தண்ணீர் என்ற அம்ருதம் பிரம்மா

வேதங்களைப் பற்றிய (அல்லது) அதை சுற்றிய சிந்தனைகள் மட்டும் தான் இப்போது. அதனாலேயே என்னவோ இந்த தண்ணீர் தண்ணீர் பத்திகளைப் படித்ததும் இதையும் என் சேகரிப்பில் இணைக்கத் தோன்றியது. உங்களுக்கும் பயன்படலாம். படித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் (பொறுமையும்) இருந்தால் மகிழ்ச்சி.

யாகங்கள் / ஹோமங்களின் பொது பெரும்பாலும் "மந்த்ர புஷ்பம்" என்ற "யோபாம் புஷ்பாம் வேத" என்ற மந்திரத்தை புரோஹிதர்கள் கூட்டாக உச்சாடனை செய்ய கேட்டிருக்கலாம். அதன் பொருள் என்ன? தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும்.

சப்தங்களின் அதிர்வை தண்ணீர் உணருமா? எப்படி உணர்கிறது? அதன் பலன் என்னென்ன? அறிந்து கொள்ள Dr. Masaru Emoto, என்ற ஜப்பானிய விஞ்ஞானியின் தளத்தை பாருங்கள். ஆராய்ச்சிகளின் மூலம் அறியத் தந்தவற்றை இந்த வீடியோவில் பாருங்கள் .



==========================================================

இன்ன பிரச்சினைக்கு இன்ன rate என்ற விகிதத்தில், பணத்தைக் கொடுத்தால் சுகபோகங்கள், வியாதி தீருதல், கணவன் மனைவி பிரியாத வாழ்வுக்காக மந்திரங்கள் ஜபிக்கப் படும் என்பதையெல்லாம் நம்பும் அவசரத் தீர்வுகளைத் தேடும் வேகவிரும்பிகளாக ஆகி விட்ட நாம், சற்று நிதானிக்க வேண்டிய தருணம் - என்று world water day மூலம் UNCED 94-ஆம் வருடம் முதல் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆமாங்க!!! இவங்க நார்த் அமெரிக்கா-காரங்கதான் ... இனிமேயாவது கொஞ்சம் கேட்டுப்போம்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதையாக, நம்மிடமே இயற்கையை பாதுகாக்கும் எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும், அவற்றை கரையானுக்கு போட்டுவிட்டு, யாருக்கும் ஈமெயில் ஒரு pdf அல்லது pps கோப்புக்களை forward to all என்று ஒரு send button-னை click செய்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட முடிகிறது. தற்போதைய / வருங்கால தலைமுறைகளுக்கு நம்மிடம் கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் சிலவற்றையேனும் எடுத்துக் கொடுக்கவும், அவற்றை பின்பற்றி இருப்பதை பாதுகாத்துக் கொடுக்கவும் எவ்ளவோ விஷயங்கள் hymn-களாகவும் சுலோகங்களாகவும் ஒளிந்து கிடக்கின்றன. இப்போது யாரும் படிப்பதில்லை, யாருக்கும் புரியவதுமில்லை, ஆனாலும், long-term perspectives-களோடு எழுதப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கங்களாக மட்டுமே வேதங்களை என்னால் பார்க்க முடிகிறது.

=======================================
வேதங்களில் இயற்கையையும் இயற்கையை சார்ந்தவற்றையும் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் பாடல்படுத்தப்பட்டிருக்கிறது. நமக்கெல்லாம் யார் சொன்னா என்ன, யாராவது ஒரு வியாபாரி தன் லோகோ-வோடு "Save Water, Save Environment, Save Energy" என்று அதை இங்கிலிஷில் சொன்னால் மட்டுமே கேட்போம். அப்போத்தானே நமக்கும் பெருமை. என்னவோ போடா மாதவா.

