சப்தபதி (முழு உரை)


மணமகன் மணமகளிடம் சொல்வது:

ஸகா! சப்தபதா! பவ ஸாக்யோவ்! சப்தபதா! பாபூவா!
என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து நீ என் சிறந்த தோழி ஆவாய்.

ஸக்யம் தே கமே யம் ஸக்யாத் தே மாயோஷம் ஸகயன் மே!
நாம் இணைவது தெய்வத்தின் ஆணையாகக் கருதுவதால், இந்த பந்தத்தில் இருந்து நான் என்றும் விடுபடமாட்டேன்.

மாயோஷ்ட சமயாவ சமயாவ சங்கல்பாவஹை சம்ப்ரியோவ்
அன்போடும் பாசத்தோடும் இணைந்து நாம் எல்லாச் செயல்களையும் இணைந்தே செய்வோம்

ரோசிஷ்ணு சுமனஸ்யமநோவ் இஷாமூர்ஜம் அபி ஸ்வசாநோவ்
நாம் எண்ணத்தாலும் செயலாலும் நண்பர்களாக இருப்போம். நம் கடமைகளையும் கர்மாக்களையும் இணைந்தே செய்வோம்

மனக்ஹும்சி சம்வ்ரதாஸ் ஸ்மு சித்தானி ஆகாரம் சத்வமாசி
நீ பாடல் எனில் நான் இசையாக இருக்கிறேன், நீ இசை எனில் நான் பாடலாக இருக்கிறேன்.

அமூஹம் அமூஹமாஸ்மி ஸா த்வம் த்யோவ்றஹம்
நான் ஆகாசமாக இருக்கிறேன் நீ பூமியாக இருக்கிறாய்

பருத்திவீ தவம் ரேதோ அஹம் ரேதோ பிருத்வம் மனோஹமஸ்மி
நான் செயலின் ஆதாரமாக இருக்கிறேன் நீ செலுத்தும் ஆற்றலாக இருக்கிறாய்

வாக் தவம் ஸாமா ஹம் அஸ்மி ருக்த்வம் சாமாம்
நான் எண்ணங்களாக இருக்கிறேன் நீ அதைச் சொல்லும் வாக்காக இருக்கிறாய்

அனுவ்ரதா பாவ பும்சே பும்சே புத்ராய வேத்தவை
நீ வார்த்தைகளாக இருக்கிறாய் நான் அதன் பொருளாக (அர்த்தம்) இருக்கிறேன்

ஸ்ரீயை புத்ராய வேத்தவை ஏஹி ஸூந்ரூரூதே||
நீ உன் அன்பான வார்த்தைகளால் என் வாழ்நாட்களை நிரப்பு, என் ஆற்றலாய் இருந்து நம் வாழ்வை மகிழ்ச்சியால் செழிக்கச் செய்வாயாக, நம் குடும்பம் குழந்தைகளால் செழித்து வளர உதவுவாயாக.
============================================
முதலடி: ஏகமிஷே விஷ்ணுத்வ அன்வேது
தெய்வ சாட்சியாக எடுத்து வைக்கும் முதல் அடி

இரண்டாவதடி: த்வே ஊர்ஜ்வே விஷ்ணுத்வ அன்வேது
உனக்கும் நம் சந்ததிகளுக்கும் அளவில்லாத உணவுகளைக் கொடுக்க கடமைப்படுகிறேன். உனக்கு அளவில்லாத ஆற்றலும் ஆரோக்கியமும் அளிக்க உறுதிகொள்கிறேன்

மூன்றாமடி: த்ரீணீ வ்ருத்தவ விஷ்ணுத்வ அன்வேது
வேதங்களில் சொன்னபடி உன் வாழ்நாள் முழுதும் உன் கடமைகளை பூர்த்தி செய்ய நான் துணையிருக்க கடமைப்படுகிறேன். உன் விரதங்களை(கடமை) அனுஷ்டிக்க துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்

நாலாமடி: சத்வாரி மாயோ விஷ்ணுத்வ அன்வேது
நீ வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய கடமைப்படுகிறேன்.உனக்கு மகிழ்ச்சியைத் தருவேனென உறுதிகொள்கிறேன்

ஐந்தாமடி: பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது
நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.

