நிலைக்கண்ணாடி

 என்ன சொன்னீர்கள்

'அது மிகவும் முக்கியமா?'
என்றா கேட்டீர்கள்
உங்களிடமிருந்து பதில்களை மட்டுமே
பெறும் கேள்விகளைக் கேட்கும்
யாருக்கும் கேட்காத குரல்கள் கேட்டு
அழ விரும்பும் போதெல்லாம் சிரிப்பீர்கள்
இந்த விசித்திரமான நகரத்தின்
விசித்திரம் உங்களை பயமுறுத்துகிறதா?
இந்த நகரத்திலிருந்து உங்களால்
தப்பிச் செல்ல முடியும்
வேறொரு விசித்திரமான உலகத்திற்கு
அங்கே எல்லாம் வேறுபட்டவையாய் இருக்கின்றன
உங்களை அவர்கள் அனைவரும்
விசித்திரமானவர்கள் என்று கூறுகிறார்கள்
இங்கே அது இயல்புக்கு மாறாக இருக்கின்றது
நீங்கள் வித்தியாசமாக இருக்க விரும்பினால்
நீங்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினால்
தேடிக் கொண்டே இருங்கள்
நிலைக்கண்ணாடியில் ஒரு நாள்
மாறுவேடத்தில் வருவீர்கள்.
- விதூஷ் / 9.5.2022

0 comments:

Post a Comment