அதில் ஒரு சில உதாரணங்கள் இங்கே. எப்போதோ இதை படித்து நம் முன்னோர்கள் "ஆமா இதைப் போயி" என்று சிரித்திருக்கலாம். அதன் பலனைத்தான் நாம் இன்று "Save... Save" என்று கூவிக் கொண்டிருக்கிறோம்.
=======================================
ரிக் வேதம் (6:48:17) மரங்களை வெட்டக்கூடாது, அவை காற்றை தூய்மை படுத்துகின்றன
யஜுர் வேதம் (5:43) வானத்தை கிழிக்காதீர்கள், ஆகாசத்தை மாசுபடுத்தாதீர்கள்
சரக சம்ஹிதம் -- ஒரு காடு அழிந்தால் ஒரு நாடு அழிகிறது, மீண்டும் ஒரு காட்டை உருவாக்குவதை விட எளிதாக ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதால், காடுகளை காக்க வேண்டும். காடுகளின் உள்ள மிருகங்கள் காட்டின் வளர்ச்சிக்கு தேவையாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பது நம் சடங்கு எனக் கருத வேண்டும்.
=======================================
"அம்ருதம் பிரம்மா பூர் புவஸுவரோம்"

அம்ருதம்: தண்ணீர்
பிரம்ம: உயிர் (அ) வளர்ச்சி (அ) அசைவு உடைய அனைத்தும்
பூர்: ஐம் பூதங்களைக் கொண்ட உலகம்
ஸுவ: தெய்வீகத்தன்மை கொண்ட (அ) உடையதாகக் கருதப் படும் எதுவும்
ஓம்: Universal Sound

தண்ணீர் உயிர்களின் அமிருதம், அதுவே அசைவுடைய உயிர்களைக் கொண்ட இந்த உலகத்தின் அசைவுக்கும், சுவர்க்கத்தின் இயக்கத்திற்கும், ஓம் என்ற நாதம் தோன்றவும் ஆதாரமாக அமைகிறது.
=======================================
காகூ தீர்; காகூ நீர்; காகூ பேத் பிசார் || நானகா பகத் ப்ரியா ஹோ ||3||2||155||
(சீக்கிய "ஷபத்" -- குரு அர்ஜன் தேவ் ஜி [ராக் கௌரீ-- பன்னா 213]
காகூ -> சிலர்
தீர் ->நதிக்கரை / நீர்நிலைக்கு அருகிருக்கும் மணற்பரப்பு
நீர்-> தண்ணீர்
பேத பிசார் -> வேதங்கள்
நானக் - குறு நானக்ஜி
பகத் - பகவான் / கடவுள்

சிலர் கரைகளில் வாழ்கிறார்கள்; சிலர் தண்ணீரிலேயே வாழ்கிறார்கள்; சிலர் வேதங்கள் படிக்கிறார்கள்; நானக்கிற்கு இறைவன் மீது அன்பும் (பக்தி) என்கிறார்.
=======================================
அப்ஸ்வன்தர்ம்ரித்மப்யு பேஷஜம் || [4/4 அதர்வவேதம்]

அப்ஸ்வன்தம் -->தண்ணீரில்
அம்ருதம் --> அமிருதம் இருக்கிறது
அப்யு --> அதுவே மேன்மையான
பேஷஜம் --> மருந்தாக இருக்கிறது

=======================================
ருக் வேதத்தின் ஜலஸுக்தம் என்ற புத்தகத்தில்:

யா ஆபோ திவ்ய உத(tha) யா சவன்தி, ரவநித்ரிமா உதத் வா யா ஸ்வயஞ்சா:
சமுத்ரார்தா யா: ஷுசைய: பா(p)வகாரத; ஆபோ தேவீரிஹ மாமவன்து||

தண்ணீரானது சுவர்க்கத்திற்கு நிகரான மலைமுகடுகளில் இருந்து பூமிக்கு வருகிறது. நதி ரூபமாகி வேகம் கொண்டு பாய்கிறது. ஓடையாகித் தவழ்கிறது. பூமியைத் தோண்டுவதன் மூலம் ஊற்றாகி குட்டைகள் மற்றும் கிணறுகளில் பெருகுகிறது. இவ்வாறும் பயணித்து சமுத்திரத்தில் சேர்க்கிறது. என்னை புனிதமாக்கி என்னை வாழச்செய்யும் தண்ணீரே! என்னைக் காப்பாய்.

என்று நீர்நிலைகளை வணங்கச் சொல்கிறது.

