Destiny In Her Hands

 Destiny In Her Hands (Vidhoosh)

Before swords were drawn,
Before Krishna whispered destiny,
I existed.
Beyond name, beyond birth,
Beyond their fragile rules of dharma.
I walked unseen
Through Hastinapur’s royal corridors,
My footsteps louder than Bhishma’s vow.
They called me victim,
Thought my voice could be silenced.
Desire for choice, for justice that cannot be chained.
They tried to make me shame,
Rejected, wounded.
I refused the rules of men,
Even when written in the stars.
I refused.
I shed Amba like skin,
Not just to become Shikhandi.
But as a question in flesh.
Who decides destiny?
What law calls itself dharma,
When it ignores the living heart?
I am the storm beneath the battlefield,
The whisper that topples kingdoms,
I am the equation behind every fall,
The shadow tilting cosmos’ balance.
Every arrow I guide, every move I make,
A proof.
Destiny is not written by men.
It is felt, embodied, enforced by the unseen.
While Krishna speaks,
I live it, question it, remake it.
I bend the rules of existence.
When Bhishma falls,
Not defeated by Arjuna,
But me.
I did not kill Bhishma.
I killed the illusion of impartial fate,
Shattered the lie that women are passive,
That desire is weak,
That vengeance is vulgar.
The unseen architect,
The eternal force,
The woman who became more than flesh,
Not the chapter you wrote,
Nor the adjective you assigned;
The silence between the lines,
The storm you failed to record.
The voice that no counsel can silence.
The voice of choice in a world of obligation.
I am the wheel of fate. I am not victim.
I am defiance beneath dharma.
I am the story you could never finish.
I am Amba.

Whose Womb Is It Anyway?

டிஸ்கி: இது முற்றிலும் என் சொந்தக் கருத்துதான். ஈவெராவை நான் படித்ததில்லை, அவரை எனக்கு பிடிக்காது என்பதால் இனியெப்போதும் படிக்கவும் மாட்டேன். ஈ.வெ.ராவுக்கும் எனது கருத்துக்களுக்கும் சம்மந்தம் இல்லை. அப்படி நீங்களாக நினைத்துக் கொண்டால் அது லதா மங்கேஷகர் பாடகியானதற்கு ஒரு காரணியாக தன்னை நினைத்துக் கொள்ளும் சீமான் என்று நான் சொல்வேன். பரவாயில்லையா? ஈவெரா அபிமானிகள் என்னை புறக்கணித்துவிடலாம். உங்கள் அளவுக்கு அறிவு இல்லை எனக்கு என்பதை ஏற்கனவே ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் உட்கார்ந்து வரிவரியாக பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். Don't waste your time trashing here.


----------------------------------------------------



பெண்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களைச் செய்ய சுதந்திரம் வேண்டும் என்று போராடும் அதே வேளையில், ஏதோ ஒரு சமூகச் சொத்து போல பெண்கள் தங்கள் உடலை (கருப்பை) என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்றும் சமூகம் காரசாரமாக விவாதங்களை நடத்துவது முரண்பாடாக இல்லையா? நான் பன்னிரண்டாவது படிக்கும் போது, வேலைக்கு போய் கொண்டிருந்த ஒரு பெண் தாய்பாலை பாட்டிலில் அடைத்து கொடுத்த காரணத்துக்காக 'நீயெல்லாம் ஒரு அம்மாவா?' என்று கேட்ட குடும்பத்தைக் கண்டேன். பெண்ணியம் மற்றும் பெண்ணுடல் பற்றிய சமூகத்தின் பார்வை குறித்த அதிர்ச்சியைக் கொடுத்த கணம் அது.


பெண்கள் அனைத்து உரிமைகளுடன் கூடிய முழுமையான தனிநபர்களாக இல்லாமல், அவர்களின் உடல் தோற்றத்தை வைத்து எடைபோடப்படும் போதும், மற்றவர்களின் ஆசைகள் அல்லது தேவைகளை நிறைவேற்றுவதற்கான கருவிகளாக கருதப்படும் போதும் அவர்கள் objectify செய்யப்படுகிறார்கள். ஒரு பெண்ணின் மதிப்பு அவளது தோற்றத்தில் உள்ளது என்ற எண்ணத்தை வலுப்படுத்த, நம்பத்தகாத அழகு standards இருக்கின்றன.


பெண்கள் பெரும்பாலும் கார்கள் முதல் கொலோன் வரை பொருட்களை விற்பனை செய்வதற்கான eye-candyகளாக சித்தரிக்கப்படுகிறார்கள், அவர்களின் திறமைகள் அல்லது புத்திசாலித்தனத்தை விட அவர்களின் உடல் அமைப்பு கவனம் பெறுகிறது. அலுவலகங்களில் கூட அவர்களின் தொழில்முறை பங்களிப்புகளை குறைக்கும் வகையில் பெண்கள் அவர்களின் திறமையை விட அவர்களின் தோற்றத்திற்காக அதிகமாக மதிப்பிடப்படுகிறார்கள்.


ஆடை அணிவது கூட விகிதாசாரமற்ற முறையில் பெண்களைக் குறிவைக்கின்றன.  சமூகம் revealing dressingகை விமர்சிக்கும் அதேவேளையில்,  அவ்வகை உடையலங்காரங்களை அழகுக்கான standardsகளாக முன்னிறுத்தி இளம் பெண்களின் பொருத்தமான உடையாக வலியுறுத்துகின்றன. அதே நேரத்தில் பெண்கள் தேவையற்ற கவனத்தை பெறுவதைத் தவிர்க்க ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்ள வேண்டும் அல்லது உடை அணிய வேண்டும் என்றும் சமூகத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.


இவையெல்லாம் பெண்களை ஆணின் விருப்பத்திற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு காட்சிப்பொருளாக மட்டுமே அவளது மதிப்பைக் குறைத்து விடுகிறது.


பெண் தலைவர்கள்/பிரபலங்கள் பெரும்பாலும் அவர்களின் கொள்கைகள் அல்லது சாதனைகளை விட அவர்களின் தோற்றம் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை அடிப்படையில் மட்டுமே ஆராயப்படுகின்றனர். 


அவளுடைய தொழில்முறை லட்சியங்களை விட பெண்கள் குடும்பப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான கருத்துக்கள் தொடர்கின்றன. உடைமைகளாகக் கருதப்படும் எந்தவொன்றுமே அதன் தனித்துவத்தை இழக்கின்றது.


பெரும்பாலான சமூகங்களில் பெண்கள் அவர்களின் வரதட்சணை மதிப்பு அல்லது கருவுறும் திறனுக்கு மதிப்பளிக்கப்படுகிறார்கள். அங்கே அவர்கள் பொருளீட்டும் ஒரு வழியாகவோ அல்லது இனப்பெருக்கத்துக்கான ஒன்றாகவோ objectify செய்யப்படுகிறார்கள். 


திரைப்படங்கள் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் உள்ள பெண் கதாபாத்திரங்கள் hyper-sexualised ஆக இருக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண் கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தில் குறைவான கவனம் செலுத்தப்படுகிறது.


பெண்களுக்கான பாத்திரங்கள் பெரும்பாலும் காதல் வயப்படும் ஒன்றாகவோ, விமர்சனம்/கேலிக்குறியதாகவோ அல்லது அழுமூஞ்சித்தனமான ஒன்றாகவோ வரையறுக்கப்படுகின்றன.


அப்ஜெக்டிஃபிகேஷன் என்பது ஆழமாக வேரூன்றிய ஒரு பிரச்சினையாகும், இது பெண்களின் தனித்துவத்தை அழிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம், தன்னம்பிக்கை போன்ற தனி நபர் ஆற்றல்களை வளர்க்கும் முயற்சிகளை நோக்கி முன்னேறுவதைத் தடுக்கிறது.


நயன்தாரா செய்யும் ஒவ்வொன்றும் பேசுபொருளாக ஆகும் காரணம் அவரது தன்னம்பிக்கையான நிலைப்பாடு, அல்லது அப்படி இருப்பது போன்ற தோற்ற மயக்கத்தை உண்டு பண்ணி வைத்திருக்கிறார். ஆனால் உண்மையாகப் பார்த்தால், அவரும் இந்த objectificationனுக்கு அப்பாற்பட்டவர் இல்லை. சினிமாவுக்கான body standardsகளைப் பெற அவர் பல்வேறு அறுவைசிகிச்சைகள் செய்து கொண்டார், அதே போலத்தான் இந்த வாடகைத் தாய் ஏற்பாடும் இருக்கலாம். அல்லது வேறு மருத்துவ காரணங்களும் இருக்கலாம். இப்போதும் கூட அவரது மார்கட்டு சரிந்து விட்டது என்று எக்காளமாய் எழுதும் ஆட்கள் இருக்கிறார்கள்தானே. 

