இடது மூளைக்கு - வலைச்சரத்தில் நான்காம் நாள்

சரி! இது வரை சுவாரசியமாக பொழுது போக்கவும், கொஞ்சம் யோசிக்கவும், சிரிக்கவும் சிந்திக்கவும் என இலக்கியம் பேசியாச்சு..

இப்படியே இருந்தா எப்படி? இறைவன் படைத்ததில் ஆகச் சிறந்தது இடது மூளை தெரியுமோ? அதை சும்மாவே வைத்திருந்தால் எப்படி?

இனிமேல் கொஞ்சம் எளிமையான வார்த்தைகளில் புத்தியை தீட்டும் நல்ல கட்டுரைகளைப் படித்து அறிந்து கொள்ளலாமே. சரியா? சிந்தைனையைத் தூண்டும் விதமாகவும், எல்லோருக்கும் பயன்படும் வகையில் நல்ல கட்டுரைகளைப் பகிர்கிறேன். மீதியை அந்தந்த வலைத் தளத்தில் தேடித் பெற்றுக் கொள்ளுங்கள்.

அறிவியல் பற்றி புரிபட அதிக கஷ்டப் படவோ, புத்திசாலித்தனமோ தேவையாக இருப்பதில்லை. கொஞ்சம் லாஜிகல் முறையில் யோசிக்கவும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்தாலே போதும். முதல் அடியை எடுத்து வைத்தால் அடுத்தது அதுவே உங்களை கூட்டிச் செல்லும்.

நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் ரிபோசோம்களும்

சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து - முனைவர். க. மணி

ஒரு வானம்… மூன்று சூரியன்கள்!

பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்!

இது நான் படித்தவற்றிலேயே மிகச் சிறந்த வலைத் தளம் என்று கருதுகிறேன். செம ஈசியான மொழியும், குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் விதமாக இருக்கும் வார்த்தை அமைப்பும் என்னை ரொம்ப ஈர்த்தது. ஒருவேளை இவர் ஆசிரியராக தொழில் புரிந்து கொண்டிருந்தால், மாணவர்களின் அதிருஷ்டம், அருமையான ஆசிரியராக இருக்கலாம் இவர்.
ஏலியன்ஸ்: பெரு வடிகட்டல் சித்தாந்தம்

எனக்குத் தெரிந்தவரை சிறப்பான வலைத்தளங்கள் இவை. நேரமின்மை என்ற பெருங்குறையில் இன்னும் பல தமிழ் மூலம் அறிவியல் அறிவைப் பகிரும் வலைத்தளங்கள் தேடித் தரமுடியவில்லை. உங்களுக்கு வேறு தளங்கள் பற்றி தெரிந்திருந்தால் கமென்ட் பாக்ஸில் பகிரலாமே.

6 comments:

கவி அழகன் said...

அருமை அருமை வாழ்த்துகள்

Radhakrishnan said...

மிகவும் அருமை.

Vijay said...

மிக மிக அருமை.


இங்க பாருங்க...மேல கமெண்ட் போட்டு இருக்க யாருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லன்னு தெரிவிச்சிக்கிறேன்..:)

Vijay said...

ரசிகன் அவர்களின் வலைப்பூ..

http://rasigan111.blogspot.com/2008/01/1.html

http://rasigan111.blogspot.com/2008/02/blog-post.html

எல்லாம் படிங்க. நிஜமாவே நீங்க சொன்னவங்களை விட இன்னும் எளிமையா அறிவியல் விஷ்யங்களை சொல்லி இருக்காரு.

நன்றி ரசிகன்.

Vijay said...

கொஞ்சம் லாங்கா எழுதினாலும் விருப்பமுள்ளவர்களுக்கு தகவல் சுரங்கமாக் திரு.ஜெயபாரதன் அவர்கள்.

http://jayabarathan.wordpress.com/2010/10/03/christiaan-huygens/

படிங்க.

விதூஷ், நீங்க் சொன்னா மாதிரி நிறைய பேரு எழுதுறாங்க எளிய தமிழில் அறிவியல். பரிசில் கோட் பண்ணி இருப்பாரே...”ரசிப்போரின் விழி தேடி”ன்னு. அது மாதிரி. ஆனா கமெண்ட் பாக்ஸ் தான் தூங்கி வழியும். இன்னும் நான் உட்பட நிறைய பேரு பிளாக் உலகத்தை மொக்கை உலகமாதான் நெனைக்கிறோம். எனிவே தாங்ஸ் ஃபார் த லீட். வில் டிரை டு சேன்ச்.

Vijay said...

ம்ம்ம்...நாங்க ரெண்டு பக்கத்து மூளையையும் சமமா யூஸ் பண்றோம்ன்னு நெனச்சிகோங்களேன். :))

Post a Comment