=======================================
லதுமய ஸ்மிருதியில்
"வித்தோபேக்ஷம் பவேதஷ்டிம் தடாகம் பூர்தமுச்யதே
ஆராமஷ்ச்ச விஷேஷேன தேவத்ரோணச்ததைவ ச||" என்று சொல்லப் பட்டிருக்கிறது.
அதாவது, தடாகம் என்பது விசேஷமாக அமைக்கப் பட்டத் தோட்டமும் நீர்நிலையும் கூடிய இடமாக இருக்கிறது. அழிந்துவிட்ட தடாகங்கள், கிணறுகள், மற்றும் குளங்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய உதவுபவன் உலகில் உள்ள ஜீவராசிகளை காப்பதின் புண்ணியத்தைப் பெறுகிறான்.
=======================================

தண்ணீரை எப்படி பாதுகாக்கலாம் என்று வேதங்கள் கூறுகின்றன? இதையேதான் நாமும் இன்றும் சொல்லி (மட்டும்) கொண்டிருக்கிறோம்.

நீர்நிலைகளில் கிணற்றில் எச்சில் துப்புவதோ, குப்பைகளைப் போடுவதோ கூடாது.
நீர்நிலைகளுக்கு அருகில் மலஜலம் கழிப்பது பாவச் செயல். (சென்னையின் முகமாக கூவம் இருக்கும் கதியை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்)

வீடுகளுக்கான உபயோகத்திற்கு என்று இந்த நீர் நிலைகளில் இருந்து தினமும் தேவையான அளவுக்கு நீர் சேகரிக்க வேண்டும். அன்றைய தேவைக்கு போக மிகுந்ததை மறுநாள் காலை மீண்டும் நீர் நிலையிலேயே விட வேண்டும். (கொசு உற்பத்தி தவிர்க்கப்படுகிறது)

ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒருமுறை மக நட்சத்திரம் கூடிய நாளில் நீர்நிலைகளை தூர் வார வேண்டும் (மகாமகம் உற்சவமாகிப் போனது)

நீரில் மண் / சகதி முதலியவற்றை வீசக் கூடாது.

23 comments:

எறும்பு said...

//சப்தங்களின் அதிர்வை தண்ணீர் உணருமா? எப்படி உணர்கிறது? அதன் பலன் என்னென்ன? அறிந்து கொள்ள Dr. Masaru Emoto, என்ற ஜப்பானிய விஞ்ஞானியின் தளத்தை பாருங்கள். //

நீங்க இத பாருங்க

http://vediceye.blogspot.com/2010/01/7.html

எறும்பு said...

//அதன் பொருள் என்ன? தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும். //

எனக்கு ஒரு சந்தேகம் ரெம்ப பெரிய சந்தேகம் அத உங்களால மட்டும்தான் தீர்க்க முடியும். யம ராஜாவை தற்கால தமிழுக்கு மாத்துறேன்னு சொன்னீங்க, அப்புறம் ஏதோ திருவண்ணாமலை பத்தி எழுதுறேன்னு சொன்னீங்க, பிறகு காலம்னிஸ்ட் கங்காதரர தமிழ்ல எழுதுனீங்க, இப்ப வேதம் தமிழ்ல மாத்துறீங்க..
அரசியல்வாதி மாதிரி வாக்குறுதி மட்டும் குடுக்றீங்க,, ஒண்ணையும் கண்ல காட்ட மாட்டேன்கறீங்க..

Vidhoosh said...

:)) எறும்பு: சரிதான். பப்ளிஷர்கள் என்னை கொன்னுடுவாங்க. அச்சில் ஏறினதும் இங்கேயும் வரும். :)

யமதர்மராஜா அந்தத் தமிழைத் தழுவி எனக்காக எழுதியது. original content ஆத்ம போதம் பற்றியது. படிப்பீங்கன்னா அனுப்பறேன். 300 பக்கம். :))

மந்த்ர புஷ்பம் இந்த வார இறுதியில் வரும்.

Vidhya Chandrasekaran said...

நிறைய புரியுது. கொஞ்சம் புரியல. கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்கங்கறது நல்லாத் தெரியுது.

நேசமித்ரன் said...

