யமராஜனுக்கே டஃப் கொடுத்தவர்கள்

கவலையோடு அமர்ந்திருந்த யமனை குறித்து யமி அசைந்து வந்து கொண்டிருந்தாள். இதேதுடா புது பிரச்சினை என்று யமன் யோசிக்கும் முன்பே, யமி தனது பிளாக்பெரி 9000 மாடல் போனில் பேசிக்கொண்டே வந்து கண்ணாலேயே எழுந்திரு என்பது போல சைகை செய்தாள்.

"எப்போதுமே பேசப்படாத மெல்லிய நுண்ணுணர்வுகளைப் பேசும் கவிதைகள் எனக்கு விருப்பமாயிருக்கின்றன." என்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள்.

"......"

"சின்னச் சின்ன உணர்வு முடிச்சுக்களை அடையாளங் கண்டு எழுத்தில் வடிப்பது கொஞ்சம் நிறையவே சிரமம்தான். அப்படி மலரினும் மெல்லிய உணர்வுகளைப் பேசும் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை." என்றாள் யமி.

"....."

"ஆஹா பிரமாதம் கொன்னுட்டீங்க போங்க" என்று சொல்லிய படியே யமனின் முதுகில் பொளேரென்று சாத்துகிறாள். "இப்போ நான் படிச்ச ஒன்றை சொல்றேன் பாருங்க"
வாழைப்பழத் தோலை
இந்தா என நீட்டி
அருகில் வரும் மாடுகளை
வகையாய் அடிக்கிறது நமது கம்பு.

சாப்பிட முடியாத அளவுக்குக்
கெட்டுப் போன பிறகே
ஞாபகம் வருகின்றன நாய்கள்.


என்றபடியே யமனைப் பார்க்கிறாள். யமன் சமையல் கட்டை நோக்கி ஓடுகிறார். அங்கே...

இரவின் நிழலாய்
நீள்கிறது விழிப்பு.
கதவுகளற்ற
யன்னல் கம்பிகளினூடே
ஒளிரும் விழிகளுடன்
கரும் பூனை ஒன்று
பாய்ந்து மறைகிறது.


கண்கள் கலங்கியது யமனுக்கு. தான் காதலித்து தொலைத்த நாட்களையே எண்ணிப் பார்க்கிறார்.

"யமி... யவ்ளோ romantic-ஆ இருந்தேடி நீ.. " என்று பொலம்பினபடியே ரொட்டிய சுட்டுப் போட்டுக் கொண்டே தான் ஒரு காலத்தில் சுட்டுப் போட்டக் கவிதையை மீண்டும் மனசுக்குள்ளே மறு ஒலிபரப்பு செஞ்சு முணுமுணுக்கிறார்.

"அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது அவளருகில் போய் கேட்டேன்
‘என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியா?’
‘போடா கருவாயா’ எனத் திட்டிவிட்டாள்."


தனக்குத்தானே கெக்கே பிக்கே வென்று சிரித்துக் கொண்டிருந்தார் யமன்.

ஹும்ம்... எல்லாம் என் தலைஎழுத்து... என்று மீண்டும் ஒரு படித்த கவிதையையே சமைத்தார்...

"நீங்கள்
பிறருக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்

யூதன்
தான் செய்த சிலுவையில் எவரை அடித்துக் கொன்றானோ
துயரம்
குளிரும் ஆணிகள்
பிய்ந்த கண்ணீர்
ஒருதுளி ஆத்மா
இரங்கற்பா.
ஆமென்.
"

தன் மேல் கழிவிரக்கம் மிகுந்து அதுவே கோவமானது யமனுக்கு. நேராக யமியிடம் போனார்...

"என்னடி நினைத்துக் கொண்டிருக்கிறாய்" பிளாக் பெர்ரி தூள் தூளானது.

"இங்கே கேளுடி கவிதையை.. இதுதாண்டி கவிதை.. போன்ல கவிதை கேக்குதோ கவிதை" என்று திடீர் புரட்சிக்காரனான யமனை பேரதிர்ச்சியோடு பார்க்கிறாள் யமி.

அங்கிருந்த ஒரு பாறை மேல் ஏறி நின்று கொண்டு... பாடுகிறார் யமன்..

அடைத்தாலும் தப்புவேனடி கிராதகி .... நீங்கள் தூவிய பூக்கள் என் காலைத் தடுக்கியது. நீங்கள் தட்டிக் கொடுத்தபோது என் சட்டையில் தையல் விட்டது.
தமிழகப் பெட்டிக் கடைகளில் எனக்கான தேன்மிட்டாய்களை அமுக்கிவிடவா முடியும்?
எழுதிக்கொள்ளுங்கள்
எதிரிகளே!
என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.
என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.
என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.
….. என் எழுத்து
படிக்கும் மக்களின் தலையெழுத்து!
... என் இதயத்தைச் சொறியாதீர்கள்.
பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.
சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
கொடவுனில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்."


என்று சீறினார் யமன்.

இவள் வியந்து நிற்கின்றாள்!

13 comments:

Vijay said...

//நீங்கள் தூவிய பூக்கள் என் காலைத் தடுக்கியது.//

அது எதிர்ப்பூ,தடுப்பூ, மறைப்பூ, அதான் தடுக்கிடுச்சி..:))

Vijay said...

. //நீங்கள் தட்டிக் கொடுத்தபோது என் சட்டையில் தையல் விட்டது.//

அந்த மக்கிபோன சட்டைய போடாதன்னு எத்தன தரம் சொல்றது...ம்ம்..:))

Vijay said...

//தமிழகப் பெட்டிக் கடைகளில் எனக்கான தேன்மிட்டாய்களை அமுக்கிவிடவா முடியும்?//

அதானே? அமுக்கினா தேன் வெளிய கொட்டிரும்.. கம்முனு இருங்கபா.. அட...:))

Vijay said...

//எழுதிக்கொள்ளுங்கள்
எதிரிகளே!//

பேப்பர நீங்க வச்சிக்கிட்டு எங்களை எழுதிக்க சொன்னா என்ன அர்த்தம்? :))

Vijay said...

//என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.//

ஆமா ஆமா, கம்பி தெறிச்சிடாது... ரென்ஸன்ல....கரீட்டு..கரீட்டு...:))

Vijay said...

//என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.//

பென்சில பின்னால கடிச்சா ரப்பரு எப்படி இருக்கும்? :))

Vijay said...

//என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.//

வேற வழி?..:))

Vijay said...

//….. என் எழுத்து
படிக்கும் மக்களின் தலையெழுத்து!//

இது பாயிண்ட்டு...இது பாயிண்ட்டு...:))

Vijay said...

//... என் இதயத்தைச் சொறியாதீர்கள்.//

அது அல்ரெடி வர வரன்னு தான் இருக்கு..:))

Vijay said...

//பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.//

பேண்ட கிழிச்சா அது ஆப்பேண்டு... தெர்தா? “))

Vijay said...

//சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
கொடவுனில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்."..

எது கவர்மெண்டு ஆபீஸ்ல காலாவதி ஆய்டுச்சின்னு தூக்கிப் போட்ட பேப்பரு தானே? அது சில நூற்றாண்டு இல்ல...சில நிமிடத்துலயே மடிச்சாலே ஒடயுமாம்...பாத்தூ பாத்தூ...:))

Vijay said...

வரட்டா? ம்ம்ம்....யமராஜனுக்கு ட்ஃப்பாமில்ல...நாங்க விதூஷ்க்கே....ம்ம்...புர்துல்ல...:))

Vidhoosh said...

Thanks Vijay :)) - The one man Army :))

Post a Comment