Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

நான் என்ன செய்ய வேண்டும்?

 இவ்வளவு சத்தமாய் எப்படி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்

பேசும் விஷயங்கள் பலவிதமாக இருக்கின்றன

முகப்பரு முதல் கழிப்பறை கறைகள் நீக்க

சந்தன மரத்தில் அமைக்கப்பட்ட கடைசி மரியாதை

அஞ்சலிக் குறிப்புக்கள், இடுகாட்டுக்கு நீக்கும் வரை அழுதல்

நாய்களுக்குப் பின் சிங்க பொம்மை வைப்பது

சில வெயிலின் வெப்பத்தில் கருகியது

சில கோபத்தின் உஷ்ணத்தில் வறுத்தெடுக்கப்பட்டது

விஷம் தெளிப்பது போல, அமிர்த நீரோடை போல

மரணத்தின் கருப்பு நூலிழையில் பிழைத்தல்

மரணித்து விழுதல், மல்லிப்பூ வைச்சு வாடுதே,

வாழ்க்கையின் அலைகளில் தனிமையில் இருக்கிறேன் ரகங்கள்,

வாழ்வதற்கான பத்து முக்கிய பாடங்கள்

உளவியல் என்ன சொல்லியிருக்கிறது?

அருவருப்பான கழிவுநீர்

மூச்சுத்திணறும் ஆட்டக் காட்சிகள்

கணவரை, மனைவியை கேலிக்கூத்தாக்குதல்

வெறுப்பின் ஆயுதமாக மாற சில விவாத மேடைகள்

தோட்டத்தில் சாறு நிறைந்த பழங்களை நறுக்குதல்

அசுபத்துக்கு ஒப்பாரிகள், 

கருப்பை, குடலுக்குள் பயணிக்கும் மருத்துவக் கேமிரா

இந்த விஷயங்களை நான் எப்படி ஏற்றுக்கொள்வது?

இது ஒரு மூலதனம், இவை எங்கள் கருவிகள்

இவை நமது வளங்கள், இவையே நமது ஆயுதங்கள்

எல்லோரும் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்

நான் அவர்களை என்ன செய்ய வேண்டும்?

இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து கொண்டு

நான் என்ன செய்ய வேண்டும்?

சாதாரண மனிதன்

எங்கிருந்தும்... எங்கும்

சென்று சேர்கின்றன
அவன் கால்கள்
வெகு சாதாரணமாக
அந்தச் சாதாரண நடையால்
பூமி தட்டையாகிறது
அந்தக் கால்கள் இயங்கும் போதெல்லாம்
அது எங்கிருந்து செல்கிறதோ
அங்கே மீண்டும் வருகிறது
ஒரு துன்பத்திலிருந்து
அடுத்தத் துன்பத்திற்கு
நகர்வதைப் போலவே
தன் துன்பங்களைத் தொடர்ந்து
நடக்கின்றன அக்கால்கள்
மிகச் சாதாரணமாக.
- விதூஷ் / 9.May.2022

நிலைக்கண்ணாடி

 என்ன சொன்னீர்கள்

'அது மிகவும் முக்கியமா?'
என்றா கேட்டீர்கள்
உங்களிடமிருந்து பதில்களை மட்டுமே
பெறும் கேள்விகளைக் கேட்கும்
யாருக்கும் கேட்காத குரல்கள் கேட்டு
அழ விரும்பும் போதெல்லாம் சிரிப்பீர்கள்
இந்த விசித்திரமான நகரத்தின்
விசித்திரம் உங்களை பயமுறுத்துகிறதா?
இந்த நகரத்திலிருந்து உங்களால்
தப்பிச் செல்ல முடியும்
வேறொரு விசித்திரமான உலகத்திற்கு
அங்கே எல்லாம் வேறுபட்டவையாய் இருக்கின்றன
உங்களை அவர்கள் அனைவரும்
விசித்திரமானவர்கள் என்று கூறுகிறார்கள்
இங்கே அது இயல்புக்கு மாறாக இருக்கின்றது
நீங்கள் வித்தியாசமாக இருக்க விரும்பினால்
நீங்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினால்
தேடிக் கொண்டே இருங்கள்
நிலைக்கண்ணாடியில் ஒரு நாள்
மாறுவேடத்தில் வருவீர்கள்.
- விதூஷ் / 9.5.2022

நீலம்


பூட்டு


லதா


தேசாந்திரிகள்


இன்றைய மனம்


தொடர்பேயில்லாதவை


போஸ்டிட் வரிகள்


வாக்குமூலம்


நதிக் குறிப்புக்கள்


பழங்காலத்துப் புத்தகம்


கோடுகள்


அப்பவே அப்பிடி சிரீஸ் #ஒன்று


எந்திரிச்சாலே இதான் பாஸ் சிரீஸ்


வம்பா ஒரு வெண்பா


சயனைடு கவிதைகள்


விட்டுட்டு போயிராதீங்க மாமோய்


ஏகலைவன் பேசுகிறேன்