அன்பின் விதூஷ்

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க ஆன என்னமோ ஒரு நிறைவின்மை இருக்கு இந்த இடுகைல என்னனு தெரியல
சரியா கோர்கலையோன்னு தோனுது

:)

Vidhoosh said...

நன்றி வித்யா மற்றும் நேசன்.

இப்போதெல்லாம் சேகரிப்பில் இருக்கட்டும் என்று scribble செய்வது அதிகம் ஆகி விட்டது. அது போன்ற ஒன்றுதான் இதுவும். ஒரு வழியாய் அந்த சம்ஸ்கிருத புத்தகம் ஏப்ரலில் வெளிவந்து விட்டால்தான் எனக்கு நிம்மதி. இங்க கொஞ்சம் திருகி எழுதிருக்கீங்க, அங்க கொஞ்சம் வளைச்சு எழுதிருக்கீங்கன்னு தாளிக்கிறாங்க. :"((

விக்னேஷ்வரி said...

நல்ல தகவல்கள் வழக்கம் போல் உங்கள் நடையில். அருமை வித்யா. என்னால் வீடியோவைத் தான் கேட்க முடியவில்லை.

Thenammai Lakshmanan said...

வித்யா உங்க பன்முகத்திறமைகளைப் பார்த்து நான் பிரமித்துக் கொண்டே இருக்கிறேன் அருமை...

எல்லாமே இருக்கு.. நீங்க சொன்னபடி புத்தகமா வந்தால் முழுமையடையும்னு நினைக்கிறேன்

Chitra said...

WOW! Amazing!
இவ்வளவு விஷயங்கள் - நீர் துளிகளுக்குள்!

Ashok D said...

அனுதினம் அம்ருதம்.. :)

ஆனா ஒரே ஒரு தம்...

Ashok D said...

utube நிறைவை கொடுத்தது.. I am rightunnu.. :)

விஜய் said...

வரலாறும் அறிவியலும் இறையியலும் தண்ணீரின் பெருமையை சொன்னாலும் யார் அதன் மதிப்பை உணர்கிறார்கள்.

வெளிநாட்டில் virtual water என்று வரப்போகிறது.

ஒரு கிலோ நெல் விளைவிக்க எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறதோ அதற்கும் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய போகிறார்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

நசரேயன் said...

//வித்யா said...
நிறைய புரியுது. கொஞ்சம் புரியல. கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்கங்கறது நல்லாத் தெரியுது//

எனக்கும் அப்படித்தான் தோணுது

நட்புடன் ஜமால் said...

நிறைய தெரிந்து கொண்டேன் ...

Kanchana Radhakrishnan said...

நிறைய புரியுது

virutcham said...

நல்ல பதிவு.
கோவிலில் தரும் தீர்த்தம், அபிஷேக நீர், காயத்ரி மந்த்ரம் ஓதும் போது மந்திரத்திற்கு இடையிடை நீரின் உபயோகம், நெய்வேத்யத்துக்கு நீர் உபயோகித்தல் என பல விஷயங்களுக்கு தெளிவை கொடுக்கும் விதமாக இதைக் காண்கிறேன். சுவாமி ஒம்காரின் இது சம்பந்தமான பதிவு படித்து விட்டு நீரை மிக முக்கியமாக கவனிக்கவும், மென்மையான சிந்தனைகளுடன் அதை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கும் முயற்சியில் சிறிது கவனத்துடன் செய்யத் துவங்கி இருக்கிறேன்.
உங்கள் பதிவு இன்னும் என் எண்ணங்களுக்கு வலு சேர்க்கிறது.


http://www.virutcham.com

Radhakrishnan said...

உங்கள் அறிவாற்றலை வெகுவாக பாராட்டலாம். மிகவும் அழகிய பதிவு. நீரின்றி அமையாது உலகு.

"உழவன்" "Uzhavan" said...

அட.. சூப்பருங்க..
 
நான்கு வேதங்களையும் கரைத்துக் குடிச்சாச்சு போல..

rajasundararajan said...