நயன்தாரா எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், இப்படி யோசிக்கும் மனது எந்தளவு சாக்கடைப் புழுவுக்கும் கீழ்த்தரமானது என்பதை உணர்ந்திருந்தால் உங்கள் வாய் மட்டுமல்ல உடல் முழுதும் துர்நாற்றம் எடுக்கும் ஒன்றாகவே உணர்ந்திருக்கக்கூடும். அப்படி எல்லாம் யோசிக்கும் மூளை என்ற ஒன்று இருந்தால் தானே? கழுத்துக்குக் கீழ் சதைபிண்டமாக ஒன்று இருந்தால் போதும் என்ற பார்வையில் வாழும் போது, சிந்தனை வேறு எப்படி போகும்?

ஒரு பக்கம் கணம் சமூகம் வாடகைத் தாய்களை அவர்களது தாராள மனப்பான்மையின் காரணமாக தேவதைகள் என்று கொண்டாடுகிறார்கள். அடுத்த பக்கமே, குழந்தைகளைப் பெற்றெடுக்க இஷ்டம் இல்லை என்று சொல்லும் சுதந்திரம் பெண்களுக்கு இருக்க வேண்டுமா என்று அவர்களே கேள்வி எழுப்புகிறார்கள். ஏனென்றால், வெளிப்படையாகவே, பெண்ணுடல் மற்றும் அவளுடைய கருப்பை அவளது பெண்மையை நிர்ணயிக்கிறது என்பது பொதுக் கருத்துடனேயே அவள் வாழ்வு முடிந்து விடுகிறது.

குழந்தையைப் பராமரிப்பது முதல் அவர்களை பெரியவர்களாக்கி வளர்ப்பது வரை, மற்ற வீட்டு வேலைகளோடு அவள் மீது திணிக்கப்படுகிறது. இதில் அவள் தன் தனித் திறன்களை வெளிக்காட்ட வேண்டும் என்றால், இவை அனைத்தையும் முடித்து விட்டு பின் எஞ்சி இருக்கும் நேரத்தில் தான் செய்ய முடியும் என்பது கண்ணுக்குத் தெரியாத காற்சங்கிலி. பல பெண்கள் சோர்ந்து போவது இங்கேதான்.

இவ்வளவு செய்த பின்னும், ஆண்களுக்கு இருக்கும் ரிடயர்மென்ட் பெண்களுக்கு கிடையாது. ஏதோ ஒரு விதத்தில் சமையல்கட்டை அவளுக்கான பாதுகாப்பு கவசமாக உருவாக்கி 'அம்மா-கை சமையல்' என்ற போலி பிம்பத்தில் சிக்க வைத்திருக்கிறார்கள். ஏன், ஹோட்டல்களில் எல்லாம் ஆண்கள் சமைப்பது இல்லையா என்றால், ஆமாம், ஆனால் காய் நறுக்குவது முதல் பாத்திரம் கழுவுவது வரை ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஆள். வீட்டில் சும்மாதானே இருக்கிறாய் என்ற எகத்தாளம் கூட வராது.

வாடகைத் தாய்மை, பெண்களின் விடுதலை, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் உரிமை மற்றும் கருப்பை சுதந்திரம் ஆகியவை ஒரு பெண்ணுக்கு தன் உடல் மீதான உரிமை மற்றும் சமூக விதிமுறைகள் பற்றிய விவாதங்களில் சிக்கலாகப் பின்னிப் பிணைந்துள்ளன.

பெண்களின் விடுதலை என்பது பெண்கள் மீதான ஒடுக்குமுறை பார்வைக்கு எதிராக போராடுகிறது. வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் சமத்துவத்திற்காக, பொறுப்புக்களைப் பகிர்வதற்கான போராட்டம். இது ஆண்களை எதிர்த்து செய்யப்படும் போர் இல்லை. இது பெண்கள் மீதான கீழ்த்தரமான பார்வை கொண்ட ஒவ்வொருவரையும் காலாவதியான ஒன்றாக ஆக்கவேண்டிய கடமை. அது பணியிடத்தில் வேறுபாடு, கருப்பை உரிமைகள் அல்லது சமூக விதிமுறைகள் என ஒரு பெண்ணின் விதியைக் கட்டுப்படுத்துவதற்கான எதையும் உடைக்கும் உரிமையை காட்டுகிறது.

கருப்பை மீதான உரிமை என்பது ஒரு பெண்ணின் தன்னிச்சையான முடிவுக்கான அதிகாரம் மற்றும் அவளது உடல் தொடர்பான முடிவெடுக்கும் ஆற்றலைக் குறிக்கிறது. இதில் கருவுறுதல், பிரசவம், கருத்தடை, கருப்பை சிகிச்சைகள், வாடகைத் தாய், கருக்கலைப்பு மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியம் ஆகியவை அடங்கும். இது உடல் மீதான அதிகாரத்தை வலியுறுத்துகிறது. அதாவது புறவயமான வற்புறுத்தல், பாகுபாடு அல்லது சமூகத் தீர்ப்பிலிருந்து விடுபட்டு, தனது உடல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க ஒரு பெண்ணுக்கு மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும் என்று கோருகிறது.

இந்த அடிப்படையில் வாடகைத் தாய் தன் முடிவை எடுப்பதற்கு ஒரு பெண்ணின் தனிப்பட்ட அல்லது அவளது தேவைகளின் அடிப்படையிலான விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது. இங்கே அவளது முடிவுகள் பணத்துக்காக எடுக்கப்பட்டாலும், அல்லது அன்பினால் இலவசமாகவே ஏதோ ஒரு சக குடும்பத்துப் பெண்ணால் செய்யப்படுகிறது என்றாலுமே  பெரும்பாலும் தார்மீக நெறிமுறைகள், எளியோர் மீதான சுரண்டல் மற்றும் தன் முடிவுகள் மீதான அதிகாரம் பற்றிய விவாதங்களைத் தூண்டுகிறது. அத்துடன் அவரது உடலைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை பற்றியும்தான்.

இவை ஒவ்வொன்றும் கூட்டாக பெண்களின் வாழ்க்கையை நீண்ட காலமாக ஆன்மா இல்லாத ஒரு உடலாக மட்டுமே பார்க்கும் சமூக கட்டமைப்புகளை உடைப்பதை வலியுறுத்துகின்றன. கருத்தரிப்பது, தத்தெடுப்பது அல்லது வாடகைத் தாய் முறையைப் பயன்படுத்துவது, என்பதெல்லாம் சமூக அல்லது குடும்ப அழுத்தங்களிலிருந்து விடுபட்ட பெண்ணின் முடிவு மட்டுமே இருக்க வேண்டும்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் உரிமை என்பதில், அவளது உடல், உணர்ச்சி மற்றும் சமூக அடையாளத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது. இது குறித்து முடிவெடுக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு என்பதை மறந்து விட்டு, 'அம்மா தெய்வம்' என்ற உட்பட்ச கற்பனையான அரியணையில் ஏற்றிவிட்டு அவளை அவளது விருப்பத்தை மீறிய செயல்களை செய்யக் கட்டாயப்படுத்தும் எதுவுமே பெண்களுக்கு எதிரானவைதான்.

கருப்பை உரிமை என்பது சில சமூக விரோத சிந்தனையாளர்களால் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்வது என்று திரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சரியான மகப்பேறு பராமரிப்பு, கருவுறுதல் சிகிச்சைகள் அல்லது கருத்தடைகளைப் பெறுவதை உறுதிசெய்து, அவர்களின் விருப்பத்தை ஆதரித்து, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் என்பதே கருப்பை உரிமை. ஒரு பெண் பூப்படையாமல் இருந்தாலும், மருத்துவக் காரணங்களால் கருவுற முடியாத நிலையில் இருந்தாலும், இல்லை அவள் விருப்பத்தின் பேரிலோ வேறேதோ காரணங்களாலும் கூட கருவுறும் விருப்பமில்லாமல் இருந்தால் அவள் உரிமைகளை பாதுகாத்தல் இந்த சமூகத்தின் கடமை.  இந்த உரிமையானது உயிரியல் திறனைப் பற்றியது மட்டுமல்ல, எப்போது, ​​எப்படி, அல்லது தான் பெற்றோராக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுப்பதில் மற்றவரின் வற்புறுத்துதல், பாகுபாடு அல்லது களங்கம் ஆகியவற்றிலிருந்து சுதந்திரம் பற்றியது.

பேச வேண்டியவற்றைப் பேசாமல், யாருடன் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதரில் உறவு கொள்ளலாம், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற பாலியல் ரீதியில் மட்டுமே பரப்பப்படும் கருத்துக்கள் எல்லாமே பெண்ணுடல் மீதான சுரண்டல்கள் தான். இங்கே பொறுப்புக்களைச் சுமக்க மறுக்கும் ஒரு ஆணின் விருப்பம் மட்டுமே நிறைவேறுகிறது. அந்தப் பெண்ணின் நிலை என்னவாகும்? 

