நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் - 1.2

நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்

ப்ரத²மத³ஶகம் (2) 

ஏவந்து³ர்லப்⁴யவஸ்துன்யபி ஸுலப⁴தயா ஹஸ்தலப்³தே⁴ யத³ன்யத்

தன்வா வாசா தி⁴யா வா ப⁴ஜதி ப³த ஜன꞉ க்ஷுத்³ரதைவ ஸ்பு²டேயம் |

ஏதே தாவத்³வயம் து ஸ்தி²ரதரமனஸா விஶ்வபீடா³பஹத்யை

நிஶ்ஶேஷாத்மானமேனம் கு³ருபவனபுராதீ⁴ஶமேவாஶ்ரயாம꞉ || 1-2 ||


இரண்டாம் ஸ்லோகத்தின் பொருள்: 


இந்த முறையில், இது போன்ற அரிய விஷயங்களை அனைவரும் எளிதில் அணுக முடியும். உயிரினங்களில் சிறந்த மனித ஜன்மம் எடுத்த நாங்கள் உடல் பேச்சாலும் மனதாலும் மற்ற உலக விஷயங்களைப் பின்பற்றுகிறோம். உண்மையில் இது பரிதாபத்திற்குரியது. இருப்பினும், கிருஷ்ண பக்தர்களாகிய நாங்கள், உலகத் துன்பங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு முழு மனதுடன், பிரபஞ்சத்தின் அனைத்து உயிரினங்களின் முழு ஆன்மாவின் உருவமாக இருக்கும் குருவாயூர் அப்பனே, உம்மைச் சரணடைகிறோம்.

============

நாம் சரணடைவது இயலாமையால் இல்லை. ஆனால் சரணடைவதால் நிவாரணத்தை உணர்கிறோம். நாம் சரணடையும் போது, நாம் ஏதோ ஒன்றை விட்டுவிடுகிறோம், ஆனால் விடுவது என்பது நாம் நினைக்கும் விதத்தில் அல்ல. உதாரணத்துக்கு மிகக் கடினமான ஒரு சூழல் நம் வாழ்க்கையில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். நம்மால் எதுவுமே செய்ய இயலாத கையறு நிலை, அப்போது, நாம் அச்சூழலை விட்டு ஓடி ஒளியாமல், அல்லது அச்சூழலைக் கண்டு பதட்டம் கொள்ளாமல் இருக்க, ஒரு நம்பிக்கையாக சரணாகதி உதவுகிறது. சரணாகதி அடையும் நிலையில், நாம் சூழ்நிலையை நம்மால் நிர்வகிக்க முடியும் அல்லது நிர்வகிக்க முடியும், அல்லது அப்படி உதவக்கூடிய எதையும் அறிவோம் என்ற ஆணவத்தை/மாயையை/கருத்தை விட்டுவிடுகிறோம்.


சரணடைதல் என்பது எனது பங்குக்கான செயல் ஏதும் இல்லாவிட்டாலும், எல்லாம் சரியாகிவிடும் என்பதை அறிந்து, இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொள்வது.


ஒரு நபர், சூழ்நிலை அல்லது விளைவு மீதான நமது கட்டுப்பாட்டை விட்டுவிடுவது சரணாகதி. யாரையாவது அல்லது எதையாவதுக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எப்பொழுது ஏற்படுகிறது? அது பயத்தில் வேரூன்றியுள்ளது. ஒரு சூழ்நிலை நாம் நினைப்பதை விட வித்தியாசமாக மாறினால் என்ன நடக்கும் என்று நாம் பயப்படுகிறோம். அதைவிட, நாம் நினைப்பது நடந்தே ஆக வேண்டும் என்ற impulsive desire கூட அந்தப் பயத்துக்கு மூலகாரணமாக இருக்கிறது.


