Showing posts with label people i adore. Show all posts
Showing posts with label people i adore. Show all posts

லதா


ரேடியோ என்றறியப்படும் வானொலி


இனிமே இப்டி செய்வியா

மாதுரி தீக்ஷித் - People I adore

மாதுரி தீக்ஷித்-துக்கு அறிமுகம் தேவையா என்ன? தேவதாஸ், கஜ காமினி மற்றும் ஆஜா நச்லே என்ற படங்கள், பெரியதாக கதையொன்றும் இல்லையென்றாலும், மாதுரியின் நடனத்துக்காகவே சேமித்து வைத்துள்ளேன்.

தேவதாஸ் (2002-ஹிந்தி) ஹிந்துஸ்தானி இசை மீதான ஈர்ப்புதான் என்றாலும், மாதுரி தீக்ஷித்தின் அற்புதமான முகபாவங்களாலும் பிடித்துப் போன பாடல் இது. பொறுமையாய் கேட்டு ரசியுங்கள். கொஞ்சமும் பிசிறாமல், ரொம்ப அழகான முகபாவங்களோடு சிரமமே இல்லாமல், எத்தனை இலகுவாக நடனமாடுகிறார் பாருங்கள்.




அப்புறம் இந்தப் பாடல். 1:00 to 1:18 வரை சற்றே நிதானித்து கவனியுங்கள். தேவதாஸ் வரமாட்டான் என்று Kalibabu (மிலிந்த் குணாஜி) சொன்னதும் சந்த்ரமுகி (மாதுரி) அவன் அப்படி வந்து விட்டால் போகும் போது இந்த சலங்கையை (gungru) நீ அணிந்து செல்ல வேண்டும் என்கிறாள். தேவதாஸும் வந்து விடுகிறான். Stunning expressions:)



மாதுரி என்ற அருமையான artist.. just beyond comparison.

ஹல்திராம் ரசகுல்லாவும் கொஞ்சம் காராசேவும்

பதிவுலகில் எளிமையான வார்த்தைகளுடன் கவிதைகள் காணக் கிடைக்கச் செய்யும் யாத்ரா, பா.ராஜாராம் வரிசையில் நான் மிகவும் விரும்பிப் படிக்கும் கவிதை சிற்பி கவிஞர் ராஜா சந்திரசேகர்.

நாம் எளிதில் கடந்து சென்று விடும் தருணங்களை படம்பிடித்துக் காட்டி, இதோ பார், இப்படி இருக்கு அப்படி இருக்கு என்று ஒரு குழந்தையின் மகிழ்வோடு, அவரிடம் பேசும்போதே விழியோரச் சுருக்கங்களில் காணக் கிடைக்கும் மகிழ்வின் ஒளியும், ஒரு perfect கலைஞனாக, கவிதைகளின் நூல் பிடிபடும் போதெல்லாம் குதூகலித்து மகிழ்ந்து, கண்ணாடிவளைச் சில்லு கொண்டு சின்ன வயதில் செய்து மகிழ்ந்த கலீடாஸ்கோப் ஜாலங்கள் தெரியும் இவர் கவிதைகளில். பென்சில் நதி நெகிழ்ந்து வழிந்து போகும் இடமெல்லாம் பசுமை, வளமை, வாழ்வின் நிர்வாணம்.

ராஜா சந்திரசேகர் கவிதைகள் என்றொரு தளத்தில் நிறைய பிரமிக்க வைக்கும் வார்த்தைக் கோர்ப்புக்கள், எண்ணச் சிதறல்கள் என்று இறைந்து கிடக்கின்றன.

இவரது அனுபவ சித்தனின் குறிப்புக்கள் அடர்த்தியானவை. ஒவ்வொரு கவிதையும் ஒரு கட்டுரையாகும் வளமையும், நாவலாகும் உணர்வுகளும், கதையாகும் வாழ்க்கையும் செறிந்தவை.

நிறைய கவிதைகளில் குழந்தையின் பார்வையில் விரியும் உலகமாகவும் சொற்கள் கொஞ்சி மகிழ முடிகிறது. நிறைய கவிதைகளுக்குள் கவிஞன் எட்டி நின்று இரண்டு மனசுக்குள் கூடு பாய்ந்து இரண்டு மனசுகளையும், சிலமுறை அதையும் தாண்டிய எண்ணிக்கையில் பாய்ச்சிய ஒளி வெள்ளமாய் தெறிக்கும் பல வண்ணங்களைப் பீய்ச்சிய பிரமிடை படித்து விட்ட கருவமும் ஓங்குகிறது.