உடலுறவு மட்டுமே உறவை நிலைநாட்ட ஒரே வழி அல்ல. எப்படி?

நாம் காதல் என்று அழைப்பது உண்மையில் பரஸ்பர லாப நஷ்டங்களைக் கணக்குப் போட்டு செய்யப்படும் ஒரு திட்டம்தான். காதல் என்பது ஒன்று சேர்வதே தவிர, பிரிந்து போவது அல்ல என்று நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாம் வாழ்க்கையை வாழ்க்கையாக பார்க்கவில்லை. நம் கல்வி முறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்று எல்லாமே கன்ஸ்யூமரிஸம் அடிப்படையில்  எப்படியெல்லாம் எல்லாவற்றையும் நமது நன்மைக்காக எப்படிப் பயன்படுத்துவது என்று மட்டுமே திணிக்கிறது.

ப்ரோபயாடிக் பாக்டீரியாவிலிருந்து கிரகத்தின் மிகப்பெரிய விலங்கான சுறாவின் எலும்புகள் மட்டுமல்ல சக மனிதர்கள் வரை அனைத்தையும் நமது நன்மைக்காக பயன்படுத்த விரும்புகிறோம். இந்த பூமியையே நமது நன்மைக்காகப் பயன்படுத்த விரும்புகிறோம். இதில், துரதிர்ஷ்டவசமாக, இன்று மக்கள் 'உறவுகள்' என்று அழைப்பதிலும் உண்மையில் உள்ளது transactionsதான். நீ இதை எனக்குக் கொடு, நான் உனக்கு அதைத் தருகிறேன். நீ எனக்கு இதைத் தராத பட்சத்தில் நான் அதை உனக்குத் தரமாட்டேன் என்று ஒவ்வொன்றையும் கணக்குப் போட்டு, எடைகளை சமப்படுத்துவதில் உறவுகளின் அன்பு கரைந்து போகிறது.

அதனால் தான் transactionsகளின் காலாவதி தேதியின் அடிப்படையில் காதல் தீர்ந்து போகும் போது விவாகரத்துக்கள் பற்றிய யோசனைகள் பெறுகி வருகின்றன. ஒரு transaction எவ்வளவு காலம் நீடிக்கும்? அதன் மதிப்பு இருக்கும் வரைதானே. நாம் அறியாத உண்மையான் வாழ்க்கைப் பகிர்வின் ஆழம் வேறு. உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நீங்கள் ஒருவரை சேர்க்க விரும்பினால், உங்களில் ஒரு பகுதியை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். அதுதான் காதலில் விழுதல், காதலில் பறக்க முடியாது, காதலில் நடக்க முடியாது, ஆனால் காதலில்விழ முடியும்.

ஆனால், பெரும்பாலான மக்களுக்கு, இது ஒரு டிரான்சாக்ஷனல் திட்டமாக மாறிவிட்டது - நான் விரும்புவதை எவ்வாறு பெறுவது? காதல் என்பது நீங்கள் விரும்பியதைப் பெறுவது அல்ல. லாபத்தைப் பற்றி நினைக்கும் தருணத்தில், காதல் மறைந்து போகிறது. ஹார்மோன்கள் காரணமாக மட்டுமே, ஈர்ப்பு உண்டாகிறது. ஒன்று சேர்கிறார்கள், இல்லையெனில், சமூகங்கள் கட்டமைக்கப்பட்ட விதத்தில் இணையாக மாறுகிறார்கள். காதலுக்கு அங்கே இடமேயில்லை. இந்த ட்ரான்சாக்ஷன்களில் உங்களிடமிருந்து நான் எதைப் பெற முடியும் என்பதைப் பற்றியது மட்டுமே எஞ்சி நிற்கிறது. அப்படியானால், இயற்கையாகவே நீங்கள் ஒருவரிடமிருந்து மகிழ்ச்சியைப் பெற முயற்சிக்கிறீர்கள். என்றால், அது நடக்காது. சிறந்ததை பகிர்ந்து கொள்ளும் போதே காதல் தன் வேலையைச் செய்யும்.

நாம் உறவு என்று கூறும்போது, மற்ற நாடுகளில் அது உடல் சார்ந்த உறவு.. இணைகளின் உறவையே குறிக்கிறது. ஆனால் இந்தியாவில் அது பல விஷயங்களாக இருக்கலாம். அது நம் பெற்றோருடன், நம் உடன்பிறந்தவர்களுடன், நம் நண்பர்களுடன், குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே, என பலவிதமான உறவுகள்.

ஏனெனில் உடல் என்பது உறவுகளை நிறுவுவதற்கான ஒரே வழி அல்ல! அறிவுபூர்வமாக நீங்கள் உறவுகளைப் பேண முடியும், உணர்வுபூர்வமாக நீங்கள் உறவுகளைப் பேண முடியும்.

அறிவுபூர்வமான உறவுகளும், உணர்ச்சிபூர்வமான உறவுகளும் உடல் உறவை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும். எப்படி? வெளிப்படையாகவே சொன்னால், உடல்கள் புறவயமாக மட்டுமே இணைய முடியும், இது உறவு அல்ல. உடலைத் தாண்டிய உறவை ஏற்படுத்த மனமும் உணர்ச்சியும் தேவை, இல்லையா? அதனால்தான் உடலால் இல்லாவிட்டாலும், மனதாலும் உணர்ச்சிபூர்வமாகவும் இணையும் இவ்வகை உறவுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகின்றன. அப்போதுதான் வாழ்க்கை சக்திவாய்ந்ததாக மாறும், அந்த உறவு மட்டுமே உங்கள் இருப்புக்கு அர்த்தமுள்ளதாக உங்களுக்குத் தெரியும்.

நாகரீக சமூகம் பல இணைகளை அங்கீகரிக்கவில்லை? அத்தகைய உறவுகளில் ஈடுபடும்போது ஒருவர் தங்களுக்கு தாங்களே உளவியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்?

பல வாழ்க்கைத் துணைகள் என்ற கருத்து வரலாற்று ரீதியாக சமூகத் தேவைகளிலிருந்து எழுந்தது. முந்தைய காலங்களில், ஆண்கள் பெரும்பாலும் போர்கள் அல்லது ஆபத்தான படையெடுப்பு தாக்குதல்களில் இறந்தனர். பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். சமூகக் குழுக்களுக்குள் குழுப்பாதுகாப்புக்காக ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொண்டனர். தொடர்ச்சியான குழந்தைப்பேறு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்கள், உயிர்வாழ்வதே சவாலாக இருக்கும் படையெடுப்புக்கள் நிறைந்த உலகில் ஆண் பாதுகாப்பை நம்பியிருந்தனர்.

இன்று, பாலின மற்றும் மக்கள் தொகை விகிதங்கள் ஏறத்தாழ சமநிலையில் உள்ளன. இப்போதும் அத்தகைய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது சமூக குழப்பத்தை உருவாக்கும். அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, நட்பு-தோழமை போன்ற மக்களின் நாகரீக நடத்தை உடைந்து போகிறது. இத்தகைய ஏற்பாடுகள் மோதல் மற்றும் சமத்துவமின்மைக்கு வழிவகுக்கும், குறிப்பாக பெண்களுக்கு, அவர்களின் சமூக நிலையை மோசமாக்கும்.

உளவியல் அடிப்படையில் பார்த்தால், உடல் என்பது சதை மற்றும் ரத்தத்தைக் காட்டிலும் மிக பெரிதானது. இது பரிணாமங்களின் நினைவுகளைச் சுமக்கும் ஆற்றல்களின் கட்டமைப்பு. பல இணைகளைக் கொண்டவர்களுக்கு இந்த கட்டமைப்பை உடைப்பது முரண்பட்ட நினைவுகளை அறிமுகப்படுத்துகிறது, உணர்ச்சி மற்றும் உடலின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கிறது.

வரலாற்று ரீதியாக, திரௌபதி போன்ற உருவகங்கள் இதை விளக்குகின்றன. அவளது வாழ்க்கை கொந்தளிப்பு நிறைந்தது. அவளது வாழ்க்கை உறவுகளின் சிக்கலில் இருந்து உருவானது. அத்தகைய உறவுகள் தனிநபர்களையும் சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை அவளது நிலைமை எடுத்துக்காட்டுகிறது. ஒருவரின் உடல் ஆற்றலைப் பேணுவது உயிர்வாழ்ந்திருப்பதற்கு அப்பால் தங்கள் வாழ்க்கையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு அவசியமானது.

திருமணம் என்பது மனிதனின் உடல், உணர்ச்சி, உளவியல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளிலிருந்து எழுகிறது. உடலோடு மனமும் முதிர்ச்சியடையும் போது, ​​இந்த தேவைகள் உருவாகின்றன. எட்டு வயதில், திருமணம் என்ற எண்ணம் அபத்தமானது. 14 வயதிற்குள், அது கொஞ்சம் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடும், 18க்குள் திருமணம் பற்றிய அபிப்பிராயங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பொறுத்தது.