நாம் எதையாவதுக் கட்டுப்படுத்த முயலும்போது, எது சிறந்தது என்று நமக்குத் தெரியும் என்றும், நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுவிட்டோம், அனைத்தும் உணர்ந்த சர்வவல்லமையுடன் பார்க்கிறோம் என்று கருதுகிறோம். நாம் கட்டுப்படுத்த முயலும்போது, நமது யோஜனைகள், நமது திட்டங்கள் மற்ற அனைவருக்கும் சிறந்தது என்று முடிவு செய்கிறோம். பிரச்சனை என்னவென்றால், கட்டுப்படுத்துவது என்பது நமது தனிப்பட்ட கணிப்புகள், நம்பிக்கை அமைப்புகள் மற்றும் இவற்றின் இணைப்புகளிலிருந்து உருவாகிறது - நமது மதிப்பை நிரூபிக்கவும், பெருமைக்காகவும் நாம்தான் சரி என்று நிரூபிக்கவும் முயற்சி செய்கிறோம்.


சரணடைவது என்பது நம்மை விட பெரிய ஒன்றை நம்புவதாகும், இது பிரபஞ்சத்தின் மீதான நமது நம்பிக்கையை ஆழப்படுத்த உதவுகிறது.


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-னின் கூற்றுப்படி- our greatest skill is to decide whether we believe in an altruistic, supportive universe or an antagonistic universe that is out to get us. Do you believe the Universe has your back, or do you believe that life is a tough battle with many forces fighting against you? Glass half full or half empty?


பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் நேர்மறையான உணர்வு நமக்கு இருக்கும்போது நம்மை விட மேலான ஒன்றை நம்புவது எளிது. இவ்வித நம்பிக்கை ஆரம்பத்தில் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாவது, இதற்கு credit அன்பான, ஸ்திரமான குடும்பத்தைத் தந்த பெற்றோருக்குரியது. பிரபஞ்சம் அதன் பங்கைச் செய்யும் என்று  நாம் நம்புகிறோம், நமக்கு ஆதரவு மற்றும் உதவி வரும் என்றும் நம்புகிறோம்.


இப்படி நாம் நம்பத் தொடங்கும் போது, ​​நம் சிந்தனை, தர்க்கரீதியான மனதில் இருந்து ஆன்மீகத்திற்கு நகர்கிறது. ஒரு ஆன்மீக நம்பிக்கை நம்மை நம் புலன்களால் உணரக்கூடிய வடிவத்திற்கு அப்பால் பார்க்க முன்செலுத்துகிறது. உணர மட்டுமே முடிந்த, ஆனால் புலன்களுக்குத் தெரியாததையும் காணாததையும் நம்புகிறோம். இதயம் மற்றும் நமது உள்ளுணர்வு நம்மை வழிநடத்த அனுமதிக்கிறோம், இப்படிச் செய்யும்போது நாம் தனிப்பட்ட கணிப்பாகக் கருதுவது, ஒன்றைக் கட்டுப்படுத்துவது, பிரச்சினைகளை தற்குறியாகக் கையாளுதல் மற்றும் பிரச்சினைகளின் எல்லைகளை வரையறுப்பது ஆகியவற்றின் அவசியம் இல்லாமற்போகிறது.


சில சிக்கல்கள் இந்த நம்பிக்கை மீதான சந்தேகத்தை, நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கையில் தொடர்ந்து நிகழும் எதிர்மறையான நிகழ்வுகள், உறவுச் சிக்கல்கள், பணப்பிரச்சினைகள் போன்றவை. உண்மையில் கூர்ந்து நோக்கினால், இவை எல்லாமே வெவ்வேறு வகையில் உருவானவைதான், அதேபோல தொடர்ந்து இருப்பதில்லை. ஒன்று முடிந்ததும் இன்னொன்று என்று நாமாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்றாகவே இருக்கின்றன.


உதாரணத்துக்கு ஒரு சராசரி நாள், அன்றைய தினம் காலையில் தலைவலியோடு எழுந்திருக்கிறோம் அல்லது traffic jamமில் மாட்டிக் கொண்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் அதிகபட்சம் தலைவலி / போக்குவரத்து நெரிசல் ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கிறது. ஆனால், அந்த பிரச்சினையில் உண்டான mood change எதிர்மறையாக நாள் முழுதும் நம்மைச் சிடுசிடுப்போடு இருக்க வைக்கிறது, இல்லையா?


இப்போது இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்

நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்?


நீங்கள் சூழலைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் என்ன மோசமாய் போய்விடும்?


நீங்கள் நம்புவதெல்லாம் உண்மையா?