ஆறாமடி: சத்ரு துப்யா: விஷ்ணுத்வ அன்வேது
மழை வெயில் பனி போன்ற எல்லா காலங்களிலும் நீயும் நம் சந்ததியினரும் பாதுகாப்பாக இருக்கத் துணையிருக்க கடமைப்படுகிறேன்.உனக்கு துன்பம் வராமல், எல்லா காலங்களிலும் காப்பேன் என உறுதிகொள்கிறேன்.

ஏழாமடி: சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது
அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.
========================================
இருவரும் சொல்வது
========================================

ஓம் ஏகோ விஷ்ணுஜர்கத்ஸ்வரம், வ்யாஸம் யேன சராசரம்! ஹ்ருதயே யஸ்ததோ யஸ்ய! தஸ்ய ஸாக்ஷி ப்ரதீயதாம்!

மணமகன் சொல்வது: என் இணையே! நம் ஹ்ருதயபூர்வ அன்பினால் இணைந்து இந்த முதல் காலடி எடுத்து வைக்கிறோம். நீ நம் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளைச் சமைப்பாயாக. என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் உன் துணையையும் வேண்டுகிறேன். நீ நம் குடும்ப மேன்மைக்கு உதவியாய் இருப்பாயாக. நீயும் நம் சந்ததிகளும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிய செல்வ-நலன்களுக்காக உழைத்து உங்களைப் பேணுவேன் என்று உறுதி கூறுகிறேன். நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் இஷ ஏகபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயுது புத்ரான் வின்தாவஹை! பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்டய:

மணமகள் சொல்வது: உன்னிடம் நானும் அன்பினால் பணிந்து இணைகிறேன். நீ உன் வீட்டின் பொறுப்புக்கள் அனைத்தையும் என்னிடம் அளித்துவிடு. உனக்கான உணவை நானே தருகிறேன். நீ நம் குடும்பத்திற்காக ஈட்டிவரும் செல்வங்களை பேணி வளர்த்து செழிக்கச் செய்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நம் குழந்தைகளும் நாமும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்க பார்த்துக்கொள்ளும்படி நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் ஜீவாத்மா பரமாத்மா ச, ப்ருத்வி ஆகாஷமேவ ச! சூர்யசந்த்ரத்வயேமர்த்தயே, தஸ்ய சாக்ஷி ப்ரதீயதாம்!!

அன்பே! ஜீவனும் ஆத்மாவும் போல என்னில் இரண்டரக் கலந்த நீ, என்னோடு இரண்டாமடி எடுத்து வைத்து விட்டாய். பூமி ஆகாசத்தை நிரப்பி, ஆகாசத்தின் இருப்பைக் குறிப்பது போல, என் இதயத்தை உன் அன்பின் ஆற்றலால் நிரப்பி உறுதியாக்கு. உன் மகிழ்ச்சியாலேயே என் இதயம் உறுதியாகும்.அப்போதுதான் நானும் மகிழ்ந்திருப்பேன். நாம் இணைந்து நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவாயாக.

ஓம் ஊர்ஜே த்விபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

என் அன்பே! நீ துக்கமடைந்திருக்கும்போது, உன் இதயத்தை என் அன்பின் ஆற்றலால் நிரப்புவேன். நீ சந்தோஷமாயிருக்கும்போது நானும் மகிழ்ந்திருப்பேன். உன்னை என் அன்பான வார்த்தைகளால் மகிழ்வுறச் செய்வேன் என்று உறுதிகொள்கிறேன். நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் உன் மனைவியாக உன்னோடு இணைந்து காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

ஒம் த்ரிகுணாஷ்ச த்ரிதேவாஷ்ச, த்ரிசக்தி: சத்பராயண:!! லோகத்ரயே த்ரிஸந்த்யாயா: தஸ்ய ஸாக்ஷீ ப்ரதீயதாம்!