இன்று, பொருளாதார மற்றும் சமூக சுதந்திரம், குறிப்பாக பெண்களுக்கு, திருமணம் செய்வதற்கான சில சமூக அழுத்தங்களை நீக்குகிறது. போலவே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அழுத்தங்களையும்.

இருப்பினும், பிற தேவைகள் உள்ளன. உணர்ச்சி ரீதியான தோழமை, உளவியல் ஆதரவு மற்றும் உடல் நெருக்கம். ஒவ்வொரு தனிநபரும் இந்த தேவைகளை சமூக அல்லது வெளிப்புற அழுத்தங்களின்றி, தெளிவுடன் மதிப்பீடு செய்ய வேண்டும்.

லிவிங் டுகெதர் போன்ற நவீன வாழ்வுமுறைகள் பாரம்பரிய கட்டமைப்புகளைத் தவிர்த்துவிடலாம் ஆனால் அடிப்படை மனித உளவியல் அமைப்பை மாற்றாது. ஒரு உறவு உணர்ச்சி மற்றும் உடல் நெருக்கத்தை உள்ளடக்கியதாக இருந்தால், அது ஒரு சான்றிதழ் இல்லாமலேயே திருமணம் போன்றதுதான். இருப்பினும், இணைகளை புதிது புதிதாக மாற்றும் போது, அத்தகைய வகையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் உளவியல் குழப்பத்தையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் உருவாக்கலாம். ஏனெனில் உடல் வலுவான நினைவாற்றலைக் கொண்டுள்ளது, மனதளவில் மட்டுமல்ல, ஆற்றலிலும்.

வரலாற்று ரீதியாக, உடல் நெருக்கம் புனிதமானதாகக் காணப்பட்டது, ஏனெனில் அது உடலின் நினைவுகளில் ஆழமான முத்திரைகளை பதிக்கிறது. இதுபோன்ற பல முத்திரைகள் உடல் நினைவுகளைக் குழப்பி, உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும். ஒருவரின் மகிழ்ச்சியையும் தெளிவான சிந்தனையையும் பாதிக்கலாம். அதனால்தான் ஆன்மீக உயர்வை நாடுபவர்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, பிரம்மச்சரியத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

சுயபரிசோதனைக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சமூக தாக்கங்களிலிருந்து வெளிப்பட்டு, உங்கள் தேவைகளைப் பற்றி சுயமாக சிந்தித்து, முடிவு செய்யவும். நீங்கள் ஒரு தேர்வு செய்தவுடன், அதை முழு மனதுடன் உறுதியுடன் பின்பற்றலாம், சமூகத்தின் பார்வை எப்படி இருந்தாலும்.

மன நிறைவுக்கான திறவுகோல் சிறந்த வாழ்க்கையைத் தேடுவது இல்லை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில் உங்களை முழுமையாக முன்னடத்திச் செல்வது பற்றியது. எந்தவொரு செயலிலும் உண்மையான ஈடுபாடு, எவ்வளவு சாதாரணமானதாக இருந்தாலும், ஆழ்ந்த அனுபவங்களுக்கு வழிவகுக்கும். நீங்கள் தொடர்ந்து இரண்டாவது ஒன்றை அதற்கு மாற்றாக யோசித்து, அதை அடையும் வழிகளை யூகிக்கும்போது, சமரசம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு, ஒரு மழுப்பலான விருப்பத்தை சிறந்ததென துரத்தும் வாழ்க்கையாகி, நிலைமை இன்னும் வீணாகிவிடும்.

எனவே, நீங்கள் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், தனிமையில் இருந்தாலும், அல்லது ஆன்மீகப் பாதையில் சென்றாலும், அதை முழுமையாக ஏற்றுத்தழுவுங்கள். அரை மனதுடன், ஸ்திரமற்ற வாழ்க்கை ஒன்றை தேர்ந்தெடுப்பதும், குழப்பமான வாழ்க்கையை வாழ்வது வருத்தத்திற்கும் அதிருப்திக்கும் மட்டுமே வழிவகுக்கும்.

இறுதியில், கேள்வி என்னவென்றால், திருமணம் செய்து கொள்வதா அல்லது தனிமையில் இருப்பதா, அல்லது குழந்தை தேவையா இல்லையா, என்பது பற்றியெல்லாம் அல்ல. மாறாக ஒருவரின் தேர்வுகள் தெளிவாக எடுக்கப்பட்டவையா அல்லது குழப்பத்தில் இருந்து எழுகின்றனவா என்பதுதான். 

அதே போலத்தான் வாடகைத் தாய்மை, சமூக அழுத்தங்களில் இருந்து விடுதலை, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் உரிமை மற்றும் கருப்பை சுதந்திரம் போன்றவையும். 

இந்தப் போராட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து கௌரவமான வாழ்க்கையை தர முடியாத பொருளாதார நிலையில், குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கும் தம்பதியினரில் ஒரு ஆணும்தான் இருக்கிறான்.

எனக்கு வாய்த்த மெய்யழகன்ஸ்

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை.