அதுவரை ராஜாசந்திரசேகர் கவிதைகள் மட்டுமே படித்து வந்த நான், சில நாட்கள் முன், நான் இவர் தளத்தை கூகிளில் சிங்கமும் எலியும் என்ற குழந்தைக் கதையை தேடும் போது பென்சில் நதியைச் சென்றடைந்தேன். சிங்கமும் சுண்டெலியும். பிரமித்து நிற்கிறேன்.
சிங்கம் தூங்காது
சுண்டெலிதான் தூங்கும்
நீ சிங்கமா சுண்டெலியா
மகனிடம் கேட்டேன்
உடனே சொன்னான்
நிறைய சிங்கம்
கொஞ்சம் சுண்டெலி

அவரது ஒரு சில கவிதைகளை எடுத்துத் தருகிறேன். மிகுதிய பென்சில் நதியில் பருகிக் கொள்ளுங்கள்.
===========================

அம்மாவுக்கு பெரிய மீசை
குழந்தை கிறுக்கிய
புகைப்படத்தில்

===========================

ஒரு கவிதையில்
வைத்துப் பார்க்க வேண்டும்
பேருந்தில் தரிசித்த
குழந்தையின் புன்னகையை

===========================

கட்டியிருந்த ஆடு
திரும்பி வந்தபோது
தொங்கிக் கொண்டிருந்தது

என்ற இவரது கவிதையைப் படித்ததும், இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுகள் எனக்கு.
ownership, திருட்டு,
சொத்து, உணவு,
இழப்பு, கொலை,
நேயம், குரூரம்
என்று பல மனித முகங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் ஆட்டுக்கு பின்னால். கிடாகளுக்கு குழந்தைகளை காக்க வேண்டிய கடமை இருக்கிறதோ என்னவோ, ஆடுகளுக்கு குட்டிகள் இருந்தால் யார் அவைகளுக்கு பாலூட்டுவார்கள்?

எத்தனை வாழ்க்கை இக்கவிதை வரிகளுக்குள்? உங்களுக்கு எத்தனை பேர் தெரிகிறார்கள் என்று கண்டிபிடியுங்கள் பார்க்கலாம்?

===========================

எனக்குள்
மீதி கவிதை
கவிதையில்
முடியாத நான்

என்று கூறும் இவர் எழுதிய மனிதர்களையும், சில வாழ்க்கைத் தருணங்களையும் படித்துக்கொண்டே, ருசிக்கத்தான் வேண்டும் ஹல்திராம் ரசகுல்லாவும் கொஞ்சம் காராசேவும், வித்தியாசமே தெரியாது, கொஞ்சம் தேநீரும் இருந்தால்.

காலம்னிஸ்ட் வி.கங்காதர்


ஒரு சமயத்தில் வி.கங்காதர்-ரின் பத்திகள் (column) படிக்கவே ஹிந்து படிக்க ஆரம்பித்தேன். நாளடைவில், ஹிந்துவில் உள்ள ரசனையான ஆங்கில எழுத்து நடை என்னை ஹிந்து பத்திரிகை அடிக்ட் ஆக்கி விட்டது.

அப்படி என்னையும் தினசரி பத்திரிகை வாசிப்பவளாக ஆக்கிய வி. கங்காதர் அவர்களுக்கு இந்த போஸ்ட் சமர்ப்பணம்.

அவருடைய பத்திகளில் சில இங்கே படிக்கக் கிடைக்கும்.
rediff.com: V Gangadhar's home page

V. Gangadhar – Slice of Life Archive : Hindu Sutra

A question of age:The best way to delay ageing is to accept it, says V Gangadhar
திரு.வி.கங்காதர் ஹிந்துவில் slice of life என்ற தலைப்பில், இயல்பான பேச்சு நடையிலேயே வரும்.

ஒவ்வொன்றும் நமக்கு மென்மையான கிண்டல் உணர்வும், அப்படியே இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து பின்னால் சாய்ந்து கொண்டு விட்டத்தை பார்த்து ஒரு மெல்லிய புன்னகை வரவழைக்கும் nostalgic அனுபவங்களையும் பற்றி எழுதி இருப்பதில், எனக்கு மிகவும் பிடித்த சில பத்திகள், தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, முறுக்கு, மாங்காய் சாப்பிடுதல் போன்றவை பற்றி எழுதி இருப்பன.

இவரைப் பற்றி இன்னும் எழுத வேண்டும் என்றுதான் ஆசை. கைகடிக்கும் கடிகார முட்கள். என் சேகரிப்பில் இருக்கட்டும் இப்போதைக்கு என்று சிலவரிகளைக் குறித்துள்ளேன். இன்னும் விரிவாக இவரது பத்திகளை, தகுந்த அனுமதி பெற்று, மொழிபெயர்த்து பகிர்கிறேன்.