சென்னையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி பற்றிய தகவல்

http://www.livechennai.com/detailnews.asp?newsid=1488
வாசகர்களுக்கான தகவல் :
சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 2 வகையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து (நாசோவாக்) ரூ150க்கும், ஊசி மூலம் போடும் தடுப்பூசி (வாக்சி புளூ எஸ்) ரூ 250க்கும் போடப்பட்டு வந்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக போடப்படும் என்றும், தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசியின் விலையும் குறைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது .

இந்நிலையில், சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் போடும் தடுப்பூசி ரூ 50 குறைக்கப்பட்டது. அதன்படி, தடுப்பு மருந்துக்கு ரூ 100, தடுப்பூசிக்கு ரூ 200 என நேற்று முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதுதவிர, சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, பெரம்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு மையத்தில் தடுப்பூசி போடபடுகிறது
முகவரி :
Alandur Road, SIDCO Industrial Estate
Chennai, Tamil Nadu 600032
044 22501520
044 22501778
044 22501706
044 22501233

4 comments:

"உழவன்" "Uzhavan" said...

Thx for this info madam:-)

கவி அழகன் said...

அருமையான தகவல்

Vidhya Chandrasekaran said...

தகவலுக்கு தாங்க்ஸ்.

Vijay said...

Thanks for the information.

Post a Comment