நான் வழக்கம் போல காலை 5 மணி காபியை நிதானமாய் பருகிக்கொண்டிருந்தேன். அடுத்த வாரம் என்னென்ன செய்ய வேண்டியது அவசியம் என்று என் டயரியை பார்த்து கொண்டிருந்தேன்.
டிடிங்....
கல்லூரித் தோழி குமாரியிடம் இருந்து எனக்கு குறுஞ்செய்தி வந்திருந்தது.
"Call me... Urgent"
இப்போது என்னத்துக்கு இப்படி மெசேஜ் அனுப்பி இருக்கா? அதுவும் காலங்கார்த்தால அஞ்சு மணி...
அவ பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருப்பாளோ.. ச்சே அதுக்குள்ளையா... தர்ஷினிய விட சின்னதாச்சே அது... என்பதில் ஆரம்பித்து அவளோட மாமனார் மாமியாரை சாகடித்து... சென்னை வந்துட்டாளோவில் நின்றது என் யோசனை... நானும் குமாரியும் பல வருடங்களாக பேசாமல் இருந்ததால் இயல்பாகவே அவள் அனுப்பிய செய்தி பற்றி எனக்கு ஆர்வமாக இருந்தது.
ரொம்ப ungodly hour என்பதால்...
"ஏய்! ரொம்ப நாளாச்சு, எப்படி இருக்கீங்க?" சிரித்த முகம் மற்றும் தம்ஸ்-அப் எமோஜியுடனும் அதைத் தொடர்ந்து பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன்.
அடுத்து பதில் வந்தது.
"வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பளம் வாங்கி அதில் வாழ்க்கையை சிக்கனமாக நடத்தி வருகிறீர்களா? புதிய நிதிநிலை உயரங்களை எட்டுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு பற்றி அறிய ஆவலா? "
அவள் அனுப்பிய செய்தியை விட அவள் என்ன செய்கிறாள் என்பதை பற்றிய மெல்லிய-உற்சாகத்தின் ஒரு ரோலர்கோஸ்டர் உள்ளுக்குள் சுழன்றது.
படே அச்சே லக்தெ ஹய் பாடலின் instrumental ஒலித்தது... என் ஃபோன்தான்...
"ஹலோ ..."
"யீ... வித்யா... எப்பிடி போகுது..."
(இப்பிடி காலங்கார்த்தால கேட்டா தப்பா நினைக்க தோணுமா இல்லையா)
"ஹாய் குமாரி. நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"
அவ்ளோதான்.... "தனிப்பட்ட சுதந்திரம்," "தனக்காக வேலை செய்தல்," மற்றும் "நான் எனது சொந்த முதலாளியாக எப்படி இருக்க முடியும்" என்பதைப் பற்றி எல்லாம் மூச்சு விடாமல் தொடர்ந்தாள்.
நான் எதுவும் கேட்பதற்குள், "இன்று சாயங்காலம் நாம் ஜும்பலக்கா கஃபேவில் சந்திக்கலாம்... எதாவது கதை சொல்லக்கூடாது? அது என் மீதுதான் சத்தியம்!" என்று ஒரேயடியா அன்பு சாரல் தான்.
இயற்கையாகவே, நானே முதலாளி என்ற சொற்றொடர் சவப்பெட்டியில் அடித்த கடைசி ஆணியாக இருந்தது. அவள் எனக்கு எதையாவது விற்க முயற்சிக்கிறாள் என்று எனக்குத் தெரியும், ஆனால் காபி காபி. (Actually I wanted that TEA!!)
அதனால் நான் சென்றேன்.
---
காட்சி: ஜும்பலக்கா காபி கடை, மாலை 4 மணி
அங்கே அவள் சிரித்துக்கொண்டே பிரீஃப்கேஸுடன் அமர்ந்திருந்தாள்.
"காபி கடைக்கு பிரீஃப்கேஸை யார் கொண்டு வருவார்கள்?"
சில அருவருப்பான சிறு சம்பிரதாய பேச்சுகளுக்கும், சிறிது nostalgic நினைவுகளுக்கும் பிறகு, நேரடியாக விஷயத்துக்குள் அவள் நுழைந்தாள்.
"ஸ்சோ, நீ ஏற்கனவே வாங்கி பயன்படுத்தும் பொருட்களைப் பகிர்வதன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புகிறாயா?"
எதிர்பார்த்தது போல், அவள் தனது பிரீஃப்கேஸை வெளியே இழுத்து, மலைகளில் ஏறும் மக்களின் லைசன்ஸ் ஃப்ரீ படங்கள் மற்றும் நிதி சுதந்திரம் கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் ஒரு மிகவும் வியத்தகு விளக்கக்காட்சியைத் தொடங்கினாள்.
சுருக்கமான சொல்லணும்னா வாயாலேயே வடை சுட ஆரம்பித்தாள்.
"Wait," நான் குறுக்கிட்டேன். "நான் bulk ஆக பொருட்களை வாங்கி, நாலு பேரை எனக்குக் கீழ் சேர்த்து விட்டால், அவர்கள் நாலு பேரைக் கொண்டு, நான் பணக்காரியாக இருப்பேன் என்று நீங்கள் என்னிடம் சொல்கிறீர்களா?"
“கரெக்ட்! நீ ஒரு ஆரம்ப முதலீடு மட்டுமே செய்ய வேண்டும்."
அப்போதுதான் அது என்னைத் தாக்கியது. நான் மல்டி-லெவல் மார்க்கெட்டிங் பிட்ச்சில் இருந்தேன், என் காபியால் கட்டப்பட்டிருந்தேன், மற்றும் அவளது இமைக்காத, நம்பிக்கையான பார்வையாலும்.
நான் நினைத்துக் கொண்டிருந்தபடி குமாரி எனக்கு ஏதோ ஒரு பொருளை விற்கவில்லை. அவள் எனக்கு தன் கனவை விற்றுக்கொண்டிருந்தாள் - சலவை சோப்பு எனர்ஜி பானங்களின் முடிவில்லாத விநியோகத்தை சொந்தமாக வைத்திருக்கும் கோடீஸ்வர கனவு.
---
அதற்குப் பிறகு அவள் என்னோடு பேசுவதே இல்லை . ஆறேழு மாதங்களுக்குப் பிறகு, நான் அவளை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். அவள் ஒரு தள்ளுவண்டியில் ஆம்வே தயாரிப்புகள் வைத்து விற்றுக் கொண்டிருந்தாள்.
நான் அவளை நெருங்கியதும், அவள் என்னைப் பார்த்தாள், கண்கள் விரிந்து, ஹெட்லைட் வெளிச்சத்தில் சிக்கிய மான் போல் உறைந்தாள்.
"ஏய், குமாரி!" புன்னகையுடன் அவளிடம் கேட்டேன். "கோடீஸ்வர வாழ்க்கை ! எப்படி இருக்கிறீர்கள்?"
அவள் சிரிப்பை வலுக்கட்டாயமாக வரச்செய்து, விளிம்பு வரை அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆம்வே தயாரிப்புகளை ஏற்றிய தனது வண்டியை காண்பித்து சைகை செய்தாள். "ஓ, உனக்குத் தான் தெரியுமே... என் தொழிலில் மீண்டும் முதலீடு செய்திருக்கிறேன்."
அதன் அர்த்தம் எங்கள் இருவருக்குமே தெரியும்.
பின்னர், அவள் மூக்குக்கு கீழ் முணுமுணுத்தாள்.
"உனக்கு ஏதாவது ஷாம்பூ தேவையா? வீட்டில் சுமார் 400 பாட்டில்கள் உள்ளன."
நான், “தேங்க்ஸ் குமாரி. ஆனால் அடுத்த காபி என் கணக்கு” என்றேன்.

அம்மா வீடு


அம்மா வாழ்ந்த வீட்டிற்குள் நுழையும்போது, ஒவ்வொரு மூலையிலும் அவள் இருப்பை கிசுகிசுக்கிறது காற்று. அவளுடைய அரவணைப்பு போன்ற ஒரு வெதுவெதுப்பான காற்று காலி அறைகளை நிரப்புகிறது.
அவளது அறையின் அமைதி மிகவும் கனமாக இருக்கிறது. மிகவும் விலையுயர்ந்த நினைவுகளைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, ஒவ்வொன்றும் அவளது சிரிப்பு, அவளுடைய மென்மையான வார்த்தைகள், அவளுடைய அன்பு கோபம் புன்னகை என்று அவள் உணர்வுகளை மட்டுமே எதிரொலிக்கிறது.
உள்ளே செல்லும் ஒவ்வொரு அடியிலும், நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. அவளுடைய பரிச்சயமான வாசனை, அவளுடைய நேசத்துக்குரிய உடைமைகள். எப்படியோ அவளின் ஒரு பகுதி இன்னும் இங்கே காத்திருக்கிறது என்ற உணர்வு.
அட ஆண்களே, சகோதரர்களே... அப்பாக்களே... நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? ஒரு வீட்டைக் கட்டி முடிக்க காசு இருந்தால் போதும். அதை நிர்வகித்து வாழும் இடமாக்க ஒரு பெண் தேவையாய் இருக்கிறாள். ஆனால் அவளோடு முடிந்து விடும் வீடுகள் ... கைவிடப்பட்ட வீடுகளாக மாறி விடுவது ஏன்? நீங்கள் அதை எடுத்து நடத்த ஏன் முடிவதில்லை? ஒரு பெண்ணால் வீட்டையும் அலுவலகத்தையும் கவனிக்க முடியும் போது, உங்களால் ஏன் முடிவதில்லை? நீங்கள் மாற வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள் என்பது ஏன் உங்களுக்கு புரிவதே இல்லை?
அந்த வீடு உண்மையில் அம்மா-அப்பா வீடாகத்தானே இருக்க வேண்டும்?

மணிப்பூர் - புத்தகம்








https://www.facebook.com/haranprasanna/posts/pfbid0rbBBPq1bd7MCqY11CgU6nUCnn8khgXi3VzmvQ1ngzZzzmfAcsru953HupENajfQml

Introspection Journey

https://www.facebook.com/vidhoosh/posts/pfbid0qNdJ6uTBtqosKKAK5TsxP533he6XgD7Zw6U6px25LHGG1jT46MVjhUWdQQBKjHVRl


