிவையும் அனுபவத்தையும் இன்னமும் விரிவுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவதா?"

I am not just criticizing their beliefs. Science and technology has grown immensely in the last century and we know a lot more about our world, about ourselves now than ever before. I am just saying that it is important to understand the basis and reasons behind them and discard them if it is not necessary or if it is harmful. Many of us hold on too tightly to every traditional aspect blindly, just because it's what was told to us.

கிருஷ்ண மூர்த்தி S said...

அன்புள்ள அனலிஸ்ட்,

தருமியின் வலைபக்கங்களில் சொன்னது என்று தெளிவாகவே முதலில் சொல்லி விட்டு, அப்புறம் உங்கள் வலைப்பக்கம், நீங்கள் விரும்பிப்பார்க்கும் பக்கங்கள் என்று கிடைத்த தகவல்களையும் பார்த்தபிறகே, என்னுடைய கருத்தை எழுதியிருந்தேன்.

உங்கள் பின்னூட்டங்களில் இருந்து இப்போது மறுபடியும்.....

அறிவியல் வளர்ந்திருக்கிறது. உண்மைதான்! எல்லோருக்கும் தெரிகிற, கிடைக்கிற விதத்தில்வளர்ந்திருக்கிறதா?

கடைசிவரிகளில், நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் தான் தெரிகிறது. இங்கே யாரும், ஒரு உதாரணத்துக்கு இங்கே பின்னூட்டம் இட்டிருப்பவர்களையே எடுத்துக் கொள்வோம், தங்களுக்குச் சொல்லிக் கொடுத்தபடியே கிளிப்பிள்ளைகளாக, எதையும் பிடித்துக் கொண்டிருக்கவில்லை.

அவரவர், புரிந்துகொண்ட விதத்திலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கொஞ்சம் கவனித்தாலே தெரியும். இப்படிப் புரிந்து கொண்டிருப்பது என்பதுமே கூட மாறுதலுக்கு உட்பட்டது தான் என்பதை இன்னமும் கவனமாகப் பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

/Many of us hold on too tightly to every traditional aspect blindly, just because it's what was told to us./

கொஞ்சம் உங்களையே சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்களேன்! மறுப்பது என்ற முன்கூட்டியே(negation is also part of tradition) தீர்மானிக்கப்பட்ட ஒன்றின் மீது பேசிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது விஷயங்களை, உள்வாங்கிக் கொண்டு, அதனதன் தரத்திற்கேற்ப, ஆராய முனைகிறீர்களா?

சுழியம் said...

”சிலை வழிபாடு தவறா? பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?” என்ற கேள்வியை எழுப்பி, அதன் ஊடாக சிலை வழிபாட்டின் வரலாற்றுத் தொன்மை, அதில் பொதிந்துள்ள உளவியல் மற்றும் அறிவியல், தெய்வத் திருவுருவங்களின் தத்துவம் ஆகியவற்றை.....

சுழியம் said...

Very well written. May your tribe flourish !!

Cable சங்கர் said...

நல்லா எழுதியிருக்கீங்க..

Post a Comment