அன்பே! இப்போது என்னோடு மூன்றடிகள் நடந்துவிட்டாய். மங்களங்கள் நிறைந்த உன் கரங்களைப் பற்றிய எனக்கு இந்தப் புண்ணியத்தால் செல்வச் செழிப்பு நிறைந்து வளம் பெருகப்போகிறது. இன்றிலிருந்து உன்னைத் தவிர மற்ற பெண்கள் அனைவருமே என் தாய்கும் சகோதரிக்கும் ஒப்பாகக் கருதுவேன். நம் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை நாம் இணைந்து அளிக்கலாம் கல்வி செல்வம் பெருகி அவர்கள் நீடூழி வாழட்டும்.

ஓம் ராயஸ்போஷாய த்ரிபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

அன்பே! என் ஹ்ருதயபூர்வமாய் உன்னை விரும்புகிறேன், என் கணவனாக வரித்து உன் நலனையே குறித்திருப்பேன். மற்ற ஆண்கள் அனைவருமே என் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஒப்பாகக் கருதுவேன். நீயே என் மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

ஓம் சதுர்முகஸ்த்தோ ப்ரம்மா, சத்வாரோ வேதஸம்பவா: சதுர்யுகா: ப்ரவதந்த்ரே தேஷாம் சாக்ஷீ ப்ரதீயதாம்!!

அன்பே! என் பூர்வபுண்ணியங்களின் பலனாகவே உன்னோடு இந்த நான்காம் அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்வில் சர்வமங்களங்கள் உன்னோடு வருகின்றது. நீ எனக்கு கர்மாக்கள் செய்யும் தகுதியுடைய புண்ணியத்தை தருகிறாய். நமக்கு செரிந்த அறிவும், பணிவும், மேன்மையும் கூடிய மக்கட்செல்வம் உண்டாகட்டும். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோம்.

மாயோ பவாய சதுஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

உன் வாழ்க்கை புஷ்பங்களிலிருந்து வீசும் நறுமணம் போல மணம் வீசட்டும். மணமாலையில் கோர்க்கப்பட்ட பூக்கள் போல உன்னோடு இணைந்தும், குழைத்து வைத்த சந்தனத்தினைப் போல உன் அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன்.

ஓம் பஞ்ச்சமே பஞ்ச்சபூதானாம், பஞ்ச்சப்ராணை: பராயணா:! தத்ர தர்ஷணிபுண்யானாம் சாக்ஷிண: ப்ராணபஞ்சதா:

அன்பே, இப்போது என்னோடு ஐந்தாம் அடியையும் எடுத்து வைத்து என் வாழ்வை சிறப்பானதாக்கினாய், அர்த்தமுள்ளதாக்கினாய். உனக்கு தெய்வத்தின் அருள் என்றும் இருக்கட்டும். நம் சந்ததிகள் நீடூழி வாழட்டும்.

ஓம் ப்ரஜாப்யாம் பஞ்சபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே நான் உனது துக்கங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கு கொள்கிறேன். உன் அளவில்லாத அன்பு கண்டு உன் மீது மதிப்பும் நம்பிக்கையும் கூடுகிறது. இந்த அன்பைப் பெற நான் எதுவும் செய்வேன்.

ஓம் ஷஷ்டே து ஷட்க்ருதூணாம் ச, ஷண்முக: ஸ்வாமிகார்த்திக: ! ஷட்ரஸா யத்ர ஜாயந்தே, கார்த்திகேயாஷ்ச சாக்ஷிண:!!

அன்பே! ஆறாம் அடியெடுத்து என்னோடு நடந்து என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பினாய். நம் பந்தத்தால் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் விளையட்டும்.

க்ருதுப்ய: ஷட்ஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! நீ தர்மானுஷட்டான காரியங்கள் செய்யும் போதெல்லாம் நானும் அதில் பங்கேற்று உனக்கு துணையாயிருப்பேன். நம் குடும்பத்திற்கு தேவையான செல்வச் செழிப்புக்களை மிகுதியாக்க துணையிருப்பேன். தெய்வ காரியங்களிலும், நம் மகிழ்ச்சிக்காக நீ செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் எப்போதும் துணையிருப்பேன்.