என் மனதில் ரொம்ப நாளாக உள்ள ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Empty nest என்கிறதெல்லாம் எனக்கு ஏதும் இருக்கிறதா?
என் பெண் வீட்டை விட்டு படிப்புக்காக போனபோது, நான் அதற்குத் தயாராக இருக்கிறேன் என்று நினைத்தேன். சின்னவளும் 7.30 - 6 பிசி. வரதே என் மேல் கால் போட்டு கொண்டு தூங்கத்தான். இனி லீவு நாட்களில் கூட project, friends கூட டூர், sleep over என்று request வைக்கிறதுகள் ரெண்டும். போகட்டும்.. explore செய்யட்டும் என்று விட வேண்டும். 9ம் மாதம் முடிந்ததும் பெற்றுத் தந்தது போல், ஒன்று வயதில் தவழ்ந்து போக தரை இறங்கியது போல, நடக்க ஆரம்பித்தது போல... உனக்கு ஒன்னும் தெரியாது அம்மா என்று சொல்லியது போல, இதுவும் இதுவும் இதுவும்...
இந்த அமைதிக்காகவும் ஏங்கிய நாட்களும் உண்டு. ஆனால் அனைவரும் சென்றதும் வீட்டிற்குள் குடியேறும் அமைதி எதுவும் அப்படி ஒன்றும் பிடித்தமாய் இருக்கவில்லை.
நீண்ட நேரமாக, மௌனம்தான் ஒரே நேரத்தில் ஆறுதலாகவும், அமைதியற்றதாகவும் இருந்தது. காலியான இடங்களை எப்படி நிரப்புவது, அல்லது அவை நிரப்பப்பட வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை.
இடங்கள் காலியாய் போவது ஒன்றும் புதிதல்ல எனக்கு. அம்மாவிடம் இருந்து பாட்டி வீட்டுக்கு அழைத்து வந்து விட்டது... பாட்டி மட்டுமே இருக்கும் அக்ரஹார வீடு. அப்போதில் இருந்து நான் புத்தகத்தை எடுத்தேன். அப்படி ஒன்றும் புதுமையான புத்தகம் கூட இல்லை - பல ஆண்டுகளாக அலமாரியில் அமர்ந்திருந்த வாராந்திர புத்தகங்கள். நான் பக்கங்களைப் புரட்டும்போது, என்னுள் ஏதோ நகர்ந்தது. எனக்கு ஒரு வித்தியாசமான தோழமை கிடைத்தது போல் இருந்தது. எழுத்துக்கள் அமைதியை நிரப்பின, பாத்திரங்கள் நண்பர்களாக மாறினர். வாசிப்பு என்பது வாழ்க்கையுடன் வேறு வடிவத்தில் மீண்டும் இணைவதற்கான எனது வழியாக மாறியது, மேலும் அது தனிமையில் கூட நாம் செழுமையைக் காணலாம் என்பதை நினைவூட்டியது. பக்கோடா பேப்பர்கள் முதல் கையில் எது கிடைத்தாலும் படிப்பது என்றானது.
முதலில் தமிழ் ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தில் ஆறாவது படிக்கும் போது, பாரதியின் வீடுகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிக்கு எழுதினேன். அங்கேயே மைக்கில் வாசித்து காட்டச் சொன்னார். கைத்தட்டல் இன்னும் ஊக்கம் தந்தது.
அது தற்செயலான எண்ணங்கள் அல்லது வளரும் குழந்தைகளின் நினைவுகள், என்று ruled notebook குறிப்புகளாக விரைவில் அதை விட அதிகமாக ஆனது. வெற்றுப் பக்கங்கள் சோகம், மகிழ்ச்சி, பெருமிதம், ஏக்கம் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்ள விடாமல், என் உணர்வுகளைக் கொட்ட ஆரம்பித்தேன். எழுத்து எனக்கு ஆறுதலாக அமைந்தது. இது எனக்கு என்னைப் பிரதிபலிப்பதற்கான இடத்தைக் கொடுத்தது. ஒரு பேனாவும் காகிதமும் அதை எவ்வாறு செய்ய முடியும் என்பது விசித்திரமானது, இல்லையா? உரையாடலில் உங்களால் வார்த்தைகளில் சொல்ல முடியாதவற்றைப் புரிந்துகொள்ள உதவும் இவை.
இந்த எழுத்தே என்னை ஹரியின் கேன்சர் காலக்கட்டத்தை கடக்க வைத்தது. ஓயாத hospital corridors காத்திருப்புக்கள் படிக்கும் கூடமாக மாறியது.
எழுத்து மற்றும் வாசிப்பு மூலம், வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயம் உருவாவது மட்டுமல்ல என்பதை நான் உணர்ந்தேன். இது நான் கருதாத வழிகளில் என்னை மீண்டும் கண்டுபிடிப்பது பற்றியது. இது அமைதியான தருணங்களில் மகிழ்ச்சியைக் கண்டறிவது, புதிய கதைகளை உருவாக்குவது மற்றும் முன்பை விட வித்தியாசமாகத் தோன்றினாலும், இன்னும் பல அர்த்தங்களைக் கொண்ட வாழ்க்கையைத் தழுவுவது என endless opportunities. தினமும் எழுதாமல் வாசிக்காமல் இருப்பது விட முடியாத addiction தான். என்னுடைய sideline business ஆகி விட்டது content writing.
வேலை வீடு குழந்தைகள் என்று ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை மாறும்போது, நாம் எப்போதும் நம் வீடுகளை சத்தம் அல்லது மனிதர்களால் நிரப்ப வேண்டியதில்லை என்பதை நான் கொஞ்சம் சீக்கிரமே கற்றுக்கொண்டேன். சில சமயங்களில், அமைதியாக இருக்க அனுமதிப்பது பரவாயில்லை, அந்த அமைதியில், நாம் அறியாததை தேடுவதைக் கூட காண்கிறோம்.
சும்மா இருப்பது என்பது சிலருக்கு வாய்த்த அதிர்ஷ்டம். இப்போது 3000 குடும்பங்கள் வாழும் எங்கள் apartment association க்கு on-board போகிறேன், ஏகப்பட்ட politics ஏகப்பட்ட பிரச்சினைகள்... ஏகப்பட்ட மனிதர்கள்... ஏகப்பட்ட கதைகள்.
May be a doodle of 2 people, bird and text
All re

நான் என்ன செய்ய வேண்டும்?

 இவ்வளவு சத்தமாய் எப்படி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்

பேசும் விஷயங்கள் பலவிதமாக இருக்கின்றன

முகப்பரு முதல் கழிப்பறை கறைகள் நீக்க

சந்தன மரத்தில் அமைக்கப்பட்ட கடைசி மரியாதை

அஞ்சலிக் குறிப்புக்கள், இடுகாட்டுக்கு நீக்கும் வரை அழுதல்

நாய்களுக்குப் பின் சிங்க பொம்மை வைப்பது

சில வெயிலின் வெப்பத்தில் கருகியது

சில கோபத்தின் உஷ்ணத்தில் வறுத்தெடுக்கப்பட்டது

விஷம் தெளிப்பது போல, அமிர்த நீரோடை போல

மரணத்தின் கருப்பு நூலிழையில் பிழைத்தல்

மரணித்து விழுதல், மல்லிப்பூ வைச்சு வாடுதே,

வாழ்க்கையின் அலைகளில் தனிமையில் இருக்கிறேன் ரகங்கள்,

வாழ்வதற்கான பத்து முக்கிய பாடங்கள்

உளவியல் என்ன சொல்லியிருக்கிறது?

அருவருப்பான கழிவுநீர்

மூச்சுத்திணறும் ஆட்டக் காட்சிகள்

கணவரை, மனைவியை கேலிக்கூத்தாக்குதல்

வெறுப்பின் ஆயுதமாக மாற சில விவாத மேடைகள்

தோட்டத்தில் சாறு நிறைந்த பழங்களை நறுக்குதல்

அசுபத்துக்கு ஒப்பாரிகள், 

கருப்பை, குடலுக்குள் பயணிக்கும் மருத்துவக் கேமிரா

இந்த விஷயங்களை நான் எப்படி ஏற்றுக்கொள்வது?

இது ஒரு மூலதனம், இவை எங்கள் கருவிகள்

இவை நமது வளங்கள், இவையே நமது ஆயுதங்கள்

எல்லோரும் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்

நான் அவர்களை என்ன செய்ய வேண்டும்?

இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து கொண்டு

நான் என்ன செய்ய வேண்டும்?

ஓடுகிற நாயும் துரத்துகிற நாயும்

 ஓடுகிற நாயும் துரத்துகிற நாயும் - விதூஷ் 




நீங்கள் எப்போதாவது நாய்களை கவனமாகப் பார்த்ததுண்டா? நாய்களில் மூன்று வகை உண்டு. ஒரு செல்லப் பிராணி, இன்னொன்று வளர்ப்பு நாய், மற்றொன்று தெரு நாய். முதல் வகை செல்லப் பிராணிகள். ஐந்து நட்சத்திர வீடுகளில் வசிக்கும் வரம் பெற்றவை. வெல்வெட் படுக்கையில் உட்கார்ந்து, பட்டுப் படுக்கையில் தூங்கும். எஜமானி மடியில் செல்லம் கொஞ்சித் தவழும். இளவரசர்களையும் இளவரசிகளையும் கூட சாய்த்து அடிக்கும் வசதிகள் கிடைக்கப் பெற்றவை. இது போன்ற நாய்களை யார் பார்த்தாலும் பல பிறவிகளின் புண்ணியத்தின் பலனாகச் செல்ல நாயின் வாழ்வை அடைந்ததாக உணர்வான். இரண்டாவது வகை வளர்ப்பு நாய்கள், வீடுகளைக் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவை. ஒருவகையில், அவர்கள் தினசரி கூலியாள் மாதிரி. ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கிடைக்கும். இதைவிட மலிவான கூலியாள் கிடைக்காததால், நாய்க்கும் எஜமானர்களின் தேவைக்கேற்ப மரியாதையும் கிடைக்கும்.

கடைசியான வகையறா தெருநாய்கள் தான் ரொம்ப முக்கியமானது. தெருநாய்கள் கும்பலாக வாழ்கின்றன. திடீரென்று வாலை ஆட்டிக் கொண்டு ஓடத் தொடங்கும். அவை மனிதனைப் பற்களால் கடிக்கின்றன. மனிதன் அவர்களுக்கு பயப்படுகிறான். இதுபோன்ற 4-6 கொடூர நாய்கள் வாழத் தொடங்கும் தெருவில், மாலைக்குப் பிறகு அந்தத் தெருவில் யாரும் செல்லத் துணிவதில்லை. யாராவது சென்றால், அவரைப் பார்த்து குரைக்கின்றன. அவற்றின் குரைப்பால், தெருவில் நுழைந்தவர் திரும்பி ஓடிச் செல்ல நேர்கிறது. தெருநாய்களின் ஆதரவால்தான் ரேபிஸ் ஊசி வியாபாரம் நடக்கிறது. அவர்கள் மாதந்தோறும் யாரையாவது கடித்துக் கொண்டே இருக்கின்றன. நாய் கடித்தால் ரேபிஸ் என்ற நோயை உண்டாக்குகிறது என்பது உலகம் அறிந்ததே. தெருவில் வெறியோடு திரியும் இந்த தெருநாய்களால் தான் நாய்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

தெருநாய் எந்த அர்த்தமும் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும். சாலைக்கு அந்தப் பக்கம் மெதுவாக நடந்து போய் கொண்டிருக்கும். சில நேரம் தேமே என்று படுத்துக் கொண்டிருக்கும். திடீரென்று என்ன நினைக்குமோ என்னவோ, திடு திடுவென்று வேகமாய் ஓடி வந்து 'த்தப்படி த்தப்படி' என்று மூச்சிரைக்க சாலையைக் கடந்து இந்தப் பக்கம் ஓரமாய் படுத்துக் கொள்ளும். அதற்கு அங்கேயே படுத்துக் கிடந்தால் என்ன? எதற்கு இப்படி ஓடி வரணும்? 