//ரிக் வேதம் (6:48:17) மரங்களை வெட்டக்கூடாது, அவை காற்றை தூய்மை படுத்துகின்றன
யஜுர் வேதம் (5:43) வானத்தை கிழிக்காதீர்கள், ஆகாசத்தை மாசுபடுத்தாதீர்கள்
சரக சம்ஹிதம் -- ஒரு காடு அழிந்தால் ஒரு நாடு அழிகிறது, மீண்டும் ஒரு காட்டை உருவாக்குவதை விட எளிதாக ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதால், காடுகளை காக்க வேண்டும். காடுகளின் உள்ள மிருகங்கள் காட்டின் வளர்ச்சிக்கு தேவையாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பது நம் சடங்கு எனக் கருத வேண்டும்.//

மகாபாரதக் கதையில் காண்டீவ வனம் அழிக்கப்பட்ட காட்சி... வேதம் படிக்காத ஒரு வியாசரின் இடைச்செருகலாக இருக்குமோ?

வீடியோவில் புரியாதது: "Soul"-இன் அதிர்வை உண்டாக்கியது எப்படி? Method and materials used என்னென்ன? "Soul" சின்ன ஓட்டை; "Anger" பெரிய ஓட்டை கவனித்தீர்களா?

1970-களில், சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனின் வாசலில், கீரிக்கும் பாம்புக்கும் சண்டை என்று ஒரு ஆள் பூச்சாண்டி காட்டுவான். வேதப் பலன்களும் அப்படித்தானுங்க. உண்டோ இல்லையோ, வயிற்றுப் பாட்டுக்கு உதவியது; உதவுகிறது.

வேதங்களை மறுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளான ஒரு புத்தனுக்குப் பின் வந்திருக்கிறோம். "எம்புட்டு அடிச்சாலும் தாங்குறான், இவன் நல்லவன்டா" என்கிற வடிவேலு வசனம் உண்மையிலே 'நகைச்சுவை' இல்லீங்க. இரக்க சிந்தனை வேண்டாமாங்க?

அதீத/ அபூர்வ சக்திகள் என்னத்துக்குங்க? எளிய மக்களுக்குப் பயன்புரிகிற மாதிரி ஏதாவது?

Sundar சுந்தர் said...

//சம்ஸ்கிருத புத்தகம் ஏப்ரலில் வெளிவந்து... //

wow! kalakku :)

பனித்துளி சங்கர் said...

(((((((((நமக்கெல்லாம் யார் சொன்னா என்ன, யாராவது ஒரு வியாபாரி தன் லோகோ-வோடு "Save Water, Save Environment, Save Energy" என்று அதை இங்கிலிஷில் சொன்னால் மட்டுமே கேட்போம்))))))))))))

ஹ்ம்ம் நன்றாக கூறினீர்கள் .....நிஜம்!!!

Paleo God said...

இதுக்கு எதுக்குங்க வேதம்?? நிறைய காசு சேர்த்து வெச்சிக்குங்க, வருங்காலத்துல குடிக்கவும், இன்ன பிறவுக்கும் காசு கொடுத்து வாங்க வேண்டி வரும், இல்ல நல்ல கிணறா பார்த்தது முதலீடு செய்ங்க உங்க புள்ளங்க தண்ணி வித்து பொழச்சிக்கும் அப்படின்னு சுலபமா சொல்லுங்க.
--
வேத ஆராய்ச்சி எல்லாம் வெளிநாட்டுக்காரன் பார்த்து பேடன்ட் வாங்கிப்பான். மாரியாத்தாவுக்கு வேப்பலையே அமெரிக்காவிலேர்ந்துதான் இம்போர்ட் பண்ணப்போறாங்க..:)
--
இன்னும் புரியலைன்னா கல்கி பத்தி பிரபல டிவில காமிச்சத பாருங்க. அங்க இருந்தவங்களையும், பாண்டிச்சேரில குடிச்சிட்டு கிடந்தவங்களையும்தான் ஒப்பிட்டாங்க . ஏன்னா தமிழ்நாட்டுல குடியும், விற்பனையும் இல்லை. ஒரு செய்திய சுலபமா இப்பிடி சொன்னா எங்கள மாதிரி இருக்கறவங்களுக்கு புரியும்..!
:))

Ashok D said...

ராஜசுந்தரராஜன் கமெண்ட் நிறைய யோசிக்கவைக்குது... :)

Post a Comment