நீங்கள் நினைப்பது போல் எல்லாம் நடக்கவில்லை என்றால் உங்கள் நிலைமை மோசமாகிவிடும் என்பது முற்றிலும் உண்மையா?

எதையெல்லாம் விடமுடியாமல் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள்?


Synchronocity தத்துவத்தின்படி நான் விரும்பும் அனைத்தும் என்னை விரும்புகின்றன என்பதை முழுமையான ஆழமான நம்பிக்கையின் ஊடாக அவை நம் வழியில் வருகின்றன. சுருக்கமாக எண்ணம் போல் வாழ்வு.


சரணாகதியால் என்னென்ன நன்மைகள் கிடைக்கக்கூடும்?

நாம் non-judgemental ஆக மாறக்கூடும்

இந்த நொடியில் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்கிறோம், ஏனென்றால், கடந்த காலம் அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, நம்மால் சரணாகதி அடைய முடிவதில்லை.

ப்ரத்யாஹாரம் (withdrawal of senses) என்ற யோக நிலை எளிதில் கிட்டும்.


Sloka 1:https://vidhoosh.blogspot.com/2021/11/11.html

Sloka 2: https://vidhoosh.blogspot.com/2021/11/12.html

நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் - 1.1

 நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்

ப்ரத²மத³ஶகம் (1) – ப⁴க³வத꞉ ஸ்வரூபம் ததா² மாஹாத்ம்யம்

ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகமனுபமிதம் காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்

நிர்முக்தம் நித்யமுக்தம் நிக³மஶதஸஹஸ்ரேண நிர்பா⁴ஸ்யமானம் |

அஸ்பஷ்டம் த்³ருஷ்டமாத்ரே புனருருபுருஷார்தா²த்மகம் ப்³ரஹ்ம தத்த்வம்

தத்தாவத்³பா⁴தி ஸாக்ஷாத்³கு³ருபவனபுரே ஹந்த பா⁴க்³யம் ஜனானாம் || 1-1 ||

सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां

निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।

अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं

तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥

முதல் ஸ்லோகத்தின் பொருள்: 

கடக்கவியலாத பேரின்பம் இது, தூய நனவின் தன்மை கொண்டது, இதற்கு இணையானது அல்லது ஒப்பானது ஏதும் இல்லாதது, கால-நேரம் மற்றும் இட வரம்புகள் முற்றிலும் இல்லாதது. எப்போதும் மாயையிலிருந்து விடுபட்டுள்ளது. பிரம்மஞானத்தை நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான உபநிடத விளக்கங்கள் தெளிவாக்க முயல்கின்றன, இன்னும் தெளிவாக இல்லை. பிரம்மதத்துவம் ஆரம்பத்தில் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது. ஆனால் முயன்று அதை உணர்ந்து கொள்வதே மிக உயர்ந்த புருஷார்த்தம், அதாவது விடுதலை, அது மிகவும் யதார்த்தமானதாக  நம் மானுடக் கண்  முன்னே குருவாயூர் கோவிலில் (ஸ்ரீ கிருஷ்ணரின் உருவமாக) ஒளிர்கிறது.  அற்புதமானது, ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைத் தேடும் மக்களின் அதிர்ஷ்டம்தான் இது.

====================

உன்னத யதார்த்தமான பிரம்ம தத்துவம் என்ற உன்னத உண்மை, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அது மனதுக்கும் புலன்களுக்கும் எட்டாதது. இது அறிவுக்கு அப்பாற்பட்டது. இது மற்ற அனைத்திற்கும் வெளிச்சமாய் இருக்கிறது, ஆனால் எதுவும் அதற்கு ஒளி அல்ல. வார்த்தைகளால் அதை வெளிப்படுத்த முடியாது. மனம் அதை நினைக்க முடியாது. புத்தியால் அதை புரிந்து கொள்ள முடியாது. புலன்களால் அதை உணர முடியாது. அப்படிப்பட்ட அற்புதம்தான் உண்மை. பிரம்மஞானம் என்பது எதையாவது பற்றிய அறிவு அல்ல, மாறாக முழுமையான அறிவாக மாறுவது. அது எல்லையற்றது. அது ஒரு அனுபவம். கருத்து அல்ல. இது முழுமையானது, எனவே, இருமை (கடவுள் - உலகம், பொருள்-ஆன்மா, உடல் - மனம் போன்ற dualistic elements) மற்றும் முரண்பாடான நிகழ்வுகளுக்கு அல்லது கருத்துக்கு (இல்லாத - இருக்கிற, நிறைய - அரிதாக, பின் - முன், முடியும் - முடியாது, ஆபத்து - பாதுகாப்பு, இருள் - ஒளி, கிழக்கு - மேற்கு, தோல்வி - வெற்றி, நன்மை-தீமை போன்ற pairs of opposites) அப்பாற்பட்டது. அதை அறிவதே மிகப் பெரிய பாக்கியம், அதை அறியாமலேயே இறக்கும் ஆன்மா  துரதிஷ்டசாலி.

