Showing posts with label பழம்பஞ்சாங்கம். Show all posts
Showing posts with label பழம்பஞ்சாங்கம். Show all posts
துரோபதையம்மன் விருத்தம்
Posted by
Vidhoosh
on Saturday, December 6, 2014
Labels:
samskaras,
இருபது சில்லறை கட்டடம்,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (5)
தணிகாசலர் பஞ்சரத்தினம்
Posted by
Vidhoosh
Labels:
samskaras,
இருபது சில்லறை கட்டடம்,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (0)
திருநீற்றுப் பதிகம்
Posted by
Vidhoosh
Labels:
samskaras,
இருபது சில்லறை கட்டடம்,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (0)
வேமனானந்த சுவாமி பதிகம்
Posted by
Vidhoosh
Labels:
samskaras,
இருபது சில்லறை கட்டடம்,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (0)
அருணாசலீசர் பதிகம்
Posted by
Vidhoosh
Labels:
samskaras,
இருபது சில்லறை கட்டடம்,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (0)
ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரம் தமிழாக்கம்
Posted by
Vidhoosh
on Monday, July 29, 2013
Labels:
samskaras,
sanskrit,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (3)
ராமரக்ஷா ஸ்தோத்திர விளக்கம் 1
Posted by
Vidhoosh
on Friday, July 26, 2013
Labels:
sanskrit,
slokas,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (4)
ஸ்ரீராம ரக்ஷா ஸ்தோத்ரம்
Posted by
Vidhoosh
on Thursday, March 14, 2013
Labels:
sanskrit,
slokas,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (2)
பழங்காலத்துப் புத்தகம்
Posted by
Vidhoosh
on Saturday, November 17, 2012
Labels:
கவிதை,
பழம்பஞ்சாங்கம்
/
Comments: (1)
குங்குமத்தால் உண்டாகும் பயன்கள்
Posted by
Vidhoosh
on Thursday, August 30, 2012
Labels:
samskaras,
பழம்பஞ்சாங்கம்
/
Comments: (7)
ஸ்ரீ விநாயக சதுர்த்தி பூஜா விதானம்
Posted by
Vidhoosh
on Tuesday, August 30, 2011
Labels:
samskaras,
பண்டிகைகள்,
பழம்பஞ்சாங்கம்
/
Comments: (3)
சூரிய நமஸ்காரப் பதிகம் - இருபது சில்லறை கட்டடம்
Posted by
Vidhoosh
on Saturday, June 4, 2011
Labels:
samskaras,
இருபது சில்லறை கட்டடம்,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (1)
நடராஜப் பத்து - இருபது சில்லறை கட்டடம்
Posted by
Vidhoosh
on Wednesday, June 1, 2011
Labels:
samskaras,
இருபது சில்லறை கட்டடம்,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (7)
ஸ்ரீ ராம நவமி - ஸ்ரீராமர் பதிகம்
Posted by
Vidhoosh
on Sunday, April 10, 2011
Labels:
samskaras,
இருபது சில்லறை கட்டடம்,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (3)
சிவஸ்வர்ணமால்ய ஸ்துதி
Posted by
Vidhoosh
on Friday, April 8, 2011
Labels:
sanskrit,
slokas,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (1)
சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
Posted by
Vidhoosh
on Wednesday, March 2, 2011
Labels:
sanskrit,
slokas,
videos,
பழம்பஞ்சாங்கம்,
ஸ்லோகங்கள்
/
Comments: (6)
இழை கோலம்
Posted by
Vidhoosh
on Friday, November 12, 2010
Labels:
what why how,
கோலம்,
பண்டிகைகள்,
பழம்பஞ்சாங்கம்
/
Comments: (14)
என் பதில் கடிதம் மரியாதை நிமித்தமானது
Posted by
Vidhoosh
on Wednesday, September 1, 2010
Labels:
nostalgia,
உணர்வுகள்,
கதை,
பழம்பஞ்சாங்கம்
/
Comments: (13)
சப்தபதி (முழு உரை)
Posted by
Vidhoosh
on Friday, July 2, 2010
Labels:
marriage rituals,
samskaras,
sanskrit,
பழம்பஞ்சாங்கம்
/
Comments: (28)
பல்லாங்குழி
Posted by
Vidhoosh
on Friday, April 23, 2010
Labels:
nostalgia,
பழம்பஞ்சாங்கம்
/
Comments: (51)
(Photo @ Dakshina Chitra, ECR, Chennai by Vidhoosh)
நன்றி: விபர ஆதாரம் புத்தகங்கள், விக்கிமீடியா, மரத்தடி, திண்ணை, கூகிள் குரூப் மற்றும் இன்னும் சில இணையங்கள். 2001 முதல் பல பத்திரிகைகள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து சேகரித்தத் துணுக்குச் செய்திகளின் தொகுப்பே இக்கட்டுரை.
பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடு்ம்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும். இது மிக அரிதாகவே ஆடப்படுகிறது. பொதுவாக மரம் அல்லது உலோகத்தால் ஆனது. சில கோவில்களின் மேல் தளத்தில் (மாடி) கருங்கல்லில் குட்டி குட்டி குழிகளாக செதுக்கி இருக்கும். அவ்ளோ வெய்யில்ல அதும் கருங்கல்லுல உக்காந்து எப்படி விளையாடி இருப்பாங்க??
பல்லாங்குழியில் இரு வரிசைகளில் எதிரெதிரே ஏழு ஏழு குழிகள் இருக்கும். புளியங்கொட்டை, முத்துமணி, கழற்சிக்காய், குந்துமணி (குன்றின்மணி?), சிறு கூழாங்கல், அல்லது சோழி வைத்து பல்லாங்குழி ஆட்டம் ஆடப்படுகிறது. ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு காய்கள் என்று நிரப்பி ஆடப் படும்.
இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப்படும். இதில் பதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று பிரித்துக் கொண்டு எதிரெதிரே அமர்ந்து விளையாட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் எட்டு எட்டாக காய்கள் இட்டு நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக் கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின் அடுத்தவர் ஆடத் தொடங்குவார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடிக் கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிட்டால் ஆட்டம் முடிவுற்றதாகக் கருதப்படும். அனுபவமும் சிந்திக்கும் திறனும் எண்களின் கணிப்பும் இவ்விளையாட்டில் வெற்றியைத் தேடித் தரும்.
பெண்கள் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் இந்த விளையாட்டை ஆடினார்கள். கல்யாண சீரில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெற்று வந்தது. காலப் போக்கில் விளையாட என்று ஒரு பொழுதே இல்லாமல் போனதால், இந்த விளையாட்டும் மறைந்தே போனது. தற்பொழுது (ஆப்பிரிக்க பழங்குடி விளையாட்டு) Mancala Game என்றும் branding செய்யப்பட்டும், gaming sites-களில் flash games ஆகவும் இருக்கிறது. Bao, Soro (Choro or Solo), Mangola, Gabata, Mulabalaba, Ayo and Sadeqa, என்றெல்லாம் பல் வேறு இடங்களில் பல்வேறு variationகளில் விளையாடப் படும். தென்னமெரிக்காவில் ஒலிம்பியாட் விளையாட்டுக்களில் mind games பிரிவில் இவ்விளையாட்டு இருக்கிறது என்பது கூடுதல் செய்தி. அமெரிக்காக்காரன் கொண்டாடினத்தானே "மதர்ஸ் டே". என்னவோ போடா மாதவா [ இப்போ சந்தோஷமா பலாபட்டறை ஷங்கர்:)) ஆனா பாருங்க ஒரு ஸ்லோகம் மட்டும் மிஸ்ஸிங் :)) ]
பல்லாங்குழி இலங்கையில் ஏதோ ஒரு பெயரில் இவ்விளையாட்டை விளையாடுவதாக ஒரு முறை என் இலங்கைத் தோழி ஒருவள் சொல்லி இருக்கிறாள். அவளது தொடர்பு துண்டித்துப் போனது. அவள் இப்போ கனடாவில் இருக்கலாம் :( இருக்க வேண்டும்! அவளோடு இந்த விளையாட்டின் பெயரும் என் குறிப்பிலிருந்து தொலைந்தே போனது. யாருக்கு தெரிந்தால் பகிரவும்.
Significance:
ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழு குழிகள். அவை:
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்
இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது.
நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில்
சுட்டிக்காட்டபட்டுள்ளன. சகஸ்ராரம் துவங்கி விசுக்திவரை - ஆகாயம் அல்லது மேலோகம் அல்லது சொர்க்கம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம் வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம்
தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும்
ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால்
கண்கூடாக அனுபவிக்கலாம்.
குழிக்கு எட்டு காய்கள் என்பன, மனிதனின் எட்டு வகையான குணா நலன்களைக் குறிக்கிறது.
1. சுய கட்டுப்பாடு
2. பொறுமை
3. தியாகம்
4. தானம்
5. தூய்மை (அகம் மற்றும் புறம்)
6. தவம்
7. பிரம்ம ஞானம் (அதாவது பிற உயிர்கள் மீதான மரியாதை)
8. திருப்தி
ஆடும் முறை:
ஆட்டத்தில் குழிக்கு எட்டு காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத்தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.
சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழியினைத் துடைத்து அடுத்து இருக்கு குழியில் உள்ள கைகளையும் அதற்கு நேர் எதிரே இருக்கும் குழியில் உள்ள காய்களும் அள்ள வேண்டும். அப்போது முதலில் இட்ட எட்டு காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் கிடைக்கின்றன. (இதற்கும் ஒரு பெயர் சொல்லி எடுப்போம், மறந்து விட்டது)
ஆட்டத்தில் மற்றும் ஒரு இடைநிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார். இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த எட்டு காய்கள் மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.
காய்களை இழந்தவர் (காட்டாக 16 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.
ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும்.
தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.
விளையாடும் முறை 2:
ஒவ்வொரு குழியிலும் முதலில் 5 முத்துக்களை இட வேண்டும். பின்னர் ஒருவர் ஏதாவது ஒரு குழியில் இருந்து ஆரம்பித்து 5 முத்துக்களை குழிக்கு ஒன்றாகப் போட வேண்டும். கையில் இருக்கும் முத்து தீர்ந்த்தும் அடுத்த குழியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அடுத்த குழி காலியாக இருந்து, அதற்கு அடுத்த குழியில் முத்துக்கள் இருந்தால் அவை அனைத்தையும் வென்றதாக பொருள். ஆனால் அடுத்தடுத்து காலியான குழிகள் வந்தால் முதலில் ஆடியவர்க்கு ஒன்றும் இல்லை.
இதனிடையே காலியான குழிகளில் புதிதாய் முத்துக்கள் சேரும். 4 முத்து சேர்ந்ததும் அவரவர் பக்கத்தில் உள்ளதை அவரவரே எடுத்துக் கொள்ளலாம். இதை "பசு" என்று சொல்வோம். எல்லா குழிகளும் காலியானப்பின் மீண்டும் எல்லா குழிகளையும் 5 முத்துகளாக நிரப்ப வேண்டும். ஒருவரிடம் அதிக முத்து இருக்கலாம். மற்றொருவர் குறைவாக வைத்து இருக்கலாம். அதிக முத்து உள்ளவர்கள் தனது பக்கம் உள்ள எல்லா குழிகளையும் நிரப்ப வேண்டும். குறைவான முத்துக்கள் உள்ளோர் எத்தனை குழிகள் நிரப்ப முத்துக்கள் இருக்கிறதோ அத்தனை குழிகளை நிரப்ப வேண்டும். யார் வென்றாரோ அவரிடம் இருந்தே மீண்டும் விளையாட்டு தொடரும்.
விளையாட்டினூடே பாடப்படும் நாட்டுப்புறப் பாட்டு ஒன்று: (நன்றி: என் அம்மா வழிப் பாட்டியார் திருமதி.மீனாக்ஷி கோபாலன்) இப்பாடலின் ஊடாக வயற்காடும்., பூப்படைந்த பெண்மையையும், கருவுற்ற பெண்மணியும் பாதுகாப்பது குறித்த மறைபொருளாக மறைந்திருக்கும் செய்தியைக் கவனியுங்கள். அள்ள அள்ள குறையாத பாரம்பரியம். நம் வாரிசுகளுக்கும் அள்ளித் தருவோம்.
காடு வெட்டிக் கல் பொறுக்கிக் கம்பு சோளம் தினை விதைத்துக்
காலை-மாலை காட்டக் காக்கத் தங்கரத்தினமே
கண் விழித்து கிடந்தாளாம் பொன்னுரத்தினமே.
அள்ளி அள்ளி விதைச்சு வைச்ச அழகுத்தினை சாகாதடி
மொள்ள மொள்ள விதை விதைச்சதங்கரத்தினமே
மொந்தத் தினை சாகாதடி பொன்னுரத்தினமே
கறுப்பானை ஓடிவரக் கள்ளரெல்லாம் தினை விதைக்க
வெள்ளானை ஓடிவரத் தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் பொன்னுரத்தினமே
சின்னச்சின்ன வெற்றிலையாம் சேட்டுக்கடை மிட்டாயாம்
மாமன் வைச்ச மல்லிகைப்பூ தங்கரத்தினமே
கொண்டையிலே மணக்குதடி பொன்னுரத்தினமே
சாலையிலே ரெண்டுமரம் சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் பொன்னுரத்தினமே
எல்லோரும் கட்டும்வேட்டி ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி பொன்னுரத்தினமே
ஒத்தத்தலை நாகன்வந்து ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் பொன்னுரத்தினமே
தேவானையைக் காவல் வச்சா தீஞ்சிடுமே தினைப்பயிரு
வள்ளியைக் காவல்வைத்தால் தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை பொன்னுரத்தினமே
மூத்தண்ணன் பொண்சாதியை மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் பொன்னுரத்தினமே
சாய்ந்திருந்து கிளிவிரட்டச் சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத் தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே பொன்னுரத்தினமே