ஓம் சப்தமே ஸாகராஷ்சைவ ஸப்ததீபா: ஸபவர்த்தா:! ஏஷாம் ஸப்தஷிர்பதநீநாம் தேஷாமாதஷர்சாக்ஷிண:!!

அன்பே! இந்த ஏழாம் அடியோடு நம் பந்தம் பிரிக்கவியலாததாக பிணைந்தது. நம் அன்பும் நட்பும் தெய்வீகமானது. தெய்வமே ஏற்படுத்திய பந்தம்தான் இது. நீ முழுமையாக எனதானாய், நான் முழுமையாக உனதானேன். என் வாழ்க்கையை உன் கையில் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை போகும் திசையை நீயே தீர்மானிப்பாயாக.

ஸகே சப்தபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! தெய்வத்தின் ஆணையாலும், புண்ணிய புத்தகங்களான வேதங்களில் குறித்த வண்ணமும் கர்மங்களைச் செய்து நாம் இணைந்தோம். நான் உனது மனைவியானேன். நாம் செய்த சத்தியப் பிரமாணங்கள் அனைத்துமே மனதால் செய்தவை. நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்போம். இந்தத் திருமணம் நம் வாழ்நாள் முடியும் வரை நீடித்திருக்கட்டும்.

28 comments:

வால்பையன் said...

இதல்லாம் “கன்னிதான”த்திற்கு பிறகா?

மணமகனின் தந்தை ஏன் கற்புகரசன் தானம் கொடுப்பதில்லை!?

Vidhoosh said...

அடுத்தது இங்கயா கச்சேரி... :D

நீங்களும் அதையே கேட்டுக் கொண்டிருப்பீங்க, நானும் அதையே சொல்லிக் கொண்டிருப்பேன். உங்களுக்கு போரடிக்காது ஆனால் எனக்கு??

உங்கள் வருவுக்கு நன்றி. :))

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்ஸ்!

சட்டியில் வைத்திருப்பவர்கள் தான் அகப்பையில் எடுத்துக் கொடுக்க முடியும்! இது கூடத் தெரியாதா?

நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தில் பின்னூட்டம் எழுதுவதில்இரண்டு வகை. ஒன்று, தான் ஏன் அதை நம்பவில்லை என்பதை ஆதாரங்களோடு நிரூபிப்பது!

இரண்டாவதாக, தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது!

விதூஷ்!

உரை எழுதியதெல்லாம் இருக்கட்டும்! சப்தபதியின் முக்கியத்துவத்தை ஒரு கொடிகாட்டிவிட்டு, அப்புறமாக உரையைத் தொடர்ந்திருந்தால் இன்னமும் தெளிவாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

உயிரோடை said...

மூன்று முறை ஏழு அடி வைப்பார்களா விதூஷ்?

அடின்னா நடக்கறது தானே.... யாரும் மொக்கை போட மாட்டங்கல

எல் கே said...

கிருஷ்ணமூர்த்தி சொல்ற மாதிரி அதுக்கு ஒரு பதிவு போட்ருங்க.. இன்னிக்கு பலருக்கு இதப் பத்தி தெரியாம, தாலி கட்டிய உடன் , பரிசு குடுக்க மேடை ஏறுகின்றனர். சப்தபதி முடிந்தால் மட்டுமே , விவாகம் முடிந்ததாக அர்த்தம்

கிருஷ்ண மூர்த்தி S said...

வழி மொழிந்ததற்கு நன்றி எல் கே!

இன்று திருமணம் என்பது ஒரு வெறும் சடங்காகவே இருக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல், மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்தல், ஒருவர் இல்லாமல் மற்றொருவர் எதையும் செய்ய முடியாது என்ற அளவுக்கு சிநேகித பூர்வமாக வாழ்க்கையில் இணைபவர்கள் என்பதைத் தான் சப்தபதி முதலான திருமணச் சடங்குகள், மந்திரங்கள் சொல்கின்றன.

