ஆன்ம விசாரம்


ஒரு தனிநபராக, பல சமயங்களில் நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஏதாவது நடப்பதைக் காண்கிறோம், ஆனால் நாம் அமைதியாக இருக்கிறோம். பீஷ்மரைப் போல இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறோம். சமூகத்தின் ஒரு பகுதி, பணியிடம், குடும்ப உறவு - அல்லது எதுவாக இருந்தாலும் அவற்றோடு நாம் பிணைக்கப்பட்டுள்ளோம், அது தவறு என்று உணர்ந்தாலும் அமைதியாக இருக்கத் தேர்வு செய்கிறோம். நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி - நமது தனிப்பட்ட valuesகளுடன் ஒத்திசைந்து என்ன நடக்கிறது என்பதுதான். நம் valuesகளுக்கு சரியாக இல்லையென்றால், நாம் அதைப் பற்றி உரத்து பேசுவது முக்கியம். அப்படிச் செய்யவில்லை என்றால் இறுதியில் நம் மனசாட்சியே நமக்குத் தண்டனையைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். பீஷ்மர் கர்மவீரர் என்றறியப்பட்டாலும் பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்ததால் தண்டிக்கப்பட்டார். அவருக்கே கதி இப்படி என்றால், நம்மைப் போன்ற தாழ்ந்த ஆன்மாக்களுக்கு என்ன நடக்கும் என்று நம்மால் கற்பனை செய்ய முடியுமா?

0 comments:

Post a Comment