சேருமிடத்தின் முகவரியோ, பாதைகள் பற்றிய அறிவோ இல்லை. விதி எங்கு அழைத்துச் சென்றதோ, அங்கே சென்று கொண்டு இருக்கும். தெருநாய்க்கு நடக்க வழி இல்லை, சிவனே என்று உட்காரும் பழக்கமுமில்லை. அதன் வாழ்க்கையின் எந்த தத்துவத்தையும் கொண்டிருக்கிறது என்று தெரியாது. அதை வைத்துக் கொண்டு எதையும் முடிவு செய்ய முடியாது. அது எப்படி இருக்கும் என்று எதையும் எதிர்பார்க்க முடியாது. 

மாறாக, செல்ல நாய்களைப் பாருங்கள்! வீட்டை விட்டு வெளியே வரும்போது, குளித்துவிட்டு, தலைமுடியைக் கோதி வாரி விட்டு என்று, இப்படித்தான் ஸ்டைலாக சாலையில் நடக்கின்றன! சில நாய்கள் ஜட்டி கூட போட்டிருக்கின்றன. இதோ பார், செல்ல நாய் ஒன்று வருவது தூரத்தில் தெரிகிறது. கழுத்தில் பட்டை, ஓனர் கையில் பிடித்து வைத்திருக்கும் செயின் மட்டுமே அவைகளின் அடையாளம் என்பதல்ல. உண்மையில் நாகரீகம் என்றால் அதை வளர்ப்பு நாய்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாகரீகத்தின் பெயரையும் சுவடுகளையும் துடைத்தழிக்க தெருநாய்கள் சபதம் எடுத்தது போலாகும்.

தெருநாய்கள் இருந்தாலே எல்லா இடங்களிலும் ஒரு பிரச்சனை. கிராமம் என்ன, நகரம் என்ன, தெருவென்ன, சாலை என்ன ! நீங்கள் எங்கு சென்றாலும் அது தனியாகத் தெரியும். ஒரு நல்ல குணமுள்ள மனிதர் ஒருவர் மகிழ்ச்சியான மனநிலையில் எங்கோ செல்கிறார். இவரைப் போன்றவர்களைக் கண்டால் தெருநாய்களுக்குப் பொறுக்காது, அவர் தெனாலி ரக பயமெண்டால் பயம் அடையும் வரைக்கும் துரத்திச் செல்லும். திடீர் என்று நின்று கொண்டு குப்பையை கிளறும்.

பொதுவாக தெருநாய்கள் கூட்டமாக காணப்படும். நான்கைந்து தெருநாய்கள் ஒன்று கூடினால் போதும். ஒன்றாகவே நடக்க ஆரம்பிக்கின்றன. அவை எதற்கும் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவற்றின் உலகம் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. எங்கு திரும்பினாலும் நாய்கள் நாய்கள். நாய்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. ஏழு-எட்டு நாய்கள் கொண்ட பெரிய அளவிலான குழுக்களும் இருக்கின்றன. ஆனால் எந்த நாய் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தது என்று தெரிவதில்லை. தொலைவில் இருந்து அதை அறிய முடியாது, நெருங்கிப் போனால் ஆபத்து. சில நேரங்களில் மனிதர்களை வேறுபடுத்திப் பார்ப்பது போல் நாயையும் நாயையும் வேறுபடுத்துவது மிகவும் கடினம். தூரத்தில் இருக்கும் இரண்டு அல்லது நான்கு நாய்களை வேறுபடுத்திப் பார்ப்பது என்பது மிகவும் கடினமான பணி. 

சில தெருநாய்கள் நிற்கக் கூட நேரமில்லாமல் அதிகமாக அலைந்து திரிகின்றன. அவற்றைப் பார்க்கும்போது விளையாட்டுத்தனமான சுபாவத்துடன் நடமாடுவதைக் காணலாம். அவற்றைப் பார்க்கும்போது, யாரைக் கண்டாலும் வாயைத் திறந்து, கோரைப் பற்கள் வெளிப்பட ஆரம்பித்து விடும், துரத்தப் படும் மனிதன் தன் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்று ஓடுவான். ஆனால் ஒரு தெரு நாயின் வேகம் ஒரு மனிதனின் வேகத்தை விட வேகமாக இருக்கும். அது கடிக்காமல் விடாது. தெருநாய்கள் எப்போதும் அலைந்து திரிவதில்லை. சில நாய்கள் பாவம், மிகவும் எளிமையானவை, குழந்தைகள் கூட கற்களால் அடித்து விளையாடுகிறார்கள். மக்கள் சில தெருநாய்களுக்கு அன்பினால் உணவளிக்கின்றனர். சிலர் பிஸ்கட் ஊட்டுகிறார்கள். மக்கள் தங்கள் நம்பிக்கையின்படி தெருநாய்களை விரும்புகிறார்கள், ஆனால் ஒரு தெரு நாயை தூக்கி தங்கள் வீட்டிற்கு கொண்டு செல்லும் தைரியம் யாருக்கும் இல்லை. அவர் பதினைந்து நிமிடங்களுக்கு தெரு நாயைப் நேசிப்பார்கள், மீதமுள்ள இருபத்தி மூன்றே முக்கால் மணி நேரம் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் படி விட்டுவிடுவார்கள்.

நாய் வளர்க்கப்படும் வீட்டின் வாயிலில் நுழைவதை எந்த மனிதனும் விரும்புவதில்லை என்றாலும், வளர்ப்பு நாய் கண்ணியமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நாய் விருந்தினரை வரவேற்க உரிமையாளர் முன் நிற்கிறது. இருந்தாலும் எங்களுடைய நாய் கடிக்காது என்று உரிமையாளர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நாய் ஒரு நாய். அதற்கு தெரியாது யாரைக் கடிக்கலாம், யாரைக் கடிக்கக் கூடாது என்று. கடித்தால் என்ன செய்ய முடியும்? உரிமையாளரைக் கடிக்காது என்பதால் அது யாரையும் கடிக்காது என்று அர்த்தமல்ல. வீட்டு நாய் விருந்தினரைக் கடித்தால் கூட, நம் நாய் கடித்தால் கவலைப்பட ஒன்றுமில்லை, ஊசி போட்டிருக்கு என்று உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் வலியை யார் தாங்குவது. 

தெருவில் திரியும் நாயாக இருந்தாலும் சரி, செல்லப் பிராணியாக இருந்தாலும் சரி, தெருவுக்கும், வீட்டுக்கும் தான்தான் காவலாளி என்பது நாய்களுக்கு மரபணு ரீதியாக பதிந்து இருக்கிறது போலிருக்கிறது. ஒரு அந்நியன் இரவில் தெருவில் வர முயற்சித்தால், அவரை நாய் ஒரு தவறான நபர் என்று உணர்ந்தால், அவரைப் பார்த்துக் குரைத்துத் துரத்தி விரட்டலாம். அவரைக் கடிக்காமல் இருக்கலாம். நாயின் குரைப்பு தானே முக்கியம். ஆனால் கண்டிப்பாக குரைப்பதோடு அந்த நாய்கள் நிறுத்திக் கொள்வதில்லை, குரைக்கிற நாய் கடிக்காது என்பதெல்லாம் பொய்யாக்கி வள் வள் என்று குரைப்பதோடு வலிக்கும் படி கடித்து வேறு வைக்கிறதுகள்.

நாய் இரண்டு விதமாக குரைக்கிறது. முதலில், ஒரு செங்கல்லால் அடித்தால், ஒரு விதமாய் குரைக்கும். ஸ்கூட்டரோ, மோட்டார் சைக்கிளோ, காரோ அதன் காலில் ஏறி விட்டிருந்தால் ஒருவிதமான குரைக்கிறது. ஆனால் திருடனைப் பார்த்து நாய் குரைக்கும் போது, விசுவாசமும் நன்றியுணர்வும் கலந்த ஒரு உன்னதமான உயர்ந்த பண்புகளின் கலவையை அதில் காணக் கிடைக்கிறது.

நாயைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைக் கேளுங்கள். ஒருமுறை ஒரு நண்பர் தனது சொந்தக்காரரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டின் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைந்து உள் வாயிலை அடைந்தவுடன், சாலையில் இருந்து ஒரு தெருநாயும் அவரைப் பின்தொடர்ந்து வந்தது. மாண்புமிகு நண்பர் மணியை அடிக்கச் சென்றவுடன், நாய் அவருக்கு முன்னால் நின்று கூர்மையாக வெறியோடு அவரைப் பார்த்தது. இப்போது அது நிச்சயமாகத் தன்னைக் கடிக்கும் என்று நண்பருக்குப் புரிய ஆரம்பித்தது! அந்த நண்பர் பயத்தில் மட்டும் கொஞ்சம் சத்தமாய் கீச்சுக் குரலில் அலறினார். ஆனால் நல்லகாலம், தற்செயலாக அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார். நாயை வெளியே துரத்திவிட்டு, பிரதான வாயிலை மூடிய பிறகு வந்தவரிடம், இந்த நாய் எப்படியெல்லாம் இதுவரை பலரைக் கடித்து வைத்திருக்கிறது என்று விளக்க ஆரம்பித்தார். அதோடு விடாமல் அவர் "அது எங்கள் செல்லப் பிராணியல்ல, ஆனால் கொஞ்ச நாளுக்கு நாங்கள் அதற்கு சோறு ஊட்டினோம். இதன் காரணமாக அது பாதி வளர்ப்பு நாய் போல ஆகி விட்டது. அதன் பிறகு அது எங்கள் விசுவாசியாக மாறியது, எங்கள் உதவியைத் திருப்பித் தர அது தானாகவே எங்கள் வீட்டைக் காக்கத் தொடங்கியது. இப்போது யார் வந்தாலும் அவரைக் கடிக்கிறது. அதன் கடிக்கும் பழக்கத்தால் இப்போது யாருமே எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. நாங்கள் இதனால் இப்போது அதற்கு சோறு ஊட்டுவதைக் கூட நிறுத்திவிட்டோம், ஆனால் அது இன்றுவரை நமது கடந்த கால உதவியை மறக்கவில்லை, நாம் வேண்டாம் என்றாலும் நம்மைக் காத்து வருகிறது. என்ன செய்வது?" என்று கேட்டார்.

நம் பெரிய பிரச்சனை என்னவென்றால் செல்ல நாய்களை எப்படியாவது தவிர்த்து விடலாம். ஆனால் தெருநாய்களை எப்படி தவிர்ப்பது? ஒரு மனிதன் தெருவில் செல்வதை நிறுத்த வேண்டுமா அல்லது தெருவில் செல்லவேக் கூடாதா?

தெருநாய்கள் அதிகம் காணப்படும் தெருக்கள் வழியாக பல நேரங்களில் மக்கள் இரண்டு அல்லது நான்கு பேர் கொண்ட குழுக்களாக செல்கின்றனர். ஆனால் இதுவும் பிரச்சினைக்கு தீர்வாகாது. சில நேரங்களில் ஒரு தெருநாய் இரண்டு அல்லது மூன்று பேரை ஒன்றாகப் பார்க்கும்போது, அது இன்னும் மகிழ்ச்சியாக ஆகிறது, இன்று மக்கள் மொத்தமாக கடிபட போகிறார்கள் என்று நினைக்கிறதோ என்னவோ? குதூகலமாக ஒரே நேரத்தில் இரண்டு-மூன்று பேரை ஒன்றாகக் கடிக்கிறது.

ஒவ்வொரு நாய்க்கும் அதன் சொந்த குணம், அதன் சொந்தப் பல், மற்றும் அதன் சொந்த வால் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு நாய்க்கும் அதன் தனிப்பட்ட ஆளுமை உள்ளது. சிலதுக்கு வாலில் பெரிய கரும்புள்ளி இருக்கும். சிலவற்றின் முகத்திலும் இருக்கும். ஆனால் ஒன்றையொன்று வேறுபடுத்திப் பார்க்க முடியாது. காலையில் ஒரு குழுவில் இருந்து கொண்டு வெறியோடு பார்க்கும் நாய் மதிய நேரத்தில் மற்றொரு குழுவில் சேர்ந்து கொண்டு நம்மைப் பார்த்துக் குறைப்பதைக் காணலாம். பின்னர் மாலையில், மூன்றாவது குழுவில் நம்மைப் பார்த்து வாலை ஆட்டுவதைக் காணலாம். 

நாயின் வால் எப்போதும் வளைந்திருக்கும். ஆனால் நாயின் வால் நேராக மாறினால், நாய்க்கு பைத்தியம் என்று புரிந்து கொள்ள வேண்டும். கௌரவர்களை வென்ற பிறகு யுதிஷ்டிரன் ஒரு நாயை தத்தெடுத்ததாக கூறப்படுகிறது. உண்மையில், யுதிஷ்டிரர் தனது விடாமுயற்சி, உண்மை மற்றும் அன்பின் உதவியுடன் நாயின் வாலை நிமிர்த்த முயன்றார். ஆனால் நாய் உண்மையான நாயாகவே இருந்தது. யுதிஷ்டிரனால் கடைசி வரை நாயின் வாலை நிமிர்த்த முடியவில்லை. பின்னர் நாயின் வாலை நேராக்க, யுதிஷ்டிரன் நாயை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றான்; ஆனால் வால் வளைந்தே தான் இருந்தது. ஒரு வேளை தர்மச் சக்கரத்தின் சுழற்சியால் யுதிஷ்டிரனின் தவமும், உண்மையும், அன்பும் வளையலாம், ஒரு நாய் கடைசி வரை உண்மையான நாயாகவே வளையாத வாலோடு இருக்கிறது. நேராக இருப்பதற்கு பெயர் நாய் வால் இல்லை.

நேராக இருந்தாலும் சரி, வளைவாக இருந்தாலும் சரி. என் தெருவின் நாய்கள் கூட்டாக குரைக்கும் போது, மிகவும் கலைநயத்துடன் வாலை சுருட்டிக்கொண்டு, தெருவில் குரைப்பதை முழு தெருவாசிகளும் அந்தந்த ஜன்னல்களில் இருந்து இந்த நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்ப்பது வாடிக்கைதான். ஒருமுறை ஒரு நாயை மற்றொரு, மூன்றாவது, நான்காவது நாய் பின்தொடர்ந்தது. பின்னால் இருந்த நாயும் மிக வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பின்னால் இருந்த நாய் முன்னால் இருந்த நாயைத் தாண்டிக் கொண்டு ஓடியது. ஏன் ஓடுகிறது? எங்கே ஓடுகிறது? நாய்க்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. திடீரென்று மின்கம்பங்கள் அவற்றின் கண்களுக்குத் தென்படும். அப்போது அந்த நாய்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஈரமான மின்கம்பங்களைப் பார்த்து, அவை ஏற்கனவே அந்த தெருவின் எதிர் கோஷ்டியை சேர்ந்த நாய்களால் திறந்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வரும். இரு கோஷ்டி நாய்களுக்கும் இடையே கடும் சண்டை மூளும். இப்படிப்பட்ட சண்டை, சில நேரம் அதே கோஷ்டிக்குள், வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து சில சமயம் என்று இதுபோன்ற சண்டை அடிக்கடி வெடிக்கும்.

இந்த கொடூரமான தெருநாய்களை எப்படி நடத்துவது? இந்த நாய்களிடமிருந்து மனிதர்களை எவ்வாறு பாதுகாப்பது? சிலர் இந்த தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கும் அளவுக்கு பாதிக்கப் பட்டுள்ளார்கள். ஆனால் இந்த வழி வன்முறையானது. எனவே அனைவரும் ஒத்துக் கொள்வதில்லை. இன்னொரு வழி நாய்களுக்குக் கருத்தடை செய்வது. நகராட்சி அதிகாரிகள் விரும்பினால், நாய்களை நாய் வண்டியில் பிடித்துக் கொண்டு சென்று, கருத்தடை செய்து, விலங்கு மீட்பு மையங்களில் விட்டு விடலாம். வாழும் சில வருடங்கள் வரை, மரியாதையாக வைத்து, உணவு முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அது இயற்கையான மரணம் அடையும். ஆனால் அவற்றால் எந்த மனிதனையும் கடிக்க முடியாது. இதன் மூலம் தெருநாய்கள் பிரச்னை முற்றிலும் தீர்க்கப்படும். துரதிர்ஷ்டவசமாக, இன்னும் நடைமுறையில் தெரு நாய்களைப் பிடிக்கும் எந்தத் திட்டமும் ஒழுங்காக செயல்படுத்தப்படவில்லை. அதனால்தான் இந்த மூர்க்க நாய்கள் மனிதர்களைக் கடித்து தங்கள் சாம்ராஜ்யத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தெருநாய்கள் தெருக்களில் சுற்றித் திரிகின்றன. கண்ணியமான மனிதர்கள் தங்கள் வீடுகளில் பூட்டிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.


=========