ஆக சப்தபதி என்றால் என்ன, அது எந்தவகையில் முக்கியமானது என்பதை முதலில் கொஞ்சம் சொல்லி விட்டு அப்புறம் உரை எழுதியிருக்கலாம்!

அடுத்து இதே மாதிரி எழுதுவதற்கு முன்னால், கொஞ்சம் பூர்வாங்க விவரங்களைத் தொட்டு விட்டு எழுதலாமே விதூஷ்!

Vidhoosh said...

இந்த வாரம் கண்டிப்பாய் எழுதுகிறேன் கிருஷ்ணமூர்த்தி சார்.

நன்றி எல்.கே. நிச்சயம் எழுதுகிறேன்.

Vidhoosh said...

லாவண்யா...நீங்களுமா ...? :)))

விக்னேஷ்வரி said...

சூப்பர் விளக்கங்கள் விதூஷ். இங்கே வட நாட்டுத் திருமணங்களில் எல்லாவற்றையும் சமஸ்கிருதத்தில் கூறி பின்னர் ஹிந்தியிலும் விளக்கி மணமக்களுக்குக் கூறுவார் திருமணம் செய்து வைக்கும் பண்டிட்ஜி. இவை ஏழும் ஒப்புக் கொண்ட பின் தான் தாலி கட்டுவதெல்லாம்.

geethasmbsvm6 said...

http://sivamgss.blogspot.com/2006/07/92.html

FYI

geethasmbsvm6 said...

to continue

Vidhoosh said...

கீதாம்மா..
ரொம்ப நன்றி. உங்களுடைய பதிவு மிகவும் அற்புதமான பதிவு.

இது பற்றி இன்னும் எழுதவே விழைகிறேன். வேதங்களை மிகவும் சாதாரணமாகவே படிக்க ஆரம்பித்தேன்.

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, என் சம்ஸ்கிருத ஆசிரியை வீட்டில் ஞான ஸங்க்லினீ தந்த்ர என்ற புத்தகம் படித்து பொருளறிந்து வியந்து கொண்டிருந்த போதே, என் தந்தையின் புத்தக சேமிப்பில் இருந்து தற்செயலாக கோவில்களின் அமைப்பும், சிலைகளின் தத்துவார்த்தங்களும் அவற்றினால் உண்டாகும் அதிர்வலைகளின் மூலம் சுற்றுசூழலுக்கு உண்டாகும் நற்பயன்களும் பற்றி ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. அதிலிருந்து இன்னும் இன்னும் என்று படித்து எழுதி வைத்துக் கொண்டே இருக்கிறேன். சமயம் வாய்க்கும் போதெல்லாம் சிறிது சிறிதாக வலையிலும் ஏற்றுகிறேன். :)

திருமண மந்திரங்கள் அனைத்தையுமே தமிழாக்க வேண்டும் போலருக்கு.. :)) வேண்டும் உம்..உம்.. உம்... :))

Vidhoosh said...

வாங்க விக்கி. ரொம்ப நன்றி.

சில புரோகிதர்கள் நிறையா மதிரங்களைச் சொல்வதே இல்லை. சினிமாவில் காட்டுவது போல, நேரே 'மாங்கல்யம் தந்துனானே' தான்..

geethasmbsvm6 said...

உங்க ப்ரொஃபைலில் இருந்து இந்தப் பக்கம் திறப்பதில்லை. தமிலிஷ் தான் வருது. எல்கே கொடுத்த லிங்கில் இருந்து தான் வரேன். அதைக் கொஞ்சம் என்னனு பாருங்களேன், நன்றி.

virutcham said...

நல்ல தகவல்கள். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

Uma said...

கண்ணதாசன் இதை லலிதா என்ற திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் அவர் பாணியில். (சக்தி ஒரு பாதியாய்...)

கிருஷ்ண மூர்த்தி S said...