அழிவுக்கு ஏதுவான விஷயங்கள் தற்காலிகமானவை,  அவற்றை பின்தொடர்வது மதிப்புக்குரியது அல்ல. அதனால் பல வருட வாழ்க்கை கூட மிகவும் சிறியதாகி விடக்கூடும். பொருட்களை அனுபவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. மனிதன் செல்வத்தில் திருப்தி அடைவதில்லை. எவ்வளவு பெருகிறோமோ, அவ்வளவு தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இன்னும் இன்னும் தேவைகள் கூடிக் கொண்டே போவதால், இன்னும் செல்வம் வேண்டியதாகி விடுகிறது.

தனது மனசாட்சிக்குத் தெரிந்தாலும் கூட மனிதன் அழியாதவராகவே மாற விரும்புகிறார். துரதிர்ஷ்டவசமாக, அவர் உண்மையில் நல்லவற்றுக்குப்  புறம்பாக தனக்கு இன்பமானதைப் பின்பற்றுகிறார். நல்லது ஒன்று, இன்பமானது மற்றொன்று. ஒன்று விடுவிக்கிறது, மற்றொன்று பிணைக்கிறது. அந்தக் கணம் நமக்கு அது கவர்ச்சியாக இருந்தாலும் இன்பத்தை பற்றிக் கொள்ளக்கூடாது.

வெறும் பக்தி மூலம், தினசரி குடும்ப வாழ்க்கையின் தேவைகளை முடித்து விட்டு, சாதாரண பூஜை விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அல்லது எதுவும் செய்யாமல் வெறும் சிந்தனையை ஒருமித்து சில நொடிகள் பிரார்த்தனை செய்வதன் மூலம், நாம் materialistic வாழ்வு வாழ்ந்து கொண்டே, ஆன்மசக்தி பெற முடியுமா?

Retrocausality கோட்பாடு காரணம் (cause) மற்றும் விளைவு (effect) பற்றிய ஒரு கோட்பாடு, அதில் ஒரு விளைவு அது நிகழ்ந்ததன் காரணத்தை காலப்போக்கில் முன்வைக்கிறது, எனவே பிந்தைய நிகழ்வு (காரணம்) முந்தையதை (விளைவு) பாதிக்கிறது. நாம் இன்று செய்யும் ஒவ்வொரு செயலும் (action) என்றோ ஒரு நாள் முன்பே நாம் செய்த செயலுக்குக் காரணமாக இருந்திருக்குமா? இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நாராயணீயத்தில் பேசப்பட்டிருக்கும் பிரம்மதத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

இதை மிகவும் நமக்கு எளிதாகப் புரியும்படி நம்மைச் சுற்றியே நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றை நாம் கவனக்குறைவால் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். நாம் பின்னாளில் ஏதாவது (விளைவு) நடக்கும் என்று முன்னறிவிப்பு செய்யும் போது (காரணம்) அது ஒரு retrocausality.

ஒரு நல்ல உதாரணம் ஒரு சபரிமலைக்குச் செல்லவதற்காகக் குடிப்பழக்கத்தை விட்டுவிடுவது, உடல்எடை குறைய உடற்பயிற்சி செய்வது, ஜுரம் சரியாக மருந்து சாப்பிடுவது, ஆபரேஷன் செய்து கொள்ள ஆஸ்பத்திரியில் சேருவது, மாதக் கடைசியில் சம்பளம் வரும் என்று மாதம் முழுக்க வேலை செய்வது, என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்பது உண்மையாய் இருக்க முடியாது, அப்படித்தானே?