திருமதி.உமா,

கண்ணதாசன் பயன்படுத்திய விதம் குறித்து மேல்விவரங்கள், சுட்டி ஏதேனும் தர முடியுமா?

Uma said...

சக்தி ஒரு பாதியாய் சிவனும் ஒரு பாதியாய்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
தாய்மை எனும் கோலமாய் தந்தை எனும் பாலமாய்
தத்துவப் பெருமை காண்போம்

பக்திவழி நேர்மையாய் பண்புவழி மேன்மையாய்
பாரெலாம் வணங்க வாழ்வோம்
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்

பாதாதி கேசமும் சீரான நாயகன்
பணிக்கென்று தலைவி வாழ்க!
படுவதொரு துயரெனினும் வருவதொரு சுகமெனினும்
பாதியாய்த் துணைவன் வாழ்க!

தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடென்(று)
எண்ணியே தலைவி வாழ்க!
சமகால யோகமிது வெகுகால யாகமிது
சம்சாரம் இனிது வாழ்க!

- கண்ணதாசன்

வால்பையன் said...

//பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்//


யார் அந்த பரமன்!?


//தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடென்(று)
எண்ணியே தலைவி வாழ்க!//

திருமணத்திற்கு பிறகு தாய்வீட்டை தாய்வீடாகவே நினைத்தால் என்னவாகுமாம்!?

அர்த்தமுள்ள இந்துமடம் எழுதும் போதே தெரிய வேண்டாமா, கண்ணதாசன் மறைமுகமாக பெண்ணடிமைதனத்தை ஆதரிக்கிறார் என்று!

Uma said...

வால், நான் இந்த விஷயத்தைத் தான் பகிர்ந்துகொண்டேனே தவிர, என் கருத்தை அல்ல :)

Vidhoosh said...

நன்றி விருட்சம்

நன்றி திருமதி.உமா ருத்ரன். உண்மைதான்.

வால்: பரமன் யார்னு தெரியாமையா புலிகளை காப்பாத்தும் போது திட்டினீங்க... ஐயோடா?/?

அடக் கடவுளே, இதில் இருக்கும் உள்குத்தை ரசித்து படிக்கணும் வால். பயிற்சி பத்தலை உங்களுக்கு...

தன் வீட்டை தாய் வீடென : அப்டீன்னா அம்மா வீட்ல இருக்கும் எல்லோரையும் தன் வீட்ல தங்க வச்சிடணும் அப்டீன்னு அர்த்தம்.

வால்பையன் said...

//தன் வீட்டை தாய் வீடென : அப்டீன்னா அம்மா வீட்ல இருக்கும் எல்லோரையும் தன் வீட்ல தங்க வச்சிடணும் அப்டீன்னு அர்த்தம். //

ஹாஹாஹா!

கிருஷ்ண மூர்த்தி S said...

திருமதி உமா,

கண்ணதாசனுடைய வரிகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

விதூஷ்!
விடுங்க! எங்க வால்ஸ் அப்பப்ப வாலால் சிந்திக்கும்போது கொஞ்சம் சரியாகவும், தலையால் சிந்திக்கும்போது தலைகீழாகவும் உல்டா பண்ணுவார்!

இதுக்கெல்லாம் சீரியஸா பதில் சொல்லி மாளாது!

வால்பையன் said...

பரமனுக்கும், பரமகுடிக்கும் என்ன சம்பந்தம்!?

Vidhoosh said...

@வால்ஸ்: ரொம்ப சிம்பிள்.... பரம'குடி'காரனா இருந்தா சீக்கிரம் பர(ம)லோகம் போலாம்..

கிருஷ்ண மூர்த்தி S said...

பரம குடியாக இருந்தா, ஒலக நாயகனாகவும் ஆயிடலாம்!

இனியா said...

இந்த மந்திரங்களை எல்லாம் தமிழிலேயே திருமணங்களில்
சொன்னால் நன்றாக இருக்குமே?

shunmuga said...

manthirangalin arthangal thelivaga ullathu

Post a Comment